Friday 30 March 2012

சுகமான சுகப் பிரசவத்திற்கான ஆலோசனைகள் மகப்பேறு மருத்துவர்கள்

பிரசவம் என்பது அற்புதம். வலி நிறைந்த ஒரு பயணம் இது. ஆனா லும், வலிகளைத் தாங்கிக்கொண்டு பெற்றெடுத்த குழந்தையின் முகத்தைப் பார்த்தவுடன் பட்ட வேதனை எல்லாம் தாயானவ ளுக்குப் பறந்தோடிவிடும்.
உதிரமும் பனிக்குட நீருமாக அந்தச் சிசு வெளியே வருகை யில், உடல் வலி மறந்து உலக த்தின் அதிசிறந்த படைப்பாளி யாக ஆகி விட்ட நெகிழ்வில் பெற்ற வயிறு சிலிர்க்கும். ஆ னால், இன்றைய காலகட்டத் தில் பெரும்பாலான பெண்களுக்குப் பிரசவங்கள் அறுவைச் சிகி ச்சை மூலமே நடைபெறுகின்றன. வலியையும் வாகை சூடிய நெகிழ்வையும் ஒருசேர உணர இன்றைய காலகட்டத்தில் எத்த னை தாய்களால் முடிகிறது?   
இயற்கையான சுகப்பிரசவம் நிகழ வாய்ப்பு இருக்கும் நிலையிலு ம்கூட அறுவைச் சிகிச்சை செய்ய ச் சொல்லும் வற்புறுத்தல்கள் மருத்துவர்கள், கர்ப்பிணிகள் என இரு தரப்பிலுமே மிகுதியாகிவி ட்டன. சுகப்பிரசவம் நடப்பதில் பிரச்னை என்று வந்தால் மட்டு மே அறுவைச் சிகிச்சைக்குப்போ கவேண்டும் என்கிறபுரிதல் அனை த்து தாய்மார்களுக்கும் உருவாக வேண்டும். அதற்கான ஆலோச னைகளையும்  வழிகாட்டுதலையும் இங்கே விளக்குகிறார்கள் பிர பல மகப்பேறு மருத்துவ நிபுணர்களான சென்னை ஷமீக் அக்தார், ஸ்ரீ கலா பிரசாத்,  திருச்சி பி. கமலம், பிரசவ கால உடற்பயிற்சி ஆசிரியர் ரேகா சுதர்சன்…
1. கருத்தரிக்குமுன்பே மருத்துவர்களிடம் கலந்தாலோசிக்க‍ வேண்டும்..
திருமணமாகி கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே கணவன்-மனைவி இருவரும் மருத்துவரி டம் ஒரு கலந்தாய்வுக்குச் செல்வது நல்ல து. இந்தக் கலந்தாய்வில் பெண் மற்றும் அவரது கணவரின் குடும்பச் சூழல், குடும்ப வரலாறு ஆகியவற்றை மருத்துவர் தெரி ந்து கொள்வதோடு, தம்பதியில் யாருக்கே னும் ஏதேனும் பரம்பரை நோயோ,   பெண் ணுக்கு தைராய்டு, சர்க்கரை நோய், இதய நோய் ,  ஹெ படைடிஸ் பி, ரத்த அழுத்தம், வலிப்பு நோய், ஹெச்.ஐ.வி. போன்ற நோ ய்களோ இருக்கின்றனவா என்பதையும் கண்டறிவார். உடல் ரீதியாகவும் மன ரீதி யாகவும் பிரசவத்துக்கு ஒரு தம்பதி த யாராக இது உதவும்.
2. உணவு விஷயத்தில் அதிக அக்கறை வேண்டும் !
கருவுற்ற நாளில் இருந்து தொடர்ந்து வாந்தி, மயக்கம் இருக்கலா ம். சிலருக்கு உடலில் நீர்ச் சத்து குறைந்து எடை குறையலாம். சுகப்பிரசவத்துக்குதா யின் உடல்நிலை இன்றியமையாதது. அதே போல், குழந்தையின் எடை 3 முதல் 3.5 கி. கி. வரை இருந்தால்தான் குழந்தையின் தலை வெளியே வர ஏதுவாக இருக்கும். இதனால், உணவு விஷயத்தில் அதிக அக்க றை எடுத்துக்கொள்வது அவசி யம்.
