Posted on March 30, 2012 by muthukumar
பிரசவம் என்பது அற்புதம். வலி நிறைந்த ஒரு பயணம் இது. ஆனா லும், வலிகளைத் தாங்கிக்கொண்டு பெற்றெடுத்த குழந்தையின் முகத்தைப் பார்த்தவுடன் பட்ட வேதனை எல்லாம் தாயானவ ளுக்குப் பறந்தோடிவிடும்.
உதிரமும்
பனிக்குட நீருமாக அந்தச் சிசு வெளியே வருகை யில், உடல் வலி மறந்து உலக
த்தின் அதிசிறந்த படைப்பாளி யாக ஆகி விட்ட நெகிழ்வில் பெற்ற வயிறு
சிலிர்க்கும். ஆ னால், இன்றைய காலகட்டத் தில் பெரும்பாலான பெண்களுக்குப்
பிரசவங்கள் அறுவைச் சிகி ச்சை மூலமே நடைபெறுகின்றன. வலியையும் வாகை சூடிய
நெகிழ்வையும் ஒருசேர உணர இன்றைய காலகட்டத்தில் எத்த னை தாய்களால் முடிகிறது?
இயற்கையான சுகப்பிரசவம் நிகழ வாய்ப்பு இருக்கும் நிலையிலு
ம்கூட
அறுவைச் சிகிச்சை செய்ய ச் சொல்லும் வற்புறுத்தல்கள் மருத்துவர்கள்,
கர்ப்பிணிகள் என இரு தரப்பிலுமே மிகுதியாகிவி ட்டன. சுகப்பிரசவம் நடப்பதில்
பிரச்னை என்று வந்தால் மட்டு மே அறுவைச் சிகிச்சைக்குப்போ கவேண்டும்
என்கிறபுரிதல் அனை த்து தாய்மார்களுக்கும் உருவாக வேண்டும். அதற்கான ஆலோச
னைகளையும் வழிகாட்டுதலையும் இங்கே விளக்குகிறார்கள் பிர பல மகப்பேறு
மருத்துவ நிபுணர்களான சென்னை ஷமீக் அக்தார், ஸ்ரீ கலா பிரசாத், திருச்சி
பி. கமலம், பிரசவ கால உடற்பயிற்சி ஆசிரியர் ரேகா சுதர்சன்…
1. கருத்தரிக்குமுன்பே மருத்துவர்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும்..
2. உணவு விஷயத்தில் அதிக அக்கறை வேண்டும் !
கருவுற்ற நாளில் இருந்து தொடர்ந்து வாந்தி, மயக்கம் இருக்க
லா
ம். சிலருக்கு உடலில் நீர்ச் சத்து குறைந்து எடை குறையலாம்.
சுகப்பிரசவத்துக்குதா யின் உடல்நிலை இன்றியமையாதது. அதே போல், குழந்தையின்
எடை 3 முதல் 3.5 கி. கி. வரை இருந்தால்தான் குழந்தையின் தலை வெளியே வர
ஏதுவாக இருக்கும். இதனால், உணவு விஷயத்தில் அதிக அக்க றை எடுத்துக்கொள்வது
அவசி யம்.
3. எந்த உணவை எப்பொழுது சாப்பிடலாம்
4 குனிந்து, நிமிர்ந்து, எழுந்து வேலை செய்ய வேண்டும்
5 சரியான எடை இருக்கிற தா என்பதை சோதித்தறிதல் அவசியம்!
கர்ப்பமாக
இருக்கும்போது பெண்களின் எடை 10 முதல் 12 கிலோ வரை கூடலாம். ஆனால், சில
பெண்களுக்கு 15 கிலோ வுக்கும் அதிகமாக எடை கூடும். இவர்களுக்கு இரட்டைக்
குழந்தை யாக இருக்கலாம் அல்லது குழந்தையின் எடை அதிகமாக இருக்க
லாம்.
