Friday 20 January 2012

பப்பாளியின் கொடை!

Posted On Jan 20,2012,By Muthukumar



பப்பாளி, அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டது. பத்தாம் நூற்றாண்டில்தான் பப்பாளி இந்தியாவில் பயிரிடப்பட்டது. ஏக்கருக்கு சராசரியாக 10 ஆயிரம் கிலோ பழம் தரக்கூடியது இது.
பப்பாளிக் காயின் மீது கத்தியைக் கொண்டு கீறினால் பால் போன்ற திரவம் வடியும். அதற்கு `லேக்டஸ்' என்று பெயர். அதை கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரத்தில் சேகரித்து உலைக்களக் காற்று மூலம் காயவைத்து, தேவையான வேதியியல் பொருட்களைச் சேர்த்தால் `பெப்பைன்' என்ற உயர்ந்த ஊக்கியைத் தயாரிக்கலாம். அது சன்னமான மணல் போன்று உலர்ந்த தூள் வடிவத்தில் இருக்கும். காற்றுப் பட்டால் பிசுபிசுக்கும் தன்மை உடையது.
கரோட்டினையும், நிகோடிக் அமிலத்தையும் கொண்டிருப்பதால் பெப்பைன் பல்வேறு விதங்களில் பயன்படுகிறது. மீன்களில் இருந்து எண்ணை எடுக்கவும், அழகு சாதனப் பொருட்கள், பற்பசை, சூயிங்கம் போன்றவை தயாரிக்கவும், ரேயான்- பட்டு போன்றவற்றில் இருந்து பசை நீக்கவும், கம்பளித் தோலைப் பதப்படுத்தவும் பயன்படுகிறது.
பப்பாளியில் உள்ள புரத ஊக்கிகளைப் பயன்படுத்தித் தயாரிக்கும் மருந்துகள் செரிமானம் இன்மையைத் தடுக்கவும், சுவாச உறுப்புகளில் இறந்த திசுக்களைக் கரைக்கவும், தோல் நோய்களைத் தீர்க்கவும் உதவுகின்றன.
மேலும், தொண்டைப்புண்ணைக் குணமாக்கவும், சிறுநீரக நோய்களைத் தீர்க்கவும் அமில எதிர்ப்பு மருந்தாக பெப்பைன் பயன்படுகிறது. குறிப்பாக, `எண்டோஸ்பெர்ம்' என்ற வினை மாற்றத்தால் பெண்களிடம் ஏற்படும் ஒருவித மலட்டுத் தன்மையையும், ஜீரண உறுப்புகளில் ஏற்படும் கட்டிகளையும் அறவே அகற்றுகிறது.
பப்பாளித் துண்டுகளுடன் சேர்த்து வேக வைக்கப்படும் இறைச்சி, விரைவாக வெந்து, எளிதாகச் செரிக்கும் உணவாகிறது.
இந்தியாவில் பப்பாளி பெருமளவு விளைவிக்கப்படாததால் நம் நாட்டுத் தேவைக்கான பெப்பைன் இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்படு கிறது.
பப்பாளிப் பழத்திலிருந்து பழக்கூழ், குளிர்ந்த பழக் கலவை போன்ற பலவற்றையும் தயாரிக்கலாம். பப்பாளிப் பழத்தைத் தினமும் 250 கிராம் அளவுக்கு உண்டுவந்தால் சிறுநீரில் உள்ள சர்க்கரை அளவு வெகுவாகக் குறையும்.

