Thursday 29 March 2012

திருமணம் முடிந்ததும் ஆண்கள் மாறக் காரணம் என்ன‍?

திருமண ஆண்கள் திருமணத்திற்கு பிறகு மாறிவிடுகிறார்கள் என்பது உண்மைத்தான். திரு மணம் நிச்சயம் ஆகி இருந் தாலோ, காதலித்துக் கொண் டு இருந்தாலோ…அப்போது பெண்களுக்கு பிடித்தவை எவை எவை என்று கேட்டுத் தெரிந்து கொண்டு வாங்கிக் கொடுத்து அசத்துபவர்கள், திருமணத்திற்கு பிறகு அதை யெல்லாம் மறந்துவிடு வார்கள்.
திருமணத்திற்கு முன்பே வருங்கால மனைவி வீட்டு நாய்குட்டிக்கு என்றைக்கு பிறந்த நாள் வருகிறது என்று தெரிந்து வைத்திருந்து அதுக்கு ஹேப்பி பர்த்டே சொல்லப் போவதாகச் சொல்லி ஒரு 4 மணி நேரம் டெலிபோனில் டாக்கியவர்கள் கூட திரும ணம் ஆன பிறகு மனைவிக் கு என்று பிறந்த நாள் வருகி றது என்பதைக் கூட மறந்து விடுவார்கள். ‘என்னைய டெ ன்சன் படுத்ததே…’ என்ற வச னம் கூட அடிக்கடி வரும்.
திருமணம் ஆன புதிதில் மனைவி கவனிக்கும் ஓவர் கவனிப்பில் ஒருவித மகிழ்ச்சி இருந் தாலும்… ஒருவித கூச்ச மனப்பான்மையும் ஏற்படுவதால் எரிச்ச லும் வரும். எது எது பிடிக்கும் என்பது தெரி யாததால் தெரிந்து கொள்வதற்காக வேண்டி அன்புத்தொல்லை மிகுதியாக கொடுக் கும் மனைவியரும் உண்டு.
பெண்களைப் பொருத்த அள வில் எதையும் சரியாக செய் யவேண்டும் என்ற மனநிலை யில் இருப்பார்கள். ஆண்கள் சின்ன சின்ன விசயத்தை யையெல்லாம் மறந்தாலும் ஆறுதல் அடைந்தோ… இதெ ல்லாம் ஒன்னும் பெரியதல் ல என்று தேற்றிக் கொள்வா ர்கள். பெண்கள் எல்லாவற்றி லும் குறைவரக்கூடாது என்று நினைப்பவர்களாகவே இருப்பார் கள். திருமணம் ஆன பிறகு தன்னோட குடும்பம் தனி என்கிற நி னைப்பு ஆண்களைவிட பெண்களுக்கே மிகுதி. உண்மையில் ஆண் கள் தன்னுடைய குடும்பம், தனக்க்கான குடும்பம் என்று கூட நினை க்கவே மாட்டார்கள். தன்னு டைய குடும்பம் என்கிற நினை ப்பில் தான், கணவன் தன்மீது மட்டுமே மிகுதியாக அன்பு கா ட்டவேண்டும் என்ற எதிர்ப்பார் ப்பையும் வைத்துக் கொள்வார் கள். நெருங்கிய நண்பர்களோ, கணவனின் உறவினர்களோ கணவன்மீது தன் னைவிட மிகுதியாக அன்பு காட்டுவதை விரும்புவது இல் லை.
இதை சகித்துக் கொள்ள முடியாமல் ஆரம்பத்தில் இதற்கு தடை போடும்போது… பிணக்குகளாக வளரும். திருமணம் ஆன உடனே யே கணவன் – மனைவி இருவரும் உறவினர்களை விட்டுவிட்டு தனிக் குடித்தனமாகச் சென்றால் ஓர ளவு இந்த பிரச்சனையை சரி செய்ய லாம். நண்பர்களின் நடவடிக்கைகளில் மிகுதி யாக ஈடுப்படக் கூடாது. நட்பா, மனை வியா எது பெரியது என்கிற சீர் தூக்களையெல்லாம் சிறுதுகாலம் ஒது க்கி விட்டு ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள…குறிப்பாக மனைவியின் மன நிலையை புரிந்து கொள்ள கணவன் முய ற்சிக்க வேண்டும். ஒரு குழந்தை பிறக்கும் வரைதான் புரிந்துணர்வை வளர்த்துக் கொள்ள நேரம் கிடைக்கும். அதன்பிறகு பெண்கள் குழந்தைக்கு முன்னுரிமை கொடுத்து விட்டு கணவ னை தண்ணீர் தெளிச்சு விட்டுவிடுவார்கள்.
கணவன் வாங்கித்தரும் ஒவ்வொரு பொருளை பெருமதிப்பு மிக்க தாக அது பயன்படாத நிலையிலும் பாதுகாப்பாக வைத்திருப்பார்க ள். திருமண நாள், பிறந்த நாள் ஆகியவற்றிற்குதான் கேட்காமலேயே கணவன் பரி சுகளை வாங்கித் தர வேண்டு ம் நினைப்பார்கள், குறிப்பாக நகைகள் வாங்கித் தந்தால் அன்றே அம்மா வீட்டிற்கு தொலைபேசி சொல்லி மகி ழ்வார்கள். பெண்கள்தாம் மகிழ்வுடன் வாழ்வதாக வெ ளிப்படையாக சொல்லிக் கொள்வதில் விருப்பம் மிக்கவர்கள். தன க்கு எது கிடைத்தாலும் பிறரிடம் சொல்லி மகிழ்வதில் அவர்களுக் கு அலாதியான விருப்பம் உண்டு. அது பிறர் தன்னை பெருமையா க நினைக்க வேண்டும் என்றா அல்லது பொ றாமை படவேண்டும் என்று சொல்கிறார்க ளா? என்பது அவர்கள் அவர்களிடம் இருக்கு ம் நெருக்கத்தின் தன் மையைப் பொருத்த து. சிலரிடம் பெருமை யாக சொல்லும் ஒன்றைப் பற்றி வேறு சிலரிடம் பொறாமைபடு வார்க ள் / படவேண்டும் என்பதற்காக மறைப்பதும் / சொல்வதும் உண்டு.
எல்லா பெண்களும் அப்படித் தான் இருப்பார்களா ? Exception எங்கும் உண்டு. எல்லா ஆண்களில் மனநி லையும் ஒன்றுபோல் இருப்பதில் லை…அது போல் தான் பெண்களும் எல்லா பெண்களுமே ஒன்று போல் இருப்பதில்லை. ஆனால் பெண்க ளின் பொதுவான மனநிலை… பிற ரை விட கணவன் தன்னிடம் மட்டு மே மிகுதியாக அன்பு செலுத்த வே ண்டும், தனது செயல்களை பாரட்ட வேண்டும் அது சமையலாக இருந்தாலும் கூட என்றே நினைப்பார்கள்.
எதை மறந்தாலும் மனைவி யின் பிறந்த நாளை (ஒரு ஐந்து ஆண்டுகள் வரையிலா வது) மறந்துவிடாதீர்கள், நி னைவிருந்தால் பரிசு கொடு க்க மறந்துவிடாதீர்கள். ஆர ம்பத்தில் மனைவியின் கவ னிப்பு அன்புத் தொல்லை யாகவே இருக்கும், போகப் போக சரியாகிடும் அல்லது குறைந்துவிடும்.

No comments:

Post a Comment