Posted on March 22, 2012 by muthukumar
பெண்களின் உடலில் இருக்கும் உறுப்புகளில் அவர்களின் அதிக கவ
னிப்பிற்குரிய
உறுப்பாக இருப்ப வை, மார்பகங்கள். இவை, பலருக் கு கவலைக்குரிய
உறுப்பாகவும் இருக்கிறது. டீன்ஏஜ் பெண்கள் என் றால், ‘சிறிதாக இருக்கிறது
என்று ம், ஒன்றுக்கொன்று அளவில் மாறுபாடு இருக்கிறதென்றும்’
நினைக்கிறார்கள். திருமணமான பெண்கள் என்றால், ‘சரிந்து, தொ ங்கி
காணப்படுகிறது’ என்று கவ லைப்படுகிறார்கள். பெண்களின் இத்தகைய கவலைகள்
நீங்க வேண்டுமானால் அவர்கள் மார்பகங்கள் பற்றிய உடலியல் உண்மை களைப் புரிந்து கொள்ள வேண்டும்.
மார்பகங்கள் என்பவை கொழுப்பு திசுக்களால் சூழப்பட்ட பால் சுரப்பு நாளங்களை உள்ளடக்கியவை. செடியைப் பிடுங்கிப் பார்த்தால்,
அதன்
அடியில் எவ்வாறு பல கிளைகளாக வேர்கள் பரவிச் செல்லு மோ அதைப் போன்றுதான்
மார்பகக் கா ம்பின் அடிப்பகுதியில் பெரி தும், சிறிதுமாக எண்ணற்ற பல கிளை
நாளங்கள் உள் ளன. இவற்றை சூழ்ந்துதா ன் மார்பகத் தசை பெருகும்.
மார்பகங்களில்
இருக்கும் கொழுப்பை பொறுத்துதான் அதன் அள வும், வடிவமும் அமைகிறது.
மார்பகம் பெரிதாக இருந்தால் அதில் அவரது குழந்தைக்காக நிறை ய பால்
சுரக்கும் என்பதும், மார்பகம் சிறியதாக இருந்தால் குறைந்த அளவே பால்
சுரக்கும் என்பதும் தவ றானது. மார்பக அளவிற்கும், சுரக்கும் பாலின்
அளவிற்கும் சம்பந் தம் இல்லை.
பொதுவாக
இரண்டு மார்பகங்க ளும் சிறிதாக இருந்தால், அதை பெரிதாக்க ஏதேனும் வழி முறை
இருக்கிறதா என்று பல பெண்கள் கேட்கிறார்கள். மார்பகங்கள் கொழுப்பு
தசைகளால் ஆனவை என்பதால், நிறைய சத்துணவு
சாப்பிட்டால்
இயற்கையாகவே அவை பெரிதாக வாய்ப்பிருக்கி றது. விசேஷ பயிற்சிகள் செய்து
மார்பகங்களை பெரிதாக்க முடி யாது. ஏனென்றால் அதற்கான தனி தசைகள் எதுவும்
மார்ப கத்தில் இல்லை.
ஹார்மோன்
மருந்து மாத்திரை களால் மார்பகங்களை பெரி தாக்க முடியும். ஆனால் அவை
அளவுக்கு மீறி பெருத்து விடும். வலி வரக் கூடும். சீரான அளவில் மார்பகங்கள்
இருப்பதுதான் அழகு. சில பெண்கள் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மார்பகங்களை
பெரிதாக்கிக் கொள்கிறார்கள். இந்த அறு வை சிகிச்சையின்போது மார்பகத்தின்
அடிப்பகுதியில் திறப்பை உரு வாக்கி, அதன் வழியாக சிலிக்கான் பையை செலுத்தி
உள்ளே வைத் து தைத்து விடுவார்கள். அதனால் மார்பகங்கள் தொய்வின்றியும்,
பெரிதாகவும் காணப்படும். ஆனால் குழந்தைகளுக்கு பாலூட்ட
முடியாது.
இயற்கையாகவே
மார்பகங்கள் பெரி தாக அமையப்பெற்ற பெண்கள், அத னால் பெரும்
அவஸ்தைப்படுவதுண் டு. சிறிதாக்க வேண்டும் என்று அவ ர்கள் நினைக்கிறார்கள்.
சிறிதாக்கும் அறுவை சிகிச்சைகள் உள்ளன. முது குவலியை உருவாக்கும் அளவிற்கு
மார்பகங்கள் பெரிதாக இருந்தால், சிறிதாக்கும் முயற்சியில் ஈடுபடலா ம்.
இல்லா விட்டால் பொருத்தமான பிராக்களை அணிந்து, அவஸ்தைக ளை குறைத்துக்கொள்ள
வேண்டும்.
இளம்
பெண்களில் பலரும் மார்பகங்கள் விரைத்த நிலையிலே இரு க்கவேண்டும் என்று
விரும்புகிறார்கள். ஆனால் அவர்களின் விருப் பத்திற்கு மாறாக அவை கீழ்
நோக்கி சரிந்து விடுகின்றன. கொழுப்பு அடிப்பகுதியில் சேருவதால்தான்
மார்பகங்கள் கீழ்நோக்கி இழுக்கப் பட்டு சரிகின்றன. காம்புகள் மேல் நோக்கி
நிற்கும் அளவிற்கு தோன் றினால், அது சரியாத விரைப்பு மார்பகமாய்
காட்சியளிக்கும். மாடலிங் தொழில் செய்யும் பெண்கள் பொதுவாக தங்கள் கைகளை
தூக்கியவாறும்,
தோள்பட்டையை பின்னோ க்கி இழுத்த நிலையி லும் காட்சி தருவார்கள். அதற்கு
காரணம், அவர்கள் மார்பகங்கள் விரைத்த நிலையில் சரியாமல் காட்சி தர வே
ண்டும் என்பதுதான்!
‘சில
மாடல் அழகிகளின் போட்டோக்களை பார்க்கும்போது அவர்களது மார்பக காம்பு கள்
விரைப்பாக இருக்கிறதே, எங்களுக்கு அப்படி யில்லையே’ என்று சில பெண்கள்
கேட்கிறார்கள். அந்த போ ட்டோக்கள் எடுக்கப்படுவதற்கு முன்பு மாடல் அழகிகள்
காம்புகளில் ஐஸ் துண்டுகளை வைத்து விடுவார்கள். குளிரில் அது சுருங்கி,
விரைத் து நிற்கும். அந்த விரைப்பு அதிக நேரம் நிலைக்காது. மார் பகங்கள்
தாய்மையின் சின்னங்கள். அதனால் அவை ஆரோக்கி யமாய் பரா மரிக்கத் தகுந்தவை.
No comments:
Post a Comment