பெருகிவரும் `பார்’ கலாசாரம்

Posted On Jan 20,2012,By Muthukumar
- `உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?'
- `என்ன விஷயம்?' என்று நாம் கேட்பதற்குள்..!
"முன்பெல்லாம் அன்றாட வேலை முடிந்து களைத்துபோகும் ஆண்கள்தான் கொஞ்சம் மது அருந்திவிட்டு வீட்டுக்கு செல்வார்கள். இப்போது பெண்களும் ஆண்களோடு சேர்ந்து அந்த பாதையில் போய்க் கொண்டிருக்கிறார்கள். அலுவலக வேலையை முடித்துவிட்டு சக நண்பர்களோடு அமர்ந்து மனம் விட்டு பேசியபடியே, கொஞ்சம் `சில் பீர்` போட்டுவிட்டு, அலுவலக டென்ஷனை எல்லாம் `பாரிலே` தொலைத்துவிட்டு, ஹாயாக வீடு திரும்புகிறார்கள். அந்த காட்சியை மாலை நான்கைந்து மணிக்கே சென்னை நகர பார்களில் உங்களால் காண முடியும்..'' - என்றது அந்த தகவல்.
`புத்தாண்டு கொண்டாட்டத்தில் எக்கச்சக்கமாய் `அடித்து', மாநிலத்தில் மொத்த மது விற்பனையை அதிகரிக்க செய்த மக்கள் இப்போது, அதை ஒரு அன்றாட தேவையாக்கிவிட்டார்களோ' என்ற கவலையோடு அந்த பார் உள்ளே எட்டிப் பார்த்தோம்! நமக்கு கிடைத்த தகவல் உண்மைதான். 25 முதல் 60 வயது வரையிலான ஆண்கள் கையில் `கப்` நிரப்பி வைத்திருந்தார்கள். அவர்களோடு 15,20 பெண்கள்! அனேகமாய் இளம் வயது. நாலைந்து பெண்கள் நாற்பதைக் கடந்து, ஐம்பதைத்தொடும் வயதுகளில்!
சாலை சந்தடி எதுவும் உள்ளே கேட்கவில்லை. உள்ளே இருந்தவர்கள் ஒரு ஆனந்த உலகத்திற்குள் சஞ்சரிப்பதுபோல் காணப்பட்டார்கள். வெளியே இரவும், பகலும் உரசிக் கொள்ளும் மாலை மயங்கும் நேரம். உள்ளேயும் அப்படித்தான். ஆனால் வெளிச்சத்தை விட இருட்டின் ஆதிக்கம் உள்ளே கொஞ்சம் அதிகம். அழகழகான இருக்கைகள். இருக்கைகளைவிட அழகான பெண்கள் அதில் உட்கார்ந்திருந்தார்கள். இசை ஓடிக் கொண்டிருந்தது. எம்.ஆர்.சி.நகர் `பி பாரில்' இந்த `அபூர்வ' காட்சியை நாம் கண்டோம்.
நாம் உட்கார்ந்த இருக்கைக்கு எதிர்புறத்தில் இருபத்தைந்து வயதுக்கு மிகாத ஐந்து பேர். அதில் இரண்டு பேர் பெண்கள். பெண்களை நடுவில் உட்காரவைத்து, மூன்று இளைஞர்களும் சுற்றி அமர்ந்திருந்தனர். இரண்டு பெண்களின் கைகளிலும் பீர் நிரப்பிய கோப்பைகள்.
பேசிக்கொண்டே, ஆல்கஹால் தன்மை அதிகம் கொண்ட ஏதோ ஒரு வகை மதுவை அந்த இளைஞர்கள் இருவரும் பருகிக் கொண்டிருந்தார்கள். இரண்டு ரவுண்டை அவர்கள் தாண்டியபோது அவர்கள் பேச்சைக் குறைத்து மவுனமானார்கள். ஆனால் முழு கோப்பையையும் காலி செய்தபோது அந்த பெண்கள் இருவரும் பேசத் தொடங்கினார்கள். பேசினார்கள்.. பேசினார்கள்.. பேசிக்கொண்டே இருந்தார்கள்! இறுக்கமாகிவிட்ட இளைஞர்கள் கம்முன்னு கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
`மது பற்றி நம்மிடம் மனம் விட்டுப்பேச எந்த பெண் கிடைப்பார்' என்ற நமது தேடுதலுக்கு விடை கிடைத்தது. மாடர்ன் உடையில் தனிமை யில் கலக்கலாக அமர்ந்து ஒயின் பருகிக்கொண் டிருந்த 30 வயது பெண்ணை அணுகினோம். `பலமாக' கைகுலுக்கி, `உற்சாகமாக' பேசத் தொடங்கினார்.
அவரது பேச்சின் தொடக்கத்திலே `சூடு' பறந்தது. "நம் நாடு, இந்த நாட்டில் வசிக்கும் நாம் எல்லோருமே முரண்பாடானவர்கள். செக்ஸ் பற்றி பேசவே கூச்சப்படுவதுபோல் காட்டிக் கொள்வோம். ஆனால் உண்மை என்ன? செக்சில் அதிகமாக ஈடுபடுகிறவர்கள் நாம்தான்! குழந்தைகளை பெற்றுக்கொள்வதிலும் உலகிலே முதலிடத்திற்கு முன்னேற வழி இருக்கிறதா என்றும் பார்க்கிறோம். செக்ஸ் போன்று மதுவையும் பாவச் செயலுக்குரிய விஷயம் என்ற பட்டியலில் வைத்திருக்கிறோம். ஆனால் நாளுக்கு நாள் நாம் அருந்தும் மதுவின் அளவு அதிகரித்துக்கொண்டிருக்கிறது. என்ன முரண்பாடு பார்த்தீர்களா?'' என்று கேட்டபடி இன்னொரு `சிப்' பருகினார்.
நேரம் செல்லச் செல்ல ஆண்கள் கூட்டம் அதிகரித்தது. அதில் பலர் ஜோடியாய் வந்தார்கள்.
`மது அருந்துவதால் உங்களுக்கு என்ன கிடைக்கிறது?'- இந்த கேள்வியை நாம் கேட்டதும், அந்த பெண்ணின் நண்பராக அறிமுகமான இளைஞர் பதில் சொல்லத் தொடங்கினார். அவர் உதிர்த்தது தத்துவ ரகம்!
"இந்தியாவில் பார்கள் அதிகமாகிவிட்டன. அதற்கு என்ன காரணம் என்று விளக்கமாக சொல்கிறேன் கேளுங்க! மனிதர்கள் வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சினைகள், ஒரே டென்ஷன். வெளியே இருந்து உருவாகும் அந்த பிரச்சினைகளை அப்படியே தூக்கிக்கொண்டு வீட்டிற்கு போனால், வீடு முழுக்க அந்த பிரச்சினை எதிரொலிக்கும். எல்லா விஷயத்திற்கும் மனம் விட்டு பேசுவதுதான் தீர்வு. இங்கே பாருங்கள் எல்லோரும் உட்கார்ந்து பேசுகிறார்கள். ஓரளவுதான் மது அருந்துகிறார்கள். ஆனால் நிறைய பேசுகிறார்கள். அந்த பேச்சு எங்கள் மன சுமையை எல்லாம் இறக்கிவிடும். அமைதியாக வீட்டிற்கு சென்று தூங்கி விடுவோம்.
நாங்கள் நிறைய சம்பாதிக்கிறோம். நாங்கள் நிம்மதியாக வாழவேண்டும். நாங்கள் கடந்து போன நேற்றை நினைத்து அழத்தயார் இல்லை. நாளை என்ற எதிர்காலத்தை நினைத்தும் ஏங்கப்போவதில்லை. எங்கள் கையில் இருப்பது இன்று மட்டுந்தான். இந்த பொழுதை நாங்கள் உற்சாகமாக கழிக்கவேண்டும். கழிக்கிறோம்..'' என்றவர் நம்மிடம் கைகொடுத்து விட்டு, அந்த 30 வயது அழகுப் பெண்ணையும் அழைத்துக்கொண்டு கிளம்பிப் போனார்.
மீண்டும் நாம் அமைதியாக இருந்து நாலாபுறமும் பார்வையை செலுத்தினோம். ஆண்கள் மது அருந்தும்போது நிறைய சைடு டிஷ்களையும் உள்ளே தள்ளினார்கள். பெண்கள் பீர், ஒயினை பருகினாலும் சைட் டிஷ்களில் கை வைக்கவே பயப்படுகிறவர்கள் போலவே காணப்பட்டார்கள். அங்கே இருந்த பெரிய டெலிவிஷனில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டியில் தெண்டுல்கர் அவுட் ஆவதை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். அது, மது அருந்துபவர்களை ஓரளவு பாதிக்கவே செய்தது. அதைப் பார்க்க பார்க்க அவர்கள் அருந்தும் மதுவின் அளவு அதிகரித்துக் கொண்டிருந்தது. இது ஒரு வியாபார `டெக்னிக்'.
பிசியாக இருந்த `பார் டெண்டரை' ஓரங்கட்டினோம். பெயரை எல்லாம் போடாதீங்க என்ற வேண்டு கோளோடு பேசினார்..
"இன்றைக்கு காதல், நிச்சயதார்த்தம், கல்யாண முடிவு, விவாகரத்து முடிவுகள் போன்றவை பார்களிலும் எடுக்கப்படுகிறது. பிறந்த நாள் பார்ட்டி, விவாகரத்து பார்ட்டி, வியாபாரம், புரமோஷன் பார்ட்டி, ஊருக்கு போகிறதுக்கு பார்ட்டி, மனைவி தாய்மை அடைந்தால் பார்ட்டி, குழந்தை பிறந்தாலும் பார்ட்டி.. என்று எல்லாவற்றுக்கும் மது விருந்து வைக்கிறார்கள். அதற்காக ஆண்களும், பெண்களும் பார்களில் கூடுகிறார்கள். வெற்றி என்றாலும் குடிக்கிறார்கள். தோல்வி என்றாலும் குடிக்கிறார்கள். ஆண்களுக்கு ஏற்படும் எல்லா உணர்வுகளும், பிரச்சினைகளும் பெண்களுக்கும் ஏற்படுகின்றன. அதனால் அவர்களும் வந்து போகிறார்கள். பார் டெண்டிங் என்ற பாடத்தை நாங்கள் படித்திருக்கிறோம். பார்கள் அதிகரித்துக் கொண்டிருப்பதால், படித்து முடித்த உடன் இப்போதெல்லாம் எங்களுக்கு வேலையும் கிடைத்துவிடுகிறது..'' என்றபடி நடையை கட்டினார்கள்.
ஆறடி உயரத்தில், நூறு கிலோ எடைக்கு குறையாமல், இருவர் வெளியே நின்றுகொண்டு வருகிறவர்களையும், போகிறவர்களையும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். மிரட்டுகிற மாதிரி தெரிந்த அவர்கள் இருவரும் பவுன்சர்களாம்! அதாவது பாதுகாப்பாளர்கள். அவர்களிடம், `குடித்துவிட்டு வம்பு செய்த யாரையாவது உங்கள் உடல் பலத்தைக்காட்டி வெளியே தூக்கி போட்டிருக்கிறீர்களா? என்று கேட்டோம். "இதுவரை அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை..'' என்றார்கள், சற்று ஏமாற்றம் கலந்த குரலில்..! பார்களில் கூடும் கூட்டம் நம்மை கவலை கொள்ளச் செய்கிறது.

