Saturday 7 April 2012

சுய இன்பம் என்பது என்ன? கை பழக்கம் என்பது ஆரோக்கியமா? கெடுதலா?

 Posted On April 07,2012,By Muthukumar
 

கை பழக்கம் :

பெரும்பாலான ஆண்மகன்களிடம் வர கூடிய மாபெரும் அச்சம் ஒரு பயம் கலந்த கேள்வி இதுதான் "கை பழக்கம் செய்தால்" ஆண்மை போய் விடுமா?
இந்த கேள்வியை கேட்டால் "சாப்பிட்டால் வயிறு வலி வருமா" என்ற கேள்விக்கு சமமானது. அப்படி எனத்தான் இருக்கிறது அந்த செயலில் கொஞ்சம் விரிவாக பார்ப்போமா...
 
ஆண்கள் இதனை பல விதமாக கூறுவது உண்டு "கை அடிக்கிறது" அல்லது "கை முட்டி அடிக்கிறது" அப்புறம் கை போடுறது", இந்த செயல் எபோது ஆரம்பிக்கிறது என்றால் " எப்போது ஒரு மகன் தான் காம இசைக்கு ஆளாகின்றானோ அப்போது கலவி செய்ய துணை இல்லாமால் தன ஆண் குறியை வருட ஆரம்பிக்கிறான், இது ஆண்மகனின் 8 வயதில் கூட தோன்றலாம். ஆனால் ஒரு ஆண்மகனின் 13 அல்லது 14 வயதின் போது இது முழுமையாக சுய இன்ப செயலாக மாறுகிறது.
 
முதன் முதலில் ஆண்மகன் எப்போது சுய இன்பத்தை பழகுகிறான் :
  • தனிமையில் காம வேட்கையுரும்போது தன் ஆண்குறியை முன்னும் பின்னுமாக தனது கையால் ஆட்டுகிறான்,
  • தனிமையில் காம காட்சிகளை திரையில் பார்க்கும்போது அந்த திரையில் தோன்றும் பெண்ணுடன் தான் சல்லாபிப்பது போல் உணர்ந்து தன் ஆண்குறியை கையால் வருடுகிறான்.
  • அல்லது பள்ளி கல்லூரி விடுதிகளில் தன் நண்பர்களுடன் காம அரட்டை அடித்து கொண்டு படுக்கும்போது சில தவறான நண்பர்களின் சகவாசத்தால், தூங்கிய நிலையில் அவர்களின் வழியாக தன் ஆண்குறி தூண்ட படுவது உணர்ந்து அந்த இன்பத்தால் அதை அப்போது மறுக்க முடியாமல் அதற்க்கு ஒத்துழைத்து தவறான உறவுக்கு ஆளாகிறான்.
இப்படி பல காரணங்களால் ஆண்மகன் சுய இன்ப அனுபவத்திற்கு ஆளாகிறான்.
 
இப்படி சுய இன்பத்தில் மூழ்க திளைத்த அந்த ஆண்மகன் நாளடைவில் நேரிடையாக பெண்ணுடன் உறவு கொள்ள ஆசைபடுகிறான், அது முடியாமல் போகும் பச்சத்தில் இன்னும் அதிகமாக கை பழக்கத்தில் ஈடுபடுகிறான், சில நபர்கள் சில தவறான நண்பர்களுடன் இணைந்து ஓரின சேர்க்கையாளர்களாக மாறுகின்றனர் என்பது வேதனைக்கு உரியது.
 
மீண்டும் மீண்டும் இன்பம்:
இப்படி கை இன்பத்தில் ஆர்வம் கொண்ட ஒரு இளைஞன் அதனை மீண்டும் மீண்டும் செய்து தனது சக்தியை இழக்கிறான்.
 
இப்படி சுய இன்பம் செய்யும் அவன் மனதில் கற்பனை சக்தியை தூண்டி விடுகிறான், முதலில் தனக்கு பிடித்த பெண், பிறகு கவர்ச்சியாக உள்ள எல்லா பெண்களையும் தனக்கு பிடித்த பெண்ணாக உருவாக்கி கொள்கிறான், தொலைகாட்சியிலோ திரைப்படத்திலோ வரும் நடிகைகளின் கவர்ச்சி காட்சிகள் நடிகைகளின் மார்புகள், நடிகைகளின் இடுப்பு மடிப்புகள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
 
சுய இன்பத்தின் தீர்வு :

சுய இன்பம் என்பது காமத்தால் பெரிய தவறுகள் செய்யாமல் இருக்க உதவும் ஒரு வடிகாலாகவே இருக்க வேண்டுமே தவிர, தினந்தோறும் ஐந்து அல்லது ஆறு முறை கவர்ச்சியான பெண்களை நினைத்து சக்தியை வீணடிப்பது மிகவும் கேடுதலாகும், மாதத்தில் இரண்டு அல்லது ஒன்று என்பது தகுந்தது, அதே போல் வீரியாய்தை பெருக்க கட்டுப்பாடு தேவை என்பது கவனத்தில் கொள்க, சுருக்கமாக சொன்னால் "உணவு உன்ன வேண்டியதுதான் , அதற்காக ஒரு நாளில் ௧௦ தடவை சாப்பிட்டால், வயிற்ருக்குதான் கெடுதல்" என்பதை எப்படி உங்கள் மனம் ஏற்று கொள்கிறதோ, அதே போல் இந்த சுய இன்பம் அதிக மானால் எந்த உறுப்பு பதிக்கப்படும் என்பதை நீங்களே அறிவீர்கள்...
 

முகத்தை மட்டுமல்ல முதுகையும் பராமரிங்க

Posted On April 07,2012,By Muthukumar
முகம் கை கால் என ஒவ்வொன்றிற்கும் தரும் முக்கியத்துவத்தை  முதுகு பகுதிக்கு தருவதில்லை. நம்மில் பெரும்பாலோனோர் அதிகம் கவனிக்காமல் விடும் பகுதியும் முதுகுதான். இதனால் முதுகு பகுதியில் அழுக்கு மற்றும் எண்ணெய் சேர்ந்து பருக்கள் தோன்றுவிடுகின்றன. எனவே முதுகை அழகுகாக்க கொஞ்சம் கவனம் செலுத்தவேண்டும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.
முதுகை மென்மையாகவும், அழகாகவும் வைத்துக்கொள்ள அவர்கள் கூறும் ஆலோசனையை பின்பற்றுங்கள். நீங்களும் உங்கள் முதுகின் அழகைஎடுத்துக்காட்டும் ஆடைகளை அணிய ஆரம்பித்து விடுவீர்கள்.

முதுகுக்கு ஸ்க்ரப் செய்யலாம்
குளிக்கும் போது முகம், கை, கால்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவப்போல முதுகையும் கவனிக்க வேண்டும். தலைக்கு குளிக்கும் போது வழியும் எண்ணெய்கள் முதுகில்தான் தேங்குகின்றன. எனவே நீளமான பிரஷ் உபயோகித்து முதுகை நன்கு தேய்த்து சுத்தம் செய்யவேண்டும். முதுகுப்பகுதியை முழுவதாக சுத்தம் செய்ய இப்பொழுது நீண்ட கைப்பிடி உள்ள பிரஷ் கடைகளில் கிடைக்கிறது. அவற்றை வாங்கி உபயோகிக்கலாம்.
முதுகை `ஸ்க்ரப்' செய்வதால் உயிரிழந்த சருமம் அகன்று முதுகு புத்துயிர் பெறும். அவ்வாறு தொடர்ந்து செய்யும் போது புது சருமம் கிடைக்கும்.
கடையில் கிடைக்கும் ஸ்க்ரப் உபயோகிக்க விருப்பமில்லை என்றால், வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளலாம். உப்பு சிறந்த ஸ்க்ரப் ஆக பயன்படுகிறது. உப்பை நன்றாக பொடித்து அதை நன்றாக முதுகு, கழுத்துப் பகுதிகளில் தேய்த்து ஸ்க்ரப் செய்வதன் மூல இறந்த செல்கள் உதிர்ந்து விடும். ரத்த ஓட்டம் சீராகும்.

ஆலிவ் ஆயில் மற்றும் மசாஜ்
ஒரு சிலருக்கு முதுகு வறண்டு போய் விடும். இவர்கள் ஒரு ஸ்பூன் பேபி ஆயில் விட்டு நன்றாக முதுகுப் பகுதியை மசாஜ் செய்யவும். இதனால் முதுகு மென்மையாகும். இரண்டு டேபிள் ஸ்பூன் சர்க்கரையுடன் நான்கு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யை சேர்க்கவும். இதனை நன்றாக கலந்து முதுகை நன்றாக தேய்க்கவும். பிறகு கழுவவும். உலர்ந்த சருமத்திற்கு ஈரத்தன்மை கிடைக்கும்.எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் முதுகை கவனிக்காமல் விடுவதால் முதுகு மங்கலாகும். இதனால் முதுகில் கரும்புள்ளிகள், பரு தோன்றும்.
முதுகை அழகாக்கி பருவை போக்க இரண்டு தேக்கரண்டி சர்க்கரையுடன் ஆறு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை கலந்து முதுகை நன்றாக தேய்த்து கழுவவும். எண்ணெய் பசை நீங்கி சருமம் பளிச் என்று ஆகும்.
வாரத்தில் ஒரு முறை சந்தனம் மற்றும் பன்னீர் கலந்த கலவையை முதுகில் தடவவும். உலர்ந்த பிறகு கழுவிவிடவும். இது முதுகிற்கு பொலிவு கிடைக்கும். இவை தவிர கூன் போடாமல் நிமிர்ந்து நடப்பதும் முதுகு சுருக்கமின்றி அழகாக தெரியும். அப்புறம் என்ன ஜன்னல் வைத்த  மற்றும்
படிக்கட்டு வைத்த ஜாக்கெட் தைத்து போட்டு முதுகு அழகை அதிகரிக்கச் செய்யலாம்

Friday 6 April 2012

கோடையில் நம் பாதங்களை ஆரோக்கியமாகவும், அழகாகவும் பராமரிக்க . . .

கோடைகாலத்தில் வியர்வை ஆறாக பெருகுவதால் உடலில் துர்நாற்றம் வீசும். அதேபோல் பாதங்களில் எழும் விரும்பத்தகாத வாசனையினால் பொது இடத்தில் இயல்பாக இருக்க முடியாது. கோடையில் வியர்வை நாற்றத் தைப் போக்க நாம் ம‌ட்டு‌ம் தூ‌ய்மை யாக இரு‌ந்தா‌ல் போதாது, ‌நாம் உபயோகிக்கும் ஷூ, செரு‌ப்பு போ‌ ன்றவ‌ற்றையு‌ம் தூ‌ய்மையாக வை‌த்‌திரு‌க்க வேண்டும். அப்பொழு து தான் நம் பாதங்களை ஆரோக் கியமாகவும், அழகாகவும் பராமரி க்க முடியும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.
பாதங்களை கழுவுங்கள்
அடிக்கடி குளிர்ந்த நீரால் பாதங்களை கழுவுங்கள். இதனால் துர் நாற்றம் வீசுவது தடுக்கப்படும். பழைய ஷூ, சாக்ஸ் போன்றவைகளை மாற்றுங்கள். சில செரு‌ப்புக‌ள் ‌நீ‌ரி‌ல் ப‌ட்டது‌ம், ‌நீரை உ‌ள்‌ளிழு‌த் து‌க்கொ‌‌ள்ளு‌ம் த‌ன்மை இரு‌க்கு‌ம். அ‌ந்நீ‌ரி‌ல் செரு‌ப்பு ஊ‌றி அதனா‌ல் து‌ர்நா‌ற்ற‌ம் ஏ‌ற்படு‌ம். அ‌ப்படி‌ப்ப‌ட்ட செரு‌ப்புகளை ‌நீ‌ர் ப‌ட்டது‌ம் உடனடியாக வெ‌யி‌லி‌ல் காய வை‌க்கவு‌ம்.
உலர்வாக வையுங்கள்
‌விய‌ர்வை ம‌ட்டும‌ல்லாம‌ல் ‌நீ‌ங்க‌ள் அ‌ணியு‌ம் ‌சில பொரு‌ட்களான ஷு, சாக்ஸ் போன்றவையும் ‌ உ‌ங் க‌ள் ‌மீது துர்நாற்றம் ஏற்பட முக்கிய காரணமாக அமையலாம். வெய் யில் காலங்களில் ஷு அணிவதை தவிர்க்கலாம். அ‌வ்வாறு அ‌ணிய வே‌ண்டிய க‌ட்டாய‌ம் ஏ‌ற்ப‌ட்டா‌ல் ‌தினமு‌ம் சா‌க்ஸை துவை‌த்து‌ப் பய‌ன்படு‌த்த வே‌ண்டு‌ம். கூடுமானவரை பருத்தி யா‌ல் செ‌ய்ய‌ப் ப‌ட்ட சாக்ஸ் அணி வது நல்லது. மேலும் சாக்ஸ் அணி யும்முன் காலில் பவுடரை தடவவு ம். இது வியர்வையை தடுத்து காலை உலர்ந்த நிலையில் வை க்க உத வும்.
டேனின் டீ
கோடைகாலத்தில் நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியம் வாசனைப் பொருட் கள் அதிகம் கொண்ட உணவுக ளை தவிர்க்க வேண்டும். அதேபோல் வெங்காயம், வெள்ளைப்பூண்டு போன்ற உணவுகளை உண்ணக்கூடாது . இதனால் வியர்வை மூலம் துர்நாற்றம் பரவுவது தடுக்கப் படும்.
டேனின்கள் கொண்ட தேநீரை தண்ணீரில் கலந்து 10 ஊற வைக் கலாம். பின்னர் பாதங்களை அரை மணிநேரத்திற்கு அந்த தண்ணீரில் ரிலாக்ஸ்சாக ஊறவைக்கவும். இது அதிகம் வியர்வை சுரப்பதை கட்டு ப்படுத்தும். பாதங்களை உலர்வாக வைக்கும்.
பாதங்களின் பாதுகாப்பு
வீட்டில் சிமெண்ட் அல்லது மொ சைக் தரையாய் இருந்தால் கண்டி ப் பாக காலணி அணிந்துக் கொண்டு தான் நடக்க வேண்டும்.
டெட்டாலும் (DETTOL) உப்பும் கலந்த சூடான தண்ணீரில் சோப் பைக் கலந்து பாதத்தை அதில் மூழ்கு ம்படி வைக்க வேண்டும்.
வெயில் காலத்தில் குளிர்ந்த தண்ணீரி ல் உப்பை கலந்து அதில் பாதங்கள் முழ்கி இருக்கும்படி 10 நிமிடங்கள் வரை வைத்திருக்க வே ண்டும். குளிர் நேரத்தில் பாதம் அதிக குளிர்ச்சியாக உணர்ந்தால், இரவில் ‘ஆலிவ் ஆயில்’ தேய்த்து மசாஜ் செய்துவிட்டு தூங்க வேண்டும்.
காலில் ஏற்படும் பித்த வெடிப்புகளு க்கு இரவில் படுக்கப்போகும் போது இலுப்பை எண்ணெய் அல்லது வேப்ப எண்ணெய் தடவினால் பித்த வெடிப்புகள் குணமாகும்.
காலில் வீக்கம்
தூதுவளை இலைகளையும், நற்சு ங்கள் இலைகளையும் எடுத்து, சி றிது தண்ணீர் விட்டு அரைத்து அரைத்த விழுதை எடுத்து சுண் டைக் காய் அளவில் மாத்திரை போல் செய்து நிழலில் உலர்த்தி ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளவும். 3 மாத்திரைக ளை 1 டம்ளர் பசும்பாலில் கரைத்து, இத்துடன் கற்கண்டு சேர்த்து 1 வாரம் வரை 2 வேளைகள் குடிக்க வேண்டும். இவ்விதம் செய்தால் கால் வீக்கம் குணமாகும்.

