Showing posts with label ரஸகற்பூர லேபம் -Rasakarpoora lepam. Show all posts
Showing posts with label ரஸகற்பூர லேபம் -Rasakarpoora lepam. Show all posts

Tuesday, 17 April 2012

ஆறாத புண்ணை ஆற்றிடும் - ரஸகற்பூர லேபம் -Rasakarpoora lepam

Posted On April 17,2012,By Muthukumar
தேவையானமருந்துகளும் செய்முறையும்:


1.            ரஸகற்பூரம் (பூரம்) ரஸகற்பூர          10 கிராம்
2.            வங்க ஸிந்தூரம் கிரிஸிந்தூர           20          
3.            மிருதார் சிங்கி ம்ருத்தார ஸ்ருங்க     20          

இவைகளைத்தனித்தனியே கல்வத்திலிட்டுப் பொடித்து ஒன்று சேர்த்தரைத்து அதை

1.            தேங்காய் எண்ணெய் நாரிகேள தைல     400 கிராம்
2.            தேன் மெழுகு மதுச்சிஷ்ட                100        

இவைகளைக் கொண்டுமுறைப்படி தயாரித்து ஆறிய களிம்புடன் கலந்து பத்திரப்படுத்தவும்.

பயன்படுத்தும்முறை:      

 மேற்பூச்சாக (அப்யங்க) வெளிஉபயோகத்திற்கு மட்டும். நல்லெண்ணெய்யுடன் கலந்து பூசலாம்.

தீரும் நோய்கள்:  

பரங்கிப்புண் (உபதம்ஷஜவ்ரண, பிரங்கஜவ்ரண), ஆறாத புண்கள் (துஷ்டவ்ரண), காயங்கள், படை (விஸர்ச்சிகா), நமைச்சல் (கண்டு), பாதிக்கப்பட்ட பகுதியை நன்கு சுத்தம்செய்துவிட்டு இதனைப் போடவும்.

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. ஆறாத புண்ணை ஆற்றிடும்
  2. நாள்பட்ட காயங்களுக்கு இந்த மருந்தை பயன்படுத்தலாம்