இவை இரண்டுமே இல் லை என்றால் உடலின் எந்தப் பகுதியிலோ நீர் கோத்திருக்
கிறது என அர்த்தம். இதனா ல், கர்ப்பிணிக ளின் கால் வீங்கிக் காணப்படும்.
பொது வாகவே கர்ப்பிணிகளுக்கு கால் வீக்கம் இருப்பது இயல் புதான். ஆனால்,
இந்த வீக்கம் கணுக் காலுக்குக் கீழே மட்டு ம் இருக்கும். அதுவும் நன்றாகத்
தூங்கி எழுந் ததும் சரியாகிவிடும். அப்படி இல்லாமல் கணுக்காலைத் தாண்டி
யும் வீக்கம் இருந்தால் உப்பு அதிகமாக இருக்கிறது என்பதைப் புரிந்து
கொள்ளலாம். சிறு நீர்ப் பரிசோதனை மூலம் உப்பின் அள வைக் கண்டறிந்து, அதைக்
குறைக்க முயற்சி செய்ய வேண்டும். இத்துடன் ரத்த அழுத்தம் அளவுக்கு
அதிகமாகிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்
லாவிடில்
பேறுகாலத்தின்போ து வலிப்புநோய் ஏற்பட வாய் ப்பு உள்ளது. இதுபோன்ற பிரச்
னைகளை ஆரம்ப த்திலேயே கண்டுபிடித்துக் குணப்படுத்த வேண்டியது அவசியம்.
6 படுக்கையறையில் உற்சாகத்துடன் இருத்தல் அவசியம்
கர்ப்பிணிகள் முதல் நான்கு மாதங்கள் மல்லாந்த நிலையில் படு க்கலாம். ஆனால், அதற்குப் பிறகு இடதுபுறமாக ஒருக்களித்துப்
படு
ப்பதே தாய்-சேய் இருவருக்கும் சாலச்சிறந்தது. இரவில் எட்டு மணி நேரத்
தூக்கமும், பகலில் ஒரு மணி நேரத் தூக்கமும் கர்ப் பிணிகளுக்கு மிகவும்
அவசியம். முதல் மூன்று மாத மும் கடைசி ஒரு மாதமும் தாம்பத் யத்தைத்
தவிர்ப்பது நலம்.
7. ஒரே மருத்துவர்!
பொதுவாக
முதல் 28 வாரங்களுக்கு மாதம் ஒரு முறையும் அத ற்குப் பிற கு 28 முதல் 36
வாரங்கள் வரை இர ண்டு வாரங்களுக்கு ஒரு முறையும் 36-வது வாரம் முதல்
பிரசவம் வரை வாரம் ஒரு முறையும் மருத் துவரிடம் பரிசோதனைக்குச் செல்ல
வேண்டும். ஆரம்பத்தில் இரு
ந்தே ஒரே
மருத்துவரை அணுகுவது நல் லது. நம் உடல்நிலையைப் பற்றிய அனைத்து
விவரங்களும் தெளிவாகத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ற சிகிச்சை யை அளிக்க
மருத்துவருக்கு எளிதாக இருக் கும்.
8. குறிப்பிட்ட நேரத்தில் மருந்துகள் உட்கொள்ளுதல் அவசியம்
தாய்,
சேய் இருவருக்கும் டெட்டனஸ் தொற்றுநோய் ஏற்படாமல் இருக்க நான் கு வார
இடைவெளியில் இரண்டு தட வையாக ரண ஜன்னி ஊசி போடவே ண்டும். ஃபோலிக் அமில
மாத்திரைக ளை திருமணமான முதலே பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல் லது.
ஏனெனில், இது கர்ப்ப காலத்தில் குழ ந்தைக்கு ஏற்படக் கூடிய சில பிறவிக்
குறைபாடுகளைத் தடு கும். ரத்தசோகை பாதிப்பு உடைய வர்களுக்கு இரும்புச்
சத்து மாத்திரை அல்லது ஊசி தே வைப்படலாம். தவிர, அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப
தேவைப்ப டும் மருந்துகளை மருத்துவர் பரிந்துரைக்கலாம்.