கருவில் உள்ள குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை அறிய


கருவில் கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட உடனே அனைவரும் ஆவலுட ன் தெரிந்து கொள்ள விரும்புவது குழந்தை ஆணா, பெண்ணா என்ப து தான்.
 
கருவில் உள்ள குழந்தையின் பா லினத்தை அறிந்து கொள்வது சட் டப்படி குற்றமாகும். இருப்பினும் ஒரு சிலருக்கு பெண் குழந்தை யின் மீது விருப்பம் அதிகம். பெண் குழந் தையை ஆவலுடன் எதிர்பா ர்க்கிறீர்களா? உங்களின் உடல் அமைப்பு எப்படி உள்ளது என்பதை தெரிந்து கொள்வதன் மூலம் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண் ணா என்பதை அறிந்து கொள்ளலாம்.
பளபளப்பான தோற்றம்
கர்ப்பிணிகளின் சருமமும், முகமும் பளபளப்பாக இருந்தாலே கரு வில் உள்ள குழந்தை பெண் குழந்தைதா ன் என்று வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறக் கேட்கலாம். கர்ப்பிணிகளின் கண் ணக் கதுப்பு ரோ ஸ், அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் பூரிப்பாய் இருக்குமாம். அதேபோ ல் கர்ப்பிணிகளின் எடையும் சற்று அதிக மாய் இருக்கும்.
வாந்தி, மயக்கம்
கர்ப்பிணிகள் அனைவருக்குமே வாந்தி, மயக்கம் ஏற்படுவது இயல்பா னதுதான். ஆனால் கருவில் உள்ளது பெண்குழந்தை என்றால் அவர்கள் அதிர்ஸ்டசாலிகளாம். ஆம் அவர்க ளுக்கு வாந் தி, மயக்கம் ஏற்படுவது குறைவாகவே இருக்குமாம்.
இனிப்பு உணவுகள்
பொதுவாகவே கர்ப்பிணிகளுக்கு புளிப்புதான் விருப்பமான உணவா க இருக்கும். ஆனால் பெண் குழந் தையை சுமக்கும் கர்பிணிகளுக் கு இனிப்பு உணவு என்றால் மிகவு ம் பிடிக்குமாம். கர்ப்பத்தில் உள்ள பெண் குழந்தைக்கு இனிப்பு அதிக விருப்பம் என்பதால் தாய்க்கும் அது விருப்பமான உணவாக உள்ள தாக பிரசவம் பார்க்கும் பெண்கள் கூறுகின்றனர்.
இதயத்துடிப்பு அதிகம்
கருவில் உள்ள குழந்தைக்கு இதயத்துடிப்பு அதிகம் இருக்கும். ஒரு நிமி டத்திற்கு 140 முறை துடிக்கும் என்று மருத்துவர்கள் கூறு கின்றனர். உங்கள் குழந்தையின் இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 140 ஆக உள்ளதாக சந்தேகமே வேண்டாம் அது பெண் குழந் தைதான் என்று அவர்கள் கூறுகின்றனர்.
கர்ப்பிணிகளே உங்கள் உடல் அமைப்பு, உங்களுக்கு ஏற்படும் மாற்றங்களை வைத்து ஆண் குழந்தையா, பெண் குழ ந்தையா என்பதை தெரிந்து கொள்ளுங்களேன்.

பெண்கள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் ‘நாப்கின்’ – அதிர வைக்கும் அதிர்ச்சி தகவல்

”உடல் ஆரோக்கியத்தைக் காக்க வேண்டும் என்று நாம் விலை கொ டுத்து வாங்கும் பொருட்களே, நமக்கு ஆரோக்கிய கேட்டினை ஏற்படுத்தும் காரணியாக இருந்தால்..? அதுதான் நட க்கிறது பெண்கள் மாதவிடாய் காலங் களில் பயன்படுத்தும் ‘நாப்கின்’ விஷய த்தில்!”  அதிர்ச்சியான தகவல் சொல்கி றார், முனைவர் முகமது ஷாபீர். ‘பயோ டெக்னாலஜி’ துறையில் ஆய்வுசெய்து வரும் திருச்சியைச் சேர்ந்த ஷாபீர், அத ன் ஒரு பகுதியாக ‘நாப்கின்’ பற்றி தான் மேற்கொண்ட ஆய்வுச் செய்திகளை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
”இன்று சந்தையில் கிடைக்கும் சில நாப்கின்களை ஆய்வு செய்த போது, பல உண்மைகள் புரிந்தது. அந்த நாப்கின்களில் மறுசுழற்சி செய்யப்பட்ட பஞ்சு பயன்படுத்தப் பட்டிரு க்கிறது. மறுசுழற்சிக்கு அவர்கள் பயன் படுத்துவது, பிளாஸ்டிக் வகைப் பொருட் கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொதுவாக, நான்கு லேயர்களைக் கொ ண்ட நாப்கினில் முதல் லேயர்… சுத்திக ரிப்பு செய்யப்படாத பிளாஸ்டிக் பொரு ளாலானது; இரண்டாவது லேயர், மறு சுழற்சி செய்யப்பட்ட, அச்சடிக்கப்பட்ட டிஷ்யூ பேப்பர்; மூன்றாவது லேயர், ஜெல் (பெட்ரோலியப்பொருளால் தயாரானது); கீழ் லேயர்… பாலிதீ ன். நாப்கினை உள்ளாடையுடன் ஒட்ட வைப்பது, தொழிற்சாலை களில் பயன்படுத்தும் பசை வகை.
இரண்டாம் லேயரில் உள்ள அச்சடிக்கப் பட்ட டிஷ்யூ பேப்பரில் டையிங் ரசாயன ம் இருப்ப துடன், ஹைப்போ குளோரைட் என்ற வேதிப்பொருளாலும் அந்த பேப்பர் பிளீச்சிங் செய்யப்படுகிறது. பெண்கள் இதைப் பயன்படுத்தும்போது, நுண்ணிய துகள்களாகப் படிந்திருக்கும் இந்த ரசாய னங்கள், ஈரப்பதத்தின் காரணமாக டை யாக்ஸேன் ஆக மாறுபாடடைகிறது. கே ன்சர் நோய்க்கான மூலக்காரணிகளில் … இந்த டையாக்ஸேனும் ஒன்று. தவிர, இத்தனை ரசாயனங்களால் ஆன இந்த நாப்கின்களைப் பயன்படுத்துவதால் பிற ப்பு உறுப்பில் அலர்ஜி, சிறுநீர் பாதையில் பிரச்னை, வெள்ளைப்படுதல், அதிகமான உதிரப்போக்கு, கர்ப்பவாய் கேன்சர் என்று பல பிரச்னைகள் வரிசை கட்ட நேரிடுகிறது.
 
நாப்கின் தயாரிப்புக்குப் பிறகு, அவை பேக்கிங் செய்து அனுப்ப ப்படுவதிலும் போதுமான சுத்தம் இருப்பதில்லை என்பதும் கவ லைக்குரிய விஷயமே! அதிக விலை கொடுத்து வாங்கும் முன் னணி நிறுவன நாப்கின்களில் கூட தயாரிக்கப்படும் தேதிதான் இருக்குமே தவிர, காலாவதி நா ள் என்பது குறிப்பிடப்படுவதில் லை. சில கம்பெனி தயாரிப்புக ளில், ‘தயாரிக்கப்பட்ட தேதியில் இருந்து மூன்று மாதங்களுக்குள் பயன்படுத்தினால் நல்லது’ என்று போட்டிருக்கிறார்கள்” என்ற ஷா பீர்,
”இன்று பெண்களின் பூப்படையும் வயது 13 என் றாகிவிட்ட நிலையில், அதிலிருந்து மெனோ பாஸ் ஏற்படும் 45 வயது வரை, மாதத்தில் மூன் று, நான்கு நாட்கள் என கிட்டத்தட்ட 30 வருட ங்களுக்கும் மேலாக அவர்கள் மாதவிடாய் சமயங்களில் நாப்கின் உபயோகிக்க நேரிடுகிற து. ரசாயனக் கலவைகளால் உருவான நாப்கி னைத் தொடர்ந்து உபயோகிக்கும்போது, அதன் பக்கவிளைவுகள் தவிர்க்க முடியாத தாகிறது” என்று நிறுத்தினார்.
”இதற்குத் தீர்வுதான் என்ன?” என்று அவரிடமே கேட்டோம்.
”வாங்கும் காசுக்குத் தரமான நாப்கின்களைத் தயாரித்துக் கொடு க்கும் மனசாட்சி, சம்பந்தப்பட்ட நிறுவ னங்களுக்கு இருக்க வேண்டும். இ தோ… இந்த நாப்கின் ஹாங்காங்கில் தயாரிக்கப்பட்டது. இதில் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படவில்லை. பிரின்ட் எது வும் செய்யப்படாத துணிதான் பயன்ப டுத்தப்பட்டுள்ளது. இதில் பயன்படுத்தப் பட்டிருக்கும் ஜெல் என்பது, மக்காச் சோளத்தின் தண்டிலிருந்து எடுக்கப்ப ட்ட ஈரத்தை உறிஞ்சும் தன்மை கொண் ட ஜெல். மேலும் இந்த நாப்கினில் பய ன்படுத்தப்பட்டுள்ள ‘அனியன்ஸ் சிப்’, கிருமி நாசம் செய்யும் தன்மை கொண் ட பொருள். மேலும் இதில் இருந்து வெளி யாகும் இன்ஃப்ரா ரெட் கதிர்கள் ரத்த ஓட்டத்தைத் தூண்டுவதுடன், அதை சமன் செய்ய வல் லது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள டிஷ்யூ பேப்பரும் தீங்கு விளைவி க்காதது.
வெளிநாட்டில் நாப்கின் என்பது பெண்களின் ஆரோக்கியம் சம்பந் தப்பட்ட பொருள் என்று அக்கறைப்படுவதால், அதன் தரக்கட்டுப்பாட் டு சோதனையை வலுவாக்கி இருக்கிறார்கள் . இந்தியாவிலோ, விளம்பரங்களுக்குக் கொ டுக்கும் முக்கியவத்துவத்தை, அதன் தர மேம் பாட்டுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கொ டுக்காதது, நம் இந்தியப் பெண்களின் ஆரோக் கியத்தில் அவர்களும் அரசும் கொண்டுள்ள அலட்சியத்தைத் தான் காட்டுகிறது” என்று சாடிய ஷாபீர்,
”மாதவிடாய்க் காலங்களில் தரமான நாப்கின் கள் உபயோகிக்க வேண்டும். அல்லது மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை கட்டாயம் நாப் கினை மாற்றிக் கொள்ள வேண்டும். இதுதான் பெண்களை பல பிரச்னைகளில் இருந்தும் பாதுகாக்கும்!” என்று வலியுறுத்தினார்.
மிகமிக கவலைத் தரக்கூடிய இந்த விஷயம் பற்றி ‘கன்ஸ்யூமர் அசோ ஸியேஷன் ஆஃப் இந்தியா’ அமைப் பின் டைரக்டர் ஆர். தேசிகனிடம் கே ட்டபோது, ”மலேஷியா, தைவான் போன்ற நாடுகளில் இருக்கின்ற வியாபாரிகள், தங்கள் நாடுகளில் எக்ஸ்பயரி ஆன மற்றும் பயன்படுத் தப்பட்ட குழந்தைகளுக்கான நாப்கி ன், சானிட்டரி நாப்கின் இவற்றை யெல்லாம் மொத்தமாக வாங்கி, ‘வேஸ்ட்’ என்று இந்தியாவுக்கு எக் ஸ்போர்ட் செய்வார்கள். சென்னைக்கு வரும் அவற்றை ராயபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வைத்து, டூத் பிரஷ் மூலமா க சுத்தம் செய்து, புது நாப்கின்கள் போல இங்கே விற்பனை செய் வார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்பு இப்படி நடந்த சம்பவத்தை கேள்விப்பட்ட அரசு அதிகாரிகள் அப்படி விற்கப்பட்ட தரமற்ற நாப்கின் களை ஒட்டுமொத்தமாக அழித்தார்கள்.
இப்போது, ஷாபீர் சொல்லும் தகவல்களை, உங்கள் மூலமாகக் கேட்டு நான் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை. அவர் சொல்கின்ற விஷயத்தில் உண்மை இரு க்கிறது என்பதில் சந்தேகமே இல்ல. ஆனால், இந்த ஆய்வை அவர் அறிவியல்பூர்வமாக நிரூபித்திருக்கிறாரா என்று தெரிய வேண்டும்” என்ற தேசிகன்,
”சானிட்டரி நாப்கினுக்கு என்று வாலன்டரி தரக்கட்டுப்பாடு சர் டிபி கேட் ஐ.எஸ்-5405 என்பது தரப்படுகிறது. ஆனால், இந்த தரச்சான்றித ழோடுதான் சானி ட்டரி நாப்கின் இந்தியாவில் விற்கப்பட வேண்டும் என்று சட் டம் இல்லை. தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெற்று கொள்ளலாம் என்றுதா ன் கூறப்பட்டுள்ளது. பல கம்பெ னிகள் இதை ஃபாலோ செய்வதில்லை.
இப்போது, ஷாபீர் கொடுத்திருக்கும் ஆய்வு அறி க்கையை உடனடி யாக, பி.ஐ.எஸ். (பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்ஸ்) அமைப்பின் டைரக்டர் ஜெனரல் ஷரத் குப்தா ஐ.ஏ.எஸ்-க்கு மெயில் அனுப்பி விடுகிறேன். கூடவே நாப்கின் விஷயம் குறித்து நாங்களும் தீவிரமாக ஆராய்ச்சியில் இறங்கப் போகிறோம். அதை வைத்து, இந்தக் கொடுமைக்கு முடிவு கட்டிவிடலாம். எப்படியும் ஆறு மாதங்களில் ஐ.எஸ்.ஐ. முத்திரை வாங்கு வதை கட்டாயப்படுத்தும் வகையில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்” என்று சொன்னார்.
சென்னையை சேர்ந்த மகப்பேறு மருத்துவர் டாக்டர் சாதனாவிடம் இதுபற்றி கேட்டபோது, ”ஷாபீர் சொல்கின்ற தகவல்கள் அத்தனை யுமே சரி என்று என்னால் ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், சில உண்மைகள் இருக்கவே செய்கின் றன என்பதை மறுக்க முடியாது. நீங்கள் இதுபற்றி பேசுவதற்காக வருகிறேன் என்று என்னிடம் போ னில் கேட்டதுமே… பிரபல கம்பெ னிகள் தயாரிக்கின்ற சில நாப்கின் களை வாங்கிப் பார்த்தேன். அவற்றின் உள்ளே இருக்கின்ற பொருட் கள் பற்றியோ, எப்படி சுத்தமானதாக தயாரிக்கப்பட்டிருக்கிறது என் பது பற்றியோ எந்த விவரங்களும் அ தில் இல்லை. அதேசமயம், எத்தனை மாதத்துக்குள் பயன்படுத்த வேண்டும் என்கிற தகவல் இடம் பெற்றிருக்கி றது.
முன்பெல்லாம் நாப்கின்களுக்கு பதி ல் துணியை பயன்படுத்தினார்கள். ஆ னால், அதில் உள்ள சுத்தம் சந்தேகத்து க்குரியதே. அப்படி பார்க்கும்போது நா ப்கின்கள் நான்கு மணி நேரத்துக்கு பிறகு தூக்கி எறிந்து விட போகிறோ ம் என்பதால் பிரச்னை இல்லை. பொ து வாக இன்ஃபெக்ஷன் ஆவதற்கு இரண்டு நாட்கள் பிடிக்கும். அது கூட, தொடர்ந்து ஒரே நாப்கினை பயன்படுத்தும்போதுதான் ஏற்படு ம். ஆனால், அப்படி யாரும் செய்வதில்லை . மற்றபடி, எந்த முறையில் சுத்திகரிக்கி றார்கள் என்பது கேள்விக்குரியதுதான். நாப்கின்க ளை பொறுத்த வரை ஐ.எஸ்.ஐ. முத்திரை அவசியம் என்பதை நானும் வலியுறுத்துகிறேன்” என்று அக்கறையோ டு சொன்னார் டாக்டர்.