3. எந்த உணவை எப்பொழுது சாப்பிடலாம்
முதல் மூன்று மாதங்களில் மசக்கை காரணமாக உணவை மனம் வெறுக் கும். இந்த நாட்களில்தான் உணவில் பெண்கள் கவனம் செலுத்த வேண்டு ம். திட உணவு எடுத்துக்கொள்ள முடி யாத சூழலில் பழச்சாறு போன்ற திர வ உணவுகளையேனும் எடுத்துக் கொள்ள வேண்டும்.  இத்தகைய சம யங்களில்பெண்கள் உணவை வெறுத்தால், அதுவே ஊட்டச் சத்துக் குறைவை உருவாக்கி ரத்த சோகைக்கு வழிவகுத்து, குழந்தையி ன் ஆரோக்கியத்தையும் தாயின் உடல் – மன வலிமையையும் குறைத்துவிடும். ஆகவே, தொடக்கத்தில் இருந்தே நல்ல ஊட் டச் சத்து மிக்க உணவை எடுத்துக்கொள்வது அவசியம். நீர்ச்சத்து க்கு இளநீர், வாந்தியை எதிர்கொள்ள மாதுளை, இரும்புச்சத் துக்குப் பேரீச்சை ஆகியவை இந்த நாட் களில் பேருதவி செய்யும். 4- வது மாதத்தில் இருந்து இரும்புச் சத்து மிக்க கீரை, காய்கள் மற்றும் பழங் களை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், உடலில் இரும்புச் சத்தின் அளவு குறைந்தால் ஹீமோகுளோபினின் அளவும் குறையும். இந்த ஹீமோ குளோபின்தான் உடலின் பிற பாக ங்களுக்கு பிராண வாயுவை எடு த்துச் செல்ல உதவுகிறது. இதன் அளவு குறையும் போது குழந்தைக்கும் தேவையான பிராண வாயு கிடைக்காமல் மூச்சுத் திணறல் ஏற்படும். இதனால் போதிய இரும் புச்சத்து உள்ள உணவுகளையோ, மாத்திரைகளையோ எடுத்துக் கொள்வதுதே வையாகிறது. நார்ச் சத்துக்கள் நிரம்பியுள்ள காய் கறிகளையும் உணவில் சேர்த் துக்கொள்ள வேண்டும். இத னால், மலச்சிக்கல் பிரச்னை யை முறியடிக்க முடியும். கீ ரை, ஓட்ஸ், புதினா, உலர் திரா ட்சை, கொத்தமல்லி, பேரீச் சை போன்ற உணவுப் பொருட் களில் இரும்புச் சத்து அதிகம் இருக்கிறது. கொண்டைக்கட லை, ராஜ்மா, பயறு வகைகளி ல் கால்சியம், புரதச் சத்து அதி கம் இருக்கிறது. உருளை, கேரட், வேர்க்கடலை, பாதாம் பருப்பு வகைகளில் புரதம் இருக்கிறது. சர்க்கரைவள்ளிக்கிழங்கு, நூக்கோ ல் போன்ற வற்றில் ஃபோலிக் அமிலம் அதிகம் இருக்கிறது. அன் றாட உணவில் இவற்றைச் சமச்சீரான விகிதத்தில் சேர்த்துக் கொ ள்ள வேண்டும். குறைந்தது தினமும் இரண்டு முதல் மூன்று லிட் டர் வரை தண்ணீர் குடித்தால், தாய்க்கு நல்லது. குறிப்பாக பனிக் குடத்துக்கு நல்லது!
 4  குனிந்து, நிமிர்ந்து, எழுந்து வேலை செய்ய வேண்டும்
சுகப்பிரசவத்திற்குப் பெண்களின் இடுப்பு எலும்பு விரிந்து கொடுப்ப து மிக மிக முக்கியமான ஒன்று. இது கையில் வளையல் அணிவது போ ன்ற செயல்பாடுதான். சிறிய அளவு ள்ள வளையல் பெரிய மணிக்கட்டு உள்ள கையில் எப்படி நுழையாதோ , அதுபோல இடுப்பு எலும்பு சிறிய தாக இருந்து குழந்தையின் தலை பெரியதாக இருந்தால், குழந்தையி ன் தலை வெளியே வராமல் மாட் டிக் கொ ள்ளும். பெண்கள் கருவுற்ற காலத்தில் இருந்து குனிந்து வீட்டைச் சுத்தம் செய்வது, அமர்ந்து துணி துவைப்பது போன்ற வீட்டு வேலைகளில் ஈடுபடுவது நல் லது. அமர்ந்தே வேலை செய்யும் பணி களில் ஈடுபட்டுள்ள பெண் கள் தினமும் கட்டாயம் நடைப்பயிற்சி செய்தே ஆக வேண்டும். மேலும், உடற்பயிற்சி செய்யும்போது எண்டோர்ஃபின் என்கிற ஹார்மோன் சுரக்கும். இதனால், உடல் தசைகள் வலுப்பெற்று, குழந்தை சரியான நிலையில் இருக்கும். பெண்களின் பிறப்புறுப்பு நல்ல நெகிழ்வுத் தன்மையு டன் இருக்கும். பிரசவமும் சுலபமா கும். தினமும் கா லையில், முக்கால் மணி நே ரம் மூச்சு இரைக்காத வாறு மெதுவாக நடக்கலாம்.