மது அருந்தும் பெண்களுக்கு..

* பெண்களின் உடலில் தண்ணீர்தன்மை குறைவு. அதனால் போதை அவர்களுக்கு மெதுவாகவே ஏறும்.
* மதுவின் போதைதன்மையை குறைக்கும் என்சைம்களின் அளவு பெண்களுக்கு குறைவு. அதனால் போதைத் தன்மை அவர்கள் உடலில் அதிக நேரம் நிலைத்து நிற்கும்.
* மாதவிலக்குக்கு முந்தைய சில நாட்களில் பெண்களின் உடலில் ஹார்மோன் சமச்சீரற்றதன்மை ஏற்படும். அப்போது அவர்கள் மது அருந்தினால், இயல்புக்கு மாறான சூழல் உடலில் ஏற்படும்.
* கர்ப்பத்தடைக்காக சில பெண்கள் ஈஸ்ட்ரோஜன் அடங்கிய மாத்திரைகளை உண்பார்கள். அவர்கள் மது அருந்தினால் மதுவில் உள்ள ஆல்கஹால் அவர்கள் உடலைவிட்டு நிதானமாகவே வெளியேறும்.
*அளவுக்கு அதிகமாக மது அருந்தினால் ஈரல் நோய், பான்கிரியாஸ் பாதிப்பு, ரத்த அழுத்தம் போன்றவை தோன்றும்.

மிதமாக அருந்தினால்..