Thursday 5 April 2012

உடல் சூடு மற்றும் நரை முடிக்கு மருதாணி

Posted On April 05,2012,By Muthukumar




 கோடை வெயில் ஆரம்பித்து விட்டது , உடல் சூடும் மண்டை சூடு எல்லாமே அதிகமாகும், கொப்புளங்கள்,கட்டிகள் ,தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள். கண் எரிச்சல்.போன்றவை வர வாய்ப்பிருக்கு. உடல் சூடும் மண்டை சூடு எல்லாமே அதிகமாகும். அதற்கு தலைக்கு மெகந்தி போட்டுகொள்ளலாம். அல்லது தலைக்கு ஆயில் மசாஜ் செய்து குளிக்கலாம்.

வெயிலினால் ஏற்படும் சூட்டை தணிக்க ஆண்களும், பெண்களும் மருதாணி தலைக்கு தேய்த்து குளிப்பது நல்லது.
மெகந்தி தேய்த்து குளிப்பதனால் நல்ல குளிர்ச்சி ஏற்பட்டு உடல் சூட்டை தணித்து குளு குளுன்னு வைக்கும். சிலருக்கு தலைக்கு மெகந்தி போட்டால் ஒத்துக்காது.தலை வலி ஜலதோஷம் பிடித்து கொள்ளும். அதற்கு கிராம்பை சேர்த்து கொள்ளலாம்.

சிலர்  கொஞ்சம் வெள்ளை முடி தோன்றினாலே சில பேர் பத்து முறை கண்ணடியை பார்ப்பார்கள். அய்யோ நாம் கிழவியா(கிழவனா) விட்டோமே என்று தோனும்.யாரும் கிழவி கிடையாது மனதள‌வில் எல்லோரும் என்றும்ம் பதினாறு தான்.
 சிலருக்கு இளநரையும் வருவதுண்டு. அதற்கு மருதாணி தலைக்கு போட்டு கொள்வது நல்லது.






 மெகந்தி கலவை : மருதாணி பொடி, தயிர், திக்கான டீ டிகாஷன்,
(கருவேப்பிலை, வேப்பிலை சிறிது கரிசலாங்கண்ணி கீரை,பாசி பயிறு) இதேல்லாம் காயவைத்து திரித்து வைத்து கொள்ளுங்கள்.
இதை மேலே குறிப்பிட்டுள்ள மெகந்தி கலவையில் கொஞ்சம் சேர்த்து கொள்ளுங்கள்.இப்போது அனைத்தையும் நல்ல இட்லி மாவு பதத்திற்கு கரைத்து ஒரு இரும்பு வானலியில் வைத்து இரவு முழுவதும் ஊறவிட்டு, காலையில் தலையில் தேய்த்து 20 நிமிடம் (அ) 30 நிமிடம் ஊறவைத்து குளிக்கவும்.
இந்த கலவையை ஆறு மணி நேரம் தலையில் வைத்து ஊறவைத்து தேய்த்தால் நன்கு பலன் கிடைக்கும் என்று கேள்வி பட்டேன்.
உடம்புக்கு ஒத்து கொள்ளாதவர்கள், 1 மணி நேரம் முன் தலையில் தடவி ஊறவைத்து குளிக்கவும்.

பீட்ரூட் சாறு எடுத்தும் தலையில் தேய்த்து ஊற வைத்து குளிக்கலாம்.

நல்லெண்ணை அடிக்கடி தேய்த்து எண்ணை குளியல் போட்டாலும் நரை முடி வருவதை தவிர்க்கலாம்.
உடல் சூட்டையும் தணிக்கும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் ந‌ல்லெண்ணை தேய்த்து மசாஜ் செய்து குளித்தால் கூட‌ இள‌ந‌ரை வ‌ர‌ம‌ல் இருக்கும்.

 செடிக்கு எப்படி தண்ணீர் ஊற்றி வளர்க்கிறோமோ அப்படி தான் முடிக்கும். நல்ல நிறைய எண்ணை தலையில் தேய்த்து மசாஜ் செய்து வாரம் இருமுறை குளித்தால் முடியும் வளரும். நல்ல ஷைனிங்கும் கிடைக்கும்.முடி செம்பட்டையாகமல் இருக்கும்
கருவேப்பிலை உணவில் அதிக அளவில் சேர்த்து வரவும்.

கருவேப்பிலை பொடி , அரைத்து விட்ட கருவேப்பிலை ரச்ம் இது போல் உணவு அதிக அளவில் சேர்த்து கொண்டால் தலை முடி கருகருவென வளரும் நரை முடியும் வருவதையும் தவிர்க்கலாம்.





சமையலறை ஆங்கிலம்

Posted On April 05,2012,By Muthukumar
மளிகைப் பொருட்கள் / சமையல்பொருட்கள் / காய்கனிகள் / மூலிகை கீரைகளின் ஆங்கில வார்த்தைகள். விடுபட்டவற்றை சொல்லலாம். தவறுகளை சுட்டிகாட்டலாம்.
ஜாதிக்காய் - Nutmeg - நட்மெக்
ஜாதிபத்திரி - Mace - மெக்
இஞ்சி - Ginger - ஜின்ஜர்
சுக்கு - Dry Ginger - டிரை ஜின்ஜர்
பூண்டு - Garlic - கார்லிக்
வெங்காயம் - Onion - ஆனியன்
புளி - Tamarind - டாமரிண்ட்
மிளகாய் - Chillies - சில்லிஸ்
மிளகு - Pepper - பெப்பர்
காய்ந்த மிளகாய் / சிவப்பு மிளகாய் - Red chillies
பச்சை மிளகாய் - Green chillies
குடை மிளகாய் - Capsicum
கல் உப்பு - Salt - ஸால்ட்
தூள் உப்பு - Table salt
வெல்லம்/கருப்பட்டி - Jaggery - ஜாக்கரீ
சர்க்கரை/சீனி - Sugar - ஸுகர்
கற்கண்டு - Sugar Candy
ஏலக்காய்/ஏலம் - Cardamom - கார்டாமாம்
பாதாம் பருப்பு/வாதுமை கொட்டை - Almonds
முந்திரி பருப்பு/அண்டிப்பருப்பு - Cashew nuts
கிஸ்மிஸ் - Dry Grapes
லவங்கம்,கிராம்பு - Cloves - க்லெளவ்ஸ்
கசகசா - Poppy - பாப்பி
உளுந்து - Black Gram - பிளாக் கிராம்
கடலைப் பருப்பு - Bengal Gram - பெங்கால் கிராம்
பச்சைப்பயறு/பயித்தம் பருப்பு / பாசிப் பயறு - Moong Dhal/ Green Gram - மூனிங் தால்/கீரின் கிராம்
பாசிப்பருப்பு - Moong Dal
கடலைப்பருப்பு - Gram Dal - கிராம் தால்
உழுத்தம் பருப்பு - Urid Dhal
துவரம் பருப்பு - Red gram / Toor Dhal- ரெட்கிராம்
கம்பு - Millet - மில்லட்
கேழ்வரகு - Ragi - ராகி
கொள்ளு - Horse Gram - ஹார்ஸ் கிராம்
கோதுமை - Wheat - வீட்
கோதுமை ரவை - Cracked Wheat
சோளம் - Corn
சோளப்பொறி - Popcorn
எள்ளு - Sesame seeds / Gingelly seeds
நெல் - Paddy - பாடி
அரிசி - Rice - ரய்ஸ்
அவல் - Rice flakes
பச்சை அரிசி - Raw Rice
புளுங்கல் அரிசி - Par boiled rice
கடலை மா - Gram Flour
மக்காச்சோளம் - Maize - மெய்ஸ்
வாற்கோதுமை - Barley - பார்லி
பச்சை பட்டாணி - Green peas
சேமியா - Vermicelli
சவ்வரிசி - Sago
ரவை - Semolina
கொண்டை/கொண்டல் கடலை - Chickpeas/Channa
கடுகு - Mustard - முஸ்டார்ட்
சீரகம் - Cumin - குமின்
வெந்தயம் - Fenugreek
சோம்பு,பெருஞ்சீரகம் - Anise seeds
பெருங்காயம் - Asafoetida - அசஃபோய்டைடா
மஞ்சள் - Turmeric - டர்மரிக்
ஓமம் - Ajwain / Ajowan
தனியா - Coriander - கோரியண்டர்
கொத்தமல்லி தழை - Coriander Leaf -கோரியண்டர் லீப்
கறிவேப்பிலை - Curry Leaves
கஸ்தூரி - Musk - மஸ்க்
குங்குமப்பூ - Saffron - சஃப்ரான்
பன்னீர் - Rose Water - ரோஸ் வாட்டர்
கற்பூரம் - Camphor - கேம்ஃபர்
மருதாணி - Henna - ஹென்னா
துளசி - Tulsi
எலுமிச்சை துளசி - Basil
எண்ணெய் - Oil - ஆயில்
கடலை எண்ணெய் - Gram Oil - கிராம் ஆயில்
தேங்காய் எண்ணெய் - Cocoanut Oil - கோக்கநட் ஆயில்
நல்லெண்ணெய் - Gingili Oil/Sesame oil - ஜின்ஜிலி ஆயில்
வேப்ப எண்ணெய் - Neem Oil - நீம் ஆயில்
பாமாயில் - Palm Oil
ஆலிவ் ஆயில் - Olive Oil
பால் - Milk - மில்க்
பால்கட்டி - Cheese - ச்சீஸ்
நெய் - Ghee - கீ
வெண்ணெய் - Butter - பட்டர்
தயிர் - Curd/Yoghurt - க்கார்ட்
மோர் - Butter Milk - பட்டர் மில்க்
கீரை - Spinach - ஸ்பீனச்
அவரை - Beans - பீன்ஸ்
கர்பூரவள்ளி - Oregano
நார்த்தங்காய் - Citron - சிட்ரான்
திருநீர்பச்சை - Ocimum-basilicum
சீத்தாப்பழம் - Custard-apple
மாதுளை - Pomegranate
பரங்கிக்காய்/பூசனிக்காய் - Pumpkin
கருங்காலி மரம் - Cutch-tree
அதிமதுரம்-Liquorice
அருகம்புல் - Bermuda Grass
வல்லாரை கீரை - Pennywort (Centella asiatica)
புதினா இலை - Mint leaves
வெற்றிலை - Betel leaves
நொச்சி இலை - Vitexnegundo (Chaste Tree)
அத்தி - Fig
கீழாநெல்லி - Phyllanthus nururi
தாழை மரம் - Pandanus Odoratissimus,Fragrant Screwpine
தூதுவளை - Purple-fruited pea eggplant
துத்திக்கீரை - Abutilon indicum
பிரமத்தண்டு - Argemone mexicana Linn,(Ghamoya) Papaveraceae
கோவைக்காய் - Coccinia grandis
முடக்கத்தான் கீரை - Cardiospermum halicacabum
குப்பைமேனி - Acalypha indica; linn; Euphor biaceae
நத்தைச்சூரி - Rubiaceae,Spermacoce hispida; Linn;
சோற்றுக்கற்றாழை - Aloe Vera
நாவல் பழம் - Naval fruit (Syzygium jambolana)
பேய் மிரட்டி செடி - Anisomeles malabarica, R.br, Lamiaceae
தேள்கொடுக்கு செடி - Heliotropium
நிலக்குமிழஞ் செடி - Gmelina Asiatica
நெல்லிக்காய் - Amla,Indian Gooseberries
சதகுப்பை (சோயிக்கீரை,மதுரிகை) - Peucedanum grande; Umbelliferae
சிறு குறிஞ்சான் - Gymnema Sylvestre; R.Br.Anclepiadaceqe
அரிவாள்மனை பூண்டு - Sida caprinifolia
அகத்திக்கீரை - Sesbania grandiflora
செண்பகப் பூ - Sonchafa (champa)
சுண்டைக்காய் - Solanum torvum(Turkey Berry)
செம்பருத்தி - Hibiscus(Shoe Flower)
கரும்பு - Sugar cane
நீர்முள்ளி - Long leaved Barleria (Hygrophila auriculata)
அன்னாசிப் பூ - Star Anise
பூவரசு - Portia tree (Thespesia populnea)
ஊசிப்பாலை - Oxystelma Secamone
அமுக்கரா சூரணம்,அசுவகந்தி - Indian winter cherry
கத்தரிக்காய் - Egg plant / Aubergine / Brinjal
கொய்யாப் பழம் - Guava
மரவள்ளிக் கிழங்கு - Tapioca
சர்க்கரை வள்ளி கிழங்கு/சீனி கிழங்கு - Sweet Potato
சேனைக்கிழங்கு/கருணைக்கிழங்கு - Yam
விளாம் பழம் - Wood apple
முள்ளங்கி - Radish / parsnip
புடலங்காய் - Snake gourd
பாகற்காய் - Bitter gourd
வெண்டைக்காய் - Ladies Finger/ Okra
வேர்கடலை/நிலக்கடலை - Peanut
வாழைக்காய் - Ash Plantain
வாழைப்பழம் - Banana
ஊறுகாய் - Pickle
உருளைக் கிழங்கு - Potato
தேங்காய் - Coconut
இளந்தேங்காய் - Tender Coconut
இளநீர் - Tender Coconut water
பதநீர்/பயினி - Neera /Palmyra juice
கள்ளு - Palm wine/Palm Toddy
சுண்ணாம்பு - Lime
ஆப்பச் சோடா - Baking Soda
தீப்பெட்டி - Match Box
ஊதுபத்தி/ஊதுவர்த்தி - Incence Stick

ஆண்மை ச‌க்‌தி பெருக . . .