இந்த மருந்துக ளைத் தவறாமல் எடுத்துக்கொள்வது முக் கியம்.
9 கூடாது… கூடாது… கூடவே கூடாது!
வயிறு
பெரிதாக பெரிதாக அதிக எடை யைத் தூக்குவது, ஓடுவது, குடத்தை இடு ப்பில்
வைப்பது, நாற்காலியின் மீது ஏறு வது போன்ற கடுமையான செயல்களில் ஈடுபடவே
கூடாது. தரையில் கால்களை நன்றாக ஊன்றி நடக்க வேண்டும். கால்க ளைத் தொங்கப்
போட்டபடி உட்காரக் கூடாது. அடிக்கடி கால்களை நீட்டி, மடக்க வேண் டும். அதிக
நேரம் ஒரே இடத்தில் உட்காரக் கூடாது. ஒரே மாதிரி யான வே லைகளைத் தவிர்க்க
வேண்டும். உடல் முழுவதுக்கும் அசைவு கொடுக்கக் கூடிய பல்வேறு வேலைகளில்
ஈடுபட வேண்டு ம். இதனால் உடலில் தசைப்பிடிப்பு, கால்கள் மர த்துப்போதல்
போன்றவை ஏற்படாமல் இருக்கும். ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். வெஸ்டர்ன்
டாய்லெட்டைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண் டும். இப்போதைய பெண்கள்
பிரசவத்தின்போது
காலை
மடக்கவே மிகவும் கஷ்டப்படுகி ன்றனர். இந்திய டாய்லெட்டுகளைப் பய
ன்படுத்துவதன் மூலம் கால்களை எளிதா க நீட்டி, மடக்க முடியும். நொறுக்குத்
தீனி களை அதிகம் எடுத்துக்கொள்ளக் கூடாது. தேவையற்ற பிரச்னைகளில் மூக்கை
நுழைக்காமல் இருப்பது நலம். இது மனச் சங்கடங்களைத் தவிர்க்க உத வும்.
10 தெளிந்த சிந்தனையும், அமைதியான மனநிலையும் சுகப்பிரசவத்திற்கு வழிவ குக்கும்
தாயின்
உடல்நலன் எவ்வளவு முக்கிய மோ மனநலனும் அவ்வளவு முக்கியம்
சுகப்பிரசவத்துக்கு. இன்றைய காலகட்ட த்தில் சுகப் பிரசவத்துக்கு மிகப்
பெரிய எதிரி பெண்களுக்குப் பிர சவ வலி மீது உருவாகி இருக்கும் பயம். இந்தப்
பயத்தை எதிர் கொள்வதற்கு தாயும் தன்னளவில் தயாராக வேண்டும்; குடும்ப
உறுப்பினர்களும் தாயைத் தயாராக்க வேண்டும்.
‘இது ஒரு பிரச் னையே இல்லை; உனக்கு எதுவென்றாலும் உதவ நாங் கள் எல்லோரும்
இருக்கி றோம்’ என்று ஒவ்வொரு கட்டத்திலும் தாய்க்கு நம்பி க்கை அளிக்க
குடும்பத்தினர் தவறக் கூடா து. தாயின் மன நிலையை எப்போதும் சந் தோஷமாக
வைத்துக் கொள் ள வேண் டும். தாயும் நல்ல உணவைப் போலவே நல்ல இசை, நல்ல புத்த
கங்கள் என மனதை இதமாக வைத்துக்கொள்ளும் விஷ யங்களில் கவனம் செலுத்த
வேண்டும். கூடுமானவரை தொலைக்காட்சி நிக ழ்ச்சிகளைத் தவி ர்த்தல்
நலம். தியானம் மனதை ஒருமுகப்படுத்த உதவுவதோடு தேவையில்லாத பயம் – கவலைகளை
நீக்கி பிரச வத்தைத் தன்ன ம்பிக்கையோடு எதிர்கொள்ள உதவும்.
No comments:
Post a Comment