5  சரியான எடை இருக்கிற தா என்பதை சோதித்த‍றிதல் அவசியம்!
கர்ப்பமாக இருக்கும்போது பெண்களின் எடை 10 முதல் 12 கிலோ வரை கூடலாம். ஆனால், சில பெண்களுக்கு 15 கிலோ வுக்கும் அதிகமாக எடை கூடும். இவர்களுக்கு இரட்டைக் குழந்தை யாக இருக்கலாம் அல்லது குழந்தையின் எடை அதிகமாக இருக்க லாம். இவை இரண்டுமே இல் லை என்றால் உடலின் எந்தப் பகுதியிலோ நீர் கோத்திருக் கிறது என அர்த்தம். இதனா ல், கர்ப்பிணிக ளின் கால் வீங்கிக் காணப்படும். பொது வாகவே கர்ப்பிணிகளுக்கு கால் வீக்கம் இருப்பது இயல் புதான். ஆனால், இந்த வீக்கம் கணுக் காலுக்குக் கீழே மட்டு ம் இருக்கும். அதுவும் நன்றாகத் தூங்கி எழுந் ததும் சரியாகிவிடும். அப்படி இல்லாமல் கணுக்காலைத் தாண்டி யும் வீக்கம் இருந்தால் உப்பு அதிகமாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். சிறு நீர்ப் பரிசோதனை மூலம் உப்பின் அள வைக் கண்டறிந்து, அதைக் குறைக்க முயற்சி செய்ய வேண்டும். இத்துடன் ரத்த அழுத்தம் அளவுக்கு அதிகமாகிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல் லாவிடில் பேறுகாலத்தின்போ து வலிப்புநோய் ஏற்பட வாய் ப்பு உள்ளது. இதுபோன்ற பிரச் னைகளை ஆரம்ப த்திலேயே கண்டுபிடித்துக் குணப்படுத்த வேண்டியது அவசியம்.
6  படுக்கையறையில் உற்சாகத்துடன் இருத்த‍ல் அவசியம்
கர்ப்பிணிகள் முதல் நான்கு மாதங்கள் மல்லாந்த நிலையில் படு க்கலாம். ஆனால், அதற்குப் பிறகு இடதுபுறமாக ஒருக்களித்துப் படு ப்பதே தாய்-சேய் இருவருக்கும் சாலச்சிறந்தது. இரவில் எட்டு மணி நேரத் தூக்கமும், பகலில் ஒரு மணி நேரத் தூக்கமும் கர்ப் பிணிகளுக்கு மிகவும் அவசியம். முதல் மூன்று மாத மும் கடைசி ஒரு மாதமும் தாம்பத் யத்தைத் தவிர்ப்பது நலம்.
7.  ஒரே மருத்துவர்!
பொதுவாக முதல்  28 வாரங்களுக்கு மாதம் ஒரு முறையும் அத ற்குப் பிற கு 28 முதல் 36 வாரங்கள் வரை இர ண்டு வாரங்களுக்கு ஒரு முறையும் 36-வது வாரம் முதல் பிரசவம் வரை வாரம் ஒரு முறையும் மருத் துவரிடம் பரிசோதனைக்குச் செல்ல வேண்டும். ஆரம்பத்தில் இரு ந்தே  ஒரே மருத்துவரை அணுகுவது நல் லது. நம் உடல்நிலையைப் பற்றிய அனைத்து விவரங்களும் தெளிவாகத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ற சிகிச்சை யை அளிக்க மருத்துவருக்கு எளிதாக இருக் கும்.
