Sunday 31 May 2015

நம்பர் ஒன் விஷயத்தை தள்ளிப் போடாதீர்கள்! By vayal on 31/01/2015 ஷாப்பிங், சினிமா, கோயில், குடும்ப விழாக்கள்… என்று மணிக்கணக்கில் நீளும் நிகழ்வுகளுக்காக செல்லும்போது, சிறுநீர் கழிப்பதைத் தவிர்ப்பது, பெண்களில் பலருக்கும் வழக்கமாகவே இருக்கிறது. ‘பாத்ரூம் சரியில்லை…’, ‘நேரமே இல்லை…’, ‘பாத்ரூமே இல்லை… ரோட்டுலயா போகமுடியும்?’ என்பது போன்ற கேள்விகளைத் தங்கள் தரப்பு நியாயங்களாக எழுப்பி, தங்களை சமாதானப்படுத்திக்கொள்ளவும் இவர்கள் தவறுவதில்லை. இவர்களில் நீங்களும் ஒருவரா? "இத்தகைய போக்கு, மிகப்பெரிய ஆபத்தை நோக்கி உங்களை இழுத்துச் சென்றுவிடும்” என்று உங்களை நோக்கி எச்சரிக்கை மணி அடிக்கிறார்… சென்னை, ராமச்சந்திரா மருத்துவமனையின் சிறுநீரகத்துறை தலைமை மருத்துவப் பேராசிரியர் டாக்டர் பி.சௌந்தரராஜன். ”சிறுநீரக நோய்த் தொற்று என்பது ஆண்களைவிட பெண்களுக்கு 20 சதவிகிதம் வாய்ப்பு அதிகம். இதற்கு முக்கியக் காரணம், வெளியிடங்களுக்குச் செல்லும் போது சிறுநீரை வெளியேற்றாமல் அடக்கிக்கொள்ளும் பழக்கம்தான்!” என்று சொல்லும் டாக்டர், சிறுநீர் பிரச்னை ஏற்படுவதற்கான காரணங்கள், முக்கியமாகப் பாதிக்கப்படுபவர்கள், தவிர்ப்பதற்கான வழிகள், தினமும் குடிக்க வேண்டிய நீரின் அளவு, சிறுநீரகத் தொற்று நீக்கும் உணவு வகைகள், இன்னும் பல விழிப்பு உணர்வுத் தகவல்கள் எனத் தொடர்ந்தார். ஆரோக்கியத்தின் முதல் படி… சீரான சிறுநீர் வெளியேற்றம்! ”உடல் ஆரோக்கியத்துக்கான முக்கியமான இயக்கங்களில் ஒன்று, இயல்பாக சிறுநீர் கழிப்பது. உடம்புக்குத் தேவையான நீர் எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு, உடற்கழிவுகளுடன் வெளியேறும் மீதமுள்ள நீர்தான் சிறுநீர். தினமும் தேவையான அளவு நீர் குடிப்பதும், சிறுநீர் கழிப்பதற்கான உணர்வு ஏற்பட்டவுடன் தக்கவைக்காமல் வெளியேற்றுவதும் ஆரோக்கியத்தின் முதல் படி. வெளியேற்றாமல் தேக்கும்போது, சிறுநீர்ப் பையின் கொள்ளளவையும் மீறிய சுமையை அது தாங்க வேண்டி வரும். இதையே தொடர்ந்து செய்யும்போது, சிறுநீரகத் தொற்று ஏற்பட்டு, சிறுநீரகச் செயலிழப்பு வரை பிரச்னைகள் வரிசை கட்டும். எனவே, சிறுநீர் வந்தால் உடனடியாகக் கழிக்க வேண்டியது அவசியம். எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?! கோடை காலத்தில் ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீரும், மற்ற பருவநிலைக் காலங்களில் 2 லிட்டர் தண்ணீரும் போதுமானது. குடிநீரைத் தவிர, பால், பழச்சாறு, காய்கறி போன்றவற்றில் இருந்தும் உடலுக்குத் தேவையான நீர் கிடைத்துவிடும். அதேசமயம், தேவைக்கு அதிகமாகத் தண்ணீர் குடிப்பதும் பிரச்னையே! ஏ.சி. அறையில் இருப்பவர்கள், ஏ.