Monday 2 April 2012

பாலியல் தொல்லை பெண்களுக்கு மட்டுமா?? இல்லை ஆண்களுக்கும் தான்..!!

Posted On April 02,2012,By Muthukumar


பாலியல் தொல்லை என்றாலே பெண்களு க்கு மட்டும்தான் இருக்கிறதா? ஆண்களு க்கு இல்லையா?குடும்ப வன்முறை சட்டம் இயற்றப்பட்ட போதே ஆண்கள் மத்தியில் சலசலப்பு எழுந்தது. திருத்த வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது. தற்போது பணியிடங்களில் பாலியல் தொல்லையி லிருந்து பெண்களைப் பாதுகாக்க சட்டம் இருக்கிறது.பணியிடங்களில் பாலியல் தொல் லை ஆண்களுக்கு இல்லையா? என்ற பதிவு. நண்பர் ஒருவரின் அனுபவத்தைமிகவும் கவனமாக பரிசீலித்து வெளி யிட்டுள்ள‍து ஒரு இணையம்.அவருடைய பேட்டியும் தந்திருக்கிறது.யாரும் பேசாத பொருள் என்பதால் கவனம் பெற்றது.

பணியிடங்களில் பாலியல் தொல்லைக்கு எதிராக பெண்களை பாதுகாக்கும் சட்டம் இருக்கிறது. இந்த சட்ட‍த்தில் ஆண்களுக்கு நேரும் தொந்த ரவுகளையும் சேர்ப்பது அவசியமா? பாராளுமன்ற குழு அப்படித் தான் சொல்லி விட்டது. ஆண்களுக்கு நேரும் பாலியல் தொல்லைகளையும் கணக் கெடுத்து ஆய்வு செய்யவும் சொல் கிறார்கள்.




ஆணும் பெண்ணும் சமம் தானே? சேர்க்கத்தான் வேண்டும் என்ற கருத்தே இருக்கிறது.பெண்களுக்கு நேரும் தொல்லைகளுக்கும் ஆண்க ளுக்கு நேரும் தொல்லைகளுக்கும் என்ன வித்தியாசம்?ஆண்களுக்கு நிகழ்வது அபூர்வமானது.தவிர அப் படி ஒரு பெண் தொல்லையை தந்தாலும் அது மிகவும் நுட்பமாக இருக்கும்.முந்தைய இடுகைகளில் இருந்து கீழ்கண்ட விஷயங்களை கவனித்தால் தெரியும்.

பெண் என்னதான் செய்வாள் ?

நண்பர்களை பிரித்து தனிமைப்படுத்துவது.
செல்வாக்கை குறைக்க முயற்சி செய்வது.
அதிகாரிகளிடம் பொய்யான காரணங்களை சொல்லி முறையி டுவது.
மற்ற பெண்களையும் தனக்கு ஆதரவாக மாற்றுவது.
பணியில் ஒத்துழைக்க மறுப்பது
நண்பர்களை விட்டே பின்தொடர்வது.
தொடர்ந்து இமேஜை கெடுக்கும் விதத்தில் அவதூறு பரப்புவது.
செயலையும்,நோக்கங்களையும் முடக்க நினைப்பது.

இப்படி இருந்தால் ஆண்களுக்கு பாலியல் தொல்லை என்று சேர்ப்பது கஷ்டம். ஆண் ஒருவனால் தனக்கு பாலியல் தொல்லை இருக்கிறது என்று நிரூபிக்க முடிந்தால் பெரிய விஷயம்.ஆண்களைப்போல பெண் வெளிப்படையாக தொல்லை தருவது வாய்ப்பில்லாத ஒன்று.மற்ற ஆண்களும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.சமூகத்தின் உதவி கிடைப் பதும் கஷ்டம்.பெரிய்ய்ய இவன்?! என்பார்கள்.ரொம்ப்ப்ப்ப நல்லவரு என்று கிண்டலடிக்கவும் கூடும்.




பேருந்தில் ஒரு பெண் தன்னை இடித்துவிட்டான் என்றால் அதிகளவில்ஆண்களே அடிக்க வருவார் கள். ஆனால் ஒரு பெண் மீது ஆண் புகார் கூறினால் மற்ற பெண்களே விரும்ப மாட் டார்கள். தனிமைப்படுத்தப் பட வாய்ப்புகள் அதிகம். ஆனாலும் ஆண்களுக்கும் பொருந்துமாறு சட்டம் இருப்பதே சரியானது. நல்லவர்கள் யாரேனும் பாதிப் பிலிருந்து காத்துக் கொள்ள வும் வழியிருக்கும்.

ஏதேனும் ஒருவகையில் தொல் லைக்கு ஆளாகாத பெண் இருந்தால் அது அபூர்வம். ஆணுக்கு பெண்ணால் தொல்லை நேர்ந்தால் அது அதிசயம். இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.ஒருவரே இருந்தாலும் பாதிக்கப்பட்டால் அவருக்கு நிவாரணம் இருக்க வேண்டும். அவர் ஆணாக இருந்தால் என்ன? பெண்ணாக இருந்தால் என்ன?

No comments:

Post a Comment