குழ‌ந்தை‌ப் பேறு‌க்கு மு‌க்‌கியமான ஆண்மைத் தன்மையை அதிகரிப் பதில் தேனும், பேரீச்சம்பழமும் முக் கிய பங்கு வகிக்கின்றன. ஆ‌ண்மை‌த் த‌ன்மை குறை பா‌ட்டி‌ற்காக, எ‌த்த னையோ மரு‌த்துவ‌ர்க‌ளையு‌ம், பொ‌ ய் ‌பிர‌ச்சார‌ங்களை ந‌ம்‌பியு‌ம் கால‌த் தை ஓ‌ட்டி‌க்கொ‌ண்டிரு‌க்கா‌தீ‌ர்க‌ள்.
இய‌ற்கை முறை‌யி‌ல், எ‌ந்த ‌ பி‌ன் வி ளைவுகளு‌ம் இ‌ன்‌றி ந‌ல்ல ‌ சி‌கி‌ச்சை ந‌ம்‌மிடமே உ‌ள்ளது. உயர் ரக பேரீச்சம் பழம் ஒரு கிலோவும், தேன் (உ‌ண்மையான தே‌ன்) ஒரு கிலோவும் வாங்கிக் கொள்ளுங்கள். பேரீச் சம் பழங்களை ஒரு அகன்ற தட்டில் பரப்பி 3 மணிநேரம் வெயிலில் வைத்து, ஒரு சுத்தமா ன பீங்கான் பாட்டிலில் பத்திரப் படுத்துங்கள்.
அதனுடன், தேனை ஊற்றி மீண்டும் 3 மணி நே ரம் வெயிலில் வைத்து எடுத்துவிடுங்கள். தினமும் காலை உணவு சாப்பிட்ட 1/2 மணி நேரத்திற்குப் பிறகு 3 பேரீச்சம்பழங்களை சாப்பிட்டுவிட்டு, சிறிது வெந்நீர் அருந்துங்கள்.

இதேபோல், இரவிலு‌ம் உணவு சாப்பிட்ட பின்னர் 12 பேரீச்சம் பழங்களை உட்கொண்டுவிட்டு, வெந்நீருக்கு பதிலாக பசும் பா லை அருந் துங்கள். இப்படி 60 நாட்கள் தொடர்ந்து தேன் கலந் த பேரீச்சம் பழங் களை சாப்பிட் டு வந்தால் போதும். ஆண்மை ச‌க்‌தி பெருகி‌ விடும்.

Wednesday 4 April 2012

‘படம்’ பார்த்தால் சரியாக ‘கதை’ சொல்ல முடியாது…!

Posted On April 04,2012,By Muthukumar
ஆபாசப் படங்களைப் பார்ப்போரால் படுக்கை அறையில் சிறப்பாக செயல்பட முடியாதாம். ஒரு ஆய்வு இப்படி எச்சரிக்கிறது.
ஆண்கள்தான் பெருமளவில் ஆபாசப் படங்களை அதிகம் பார்க்கின்றனர். பெண்களிலும் ஆபாசப் படம் பார்ப்போர் உண்டு. அவர்களின் எண்ணிக்கை குறைவுதான். இப்படி ஆபாசப் படம் பார்க்கும், குறிப்பாக இன்டர்நெட்டில் ஆபாசப் படங்களை அடிக்கடி பார்ப்போரால், படுக்கை அறையில் நிஜமான செக்ஸ் நடவடிக்கையில் முழுமையாக செயல்பட முடியாமல் போகிறதாம்.
செக்ஸ் விஷயங்களை வீடியோவில் பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டும் நபர்களால் உண்மையில், நிஜமான செக்ஸ் விஷயங்களை முழுமையாக, சரியாக நிறைவேற்ற முடியாமல் போய் விடுகிறதாம். இதனால் பல பிரச்சினைகளுக்கு அவர்கள் ஆளாவதாக இந்த ஆய்வுகூறுகிறது.
வீடியோவில் செக்ஸ் உறவுகளைப் பார்ப்பதில் இருக்கும் ஆர்வத்தில் பாதியளவு கூட ஆண்களால் படுக்கை அறையில் காட்ட முடிவதில்லையாம்.
இதற்கு முக்கியக் காரணம், மூளையின் உற்சாக மையத்தை தூண்டி விடக் கூடிய ஹார்மோனான, டோபமைன் அபரிமிதமான அளவில் சுரப்பதே. அடிக்கடி ஆபாசப் படங்களைப் பார்த்து உணர்ச்சிவசப்படுவோருக்கு டோபமைன் அதிக அளவில் சுரந்து, சுரந்து கடைசியில், உண்மையான இன்பத்தை அனுபவிக்க நேரிடும்போது அதனால் பலன் இல்லாமல் போய் விடுகிறதாம்.
இப்படி ஆபாசப் படம் பார்த்து உண்மையான உற்சாகத்தையும், இன்பத்தையும் தொலைத்து நிற்கும் பலரும் தற்போது செக்ஸ் கவுன்சிலிங்குக்கு அதிக அளவில் வர ஆரம்பித்துள்ளனராம்.
இதுகுறித்து செக்ஸாலஜிஸ்ட் ஒருவர் கூறுகையில், ஆபாசப் படம் பார்ப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடிதான் உள்ளது. இன்டர்நெட் மூலம் ஆபாசப் படம் பார்ப்போர் பெருமளவில் பெருகி விட்டனர். இதனால் உண்மையான செக்ஸ் நடவடிக்கைகளில் இவர்களால் ஈடுபடுவதில் பல சிரமங்களைச் சந்திக்கின்றனர்.
அதிக அளவிலான செக்ஸ் நடவடிக்கைகளைப் பார்த்துப் பார்த்து இவர்கள் மன ரீதியாக களைத்துப் போய் விடுகின்றனர். அதில் ஒரு சலிப்பும், அலுப்பும் வந்து விடுகிறது. டோபமைன்தான் இதற்கு முக்கியக் காரணம் என்கிறார்.
இப்படிப்பட்ட செக்ஸ் பட அடிமைகள், படிப்படியாக ஆபாசப் படம் பார்ப்பதை நிறுத்திக் கொள்வது நல்லதாம். அதை நிறுத்த முடியாதவர்களுக்கு மருந்து, மாத்திரைகள், கவுன்சிலிங் போன்றவற்றைத் தருகிறார்களாம் செக்ஸாலஜிஸ்ட்டுகள்.
எனவே வாலிப வயோதிகர்களே, எப்போதும் நிழலை நம்பாதீர்கள், தேவைப்படும்போது நிஜத்தை நாடுவதே மன நலனுக்கும், உடல் நலனுக்கும் நல்லது...

புகைப் பிடிக்கும் பழக்கமுள்ள பெண்களுக்கு . . . . ?

புகைப் பிடிக்கும் பழக்கமுள்ள பெண்களுக்கு இருதய நோய் வரக் கூடிய ஆபத்தானது அப்பழக்கமுள் ள ஆண்களை விட அதிகமாக இரு க்கிறது என முப்பது வருட ஆராய்ச் சிகளில் மீளாய்வு கூறு கிறது.
இருபத்து நான்கு லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளை வைத்து ப் பார்க்கையில் புகைக்கும் ஆண்க ளை விட புகைக்கும் பெண் களுக்கு இருதய நோய் ஆபத்து 25 சதவீதம் கூடுதலாக இருப் பதாக லான்செட் என்ற மருத்துவ சஞ்சிகையில் தெரி விக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு அதிக ஆபத்து வருவது ஏன் என்பதற்கான காரண ங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என ஆராய்ச்சியாளர் கள் சொல்கின்றனர்.
சாதாரணமாக ஆண்களை விட பெண்கள் குறைந்த எண்ணிக்கை யிலான சிகரெ ட்டுகளைத்தான் பிடிக்கிறார் கள் என்றாலும், அவர்களுக் கு இருதய நோய் ஆபத்து அதிகம் என்ற கண்டுபிடிப்பு ஒரு எச்சரிக்கையாக வந்துள் ளது என பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷன் என்ற இருதய நோய் ஆராய்ச்சி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
உலகில் அதிகம் பேரைக் கொல்லும் நோ ய் இருதய நோய்தான் என்றும் ஒவ்வொ ரு ஆண்டும் இந்நோயின் காரணமாக ஏழுபது லட்சம் பேர் உயிரிழக்கின்றனர் என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறு கிறது.
ஆண் பெண் என இருபாலாரிலுமே புகை ப்பழக்கம் இல்லாதவர்களோடு ஒப்பிடு கையில் புகைப்பவர்களுக்கு இருதய நோய் வருவத ற்கான ஆபத்து இரண்டு மடங்கு அதிகம் என்பதும் குறிப்பிடத்த க்கது.

அதுக்கும் கொஞ்சம் லீவ் விடுங்க ! ஆர்வம் அதிகரிக்கும் !!

Posted On April 04,2012,By Muthukumarதம்பதியரின் சந்தோசமான தருணங்கள் தாம்பத்ய உறவின் போது ஏற்படுவதுண்டு. ஒரு சில நாட்களில் அதுவும் போரடித்து விடும். உறவு என்பது வெறும் கடமையாக மட்டுமில்லாமல் உயிர்ப்புடன் இருக்க பாலியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள் பின்பற்றுங்கள்.
புதுசா இருக்கட்டும்
எதுவுமே ஒரே மாதிரியாக இருந்தால் அலுப்பு தட்டிவிடும் எனவே வழக்கத்தில் இருந்து வேறுபடுங்கள். புது இடம், புதிய முயற்சி ஆர்வத்தை அதிகரிக்கும்.
தனிமையில் சந்திப்பு
அலுவலகம் செல்லும் ரகசியமாய் ஒரு குறிப்பு எழுதுங்கள். மாலைப் பொழுதில் புதிதாய் ஒரு இடத்திற்கு வரச்சொல்லி அங்கே காத்திருங்கள். அழகான ஆடையில் கணவரை கவர்ந்திழுக்கும் வகையில் நீங்கள் அமர்ந்திருப்பதை கண்டு உங்களவர் அசந்து போவார். அந்த தருணத்திலேயே காதல் நெருப்பு பற்றிக்கொள்ளும்.
கொஞ்சம் பிரிவு அதிக நெருக்கம்
இருவரும் தனித் தனியே சுற்றுலா செல்லுங்கள். அது அலுவலக வேலையாகவும் இருக்கலாம். அந்த சில நாள் பிரிவு நெருக்கத்தை அதிகரிக்கும். எப்பொழுது சந்திப்போமோ என ஏக்கத்தை ஏற்படுத்தும்.
முதல் ஸ்பரிசம்
முதல் இரவில் நடந்த சம்பவங்கள். தேனிலவு நினைவுகளை மனதில் ஓட்டிப்பாருங்கள் அந்த நினைவுகள் புது உத்வேகத்தை உருவாக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
சுறு சுறுப்பான செயல்பாடு
உற்சாகம் தரும் விளையாட்டில் ஈடுபடுவது உறவிற்கான ஹார்மோன்களை சுரக்கச்செய்யும் என்கின்றனர் நிபுணர்கள். வேகமாக ஆற்றில் படகில் செல்வது, சுறுசுறுப்பாக வேலை செய்வது. நீந்துவது என உற்சாகமாக செயல்படுங்கள். புதுவித த்ரில் ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள்
சில நாள் விடுமுறை

தினமும் உறவு என்பது போராடித்து விடும். ஒருவாரம் விடுமுறை விட்டுப்பாருங்கள் என்கின்றனர் மருத்துவர்கள். ஒரு குறிப்பிட்ட நாளில் அதை வைத்துக்கொள்ளலாம் என தீர்மானியுங்கள். அதுவரை தீண்டல், விளையாட்டு, சின்ன சின்ன முத்தம் என எதிர்பார்ப்பை எகிற வைக்கலாம். அதற்காக ஒரேடியாக லீவ் தேவையில்லை என்பது அவர்களின் அறிவுரை.

சிறுவர்கள் உச்சா வில் வேக வைக்கும் முட்டை

Posted On April 04,2012,By Muthukumar
தெருவோர வியாபாரிகள், சில ஓட்டல் ஊழியர்கள் சீனாவின் டாங்யாங் நகரில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் பக்கெட்களுடன் அலைகின்றனர். எல்லாம்.. சின்ன பசங்களின் சிறுநீரை பிடித்து செல்வதற்குதான். அந்த சிறுநீரில் முட்டைகளை வேகவைத்து தெருவோரங்களில் விற்கின்றனர். உடல்நலத்துக்கு மிகவும் நல்லது என்று கூறுவதால், விற்பனை அமோகமாக நடக்கிறது. சீனாவின் ஜிஜியாங் மாகாணத்தின் கிழக்கு பகுதியில் உள்ளது டாங்யாங் நகரம். அழகிய கடலோரத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது.
மிகவும் பிரபலமான நகரம். இங்குள்ள தொடக்க பள்ளிகளில் ஆயிரக்கணக்கான சிறுவர், சிறுமிகள் படிக்கின்றனர். பள்ளி முடியும் நேரத்தில் குழந்தைகளை அழைத்து செல்ல பெற்றோர் கும்பலாக காத்திருக்கின்றனர். அவர்களுடன் தெருவோர வியாபாரிகளும் காத்திருக்கின்றனர். பள்ளி டாய்லெட்டில் வைத்துள்ள பக்கெட்டை எடுத்து செல்லதான் அவர்களும் காத்திருக்கின்றனர். காலையில் இருந்து மாலை வரை பள்ளியில் சிறுவர்கள் கழிக்கும் சிறுநீர், பக்கெட்டில் சேகரிக்கப்படுகிறது. அதுவும் 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் சிறுநீர் மட்டுமே சேகரிக்கின்றனர்.
இதற்கு பள்ளிகளும் எதிர்ப்பு தெரிவிக்காமல் அனுமதி வழங்கி உள்ளன. பள்ளி முடிந்து சிறுவர்கள் சென்றபின், டாய்லெட்டில் சென்று சிறுநீர் நிரம்பி இருக்கும் பக்கெட்டை தூக்கி செல்கின்றனர். பின்னர் அந்த சிறுநீரில் முட்டைகளை போட்டு வேக வைத்து தெருவோரங்களில் விற்கின்றனர். அப்போது கமகம வென வாசனை வருகிறது. தெருவில் நடந்து செல்பவர்கள் அந்த வாசனையை நுகர்ந்தபடி செல்கின்றனர். டாங்யாங் நகரில் பல நூறு ஆண்டுகளாக இந்த வழக்கம் இருப்பதாக கூறுகின்றனர்.
பாரம்பரிய உணவு வகைகளில் இதுவும் ஒன்றாம். சிறுநீரில் வேகவைத்த முட்டைகளை சாப்பிட்டால் மூட்டு வலி இருக்காது, சன் ஸ்ட்ரோக் வராது, வாசனையாகவும் இருக்கும். உடல்நலத்துக்கு மிகவும் நல்லது என்று வியாபாரிகள் கூறுகின்றனர். இதை உறுதிப்படுத்த எந்த சரியான விளக்கமும் உள்ளூர் நிர்வாகத் தரப்பில் இல்லை. எனினும் இந்த முட்டை விற்பனையை தடுக்கவும் இல்லை. இந்த பாரம்பரிய உணவை தயாரிக்க நிறைய நேரம் ஆகும்.
பள்ளிகளில் சிறுநீரை சேகரித்து, முட்டைகளை அதில் ஊறவைத்து, பின்னர் வேகவைத்து, அதன்பின் ஓடுகளை நீக்கி, அதன்பின் சில மணி நேரம் முட்டைகளை மீண்டும் கொதிக்கும் சிறுநீரில் வேகவைக்க வேண்டும். அதன்பின்னர்தான் விற்க வேண்டும் என்று பெருமையாக கூறுகின்றனர். இவ்வளவு கஷ்டங்கள் இருப்பதால், இந்திய மதிப்பில் ரூ.12.50க்கு ஒரு முட்டையை விற்கின்றனர். அதற்கேற்ப தங்கள் மூதாதையர்கள் கண்டுபிடித்த இந்த பாரம்பரிய உணவை உண்பதால், ரத்த ஓட்டம் சீராக இருப்பதாகவும், உடல் வலி இல்லாமல் இருப்பதாகவும் டாங்யாங் நகரத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கூறுவது புரியாத புதிராக இருக்கிறது. கடைகளில் விலை அதிகம் என்பதால் வீடுகளிலும் சிலர் சிறுவர்களின் சிறுநீரை சேகரித்து முட்டைகளை அதில் வேகவைத்து உண்கின்றனர். எனினும், இந்த முட்டையை பிடிக்காதவர்களும் நகரில் இருக்கத்தான் செய்கின்றனர்.