சி. வாகனங்களில் தொடர்ந்து பயணிப்பவர்களுக்கு தாகம் எடுக்காமல் இருக்கலாம். என்றாலும், ஒரு நாளைக்கு குறைந்தது ஒன்று முதல் 2 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் எடுப்பதன் காரணமாக இந்த அளவை விட கூடுதலாகத் தண்ணீர் குடிப்பதில் தவறில்லை. ஆனால், தண்ணீர் குடிப்பது நல்லது என்று பிறர் சொல்வதற்காக இஷ்டம்போல குடிப்பது நல்லதல்ல. இப்படிக் குடிப்பது, சிறுநீரகத்துக்கு கூடுதல் பளு தருவதாகத்தான் அமையும். கூடவே, இதயம் பழுதானவர்கள் மருத்துவர் பரிந்துரைத்ததற்கும் அதிகமாகக் கண்டிப்பாக தண்ணீர் குடிக்கக் கூடாது. இதன் காரணமாக இதயமானது ரத்தத்தை சரிவர ‘பம்ப்’ செய்ய முடியாமல் போகும். அதேபோல, சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களும், கல்லீரல் நோயாளிகளும் அதிகமாகத் தண்ணீர் குடிக்கக் கூடாது. சிறுநீரகத்தில் கல் உள்ளவர்கள் அதிகமாகத் தண்ணீர் குடிக்கும்போது அது கற்களைக் கரைத்து வெளியேற்றும் என்பதால், அவர்களை மட்டும் மருத்துவர்கள் அதிக நீர் அருந்தச் சொல்வோம். சிறுநீர்த் தொற்று ஏற்பட காரணங்கள்! தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, சிறுநீரை அடக்குவது, சுகாதாரமற்ற கழிப்பறையைப் பயன்படுத்துவது, மரபு, சுய சுத்தமின்மை, தாம்பத்யம்… என்று பல காரணங்களால் சிறுநீர்த் தொற்று ஏற்படக்கூடும். சாதாரணமாக ‘யூரினரி இன்ஃபெக்‌ஷன்’ என்று இதைச் சொல்லி, எளிதாகக் கடப்பதுதான் வழக்கமாக இருக்கிறது. இதைக் கவனிக்காமல் விட்டால் அடுத்தடுத்து வரிசை கட்டும் பிரச்னைகளின் பட்டியல் நீளம். நீர்க்கடுப்பாக ஆரம்பித்து, அடிக்கடி சிறுநீர் வெளியேற்றும் உணர்வு, சொட்டு சொட்டாக சிறுநீர் வெளியேறுவது, சிறுநீர் வெளியேறும்போது தாங்க முடியாத வலி மற்றும் எரிச்சல், முதுகு வலி, சிறுநீரகத்தில் நோய்த் தொற்று ஏற்படுத்தும் கிருமிகள் உற்பத்தியாவது வரை கலங்கவைக்கும். கர்ப்பிணிப் பெண்கள், நீரிழிவு நோயாளிகள், முதியவர்களுக்கு சிறுநீர்த் தொற்று ஏற்பட்டால் அது சீரியஸ் பிரச்னை என்பதை உணர வேண்டும். கர்ப்பகாலத்தில் தாய் சிறுநீரகப் பிரச்னையால் பாதிக்கப்பட்டால், குழந்தைக்கும் அந்த பாதிப்பு ஏற்படலாம்… ஜாக்கிரதை! சிறுவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் என்பதால், சிறுநீர்த் தொற்று ஏற்பட்டாலும் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஆனால், 5 – 15 வயது வரை மீண்டும் மீண்டும் சிறுநீர்த் தொற்றால் பாதிக்கப்பட்டால், மருத்துவ ஆலோசனை நிச்சயம் பெற வேண்டும். குறிப்பாக, ஆண் குழந்தைகள். நீரிழிவு நோயாளிகள், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு இந்தப் பிரச்னை தீவிரமாக இருக்கும். யூரிக் ஆசிட் உள்ள உணவுப் பொருட்களான இறைச்சி, பீர், வொயின் போன்றவற்றை அதிகளவில் எடுத்துக்கொள்ளும்போது, சிறுநீர்ப் பிரச்னைக்கான வாய்ப்பை அது அதிகரிக்கும். சிறுநீர்த் தொற்றைத் தவிர்க்க! சிறுநீர் வெளியேற்றுவதற்கான உணர்வு ஏற்பட்ட பின்னும் சிறுநீரை அடக்கக் கூடாது. நன்றாகக் கை கழுவுவது மிகமிக முக்கியம். குழந்தைகளுக்கு நகம் வெட்டக் கற்றுக்கொடுக்க வேண்டும். மாதவிடாய் காலங்களில் நாளொன்றுக்கு இரண்டு எனும் வகையில் நாப்கினை