`மிதமாக மது அருந்துவது உடலுக்கு நல்லது' என்ற கண்ணோட்டத்தில் அவ்வப்போது உலகளாவிய நிலையில் ஆய்வு தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. "மிதமாக மது அருந்தினால் உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும். அதனால் இதயத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறையும்'' என்று 50-க்கும் மேற்பட்ட ஆய்வுகள் குறிப்பிட்டுள்ளன. சமீபத்தில் இந்த முடிவை உறுதி செய்திருப்பது, `நியூ இங்கிலாந்து ஜேனல் ஆப் மெடிசின்' ஆகும்.
மிதமாக குடிப்பவர்களுக்கு இதய தமனிகளில் ஏற்படும் பிரச்சினைகளும், ரத்தம் கெட்டியாவதால் உருவாகும் இஸ்கெமிக் ஸ்ட்ரோக்கும் ஏற்படும் வாய்ப்பு 40 முதல் 70 சதவீதம் குறைவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம், அளவான மது ரத்தம் கெட்டியாவதை தடுக்கிறது. உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவையும் அதிகரிக்கிறது. அதே நேரத்தில் அளவுக்கு அதிகமான மது, பல்வேறு நோய்களுக்கு காரணமாகிறது. குடி குடியை கெடுக்கும்.

எதில், எவ்வளவு போதை..?

பீர்
கோதுமை, சோளம், பார்லி போன்ற தானியங்களை லேசாக முளைவிடவைத்து, அதில் இருக்கும் ஸ்டார்ச்சை எடுத்து புளிக்கச் செய்து பீர் தயாரிப்பார்கள். 4 முதல் 8 சதவீதம் ஆல்கஹால் இதில் உள்ளது.
பிராந்தி
ஆப்பிள், பீச், ப்ளம், செர்ரி போன்றவைகளை ஊறவைத்து, தயாரிக்கப்படுகிறது. இதில் 40 முதல் 60 சதவீதம் போதை தரும் ஆல்கஹால் இருக்கிறது. இது எவ்வளவு காலம் வைத்திருந்து தயாரிக்கப்படுகிறது, என்பதற்கு தக்கபடி தரத்தை நிர்ணயிக்கிறார்கள். விலையையும் நிர்ணயிக்கிறார்கள்.
ரம்
கரும்புச் சாறு, கரும்பில் இருந்து உருவாகும் மோலாசஸ் போன்றவைகளை புளிக்கவைத்து, வடிகட்டி ரம் உருவாக்கப்படுகிறது. தயாரிப்பு சூழல், நாள்பட்ட நிலை, ஆல்கஹாலின் அளவு போன்றவைகளுக்கு தக்கபடி தரம் நிர்ணயிக்கப்படுகிறது. 37 முதல் 55 சதவீதம் வரை இதில் ஆல்கஹால் உள்ளது.
விஸ்கி
தானியங்களை வேகவைத்து, புளிக்கச் செய்து விஸ்கி தயாரிக்கிறார்கள். முதலில் இதை மர பீப்பாய்களில் பாதுகாப்பார்கள். நாள்பட்ட பின்பு இரு முறை வடிகட்டி எடுப்பார்கள். இதன் மூலப் பொருளாக சோளம் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. ஸ்காட்லாந்தில் உருவாக்கப்படுவது, ஸ்காட்ச் விஸ்கி. இந்த வகைகளில் 40 சதவீதம் வரை ஆல்கஹால் உள்ளது.
ஷாம்பெய்ன்
வடகிழக்கு பிரான்சில் உள்ள ஷாம்பெய்ன் என்ற நகரில் தயாரிக்கப்படும் ஸ்பார்கிளிங் ஒயினுக்கு இந்த பெயரை சூட்டியிருக்கிறார்கள். மூலப் பொருளான ஊறலை புளிக்கச் செய்து, வடிகட்டி இதனை மிகக் கவனமாக தயாரிக்கிறார்கள். இதனை தயாரிக்க பல மாதங்கள் எடுத்துக் கொள்கிறார்கள்.
ஒயின்
திராட்சை சாறை புளிக்கவைத்து ஒயின் தயாரிக்கப்படுகிறது. திராட்சை சாறுடன், சர்க்கரை, ஈஸ்ட் செயலாக்கம் செய்யும்போது இது உருவாகிறது. எந்த அளவிற்கு பழமையானதோ அந்த அளவிற்கு அதன் தரமும், சக்தியும் இருக்கும். ஒயினில் 8 முதல் 16 சதவீதம் ஆல்கஹால் உள்ளது.
ஓட்கா
மணம், நிறம், ருசியற்ற மது. இதில் 40 முதல் 50 சதவீதம் ஆல்கஹால் இருக்கிறது. சோளம், கோதுமை, உருளைக்கிழங்கு போன்றவைகளை புளிக்கவைத்து கிடைக்கும் பானத்தில் இருந்து ஓட்கா தயாரிக்கிறார்கள்.
நன்றி-தினத்தந்தி
vayal | ஜனவரி 19, 2012 at 8:40 பிற்பகல் | Categories: சிந்தனைகள் | URL: http://wp.me/pewfk-

Thursday 19 January 2012

சும்மா நச்னு இருக்குல்ல



Posted On Jan 19,2012,By Muthukumar





 இணையத்தில் உலாவும் போது சில படங்களை ரசித்தேன் அதை உங்கள் பார்வைக்கு தருகிறேன். 











இந்த படங்கள பார்த்து சிரிக்காம இருந்தா, ஒரு நல்ல டாக்டர பார்க்கணும்



இந்த படங்கள் மட்டுமில்லீங்க கீழே நிறைய படங்கள் இருக்கு இதுகல பாத்து யாராவது சிரிக்காம இருந்தா, அவங்கள ஒரு நல்ல‍ டாக்டர்கிட்ட‍ கூட்டிட்டு போயி காமிங்கா பாஸ் 














Tuesday 17 January 2012

துரித உணவு தரும் துன்பங்கள்.