அழகுக்கு ஆசைப்பட்டு ஆண்மையை இழக்கும் ஆண்கள்! – அதிர்ச்சித்தகவல்!

அழகு என்பது அவசியமானதுதான். அதேசமயம் ஆண், பெண் இரு வருமே அழகுக்கு ஆசைப்பட்டு உபயோகிக்கும் பொருட்கள் ஆரோ க்கியத்திற்கு வேட்டு வைக்கும் ஆபத்து உள்ளது என்று மருத்துவ ர்கள் எச்சரிக்கின்றனர்.
 
தலைமுடி வளர்ச்சிக்கு பயன்படுத் தப்படும் ஒரு மருந்து ஆண்களின் தலைமுறையையே அஸ்தமிக்கச் செய்யும் தன்மை கொண் டுள்ளது என்று அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.
பக்க விளைவு மருந்துகள்
தலைமுடி குறித்த கவலை பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக் கும் அதிகம் இருக்கிறது. கவலை, மன அழுத்தம், ரசாயன கலவை கொண்ட ஷாம்பு, சோப்பு பயன் படுத்துவது, மாசடைந்த சுற்று ச் சூழல் போன்றவைகளினால் இன்றைக்கு பெரும்பாலான இளைஞர்களின் தலைமுடி உதிர்ந்து வழுக்கைத் தலை யாக மாறிவருகி றது.
வழுக்கையாக இருந்தால் திரு மணம் நடப்பதில் சிக்கல் ஏற் படுமோ? பெண்ணுக்கு பிடிக் காவிட்டால் என்ன செய்வது என்ற எண் ணத்திலேயே அநேகம்பேர் தவிக்கின்றனர்.
முடி உதிராமல் தடுக்கவும், தலைமுடி நன்றாக வளரவும் ரசாயனக் கலவைகள் அடங்கிய எண்ணெய்களையோ, கிரீம்களையே வா ங்கி உபயோகிக்கின்றனர்.
ஒரு சிலர் மாத்திரைக ளையும் உட்கொள்கின்ற னர். அழகை அதிகரிக்க அவர்கள் உபயோகிக்கும் அந்த மருந்துகளில் தான் ஆபத்து ஒளிந்திருக்கிறது என்பது அநேகம் பேருக்கு தெரிவதில் லை.
அமெரிக்காவிலும், பிரான்ஸ் நாட்டிலும் தலைமுடி வளர்ச்சிக்காக உபயோகப்படுத்தப்பட்ட புரோபேஷியா என்ற மருந்து ஆண்களுக் கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தியது கண்டறியப்பட்டது.
ஹார்மோன் பாதிப்பு
பிரான்ஸ் நாட்டில் மட்டும் 2010 ம் ஆண்டு 32,000 ஆண்கள் இந்த மருந்தை பயன்படுத்தியுள்ளன ர். அவர்கள் இந்த மருந்தின் பய ன்பாட்டை நிறுத்தி பல மாதங்க ளுக்குப்பின்னர் அவர்களை சோ தனை செய்தபோது அந்த ஆண் களுக்கு ஆண்மை குறைபாடு இருந்தது கண்டறியப்பட்டது.
இதற்கு காரணம் புரோபேஷியா வில் உள்ள பினஸ்டிரைடு (Finas- teride) என்ற பொருள் டெஸ் ட்ரோஜன் என்ற ஆண்மைச் சுரப்பி னைத் தடுப்பதுதான் என்று புரோபேஷியா மருந்தைத் தயாரிக்கும் மெர்க் என்பவர் கூறி யுள்ளார்.
ஆண்களுக்கு ஆபத்து
புரோபேஷியா மருந்தினை உப யோகிப்பதன் மூலம் எழுச்சி நிலை குறைதல், தாம்பத்ய உற வின் போது உற்சாகம் இழத்தல், இயலாமை உள்ளிட்ட குறைபா டுகள் ஏற்படுவதும் கண்டறியப் பட்டு ள்ளது.
இதனையடுத்து இந்த மருந்தி னை உபயோகிக்கவும், விற்ப னை செய்யவும் அமெரிக்கா, ப்ரான்ஸ் நாடுகளில் தடை விதிக்கப்பட்டு ள்ளன.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரான்ஸ் நாட்டின் சுகாதார உற்பத்தி பாதுகாப்பு அமைப்பின் தலைவரான டொமினிக் மாரஞ்சி கூறியதாவது, புரோபேஷியா மருந்தின் அளவைக் குறைத்துப் பயன்படுத்தலாம், அவ்வாறு நீண்ட நாட் கள் பயன்படுத்தினால் 3 சதவீதம் தான் இழப்பு ஏற்படும் என்று கூறியு ள்ளார்.
நம் ஊரிலும் தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கவும், முடி உதிராமல் தடுக்கவு ம் இந்த எண்ணெயை பூசுங்கள், இந்த மாத்திரையை சாப்பிடுங்கள் என தினசரி விளம்பரங்கள் வந்த வண்ணம் உள்ளது.
எனவே எந்த மருந்தில் என்ன பக்கவிளைவு உள்ளது என்பதை அறிந்து பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி யுள்ளனர். இல்லையெனில் அழகுக்கு ஆசைப்பட்டு ஆண்மையை இழக்க நேரிடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

திருமணச்சடங்குகள் (சைவ முறைப்படி)

‘திரு’ என்பது தெய்வத்தன்மை எனவும், ‘மணம்’ என்பது இணைதல் எனவும் பொருள்பட்டு, ‘திருமணம்’ என்பது மேம்மையான தெய்வீகம் வாய்ந்த இணைதல் எனப்படுகின்றது. அதாவது இரு இதயங்கள் இணைவது எனவும் கூறலாம்.
தமிழர்களின் இந்துத் திருமணம் ஆகம மரபுச் சடங்குகளுடன் சில சிறப்பு அம்சங்களையும் தழுவி நடைபெறுகின்றன. இச்சடங்கு களை சமய குருக்கள் சமய முறைப்படி நெருப்பு முன்னினையில் இறைவன் ஆசி யுடன் நடத்தி வைக்கிறார். திருமண நிகழ் வில் முக்கியமான நிகழ்ச்சி நல்வேளையில் தாலி கட்டுதலாகும். இதனை “மாங்கல்ய தாரணம்” எனக் கூறுவர். தாலி கட்டியதும் அப்பெண் “சுமங்கலி” அதாவது திருமணமா னவள் என்ற தகுதி பெறு கின்றாள்.
இரு வீட்டாரும் முதலில் சாதகப் பொருத்தத்தை ஆராய்வார்கள். தமிழ்நாட்டில் பெண்பார்க்கும் படல்போன்று இலங்கையிலும் பெண்ணைப் பொதுவிடங்களில் பார்ப்பது வழக்கமாகவுள்ளது. பின் நிச்சயதார்த்தத்தை உறுதிசெய்யப் பெண்வீட்டார் தாம்பூலம், பலகாரம், பழங்க ளோடும் உறவினரோடும் மணமகன் வீட்டிற்கு நல்ல நாள் பார்த்துச் செல்வர். இதன் பின் இரு வீட்டாரும் திருமண நாளைச் சோதிடரி டம் கேட்டு நிச்சயிப்பர். அத் தோடு பொன்னு ருக்கலிற்கும் ஒரு நாளை நிச்சயிப்பர்.
பொன்னுருக்கல்
பொன்னுருக்கலில் நடுவில் தங்க நாணயமும் உமியின் மே ல் சிரட்டைக் கரி இருக்கின்றது
திருமண நாளுக்கு முன்பு ஒரு சுப நாளில் மணமகன் இல்லத் தில் அல்லது ஆசாரி வீட்டில் பொன்னுருக்கல் நடைபெறும். இதில் மணப்பெண்ணைத் தவி ர பெண்ணின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொள்வர். பெண்வீட்டார் ஓர் இனிப்புப் பண்டம் (கொழுக்கட்டை) கொண்டு செல்லுதல் சம்பிரதாயம்.
மணமகன் வீட்டு வாசலில் முறைப்படி நிறைகுடம், குத்துவிளக்கு, பன்னீர்தட்டு, குங்குமம், சந்தனம் வைத்து பொன்னுருக்கும் இடத் தில் ஒரு நிறைகுடம் குத்துவிளக்குகள் தேங்காய், மாவிலைகள், வெற்றிலை, பா க்கு, வாழைப்பழம், மஞ்சள்கட்டை (துண் டு), தேசி க்காய், அறுகம்புல், பூக்கள், ஒரு சட்டியில் தண்ணீர், தேங்காய் உடைக்கக் கத்தி, விபூதி, குங்குமம், சந்தனம், மஞ்ச ளில் பிள்ளை யார், சாம்பிராணியும் தட்டு ம், கற்பூரம் முதலிய முக்கியமாகத் தேவைப்படும் பொருட்களா கும்.
திருமாங்கல்யத்திற்குரிய தங்கநாணயத்தை (பவுணை) ஆலயத் தில் (இறைவனிடத்தில்) வைத்து பூசை செய்து ஒரு தட்டில் வெற் றிலை, பாக்கு, மஞ்சள், குங்கு மம், பூ, பழத்துடன் நாணயத் தையும் வைத்துக் கொண்டு வந்து பூஜையறையில் வைக்க வேண் டும். பொன்னுருக்கும் நாளன்று அதை மணமகனி ன் பெற்றோர் அல்லது பெரியோர் எடுத்து மண மகனிடம் கொடுக்க அவர் அதை ஆச்சாரியாரிடம் கொடுத்து உருக்கவேண்டும். ஆச்சாரியார் கும்பம் வைத்து விளக் கேற்றி தூபதீபம் காட்டி வெற்றிலை, பாக்கு வாழைப்பழம் முதலி யவை வைத்து தேங்காய் உடைத்துப் பூசை செய்து பொன்னை உருக்குவார். உருக்கிய பின் தாய்மாமன் தேங்காய் உடைத்துப் பூசை செய்து அந்த இளநீரை உருக்கிய தணலில் ஊற்றி தீயை தணிப்பார். பின் ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு, பழம், பூ, மஞ்சள், குங்கு மம், தேசிக்காய் வைத்து வெற்றிலை மேல் உருக் கிய தங்க த்தையும் வைத்து மணமகனிடம் ஆசாரியார் கொடுப் பார். அதை மணமகன் வந்துள்ள சபையோ ருக்குக் காண்பித்து, அதன் பின் ஆசாரியாரிற்கு அரிசி காய்கறி யுடன் தட்சணை அளி த்து உருக்கிய தங்கத்தைத் திருமாங்கல்யம் செய்ய ஒப்படைக்க வேண்டும்.
பின்னர் விருந்துபசாரத்தில் அனைவரும் கலந்து கொள்வர். மண மகன் வீட்டில் இருந்து தோழி விருந்தில் ஒரு பகுதி யை மண மகளின் வீட்டிற்குச் சென்று மணமகளிடம் கொடு ப்பர். இதே நாளில் இரு வீடுக ளிலும் திருமணத்திற்குரிய பலகாரங்கள் செய்யத்தொடங் குவார்கள். முதன் முதலாக இனிப்புப் பலகாரங்கள் செய்யவேண் டும் என்பதால் சீனி அரியதரம் செய்யலாம். அதற்குரிய மாவைக் குழைத்து வைத்தால் கன்னிக்கால் ஊற்றியபின் பல காரம் சுட லாம். (இந்த நாளில் இருந்து திருமண நாள்வரை மணமக்கள் ஒரு வரை ஒருவர் பார்க்கக் கூடாதென்பது பழையகால சம்பிரதாயம்.)
கன்னிக்கால் ஊன்றல்
இதே நாள் பெண் வீட்டிலும் மணமகன் வீட்டிலும் தனித்தனியே அவர்கள் வளவில் ஈசான (வட கிழக்கு) மூலையில் முகூர்த் தக் கால் அல்லது கன்னிக்கால் ஊன்றவேண்டும். அதற்கு இப் போது கலியாண முள்முருங் கை மரத்தில் ஒரு தடியை வெட்டி அதன் மேல் நுனியில் 5 மாவிலைகளை மஞ்சள் பூசிய கயிறால் கட்டி, இடையில் ஒரு மஞ்சள் பூசிய வெள்ளைத் துணி யில் ஒரு செப்பு க்காசு முடிந்து கட்டிவிட வேண்டும். பெரியவர் ஒருவர் அத்தடியை நில த்தில் ஊன்றியதும் அதற்கு தேங்காய் உடைத்து சாம்பிராணி கற் பூரம் காட்டவேண்டும். அதனடியில் நவதானியத்தொடு பவளம் அல்லது நவமணிகள் இட்டு நீர் பால் ஊற்றி (3 சுமங்கலிப் பெண் கள்) மரத்திற்குத் திருநீறு, சந்தனம், குங்குமம் சார் த்தவேண்டும். இது நன்கு வளரவேண்டும் என்று நி னைத்து கும்பத்தண்ணீ ரை ஊற்றலாம்.
மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து வெற்றி லை பாக்கு பழம் வைத்து தேங்காய் உடைத்துத் தீபம் காட்டி பந்தல்கால் ஊன்று வார்கள். பந்தல் காலைத் தொடர்ந்து பந்தல் அமைக்கும் வேலை தொடரும். மணமகள் வீட்டில் ஊன்றிய பின் மணமகன் வீட்டிற்கும் செய்ய வேண்டும்.
முகூர்த்தக்கால் ஊன்றிய பின் இரு வீட்டாரும் திருமணச் சடங்கு கள் முற்றாக முடிவடையும் வரை எந்தவிதமான துக்க நிகழ்ச்சிக ளிலும் பங்குபெறுதல் கூடாது. (பந்தக்கால் ஊன்றுபவருக்குத் தட்சணை கொடுக்கவேண்டும்.)
முளைப்பாலிகை போடல்
பெண் வீட்டில் மூன்று அல் லது ஐந்து மண்சட்டிகளில் மண்பரப்பி நீர் ஊற்றவும். பா லில் ஊறவைத்த நவதானிய ங்களை 3 அல்லது 5 சுமங்கலி ப் பெண்கள் அச்சட்டிகளில் தூவி நீரும் பாலும் தெளிக்க வேண்டும். (3 முறை). இவ ற்றைச் சாமி அறைக்குள் வைத்து திருமணத்தன்று மணவறைக்குக் கொண்டு போக வேண்டும். அநேக மாக பொன்னு ருக்கலன்று செய்வார்கள் (இதை 3 நாட்களுக்கு முன் னாவது செய் தால் நவதானியம் வளர்ந்து இருக்கும்.