சுகாதாரமாக பயன்படுத்த வேண்டும். தாம்பத்யத்துக்குப் பிறகு, பிறப்புறுப்பை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். சிறுநீர் கழிப்பதில் பிரச்னை எனில், உடனே மருத்துவரை அணுக வேண்டும். தேவையான சிகிச்சையுடன் சிறுநீர் பெருக்கி உணவு வகைகளான சுரைக்காய், முள்ளங்கி, வாழைத்தண்டு, வெள்ளரி, தர்பூசணி இவற்றை எல்லாம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, கிரேன்பெரி ஜூஸ் (cranberry juice) நல்ல பலன் தரும். உலகம் முழுக்கவே 150 வருடங்களுக்கு முன் சிறுநீரகப் பிரச்னைகளுக்கு இதுவே மருந்தாகப் பயன்பட்டிருக்கிறது”என்று விளக்கங்களைத் தந்த டாக்டர், ”சிறுநீரகங்கள்தான் நம் உடலின் துப்புரவுத் தொழிற்சாலை. நம் கழிவறையில் பிரச்னை என்றாலோ, பழுதானாலோ, வீடே என்ன கதிக்கு ஆளாகிறது? நம் உடலின் கழிவறையில் பிரச்னை என்றால், உடல் என்னவாகும் யோசித்துப் பாருங்கள்!” என்று கேட்டார். ‘இதெல்லாம் ஒரு பிரச்னையா?’ என்று நினைக்காமல், இனி ‘நம்பர் ஒன்’ பிரச்னைக்கு கொடுங்கள் நம்பர் ஒன் முக்கியத்துவம்! தினமும் எவ்வளவு தண்ணீர்? கோடை காலத்தில் 3 லிட்டர். மற்ற பருவ காலங்களில் 2 லிட்டர். ஏ.சி. அறை, ஏ.சி. வாகனங்களில் இருப்பவர்கள் 1 2 லிட்டர் (தாகம் எடுக்காவிட்டாலும்) எவ்வளவு சிறுநீர்? ஆரோக்கியமான மனிதன் 4 6 மணி நேரத்துக்கு ஒருமுறை சிறுநீர் கழிக்க வேண்டும். ஒன்றிரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை கழித்தால், அது ஃப்ரீக்வன்ஸி என்கிற வகையில் வரும். (அதேசமயம் அதிக குளிர், மழைக்காலங்கள் மற்றும் ஏ.சி. அறை, ஏ.சி. வாகனங்கள் பயன்படுத்தும்போது ஒன்றிரண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவை வருவதில் தவறில்லை). சிறுநீரக டி.பி, குடி, சிகரெட், முதுமை, சிறுநீர்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த ஃப்ரீக்வன்ஸி ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. சிலர் ஏழெட்டு மணிநேரம் கூடத் தண்ணீரே குடிக்காமல் இருப்பார்கள். இதனால், வெளியேற வேண்டிய கழிவு தேங்கி யூரினரி இன்ஃபெக்‌ஷன், எரிச்சல் ஏற்படும். அதேபோல, ஒரு நாளில் ஒன்றரை முதல் இரண்டு லிட்டர் சிறுநீர் வெளியேறுவதுதான் இயற்கை. மூன்று லிட்டருக்கும் மேல் சிறுநீர் வெளியேறினால், அது பாலியூரியா (polyuria). அதாவது, அளவுக்கு அதிகமாக சிறுநீர் வெளியேறும் நோய். பிறந்த குழந்தைக்கு ஒரு நாளில் இருநூறு மில்லி சிறுநீர் வெளியேறினாலே போதுமானது.


ஷாப்பிங், சினிமா, கோயில், குடும்ப விழாக்கள்… என்று மணிக்கணக்கில் நீளும் நிகழ்வுகளுக்காக செல்லும்போது, சிறுநீர் கழிப்பதைத் தவிர்ப்பது, பெண்களில் பலருக்கும் வழக்கமாகவே இருக்கிறது. ‘பாத்ரூம் சரியில்லை…’, ‘நேரமே இல்லை…’, ‘பாத்ரூமே இல்லை… ரோட்டுலயா போகமுடியும்?’ என்பது போன்ற கேள்விகளைத் தங்கள் தரப்பு நியாயங்களாக எழுப்பி, தங்களை சமாதானப்படுத்திக்கொள்ளவும் இவர்கள் தவறுவதில்லை. இவர்களில் நீங்களும் ஒருவரா?