Posted On Jan 17,2012,By Muthukumar

                       
                      இன்றெல்லாம் கடைக்குப் போனால், எல்லாமே ரெடிமேட்தான். ”ரெடி டூ ஈட்” வகை உணவுகள், நம்ம வீட்டு மஹாலக்‌ஷ்மிகளை, நச்சென்று கவர்ந்துவிடும். நம் முன்னோர்கள், வீட்டு வேலைகளுக்குக்கூட, பெண்களுக்கு உடல் வலுவேற வேண்டும் என்ற நோக்கத்தில்தான்,அதற்கான உபகரணங்களைப் படைத்துள்ளனர்.
                 வீடு பெருக்குவதும், முற்றம் தெளிப்பதும், கோலமிடுவதும், அம்மி அரைத்தலும், அவரவர் வேலையினூடாக அவர்களுக்குக் கிடைக்கும் உடற்பயிற்சி எனலாம். அவையெல்லாம், அவசர யுகத்தில், தேவையற்று, தேடிப்பிடிக்க வேண்டியது போதாதென்று, அன்றாடம் நம் உடல் நலத்தைக் குறி வைத்துத் தாக்கும் அணு குண்டுகளாய் வந்து இறங்குவன, துரித உணவுகள் என்லாம்.
                       நம்ம ஊர் பேக்கரியில, நாளும் செய்து வெளிவரும் ரொட்டிகள், நாலு நாள் இருந்தாலே, நார் நாரா, பூஞ்சக்காளான் புடிச்சிக்கும். ஆனா, இன்னைக்கு, பல சூப்பர் மார்க்கட் ஷெல்ஃபுகளை அலங்கரிக்கும், வண்ண வண்ண தாள்களில் பொதியப்பட்ட பிரட்களோ, பத்து நாட்களுக்கும் மேலாகவே, பிரஷா இருக்கே, அது எப்படி?
                     விஞ்ஞான வளர்ச்சியை, நல்ல விஷயத்திற்கு பயன்படுத்துறோமோ இல்லையோ, இது போன்ற படு பாதகச்செயல்களுக்கு, பயப்படாம பயன்படுத்துறோம். ஆம், ’பிரிசர்வேட்டிவ்ஸ்’ என்று சொல்லப்படும் வேதிப்பொருட்களைப் பயன்படுத்தியே, துரித உணவுகள் மற்றும் ரெடி டூ ஈட் உணவுகளின், உயிர்வாழும் காலத்தை உயர்த்துகிறார்கள்.
                          துரித உணவுகள் பலவற்றில், ’மோனோசோடியம் குளுடாமேட்’ (இதன் மார்கட் பெயர் சொன்னால் அனைவருக்கும் தெரியும்-அதை நான் சொல்வது கூடாது என்பதால் சொல்லவில்லை) எனும் சுவையூக்கி(TASTE IMPROVER) சேர்க்கப்படுகிறது. அதேபோல், ரொட்டி போன்ற பேக்கரி பொருட்களில், சேர்ர்க்கப்படும் சிலவகை வேதிப்பொருட்கள், அவை நெடு நாட்கள் கெட்டுப்போகாமல் வைத்திருக்கும். நல்ல விஷயம்தானே என்று சொல்லலாம்.ஆனால், சேர்க்கப்படும் பொருளின் பெயரும், பக்க விளைவுகளும் தெரிந்து கொண்டால், இத்தகைய கேள்வி எழாது.
                                                பேக்கரிப் பொருட்கள் கெடாமலிருக்க, அவற்றில் காளான் படராதிருக்க, கால்சியம் ப்ரொபியோனேட் மற்றும் சோடியம் ப்ரொபியோனேட்(CALCIUM PROPIONATE & SODIUM PROPIONATE) என்ற இரு வேதிப்பொருட்கள் சேர்க்கின்றனர். அவைதான், ரொட்டி வகை உணவுகள் கெட்டுப்போகாமலிருக்கச் செய்கின்றன.அரசு அனுமதித்துள்ள அள்விற்கு அதிகமாகவே இதனைச் சேர்க்கின்றனர். ஆனால், இந்த வேதிப்பொருட்கள் அதிகம் கலந்த உணவினை நாம் உண்ணும்போது, அவை நம் வயிற்றிலுள்ள குடல் சுவற்றினை நிரந்தரமாக சேதப்படுத்தும். 
                                           அதிலும், குடல் அழற்சி(ULCER) உள்ளவர்களென்றால், அவற்றிற்கு கூடுதல் குஷி. ஆம், நம் வயிற்றில் வாயுக்கள் உருவாகவும், அழற்சியை அதிகப்படுத்தவும் வல்லவை இந்த வேதிப்பொருட்கள். இதன் பயனாக, குடல் அழற்சி மட்டுமல்ல,தலைவலி, சிறு குழந்தைகளின் தூக்கமின்மை, கவனமின்மை போன்ற பல பிரச்சனைகளும் உருவாகும். துரித உணவுகள் மற்றும் பேக்கரி பொருட்கள் மட்டுமின்றி, காய்ந்த பழவகைகள், பால் பொருட்கள், பழச்சாறுகள், ரெடி டூ ஈட்- சப்பாத்தி, பூரி என்று இதனைப்பயன்படுத்தும் உணவுப்பொருட்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது
                                               இவையும் ஒரு வகை கலப்படமே. எனவே, அடுத்த முறை கடைக்குப்போகும்போது, அந்த உணவுப்பொருள் பாக்கட்டின் மீது, என்னென்ன வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்று அச்சிட்டிருப்பதைப் படித்துப் பார்த்து, உடல் நலத்தைக்கெடுக்கும் இத்தகைய வேதிப்பொருட்கள் கலந்திருந்தால், அவற்றைத் தவிர்த்திடுங்கள்.  தவிர்ப்பது ஒன்றே நமக்கும், நம் குடும்பத்தினருக்கும், நம் சந்ததிக்கும் நன்மை பயக்கும். 