8. குறிப்பிட்ட‍ நேரத்தில் மருந்துகள் உட்கொள்ளுதல் அவசியம்
தாய், சேய் இருவருக்கும் டெட்டனஸ் தொற்றுநோய் ஏற்படாமல் இருக்க நான் கு வார இடைவெளியில் இரண்டு தட வையாக ரண ஜன்னி ஊசி போடவே ண்டும். ஃபோலிக் அமில மாத்திரைக ளை திருமணமான முதலே பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல் லது. ஏனெனில், இது கர்ப்ப காலத்தில் குழ ந்தைக்கு ஏற்படக் கூடிய சில பிறவிக் குறைபாடுகளைத் தடு கும். ரத்தசோகை பாதிப்பு உடைய வர்களுக்கு இரும்புச் சத்து மாத்திரை அல்லது ஊசி தே வைப்படலாம். தவிர, அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப தேவைப்ப டும் மருந்துகளை மருத்துவர் பரிந்துரைக்கலாம். இந்த மருந்துக ளைத் தவறாமல் எடுத்துக்கொள்வது முக் கியம்.  
9 கூடாது… கூடாது… கூடவே கூடாது!
வயிறு பெரிதாக பெரிதாக அதிக எடை யைத் தூக்குவது, ஓடுவது, குடத்தை இடு ப்பில் வைப்பது, நாற்காலியின் மீது ஏறு வது போன்ற கடுமையான செயல்களில் ஈடுபடவே கூடாது. தரையில் கால்களை நன்றாக ஊன்றி நடக்க வேண்டும். கால்க ளைத் தொங்கப் போட்டபடி உட்காரக் கூடாது. அடிக்கடி கால்களை நீட்டி, மடக்க வேண் டும். அதிக நேரம் ஒரே இடத்தில் உட்காரக் கூடாது. ஒரே மாதிரி யான வே லைகளைத் தவிர்க்க வேண்டும். உடல் முழுவதுக்கும் அசைவு கொடுக்கக் கூடிய பல்வேறு வேலைகளில் ஈடுபட வேண்டு ம். இதனால் உடலில் தசைப்பிடிப்பு, கால்கள் மர த்துப்போதல் போன்றவை ஏற்படாமல் இருக்கும். ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். வெஸ்டர்ன் டாய்லெட்டைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண் டும். இப்போதைய பெண்கள் பிரசவத்தின்போது காலை மடக்கவே மிகவும் கஷ்டப்படுகி ன்றனர். இந்திய டாய்லெட்டுகளைப் பய ன்படுத்துவதன் மூலம் கால்களை எளிதா க நீட்டி, மடக்க முடியும். நொறுக்குத் தீனி களை அதிகம் எடுத்துக்கொள்ளக் கூடாது. தேவையற்ற பிரச்னைகளில் மூக்கை நுழைக்காமல் இருப்பது நலம். இது மனச் சங்கடங்களைத் தவிர்க்க உத வும்.
 10  தெளிந்த சிந்தனையும், அமைதியான மனநிலையும் சுகப்பிரசவத்திற்கு வழிவ குக்கும்
தாயின் உடல்நலன் எவ்வளவு முக்கிய மோ மனநலனும் அவ்வளவு முக்கியம் சுகப்பிரசவத்துக்கு. இன்றைய காலகட்ட த்தில் சுகப் பிரசவத்துக்கு மிகப் பெரிய எதிரி பெண்களுக்குப் பிர சவ வலி மீது உருவாகி இருக்கும் பயம். இந்தப் பயத்தை எதிர் கொள்வதற்கு தாயும் தன்னளவில் தயாராக வேண்டும்; குடும்ப உறுப்பினர்களும் தாயைத் தயாராக்க வேண்டும். ‘இது ஒரு பிரச் னையே இல்லை; உனக்கு எதுவென்றாலும் உதவ நாங் கள் எல்லோரும் இருக்கி றோம்’ என்று ஒவ்வொரு கட்டத்திலும் தாய்க்கு   நம்பி க்கை அளிக்க குடும்பத்தினர் தவறக் கூடா து. தாயின் மன நிலையை எப்போதும் சந் தோஷமாக வைத்துக் கொள் ள வேண் டும். தாயும் நல்ல உணவைப் போலவே நல்ல இசை, நல்ல புத்த கங்கள் என மனதை இதமாக வைத்துக்கொள்ளும் விஷ யங்களில் கவனம் செலுத்த வேண்டும். கூடுமானவரை தொலைக்காட்சி நிக ழ்ச்சிகளைத் தவி ர்த்தல் நலம்.  தியானம் மனதை ஒருமுகப்படுத்த உதவுவதோடு தேவையில்லாத பயம் – கவலைகளை நீக்கி பிரச வத்தைத் தன்ன ம்பிக்கையோடு எதிர்கொள்ள உதவும்.

No comments:

Post a Comment