"இத்தகைய போக்கு, மிகப்பெரிய ஆபத்தை நோக்கி உங்களை இழுத்துச் சென்றுவிடும்” என்று உங்களை நோக்கி எச்சரிக்கை மணி அடிக்கிறார்… சென்னை, ராமச்சந்திரா மருத்துவமனையின் சிறுநீரகத்துறை தலைமை மருத்துவப் பேராசிரியர் டாக்டர் பி.சௌந்தரராஜன்.
”சிறுநீரக நோய்த் தொற்று என்பது ஆண்களைவிட பெண்களுக்கு 20 சதவிகிதம் வாய்ப்பு அதிகம். இதற்கு முக்கியக் காரணம், வெளியிடங்களுக்குச் செல்லும் போது சிறுநீரை வெளியேற்றாமல் அடக்கிக்கொள்ளும் பழக்கம்தான்!” என்று சொல்லும் டாக்டர், சிறுநீர் பிரச்னை ஏற்படுவதற்கான காரணங்கள், முக்கியமாகப் பாதிக்கப்படுபவர்கள், தவிர்ப்பதற்கான வழிகள், தினமும் குடிக்க வேண்டிய நீரின் அளவு, சிறுநீரகத் தொற்று நீக்கும் உணவு வகைகள், இன்னும் பல விழிப்பு உணர்வுத் தகவல்கள் எனத் தொடர்ந்தார்.
ஆரோக்கியத்தின் முதல் படி… சீரான சிறுநீர் வெளியேற்றம்!
”உடல் ஆரோக்கியத்துக்கான முக்கியமான இயக்கங்களில் ஒன்று, இயல்பாக சிறுநீர் கழிப்பது. உடம்புக்குத் தேவையான நீர் எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு, உடற்கழிவுகளுடன் வெளியேறும் மீதமுள்ள நீர்தான் சிறுநீர். தினமும் தேவையான அளவு நீர் குடிப்பதும், சிறுநீர் கழிப்பதற்கான உணர்வு ஏற்பட்டவுடன் தக்கவைக்காமல் வெளியேற்றுவதும் ஆரோக்கியத்தின் முதல் படி. வெளியேற்றாமல் தேக்கும்போது, சிறுநீர்ப் பையின் கொள்ளளவையும் மீறிய சுமையை அது தாங்க வேண்டி வரும். இதையே தொடர்ந்து செய்யும்போது, சிறுநீரகத் தொற்று ஏற்பட்டு, சிறுநீரகச் செயலிழப்பு வரை பிரச்னைகள் வரிசை கட்டும். எனவே, சிறுநீர் வந்தால் உடனடியாகக் கழிக்க வேண்டியது அவசியம்.
எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?!
கோடை காலத்தில் ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீரும், மற்ற பருவநிலைக் காலங்களில் 2 லிட்டர் தண்ணீரும் போதுமானது. குடிநீரைத் தவிர, பால், பழச்சாறு, காய்கறி போன்றவற்றில் இருந்தும் உடலுக்குத் தேவையான நீர் கிடைத்துவிடும். அதேசமயம், தேவைக்கு அதிகமாகத் தண்ணீர் குடிப்பதும் பிரச்னையே! ஏ.சி. அறையில் இருப்பவர்கள், ஏ.சி. வாகனங்களில் தொடர்ந்து பயணிப்பவர்களுக்கு தாகம் எடுக்காமல் இருக்கலாம். என்றாலும், ஒரு நாளைக்கு குறைந்தது ஒன்று முதல் 2 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்.