Sunday 15 January 2012

அம்சமான அழகுக்கு அழகான டிப்ஸ்..

Posted On Jan 15,2012,By Muthukumar
.
* தினமும் காலை, மாலை வேளைகளில் 5 நிமிடம் மூச்சுப்பயிற்சி செய்து வந்தால் அன்றைய தினம் முழுவதும் `ப்ரெஸ்' ஆக காணப்படுவீர்கள்.
* தினமும் காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் தண்ணீர் குடித்து வந்தால் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வலம் வருவீர்கள். சோர்வு என்பதே எட்டிப்பார்க்காது.
* தினமும் காலையில் எழுந்ததும் பழங்கள் சாப்பிடுவது இளமையை அதிகரிக்கும். குறிப்பாக, ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளிப் பழங்கள் சாப்பிடுவது நல்லது.
* தினமும் காலையில் ஒன்று அல்லது இரண்டு கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் ஒருவித மினுமினுப்பை பெறலாம்.
* கறிவேப்பிலையின் இளம் தளிர்களை காய வைத்து பொடியாக்கி, அதை தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி கருகருவென்று வளரும்.
* தயிருடன் கடலை மாவு சேர்த்து முகத்தில் அப்ளை செய்து வந்தால் முகப்பரு தொல்லை வராது.
* 10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு தடவை முல்தான் மெட்டியுடன் பன்னீர் கலந்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளிச்சென்று காணப்படும்.
* 2 டீஸ்பூன் தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு 4 சொட்டு கலந்து குடித்து வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்வது தடுக்கப்படும்.