முளைப்பாலிகை இடுவதன் நோக்கம் திருமணம் செய்து மண மக்களும் அவர்கள் குடும்பமும் முளைவிட்டு பல்கிப் பெருகி வாழ வேண்டும் என்பதே. “விரித்த பாலிகை முளைக்கும் நிரையும்” என்கின்றது சிலப்பதிகாரம். இந்தப் பாலிகையானது திருமணத்தி ற்குப் பின் நதியிலே சேர்த்து விடலாம்.
நவதானியம் ஆவன நெல், கோதுமை, பயறு, துவரை, மொச்சை, எள், கொள்ளு, உளுந்து, கடலை என்ப னவாம்.
பந்தல் அமைத்தல்
பந்தல்
முகடுடைய பந்தல் அமைக்கும் பழக்கம் அக்காலத்தில் நடை முறையில் இருந்து வந்துள்ளது. பந்தலின் உள்பகுதியில்மேலுக் கு துணிகளைக் கட்டுவார்கள். அழகுக்காகவும் திருமணச் சடங்குக ள் நடக்கும் பொழுது பந்தலின் மேலிருந்து தூசி அழுக்குப் பொருட்கள், பல்லி போன் றன விழுந்துவிடாமல் இருப்பதற்காகவும் இந்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. பந் தலை கமுகு, வாழை, தென்னை ஓலை களால் அலங்கரிப்பர்.
வாழைமரம் ஒருமுறைதான் குலைபோ டும் அதுபோல் எமது வாழ் விலும் திருமணம் ஒருமுறைதான் என் பதை உணர்த்துகிறது. பாக்கு கொத்துக் கொத்தாகக் காய்ப்பதால் இது தம்பதிகள் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதை வலியுறு த்துகின்றது. வாழையும் தென்னையும் கற்பகதரு இவை அழியாப் பயிர்கள் ஆகும். தென்னை நூற்றாண்டு வாழக்கூடியது. “வாழை யடி வாழையாக” வளர்வது தேங்காயும் வாழைப்பழமும் இறை வழிபாட்டில் முக்கியமாகின்றது. தம்பதிகள் நிலைத்து நின்று அனைவருக்கும் பயன்படக்கூடிய தாக வாழவேண்டும் என்ற தத்துவத்தை யே உணர்த் துகிறது.
திருமணம் வசதிக்கேற்ப பெண் வீட்டி லோ, கோயிலிலோ அல்லது வேறுமண்ட பத்திலோ வைக்கலாம். அப்படி வேறு மண்டபத்தில் வைப்பதானால் இருவரது வீட்டு வாசல்களிலும் மண்டப வாயிலி ல் மாவிலை, தோரணம், வாழை மரங் களால் அலங்கரிக்கப்பட வேண்டும்.
வாழைமரம் கட்டுவதன் நோக்கம் வாழையடி வாழையாக வாழை மரம் தழைத்து வருவது போல, நமது சந்ததியும் பெருக வேண்டும் என்பதாகும். மாவிலை தோரணங்கள் மங்கள முறையாகக் கட்ட வேண்டும். வாசலில் நிறைகுடம் வைக்கவேண்டும். வசதிக் கேற்ப வீடுகளையும் மண்டபத்தையும் அலங்கரிக்கலாம். மண்டப த்தில் நன்கு அலங்கரிக்கப்பட்டே மணவறை கிழக்கு நோக்கி அமைக்கப் பட வேண்டும். மணவறையின் முன்பு சுவாமி அம்பாள் கும்பங்கள், சந்திரகும்பம், விநாயக பூஜை, பஞ்சகௌவ்விய பூசைகென ஒரு கும்பம், அக்கினி கிரியைக்குரிய பாத்திரம், அம்மி, மஞ்சள் நீர் ஆகியவை வைக்கப்படும்.
1 விநாயகர்
2 ஓமகுண்டம்
3 அரசாணி
8 சந்திர கும்பம்
9 அம்மி
10 7 ஈசானமூலை – சுவாமி அம்பாள்
11 மஞ்சள் பாத்திரம் – மோதிரம் போட்டெ டுத்தல்
அரசாணியைச் சுற்றி 4 விளக்குகள், 4 நிறைகுடங்கள், வைக்கப் படும் (4, 5, 6, 7) சந்திர கும்பத்திற்கு முன்பாக முளைப் பாலிகை சட்டிகள் வைக்கப்படும்.
குருக்கள் தன் முன்பாக புண்ணியதானத்திற்குரியவற்றை வைத்து அதன் பக்கத்தில் மஞ்சள் பிள்ளையாரும், ஒரு கிண்ணத்தில் பஞ்ச கவ்வியமும் வைத்திருப்பார். அரசாணி மரமும் அலங்கரிக்கப்பட் டிருக்கும். அதற்கு ஒரு பக்கம் பாலிகைச் சட்டியும், நடுவில் அம்மி யும், அதன் பின் சிவன், பார்வதி கும்பங்களும் மறுபக்கம் நவக்கிரக கும்பங்களும் ஆக முன்பாக அரசாணிப்பானையும் நான்கு கும்பங் களும் வைத்து கல்யாண மண்டபம் மேல் கூறியபடி நிறுவப்பட் டிருக்கும்.
மணமகன் அழைப்பு
திருமணத்தன்று மணமகனை கிழக்கு முகமாக ஓர் பலகையில் இருத்தி அவ ரின் கைகளில் வெற்றிலையைச் சுருட்டி அதற்குள் சில்லைக் காசுகள் வைத்துக் கொடுக்கவேண்டும். அவருக்கு முன்னா ல் நிறைகுடம், குத்துவிளக்கு, தாம்பூலம் வைக்கவேண்டும். 3, 5, 7 என்ற எண்ணி க்கையில் ஆண்களும் பெண்களும் அறு கும் காசும் பாலும் கொ ண்ட கலவையை மணமகனின் தலையி ல் 3 முறை வைக்கவேண்டும். மணமகனி ன் தலையில் ஓர் வெள்ளைத் துண்டை விரித்து வைத்து அதன்மேல் பாலையி டலாம். முதல் பால் வைக்கும் போது வடக்கு முகமாயிருந்து தாய் மாமன் தேங்காய் உடைக்கவேண்டும். பால் வைத்ததும் மணமகன் போய் குளித்துவிட்டு வரவேண்டும். பெண்வீட்டாரும் இதில் கலந்து கொள்வார்கள். மணமகன் சாமி அறையில் சாமி கும்பிட்டு கற்பூரம் காட்டித் தாய் தந்தையரை விழுந்து வணங்க வேண்டும். பெண்வீட்டார் மணமகன் வீட்டிற்கு வரும்போது ஒரு தட்டில் வாழைப்பழம், ஒரு தட்டில் பலகாரம், இன்னொரு தட்டில் பூ எல்லா மாக 3 தட்டுகளுடன் வரவேண்டும். எல்லோருக்கும் விருந் தோம்பல் நடைபெறும்.
கடுக்கண் பூணல்
முன்னாளில் கடுக்கண் பூணல் என்ற சடங்கும் நடைபெற்றது இப்போது அது அருகிவிட்டது. மணமகனை கிழக்கு முக மாக அலங்கரிக்கப்பட்ட இடத்தில் இருத்தி விநாயகர் வழிபாடு செய்து தேங்காய் உடை த்து மணமகனுக்கு கடுக்கண் பூட்டு வைபவம் செய்யலாம்.
தலைப்பாகை வைத்தல்
மணமகன் கிழக்கு நோக்கி நிற்க ஒரு பெரியவரைக் கொண்டு தலை பாகை வைக்கவேண்டும். உத்தரியம் அணியவேண்டும். உத்தரி யம் இடும்போது இடந் தோளின் மேலாக வந்து வலப்பாக இடுப்பளவில் கட்டவேண்டும் (அந்தணர் பூணூல் அணிவது போல). அங்கு அவருக்குப் பூமாலை அணிவிப்பர். தோழனுக்கும் இதே போல் உடை உடுத்தி தலைப்பாகையும் உத்தரியமும் இட்டு மணமகனோடு அழைத்து வருவர். தோழன் மணமகனின் இடப் பக்கமாக நிற்பார்.
மணமகன் புறப்படுதல்
வீட்டைவிட்டுப் புறப்படும் முன் வாச லில் இரு சுமங்கலிப் பெண் கள் ஆரத்தி எடுப்பார்கள். மாப்பிள்ளையோடு தோழி (மாப்பிள்ளை யின் திருமணமான பெண் தோழியானவள் திருமணச் சடங் கில் முக்கிய பங்கு வகிப்பதால் நடை முறைகளை நன்கு தெரிந்த சுங்கலிப் பெண்ணையே அமர்த்தவேண்டும்). தோ ழன் (பெண்ணின் சசோதரன் அல்லது உறவு முறையில் உள்ள ஒரு ஆண் அநேகமாகத் திருமணமாகாதவராக இருக்கவேண்டும்). அவருடன் உற்றார் உறவினர்கள் திருமண மண்டபத்திற் குச் செல்வர். செல்லும்போது தோழி கூறைத்தட்டும் வேறு இரு பெண்கள் 3 தேங்காய் வைத்த தட்டமும் 3 அல்லது 5 பலகாரங்கள் கொண்ட ஒரு தட்டமும் எல்லாமாக 3 அல்லது 5 தட்டங்கள் கொண்டு போக வேண்டும். அலங்கரிக்கப்பட் ட வாகனத்தில் செல்வர்.
பலகாரத் தட்டம்
அரியதரம், அச்சுப்பலகாரம், பயற்றம் உருண்டை, வெள் ரொட்டி, சிற்றுண்டி போன்ற வை.
தேங்காய்த் தட்டம்
3 முடியுள்ள தேங்காய்களுக்கு ச் சீவி மஞ்சள் பூசி வைக்க வே ண்டும்.
கூறைத்தட்டம்
ஒரு பெரிய தட்டில் நெல் அல்லது பச்சையரிசி பரப்பி அதன் மேல் கூறைச்சேலை, சட்டை, வெற்றிலை 5 முழுப்பாக்கு, 3 கஸ்தூரி மஞ்சள், 1 குங்குமம் (டப்பி), 1 தேசிக்காய், 1 வாழைப்பழச் சீப்பு, 1 கொண்டைமாலை, அலங்காரப் பொருட்கள் முதலிய சாதனங்கள் சீப்பு, கண்ணாடி, ப்வுடர், வாசனைத்திரவியம், சவர்க்காரம் (சோப்) முதலியன. தாலிக்கொடியோடு மெட்டி1 சோடி ஆகியன வைக்க வேண்டும்.
பெண் புறப்படுதல்
பெண் வீட்டில் பெண்ணிற்கு அதே போல் அறுகு, காசு, பால் தலை யில் வைத்து நீராட்டி (ருது சாந்தி செய்யாத பெண்ணாகில் அன்று அல்லது முந்தைய நாளில் ருது சாந்தி செய்யவேண்டும்), மணப் பெண் போல் அலங்கரித்து மண்டப த்திற்கு அழைத்துச் செல்ல வேண் டும். மணப்பெண்ணோடு ஒரு தட் டில் கோயிலில் அர்ச்சனை செய்யத் தேவையான பொருட்களை அடுக்கி எடுத்துச் செல்ல வேண்டும். மண்ட பத்தில் பெண் அவருக்கென்று கொ டுக்கப்பட்ட அறையில் இருக்கவே ண்டும்.
அர்ச்சனைக்குரிய பொருட்கள்: வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழங்கள், பூக்கள்
மாப்பிள்ளை அழைப்பு
மாப்பிள்ளை மண்டபத்திற் கு வந்தவுடன் அவரை பெண் வீட்டார் மேளதாளத்தோடு வரவேற்பர். அங்கு தோழன் மாப்பிள்ளையின் காலைக் கழுவிவிடுவார். அதற்கு உப காரமாக மாப்பிள்ளைத் தோ ழனுக்கு மோதிரம் ஒன்றை அணிவிப்பார். பின் பெண் ணின் தகப்பன், மாப்பிள்ளை க்கு மாலை சூடி வரவேற்பார். இரு சுமங்கலிப் பெண்கள் ஆரத்தி எடுப்பர். பின் தோழன், மாப்பிள்ளையின் கைகோர்த்து அவரை வலமாக மணவறைக்கு அழைத்துச் செல்வார் (கும்பத்திற்கு வலது பக்கம்).
மணமகன் மணவறைக்கு வந்தவு டன் தொடங்கும் திருமணச் சட ங்கு புரோகிதரின் தலைமையில் நடை பெறும்.
கிழக்கு நோக்கியிருக்கும் மணவறை யில் தோழன் மணமகனுக்கு இட ப்பக்கத்தில் அமருவார். மணவறை யில் நெல் பரவி அதன் மேல் கம் பளம் விரித்து மணமகனை இருத்து வதுதான் மரபு. கிரி யை செய்யும் குருக்கள் மணவறையின் வலது பக்கத்தில் வடக்கு நோக்கியிருப்பார். மணமகனுக்கு திருநீறு கொடுத்து பவித்திரம் கொடுத்து வலக்கை மோதிரவிரலில் விநாயகர் பூஜை பஞ்ச கௌவிய பூஜை ஆகிய வற்றை மந்திர உச்சாடனத்துடன் செய்வர்.
பவித்திரம் வலது கை மோதிர விரலில் அணியவேண்டும். இந்தச் சடங்கு முடியும் வரை ஒரு குற்றமும் வராமலிருக்கவும் மனம், வாக்கு, காயங்களினால் வர த்தக்க பாவங்களினின்று காக்கவும் பவித்திரம் அணி யப்படுகின்றது. பஞ்சகௌவி யத்தை அவ்விடத்தில் சுற்றி த் தெளிந்து அதனைப் பரு கும்படி மணமகனின் அக மும் புறமும் சுத்தியடையும் என்பதாலும் இவை செய்ய ப்படுகின்றன. இதனை புண் ணியாகவாசனம் என்பர்.
அரசாணிக்கல்
முற்காலத்தில் திருமண வைபவங்களுக்கு அரசனுக்கும் அழைப் பிதழ் அனுப்புவார்கள். அரசனுக்கும் எல்லாத் திருமணங்களுக்கும் செல்ல முடியாத நிலை இருக்கும். எனவே அவர் தனது ஆணை க்கோலை அனுப்பி வைப்பார். அரசு ஆணைக்கோல் மருவி அரசாணைக்கால் ஆகிவிட்டது. இன்று பதிவுத் திருமணம் போல் அன்று ஆணைக்கோல் வந்துவிட்டால் அரசனால் அங்கீகரிக்கப் பட்டது. ஆகவே அத்திருமணம் அங்கீகாரம் பெற்றுவிடுகிறது. இதுவே இன்று திருமணப் பந்தலில் கலியாண முருங்கை மரக் கிளை ஒன்றை வைத்து அதற்கு பட்டுச்சாத்தி அலங்கரித்து வைப் பர்.
அங்குரார்ப்பணம்
வித்திடுதல் என்று அர்த்தம். அதாவது முளைக்கும் விதைகளை பாலிகையிடல் என்பது. சந்திர கும்பத்தை பூசித்து அதற்கு முன் பாக இருக்கும் மண் சட்டி யில் 3 அல்லது 5 சும ங்கலிப் பெண்களை கொண்டு நவதானியம் இட்டு தண்ணீர் தெளித்து புஷ்பம் சாத்தி பூசைகள் செய்வது. இதன் அர்த்தம் நவதானியம் செழித்து வளர் வது போல இத் தம்பதிகளின் வாழ்வும் செழுப்புடையதாக அமைய வேண்டும் என்பதற்காக இப்பூஜை செய்யப்படுகின்றது. அப்பெண் களுக்கு வெற்றிலையில் பழம், பூ வைத்து உபசாரம் செய்தனுப் புவார்கள். அதன்பின் கற்பூரம் காட்டப்படும். (முன்பே பாலிகை போட்டிருந்தால் தண்ணீர் மட்டும் தெளித்தால் போதுமானது)