குழந்தை நலன்: போட்டி, பொறாமையாக மாறும்போது…

Posted On Jan 15,2012,By Muthukumar
குழந்தைகளிடம் கூட பொறாமை குணம் உண்டு. ஆனால் பெரும்பாலும் அது அர்த்தம் தெரியாத பொறாமையாக இருக்கும். அதனால் ஏற்படும் விளைவுகளையும் குழந்தைகள் அறிந்திருக்கமாட்டார்கள்.
குழந்தைகளிடம் ஏற்படும் பொறாமை குணத்தை சரியான நேரத்தில் கண்டறிந்து பெற்றோர் தவிர்க்கவேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் இளம் குற்றவாளிகள் ஆகும் கொடூரம் நிகழ்ந்து விடக்கூடும்.
பொறாமைக் குணம் கொண்ட குழந்தைகள் எளிதாக அடையாளம் காணப்பட்டு, மற்றவர்களால் ஓரங்கட்டப்படுவார்கள். அப்படி ஓரங்கட்டப்படும் போது, அவர்களுக்குள் அது வெறுப்பை உருவாக்கும். அதனால் அவர்களுடைய செயல் பாடுகளில் மாற்றம் ஏற்படும். அப்போது மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கவும் முயற்சிப்பார்கள். அதுவே குற்றச் செயலாகி, இளங்குற்றவாளியாகி விடுவார்கள்.
குழந்தைகளிடம் பொறாமை குணம் வளர பெற்றோர்களும் ஒரு விதத்தில் காரணம். பின்விளைவுகளைப் பற்றி அறியாமல் இரு குழந்தைகளிடையே அவர்கள் போட்டி மனப்பான் மையை உருவாக்கி விடுகிறார்கள். குழந்தை களின் வேகத்தையும், திறமைகளையும் வெளிக் கொண்டுவர போட்டி மிகவும் அவசியம். இரு குழந்தைகளுக்கு இடையே போட்டி இருந்தால் தான் அவர்கள் உற்சாகத்துடன் செயல்படுவார்கள் என்பது உண்மைதான். ஆனால் அந்த போட்டி நாளடைவில் பொறாமையாக மாறிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
அதுபோல் வெற்றி பெற்ற குழந்தைகளை தலையில் தூக்கி வைத்து பாராட்டுவதும், தோற்றுப்போன குழந்தைகளை இகழ்வதும் அவர்கள் மனதை வெகுவாக காயப்படுத்திவிடும்.
குழந்தைகளுக்கு தோல்வி ஏற்படும்போது பெற்றோர்கள் அறிவுபூர்வமாக செயல்பட்டு, குழந்தைகளின் மனதில் தொய்வு ஏற்பட்டுவிடாமல் சீராக்கவேண்டும். இல்லையென்றால் அது குழந்தைகளை பொறாமை என்னும் இருளில் தள்ளிவிடும். போட்டிக்கும், பொறாமைக்கும் நூலிழைதான் வித்தியாசம். அந்த எல்லையை பெற்றோர் புரிந்துகொண்டு, குழந்தைகளுக்கும் தெளிவாக்கவேண்டும்.
எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை. மனநிலை, உடல்நிலை, செயல்பாடுகளில் ஒவ்வொரு குழந்தைக்கும் வித்தியாசம் இருக்கும். இதில் குறை நிறை என்று எதையும் பிரித்துப் பார்க்க முடியாது. அவர்களை தன் போக்கில் வளரவிட வேண்டும். தவறுகளை சுட்டிக் காட்டும் போதும் ஒரு பக்குவம் வேண்டும். மற்றவர்கள் முன் குறை கூறுவதும், மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு தாழ்த்தி பேசுவதும் அவர்களின் குறைகளை களைய உதவாது. குழந்தைகளால் ஒருபோதும் அவமரியாதைகளை தாங்கிக் கொள்ளமுடியாது.
ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கு பொறுப்புகள் அதிகம்.
குழந்தைகளின் குறைகளை திருத்தவும், நிறைகளை பாராட்டவும் பெற்றோருக்கு உரிமை இருக்கிறது. இரண்டு குழந்தைகளையும் ஒன்றாக வைத்துக்கொண்டு ஒரு குழந்தையை பாராட்டுவதும், இன்னொரு குழந்தையை குறை சொல்வதும் கூடாது. அதை தனித் தனியாக செய்ய வேண்டும். `உன்னைவிட அவன் ஒசத்தி' என்ற தொனியில் செயல்படக்கூடாது. இரு குழந்தைகளையும் ஒப்பிட்டுப் பார்ப்பதை பெற்றோர் தங்கள் மனதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். வெளிக்காட்டினால் அது குடும்பத்தையே அழித்துவிடக்கூடும்.
உலக பணக்காரர்கள் வரிசையில் இடம் பெற்றிருக்கும் சகோதரர்கள் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி இருவரும் போட்டி யாளர்களாக வளர்க்கப்பட்டார்கள். பின்பு தங்களுக்குள் பொறாமைக்காரர்களாக மாறினார்கள் என்பதை உலகே அறியும். "சகோதரர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பார்கள் என்ற நிலை மாறி இரண்டு சத்துருக்களை அல்லவா நான் பெற்றுவிட்டேன்'' என்று அவர்களுடைய தாய் கோகிலா அம்பானி புலம்பியது நாடறியும்.
புகழ்பெற்ற பத்திரிகையாளர் ஷோபா டே இது பற்றி கூறும்போது, "இது ஒரு முற்றிவிட்ட மனோவியாதி என்பது தான் உண்மை. வளர்ச்சி என்பது ஆரோக்கியமானதாகவும், மனதுக்கு மகிழ்ச்சியளிக்க கூடியதாகவும் இருக்க வேண்டும். பொறாமையில் ஏற்படும் வளர்ச்சி எப்போதும் தேவையற்ற டென்ஷனையும், நரம்பு தளர்ச்சியையும் தான் தரும். உடன்பிறந்தவர்களுக் குள் பொறாமை என்பது, அந்த குடும்பத்துக்கே ஒரு சாபக்கேடு'' என்றும் கூறுகிறார்.
எல்லா குழந்தைகளுமே தங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்று கருதுகின்றன. அதை பெற்றோர்கள் புரியாமல் இருக்கும்போதுதான் சிக்கல் ஏற்படுகிறது.
குடும்பங்களில் எப்போதும் சிறிய குழந்தைக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. பெரிய குழந்தை பல விஷயங்களில் ஒதுக்கப்படுகிறார்கள். தனக்கும் பெற்றோர் முக்கியத்துவம் தர வேண்டும் என்பதற்காக சில குழந்தைகள் தங்களை காயப்படுத்திக் கொள்ளவும் தயங்க மாட்டார்கள். அப்படி ஒரு நிலை ஏற்பட்டுவிட்டால், பெரிய குழந்தைகளின் கடமைகளை அவர்களுக்கு எடுத்துக் கூறி குடும்பத்தில் அவருக்கு இருக்கும் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டி, அவருக்கு பொறாமை குணம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அன்பும், சகிப்புதன்மையும்தான் அனைத்திற்கும் அடிப்படை.