இரட்சாபந்தனம் (காப்புக்கட்டல்)
காப்புக்கட்டல் தொடங்கிய கருமம் நிறைபெறும் வரை எந்தவித தீட்டுக்களோ இடையூறுகளோ துக்கங்க ளோ மணமக்களைச் சாரா திருக்க வேண் டிய பாதுகாப்புக் கருதி செய்யப்படுவது. (கால மிருத்து அவமிருத்து போன்ற அபாயங்களில் இருந்து காப்பாற்ற வும்). சர்வரோகம் அணுகாமலும், பீடை, பிணி அணுகாமலும் இருக்கவேண்டி விவாகச் சடங்குகள் இனிதே நடைபெறவும் கட்டப் படுவது நூல் காப்புக் கட்டுதல் ஆகும்.
இதற்கு ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் காப்பு நூல் முதலியவற்றை வைத்து பூசித்து மாப்பிள் ளையின் வலது மணிக்கூட்டில் காப்புக் கட்டுவார்கள் காப்புக் கட்டும்போது மாப்பிள்ளை வீட்டார் ஒரு தேங்காய் உடைப்பார்கள். பின்னர் குருக்கள் சிவன், பார்வதி பூசை முதலியவற்றை மந்திர உச்சாடனத்துடன் செய்வர் (பின்னர் அக்கினி மூட்டப்பட்டு அதற்குரிய பூசை வழிபாடுகள் நடைபெறும்) முகூர்த்தோஷம், லக்கினதோஷம் போன்ற் தோஷங்கள் நீக்கும் பொருட்டும் இத் திருமணத்தின் போது நல்ல ருள் புரியவேண்டுமென நவக்கிரக தேவர்களு க்காக அமைக்கப்பட்டுள்ள கும்பங்களிற்கும் பூஜை செய்வார்கள். அதன்பின் அரசாணி மரத் திற்கும் அதன் நாலு பக்கங்களி லும் உள்ள கும்பங்களிற்கும் பூஜை செய் வர்.
மணமகளை அழைத்தல்
மணமகளை (பட்டாடை அணிந்து, அணி கலன் கள் பூண்டு முகத் தை மெல்லிய திரை யால் மறைத்த வண்ணம்) தோழிகள், மண மகளின் பெற்றோர் மற்றும் உறவினர் புடைசூழ மணமேடைக்கு அழைத்து வருவர். மண மக னுக்கு வலப்பக்கத்தில் பெண்ணை அமரச்செய்வர். மண மகனி ற்குச் செய்யப்பட்ட அத்தனை பூசைக ளும் இவருக்கும் செய்யப் படும். பவித்திரம் இடது கைமோதிர விரலில் அணிவித்து ரட்சா பந்தனம் இடக்கை மணிக் கட்டில் கட்ட ப்படும். பெண் வீட்டார் ஒருவர் தேங்காய் உடைப்பார். பின் னர் இரு வரின் பெற்றோர் களை அழைத்து மணமகளின் பெற் றோர்கள் பெண்ணின் வலப் பக்கத்திலும் மண மகனின் பெற்றோர் மண மகனின் வலப்பக்கத்திலும் கிழக்கு நோக்கி அமர்வர். இவர்களும் குருக்கள், பவித்திரம், விபூதி கொடு த்து சங்கல்பம் செய்வித்து இரு வழியிலும் பிதுர்தோஷம் நீங்க வும் இரண்டு (நாந்தி தானம்) கொடுத்து பிதிரரின் ஆசியைப் பெறச்செய்வர். பின் கன்னிகா தானக் கிரியைகளை ஆரம்பிப்பார்.
கன்னிகாதானம்
மணமகளை அவரின் பெற்றோர் தாரைவார்த்துக் கொடுப்பதை கன்னிகாதானம் என்பர். மண மக்களின் பெற்றோர் இரு பகுதியின ரும் சங்கற்பம் செய்து பெண்ணின் பெற் றோர் மணமகனின் பெற் றோர்க்கும் மணமகனின் பெற் றோர் பெண்ணின் பெ ற்றோருக்கும் திலகமிட்டு பன்னீர் தெளித்து மரியாதை செய்வர். பின் பெண்ணின் வலக்கரத்தில் வெற்றிலை, பாக்கு, பழம், எலுமிச்சம்பழம், தங்கக் காசு அல்லது நடைமுறை நாணயம் ஒன்றை கையில் கொடுத்து பெண்ணின் தந்தை இடது கை கீழாகவும் வலது கை மேலாகவும் சேர்த்துப் பிடித்து குருக்கள் மணமகளின் மூன்று தலை முறைப் பெயர்களையும் மணமக்களின் பெயர்களையு ம் உரிய மந்திரத்துடன் 3 முறைகள் சொல்லி இரு வம்சம் தழைக்கவும், அறம், பொருள், இன்பம் வீடு ஆகிய 4 பயன்களையும் பெற வே ண்டியும் கன்னிகாதானம் செய்து தருகின்றேன். எல்லாவித செல்வமும் பெற்று எனது மக ளைக் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டிக் கொள்வார். மணமக னின் சம்மதம் பெற்றவுடன் மணமகளின் தாயார் நீர் விட்டு தாரை வார்க்க தந்தையார் மணமகளின் கரங்களில் ஒப்படைப்பார். அப் போது மங்கள் வாத்தியம் முழங்க, பெண்வீட்டார் ஒருவர் தேங் காய், உடைக்க, மணமகன் பெண்ணை தானம் எடுப்பார். தொடர்ந் து மணமகன் கொண்டுவந்த தாலியோடுகூடிய கூறைத் தட்டத்தை விதிப்படி பூசித்து, ஆசீர்வதித்து அக்கினியாற் சுத்தி செய்த பின் அச்சபையிலுள்ள பெரியோர்களிடம் காட்டி நல்லாசி பெறப்ப டும். பின் மணமகன் மணமகளிடம் கூறையைக் கொடுப்பார். மண மகளும் தோழியுடன் சென்று கூறை உடுத்தி மீண்டும் மணவறை க்கு அழைத்து வரப்படுவார். இதற்கிடையில் குருக்கள் மாங்கல்ய த்தை எடுத்து சுத்தி செய்து மந்திரம் சொல்லி, சந்தனம், குங்குமம் சாத்தி தீபம் காட்டி சம்பாதஹோமம் செய்து பூசை செய்வார். (சம்பாதஹோமம் – சிருவத்தில் நெய் எடுத்து ஆகுதி செய்து மிகுதி நெய்யைத் தாலியில் விடுதல்) மண வறையைச் சுற்றி நிற்பவர்களுக்கு அட்சதை மலர்கள் கொடுக்கப் படும்.
தாலி கட்டுதல்
கூறை உடுத்தி வந்த மணமகள் மீண்டும் மணமகனின் வலப் புறத் தில் கிழக்கு நோக்கி அமர்வார். குறித்த சுபமுகூர்த்ததில் மண மகன் எழுந்து மணமகளின் வல ப்புறம் சென்று வடக்கு நோக்கி நின்று இறைவனைத் தியானித்து குருக்கள் ஆசிர்வதிதுக் கொடுக் கும் மாங்கல்யத்தை இரு கரங்க ளால் பற்றி கெட்டிமேளம் முழ ங்க, வேதியர் வேதம் ஓத, மாப்பிள்ளை வீட்டார் ஒருவர் தேங்காய் உடைக்க, பெரியோர் அட்சதை மலர்கள் தூவ, ஒரு பெண் பின்னால் தீபம் பிடிக்க மணமகன் மேற்கு திசை நோக்கி திரும்பிப் பெண் ணின் கழுத்தில் திருமாங்கல்யம் பூட்டுவார். அப்போது சொல்லப் படும் மந்திரம்
“மாங்கல்யம் தந்துநாநேந மம ஜீவனஹேதுநா கண்டே பத்தாமி ஸூபகே ஸஞ்ஜிவச ரதசதம்”
‘ஓம்! பாக்கியவதியே’ யான் சீர ஞ்சீவியாக இருப்பதற்கு காரண மாக மாங்கல்யத்தை உன் கழு த்தில் கட்டுகிறேன். நீயும் நூறாண்டு வாழ்வாயாக என்று குருக்கள் கூறும் மந்திரத்தை மனதில் கொண் டு தாலி முடிச்சில் திருநீறு இட்டு தனது இடத்தில் இருக்க வேண் டும். மணமகளின் உச்சந் தலையில் குங்குமத்தில் திலகமிட வே ண்டும்.
தாலி – தாலியில் சிவலிங்கம், விநாயகர் அல்லது லட்சுமியின் திருவுருவம் அமைத்தல் நல்லது. கொடியும், தாலியும் அதன ருகில் கோத்திருக்கும் இரு தங்க நாணயங்கள் சேர்த்து (9, 11, ….) என்ற ஒற்றை எண் வரக்கூடிய அளவு பவுணில் செய்யவேண்டும். தாலிக்கொடியில் சேர்க்கப்படும் தங்கநாணயம் ஆங்கில நாண யமாக இருக்கவேண்டும் என்ற நியதியில்லை. அந்த நாணயத்தில் கடவுளின் உருவங்களுக்கு விருப்பத்திற்கேற்ப அமைக்கலாம்.
மாலை மாற்றுதல்
மணமகள் எழுந்து வடக்கு நோ க்கி இறைவனை தியானித்து மண மகள் கழுத்தில் மாலை சூட் டுவாள். மணமகள் மண மகளை த் தன் இடப்பக்கத்தில் அமரச் செய்து மாலை சூட்டுவாள். மாலை மாற்று தலின் பொருள் இருமனம் கலந்து ஒரு மனமாகி இல்வாழ்க் கையை ஆரம்பித்தல். மூன்று முறை மாலை மாற்ற வேண்டும்.
தொடர்ந்து கொண்டு வந்த மங்கலப் பொருட்களாகிய மஞ்சள், குங்குமம், பூ, வாசனைப் பொருட்கள், சீப்பு, கண்ணாடி முதலிய வற்றை மணமகன் மணமகளிடம் கொடுப்பார். கணவன் மனைவி யாக ஆனபின் தம் மங்கலக் கோலத்தை இருவரும் கண்ணாடியில் பார்த்து மகிழ்வார்கள்.
பால்பழம் கொடுத்தல்
பால், வாழைப்பழம் கலந்து மணமகள் முதலில் மண மகனுக்கு மூன்று முறை கொடுப்பார். பின் மணமகன் மணமகளுக்கு மூன்று முறை கொடுப்பார். நாயகன் நாயகி உணவு கொள்ளல் மறை வில் செய்யவேண்டும் என்ப தால் திரை ஒன்று முன்னால் பிடிக்கப்படும். முதன் முத லில் தம்பதிகளுக்குக் கொடுக்கும் இனிப்புப் பதார்த்த மாகையால் வாழ்க்கை இனிமையாக இருக்கவேண்டும் என்று உணர்த்தவே இச் சடங்கு.
கோதரிசனம்
இல்லறவாழ்வு தொடங்கும் தம்பதியர் வாழ்விற்கு வேண்டிய அட்ட ஐஸ்வரியங்களையும் வேண்டி பசுவை இலட்சுமிதேவியாக வணங்குவர். பசுவைக் கிழக்கு முகமாக நிறுத்திச் சந்தனம், குங்குமம், புஷ்பம் சாத்தித் தீபாராதனை செய்து வணங்குவர் பசுவின் உடலெங்கும் உறைகின்ற சகல தேவர்கள், முனிவர்கள், தெய்வங்கள் ஆசிர்வாதமும் இதன் மூலம் கிடைக்கும். அரிசி, காய்கறி, தட்சிணை வைத்துத் தானமும் வழங்கவேண்டும்.
பாணிக்கரம் (கைப்பிடித்தல்)
தருமம் செய்வதற்காகவும் சந்ததி விருத்திக்காகவும் திருமணம் செய்யப் படுகின்றது. பாணிக்கிரகணம் என்றால் மணமகளின் கையை மணமகன் பிடி ப்பது என்று பொருள். ‘நீயும் நானும் முதுமையடைந்து விட்டாலும் கூட ஒருவரை ஒருவர் பிரியா திருப்போம் என்று கையைப் பிடிக்கிறேன்’ என்று கூறி மண மகளின் கையைப் பிடிக்கவேண்டும். ஆணின் வலக்கை பெண் ணின் வலக்கையைப் பிடித்தல் வேண்டும். பின்னர் ஏழடி எடுத்து வைத்து அம்மி மிதித்து அக்கினியை வலம் வருவார்கள். வலம் வரும்போது தோழனும் தோழியும் சேர்ந்து வருவார்கள். பஞ்ச பூதங்களின் சாட்சியாக கையைப் பிடிப்பதாக ஒருகருத்து. மண ப்பெண்ணால் ஐம்புலன் களால் செய்ய ப்படும் செயல்கள் கணவனுக்கு மட்டு மே உரியவை. கன்னியின் கையை வரன் கிரகிப்பது என்று பொருள்.
ஏழடி நடத்தல்
பெண்ணின் வல காலை மணமகள் கை களாற் பிடித்து ஏழடி எடுத்து வைக்கும் படி செய்யவேண்டும். ஒவ்வொரு அடி க்கும் ஒவ்வொரு மந்திரம் சொல்ல ப்படும்.
உனக்கும் வாழ்க்கையில் உணவு குறை வில் அளிப்பதற்கு இறைவன் உன்னைப் பின் தொடர்ந்து வரட்டும்.
உடல் வலிமை கிடைக்க இறைவன் பின் தொடரட்டும்
விரத்தை அனுஷ்டிக்கும் பொருட்டு உன்னை இறைவன் பின் தொடர்ந்து வரட்டும்.
சுகமும் மனச்சாந்தியும் கிடை க்க இறைவன் உன்னைப் பின் தொடரட்டும்
பசுக்கள் தூயலான பிராணிகள் பின் தொடர்ந்து வரட்டும்.
சகல சௌபாக்கியங்களும் கிடைக்க பின் தொடர்ந்து வரட்டும்.
உடன் வாழ்வில் இடம்பெறும் சுபகாரியங்கள், ஹோமங்கள் குறை வின்றி நிறைவேற்ற இறைவன் உன்னை பின் தொடர்ந்து வரட் டும். ஏழடிகள் நடந்த நாமிருவர்கள் சினேகிதரானோம். இருவரும் சேர்ந்து அனுபவிப்போம். என்னுடன் கூடவா என்னும் பொருளில் இந்நிகழ்ச்சி அமையும். இதற்கு “ஸ்பத பதி” என்று பெயர்.
அம்மி மிதித்தல்
பெண்ணின் வலதுகாலை (அதாவது எட்டாவது அடி) மணமகன் கையால் தூக்கி அம்மியில் வைத்து பெருவிரலுக்கு அடுத் துள்ள விரலில் மெட்டி வைத்து அணிவிப்பார். இந்தக் கல் லைப் போல் நிலையாக நின்று உன் எதிரிகளைச் சகித்துக் கொள். இது பெண் ணிற்கு கற் பையும் ஆணுக்கு ஒழுக்கத்தை யும் புகட்டுகின்றது. கல் எப்படி எதையும் தாங்குமோ அது போல் வாழ்கையிலும் இன்ப துன்பங்களைக் கண்டு கலங்காமல் உறுதியான கொள்கைகளைக் கடைப்பிடித்து நடக்கவேண்டும் என்று உணர்த்துகிறது.
தொடர்ந்து அக்கினியை வலம் வந்து ஓம குண்டத்தில் நெற் பொரியும் ஓமப்பொருட்களையும் இடுவார்கள். திரும்பவும் இரண் டாம் முறை அக்கினியை வலம் வரும்போது இடக்காலை அம்மி யில் வைத்து மெட்டி அனுவிக்கப்படும். திருமணமான பெண் அவ ளைப் பார்க்கும் இன்னொரு ஆடவன் அவள் திருமணமா னவள் என்பதை உணர்த்த மெட்டி அணிவிக்கப்படுகின்றது.
கணையாழி எடுத்தல்
மூன்றாம் முறை அக்கினியை வலம் வரும்போது கிழக்குப் பக்கத் தில் வைத்திருக்கும் மஞ்சள் நீர் நிறைந்த பாத்திரத்தில் இருக்கும் தேடி எடுக்கவேண்டும். இது மூன்று முறைகள் நடைபெறும். இருவரும் ஒருவருக்குகொருவர் விட்டுக் கொடுத்து எடுத்தல் வேண்டும். இது தம் வாழ்க்கையிலும் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகிறது.
அருந்ததி பார்த்தல்
மூன்றாம் சுற்றில் அருந்ததி பார்த்தல் நடைபெறும். இரு வரையும் கூட்டிக் கொ ண்டு மண்டபத்தின் வடக்கு வாசலக்கு வந்து வானத்தில் இருக்கும் நடத்திரங்களுக்குப் பூஜை செய்து அருந்ததியைக் காண்பிப்பார்.
“நிரந்தரக் கற்பு நடசத்திரமாக மின்னுவேன்” என்று ஆணையிடுவ தாகும். சப்தரிசிகள் கிருத்திகை எனப்பெயர் கொண்ட தங்கள் மனைவிக்குள்ளே முதலானவளான அருந்தியை எப்படி நிலைத் திருக்கச் செய்ய செய்தார்களோ அப்படி மற்ற ஆறு கிருத்திகைக ளும் அருந்ததியைப் போலிருக்கச் செய்கின்றன ர். இந்த அருந்ததியை தரிசனம் செய்தால் என்னு டைய மனைவி எட்டாளவாக வளர்ச்சி பெறட்டும் என்பதேயாகும். இந்த நட்சத்திரத்தைக் காட்டுவ து நல் வாழ்க்கையும் வழத்தையும் பெறுவதற்கே யாகும்.
அருந்ததி வசிட்டரின் மனைவி. சிறந்த பதிவிரதை. வானத்தில் துருவ மண்டலத்திற்கு அருகில் ஏழு நட்சத்திரங்களிற்கிடையில் வசிட்ட நட்சத்திரமும் அதன் அருகில் அருந்ததி இருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.
அருந்ததியோடு சேர்த்து துருவ நடத்திரத்தையும் காட்டுவாள். துருவ நட்சத்திரம் விண்ணில் ஒரு நிலையான இருப்பிடத்தை உடையவராகவும் மற்ற விண்மீன்கள் நிலைத்திருப்பதற்குக் காரண மாகவும் கட்டுத்தறியாகவும் இருப்பதால் எங்களை எதிரிகளிடமி ருந்து காப்பற்றுவீராக என்று தரிசிப்பதாகும். இவர்கள் எம்வாழ்க் கையில் ஒரு வழிகாட்டியாக அமைகிறார்கள். துணைவனைப்போ ல் மணமகனுக்கு ஸ்திரத்தன்மையும் அருந்ததியைப் போல் மண மகளுக்குப் பதிவிரதத்தன்மையும் இருத்தல் வேண் டும்.
பொரியிடல்
அக்கினியை மூன்று முறை வலம் வர வேண்டும். ஒவ்வொரு முறையும் வலம் வந்து மணமக்கள் கிழக்கு நொக்கி நிற்கத் தோழன் நெற்பொரியை குருக்களிடம் இருந்து பெற்று மண மகனின் கையில் கொடுக்க மணமகன் மணமகளின் கையி ல் கொடுத்து மணமகனின் கைகளை தன் கைகளால் தாங்கி ஓம் குண்டத்தில் இடு வார்கள். “அக்கினி பகவானே சகல் செல் வங்க ளையும் எமக்குத் தந்தருள வேண் டும்.”. என வேண்டிக் கொண்டு பொரியிடு தல் வேண்டும். நெல் பொரியாக மலர் வது போல் நம் வாழ்வு மலரவேண்டும் என்பதே தத்துவம்.
மூன்றாம் முறை சுற்றி வந்தவுடன் பூர்ணாகுதிற்குரிய பொருட் களை தட்டத்தில் வைத்து குருக்கள் மணமக்களுக்குக் கொடுக்க இருவரும் சேர்ந்து குண்டத்தில் சொரித்தல் வேண்டும்.
அக்கினி பகவானிடம் செர்க்கும் சகல் திரவியங்களும் அக்கினி பகவான் அந்ஹ்ட அந்தக் தெய்வங்களிடம் ஒப்படைத்து விடு வார்கள் என்பதை வேதங்கள் கூறுகின்றன. ஆகவே அக்கினி யில் ஆவாகனம் செய்யப்பட்ட மூர்திகளுக்கு செய்யும் சடங்கு குறை வின்றி செய்து அவர் களுக்குப் பரிபூரண பலன் வே ண்டி அனுப்ப வேண்டும் என்று பிராத்தித்து செய்வதே ஓமம்.
அதன் பின் தீபாரத்னை செய்து ஓமத்தில் இருந்து விடுவிக்கப் பட்ட ரட்சயை (கரிப்பட்டு) மணமக்களுக்கு திலகமிட்டு விபூதி சந்தனம் கொடுத்து ஆசி வழங்குவார் குருக்கள்.
ஆசிர்வாதம்
மணமக்களை கிழக்கு முகமாக நிற்க வைத்தக் குருக்கள் பிராத் தனன செய்து மந்திரத்துடன் ஆசீர்வாதம் சொல்லி மண மக்களு க்கு ஆசிர்வாதம்வாதம் சொல்லி மணமக்களுக்கு சிரசில் அட்சதை யிட்டு ஆசீர்வதிப்பர். தொடர்ந்து மணமகளின் பெற்றோர் சபையி ல் ஆசிர்வதிப்பர்.
அட்சதை
முனை முறியாத பச்சையரிசி, அறுகம்புல், மஞ்சள்மா கலந்த கலவையே அறுகரிசி என்று சொ ல்வார்கள். பெரியோர் இரண்டு கைகளாலும் அறுகரிசி எடுத்து “ஆல்போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி மூங்கில்போ ல் சுற்றம் முழுமை யாய்ச் சூழ ப்பதினாறு பேறு பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க” என வாழ்த்தி உச்சியில் 3 முறை இடவேண் டும்
நிறைவு
மணமக்களின் கைகளில் கட்ட ப்பட்ட காப்புக்களை அவிழ்த்து பவித்திரங்களை கழற்றி அவற்றுடன் பெற்றோரின் பவித்திரங்க ளையும் வெற்றிலையில் வைத்து குருக்களின் தட்சணையும் சேர்த்து குருக்களிடம் கொடுக்கவேண்டும்.
ஆரத்தி
இரு தரப்பிலும் இருந்து ஒரு பெண்ணாக இரு சுமங்கலிப் பெண்கள் ஆரத்தி எடுப்பார்க ள். தம்பதிகளுக்கு தீய சக்தியி னால் தீமை ஏற்படாமலும் கண் திருஷ்டி நீங்கும் பொரு ட்டும் இவை செய்யப்படுகின் றன.
விருந்துபசாரமும் நடைபெறும். மணமக்கள் இருவரும் அர்ச னைத் தட்டோடு ஆலயம் சென்று வணங்கி அர்ச்சனை செய்து மண மகன் இல்லம் செல்வர். அங்கு வாசலில் ஆரத்தி எடுத்து வல்து காலை முதலில் வைத்து வீட்டுக்குள் செல்வர். முதலில் பூசை அறைக்குள் சென்று வணங்கிப் பின் பால் அருந்தக் கொடுப் பார்கள்.
பூதாக்கலம்
மணமக்கள் ஒரே இலையில் மணமகள் உணவு பரிமாறி மண மகனுக்கு முதலில் தன்கையா ல் உணவூட்டிய பின் மணமகன் மண மகளுக்கு உணவூட்ட வேண்டும்.
பின் மணமகன் மணமகளைத் தன் வீட்டுக்கு அழைத்து செல்வார். அங்கும் ஆரத்தி எடுத்து உள்செல்வார். வலது கால் எடுத்து உட் சென்று பூசை அறை சென்று வணங்கி பெற்றோர் காலி லும் விழுந்து வணங்குவர்.
சில தத்துவங்கள்
தாலி கட்டிய பின் மணமகள் மணமகளின் உசந்தலையில் குங்கும த்தால் திலகமிடுவார். இது அவள் தன் கணவனுக்கே உரியவள் என் பதை எடுத்துக்காட்டவே. அத்தோடு அவ்விடத்தில் தான் மகா லட்சுமி வாசம் செய்கின்றாள்.
மாங்கல்யம் சூட்டும்போது கெட்டி மேளம் கொட்டுவது சபையில் உள் ளோர் யாராவது தும்முதல், அபச குன வார்த்தைகள் பேசுதல் போன்ற வை மணமக்களிற்குக் கேட்கக் கூடாது என்பதற்காகவே.
மஞ்சள் கயிற்றில் தாலி கட்டும் போது மூன்று முடிச்சுப் போடுவார் கள். இதற்கு ஒரு விளக்கம்.
முதலாவது முடிச்சு – கணவனுக்குக் கட்டுப்பட்டவள் அல்லது பிறந்த வீட்டிற்கு
இரண்டாவது முடிச்சு – தாய் தந்தைய ருக்குக் கட்டுப்பட்டவள் அல்லது புகுந்த வீட்டிற்கு.
மூன்றாம் முடிச்சு – தெய்வத்திற்குப் பயந்தவள்
தாலி கட்டும்போது தூவப்படும் அட்ச தை மணமக்கள் தீய சக்தி களிடம் இரு ந்து காப்பதற்கும் வளமான வாழ்க்கை அமைவதற்கும் ஆசீர்வதிப்பதாகும். தாலி கட்டும்போது கைவிள க்கு ஏந்தி நிற்பது ஏனென்றால் தாலி கட்டியதற்கு விளக்கு ஏந்திய வர் ஒரு சான்றா வார். இன்னொரு விளக்கம் சகுனத் தடைகள் ஏற்படாமலிருக்க.
திருமணத்தின் போது மணப்பெண் முகத்திரை அணிவது ஏன்?
முக்காலத்தில் மணமகள் தாலி கழுத்தில் ஏறும் வரை மண மக னைப் பார்ப்பதில்லை. ஆகவே முகத்திரை அணிந்து மணவறை க்கு அழைத்து வந்தார்கள். அத்தோடு கண் திருஷ் டிக்கும் விமர்சனங்களில் இருந்து விடுவிப்பது ம் ஒரு காரணமாகும். தாலி ஏறியதும் முகத்திரையை அகற்றி நான் இப்போது “இவரின் மனைவியாகி விட்டேன்” என்று சபை யோரிற்கு தன் முகத்தைக் காட்டுகி றாள்.
அட்சதை
அட்சதை என்றால் குத்துப் படாததும், பழுதற்றதும் என் று பொருள்படும். பழுதுபடாத பச்சைஅரிசியைப் போல் வா ழ்க்கையும் பழுது படாமல் இருக்கவேண்டும் என்பதற் காகவே ஆசி வழங்கும்போ து பெரியவர்கள் அதைத் தெளிக்கிறார்கள். (நுனி முறி யாத முழு அரிசியாக இருக் கவேண்டும்).
நெல்லில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட முளையுள்ள அரிசியுடன் மஞ்சள்மா, பன்னீர், மலர் இதழ்கள் ஆகியவை கலந்து அட்சதை தூவுவதே முறையாகும்.
ஆரத்தி
ஒரு தட்டில் 3 வாழைப்பழத் துண்டுகள் வைத்து அதன் நடுவே திரி யைச் செருகவேண்டும். இலகுமுறை ஒரு நெருப் புக் குச்சியில் பச்சைசுற்றி நெய்யில் தோய்த்த வாழைபழத்தின் நடுவே குத்து வதாகும்.
ஆரத்தி எடுக்கும் போது யாருக்கு திருஷ்டி கழிக் கின்றோமோ அவரை நிற்க வைத்து (கிழக்கு முக மாக அல்லது வடக்கு பார்க்க நிற்கவேண்டும்). அவரை இறை வனாக நினைத்து இறைவனுக்கு எப்படிக் கற்பூரம் காட்டுகிறோ மோ அதேபோல் ஆரத்தித் தட்டைச்  சுற்றவேண்டும் (வலம் சுழி யாக).
மணமக்களுக்கு எடுக்கும்போது மண மகன் பக்கத்தில் மேலெழும் பி மணமகளின் பக்கத்தில் கீழிறங்க வேண்டும். கீழே 3 முறை செய்ய வேண்டும். கீழே 3 தரம் ஆட்டி பின் மேலெழும்பிச் சுற்ற வேண்டும்.
திருமணத்தில் அறுகரிசி இடும் முறை
இந்துசமய விளக்கப்படி அறுகரிசி யை (அட்சதை) பெரியோர்கள் இரு கைகளாலும் எடுத்து மண மக்களின் சிரசில் தூவிப்பின் இரு தோழ்களிலும் இடுப்பு, முழந் தாள் என்று மேலிருந்து கீழே வர வாழ்த்த வேண்டும். (3 முறை அல் லது சிரசில் மட்டும் 3 முறை 3 தூவி ஆசிர்வதிக்கலாம்).
நாங்கள் மணமக்களைத் தெய்வமாகக் கருதுவதால் தெய்வத்திற்குப் பாதத்திலி ருந்து சிரசிற்குச் செல்ல வே ண்டும். என்று சொல்வார்க ள். மணமக்களை மானிடரா கக் கருதினால் சிரசில் இருந் து பாதத்திற்கு வர வேண்டு ம் என்று சொல்வார்கள். இவ் விரண்டு விதமான வருண ணைகளையும் இலக்கியங்களிற் காணலாம். பதாதி கேசமா? கேசா தி பாதமா? இவை வர்ணணைகளே அன்றி அட்சதை தூவுவதற் கல்ல. தெய்வத்திற்கு நாம் செய்வது பாத பூஜை பூச் சொரிவது அல்ல. அத்தோடு மணமக்களை பெரியோர்களே அட்சதை தூவி ஆசிர்வதிப்பார்கள். ஆகவே சிரசில் இருந்து தான் வர வேண்டும். மீனாட்சி சுந்தரேசர் கல்யாணத்தில் தேவர்கள் வானிலி ருந்து மலர் தூவி ஆசிர்வதித்து வாழ்த்தியதாகப் புராணம் சொல் கின்றது. ஆக வே அரிசி மேலிருந்து கீழே வருவதுதான் சாலப் பொருத்தம்.