தாஜ்மகால் கட்ட‍ப்ப‍ட்ட‍ வரலாறும், அரியத் தகவல்களும்


தாஜ்மகால் கட்ட‍ப்ப‍ட்ட‍ வரலாறு

மும்தாஜ் மறைந்தது தட்சிணப் பிரதேசத்தில். அங்கு புதைக்கப் பட்டிருந்த அவருடைய உடல் ஆறு மாதங்கள் கழித்து, இப்போது தாஜ் மஹால் அமைந்திருக்கும் இட த்துக்குக் கொண்டுவரப்பட்டது. மும் தாஜ் மறைந்த அடுத்த ஆண்டே தாஜ மஹால் கட்டும் பணி தொடங்கியது.
யமுனை நதிக் கரையில் ஷாஜகானே ஒரு இடத்தை தேர்ந்தெடுத்தார். ராஜ புத்திர மன்னர் ஜெய்சிங்குக்குச் சொந்தமான தோட்டம்தான் இது. அதைக் கல்லறைக்காக வாங்க விரும்பினார் ஷாஜகான். பண மாகக் கொடுத்தால் நண்பர் தர்மசங்கடப்படுவாரோ என்று எண்ணி, நான்கு அரண்மனைகளைக் கொடுத்து தோட்டத்தை பண்டமாற்று செய்து கொண்டார். உடனே வேலை தொடங்கியது. கட்டடக்கலை-தோட்டக் கலை நிபுணர்கள், சிற்பிகள் உட்பட இரண்டாயிரம் பணியாளர்கள் களத் தில் இறங்கி உழைத்தனர்.
வெனிஸ் நகர சிற்பி வெரோனியோ, துருக்கியக் கட்டடக் கலைஞர் உஸ் தாத் இஸா அஃபாண்டி, லாகூர் கலைஞர் உஸ்தாத் அஹமத்… இப் படி பலரது பெயர்கள் தாஜ்மஹாலுக்கு வரைபடம் தந்தவர்களின் பட்டியல் நீளுகிறது. ஒவ்வொன்றையும் நேரடியாகப் பாரத்து ஒப்பதல் அளித்தவர் ஷாஜகான். கல்லறையைச் சுற்றிலும் புனித குர்ஆனிலிருந்து வாசகங்களைச் செதுக்க விரும்பினார் ஷாஜ கான். 
அதற்காக, பாரசீகத்திலிருந்து அமனாத்கான் என்ற கலைஞர் வரவழைக்கப் பட்டு அந்தப் பணி நிறைவேற்றப்பட்டது. அவருக்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் அவருடைய கையெழுத் தும் அங்கு செதுக்கப்பட்டுள்ளது. தாஜ்மஹாலில் இடம் பெற்றி ருக்கும் ஒரே கையெழுத்து அவருடையதுதான்!
தாஜ்மஹாலில் மிகப் பிரம்மாண்டமான கல்லறை மண்டபமும், சதுர வடிவிலான அழகுத் தோட்டமும் அமைந்திருக் கிறது. மண்ட பத்தின் இடது-வலது பக்கங்களில் சிவப்பு சாண்ட்ஸ்டோன் கட்டடங் கள் (ஒரு மசூதி மற்றும் அதற்கு இணையான இன் னொரு கட்டடம்) எழுப்பப் பட்டு உள்ளன. கல்லறை மண்டபத்தில் வெள் ளை மார்பிள் கற்களும், விலை யுயர்ந்த மணி வகைகளும் பதிக் கப்பட்டு ஜொலிக்கின் றன.
தொலைவிலிருந்து மட்டுமல்ல… வெளிப்புற வாயிலில் நுழைந்த பிறகு கூட பார்ப்பதற்குச் சிறியதாக இருக்கும். ஆனால்… உள்ளே நுழைந்த பிறகு பார்த்தால், பெரிதாகிக் கொண்டே போய் வியப் பூட்டும். மிக அருகில் போய், அண்ணார்ந்து பார்த்தால் கூரை தெரியாத அளவிற்கு விஸ்வருபமெடுக்கும். அந்த அளவு திட்ட மிடப்பட்டுக் கட்டப்பட்டிருக்கிறது தாஜ்மஹால்.

தாஜ்மஹால் சில அரிய தகவல்கள்!

தாஜ்மஹாலை கட்டி முடிக்க சுமார் 22 ஆண்டுகள் ஆயின. இத்த 
னை ஆண்டுகளுக்கு என்ன கார ணம்? தாஜ்மஹல் கட்ட தே வையான கட்டுமானப் பொரு ட்கள், குறிப்பாக விலையுய ர்ந்த நவரத் தினக் கற்களைத் தேடிப் பார்த்து தருவித்துக் கட்டியதால்தான் இத்தனை ஆண்டுகள் உருண்டேடியிருக் கின்றன என்று ஆய்வாளர் கள் கூறுகின்றனர். இந்தியா மட்டு மன்றி உலகின் பல நாடுகளிலி ருந்தும் இத்தகைய பொருட்களை கொண்டுவந்துள்ளான் ஷாஜகான்.
அப்படி என்ன இதில் இருக்கிறது? சன்ன ரக ‘மக்ரானா’ சலவைக் கற்கள் ராஜஸ்தானிலிருந்தும், கரும் பச்சை மற்றும் ஸ்படிகக் கற்கள் சீனாவிலிருந்தும், நீல நிறக்கற்கள் திபெத்திலிருந்து ம், lapis and lazuli என்று சொல்லப்படும் மிக நுணுக் கமான சிற்பக் கலை வேலை களுக்குப் பயன்படும் நீலநிறக் கற்கள் ஆப்கானிஸ் தானிலி ருந்தும் தருவிக்கப்பட்டன.
அதுமட்டுமல்ல! பச்சை வண் ண ஸ்படிகக் கற்கள் மற்றும் நீலம் கலந்த ஊதா நிறக் கற்கள் எகிப்திலிருந்தும், அடுக்கு படிக கொம்புக் கற்கள் (சிவப்பு) ஏமனிலிருந்தும், ஸஃபையர் என்னும் நீலக்கற்கள் ஸ்ரீலங்காவிலி ருந்தும், பவழம் அரேபியா விலிருந்தும், பச்சை வண் ண கனிமம் ரஷியாவிலிரு ந்தும் தருவிக்கப் பட்டுள்ள ன.
மேலும், ஸ்படிகக் கற்கள் இமயமலையிலிருந்தும், வெள்ளைக் கிளிஞ்சல்கள் மற் றும் முத்து சிப்பிகள் இந்திய பெருங்கடல் பகுதி யிலிருந்தும் கொண்டுவந்து தாஜ்மஹாலை கட்டியிருக்கிறான் ஷாஜகான். ‘இதை கட்டிய கட்டடக் கலைஞர் இவ்வுலகத்தை சேர்ந் தவராக இருக்க முடியாது! இதன் வடி வமைப்பு அந்தக் கலைஞ ருக்கு சொர்க்கத்திலிருந்து கொடுக் கப்பட்டிருக்க வேண்டு ம் எனத் தெரிகிறது!’ என்று தாஜ்மஹா லை கட்டடத்தைப் புகழ்ந்து, ஷாஜகான் கல்வெட்டு ஒன்றில் கூறியிருக்கிறார்.