தாகம் எடுப்பதன் காரணமாக இந்த அளவை விட கூடுதலாகத் தண்ணீர் குடிப்பதில் தவறில்லை. ஆனால், தண்ணீர் குடிப்பது நல்லது என்று பிறர் சொல்வதற்காக இஷ்டம்போல குடிப்பது நல்லதல்ல. இப்படிக் குடிப்பது, சிறுநீரகத்துக்கு கூடுதல் பளு தருவதாகத்தான் அமையும். கூடவே, இதயம் பழுதானவர்கள் மருத்துவர் பரிந்துரைத்ததற்கும் அதிகமாகக் கண்டிப்பாக தண்ணீர் குடிக்கக் கூடாது. இதன் காரணமாக இதயமானது ரத்தத்தை சரிவர ‘பம்ப்’ செய்ய முடியாமல் போகும். அதேபோல, சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களும், கல்லீரல் நோயாளிகளும் அதிகமாகத் தண்ணீர் குடிக்கக் கூடாது. சிறுநீரகத்தில் கல் உள்ளவர்கள் அதிகமாகத் தண்ணீர் குடிக்கும்போது அது கற்களைக் கரைத்து வெளியேற்றும் என்பதால், அவர்களை மட்டும் மருத்துவர்கள் அதிக நீர் அருந்தச் சொல்வோம்.
சிறுநீர்த் தொற்று ஏற்பட காரணங்கள்!
தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, சிறுநீரை அடக்குவது, சுகாதாரமற்ற கழிப்பறையைப் பயன்படுத்துவது, மரபு, சுய சுத்தமின்மை, தாம்பத்யம்… என்று பல காரணங்களால் சிறுநீர்த் தொற்று ஏற்படக்கூடும். சாதாரணமாக ‘யூரினரி இன்ஃபெக்‌ஷன்’ என்று இதைச் சொல்லி, எளிதாகக் கடப்பதுதான் வழக்கமாக இருக்கிறது. இதைக் கவனிக்காமல் விட்டால் அடுத்தடுத்து வரிசை கட்டும் பிரச்னைகளின் பட்டியல் நீளம். நீர்க்கடுப்பாக ஆரம்பித்து, அடிக்கடி சிறுநீர் வெளியேற்றும் உணர்வு, சொட்டு சொட்டாக சிறுநீர் வெளியேறுவது, சிறுநீர் வெளியேறும்போது தாங்க முடியாத வலி மற்றும் எரிச்சல், முதுகு வலி, சிறுநீரகத்தில் நோய்த் தொற்று ஏற்படுத்தும் கிருமிகள் உற்பத்தியாவது வரை கலங்கவைக்கும்.
கர்ப்பிணிப் பெண்கள், நீரிழிவு நோயாளிகள், முதியவர்களுக்கு சிறுநீர்த் தொற்று ஏற்பட்டால் அது சீரியஸ் பிரச்னை என்பதை உணர வேண்டும். கர்ப்பகாலத்தில் தாய் சிறுநீரகப் பிரச்னையால் பாதிக்கப்பட்டால், குழந்தைக்கும் அந்த பாதிப்பு ஏற்படலாம்… ஜாக்கிரதை! சிறுவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் என்பதால், சிறுநீர்த் தொற்று ஏற்பட்டாலும் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஆனால், 5 – 15 வயது வரை மீண்டும் மீண்டும் சிறுநீர்த் தொற்றால் பாதிக்கப்பட்டால், மருத்துவ ஆலோசனை நிச்சயம் பெற வேண்டும். குறிப்பாக, ஆண் குழந்தைகள். நீரிழிவு நோயாளிகள், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு இந்தப் பிரச்னை தீவிரமாக இருக்கும்.
யூரிக் ஆசிட் உள்ள உணவுப் பொருட்களான இறைச்சி, பீர், வொயின் போன்றவற்றை அதிகளவில் எடுத்துக்கொள்ளும்போது, சிறுநீர்ப் பிரச்னைக்கான வாய்ப்பை அது அதிகரிக்கும்.
சிறுநீர்த் தொற்றைத் தவிர்க்க!
சிறுநீர் வெளியேற்றுவதற்கான உணர்வு ஏற்பட்ட பின்னும் சிறுநீரை அடக்கக் கூடாது.
நன்றாகக் கை கழுவுவது மிகமிக முக்கியம். குழந்தைகளுக்கு நகம் வெட்டக் கற்றுக்கொடுக்க வேண்டும். மாதவிடாய் காலங்களில் நாளொன்றுக்கு இரண்டு எனும் வகையில் நாப்கினை சுகாதாரமாக பயன்படுத்த வேண்டும். தாம்பத்யத்துக்குப் பிறகு, பிறப்புறுப்பை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். சிறுநீர் கழிப்பதில் பிரச்னை எனில், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
தேவையான சிகிச்சையுடன் சிறுநீர் பெருக்கி உணவு வகைகளான சுரைக்காய், முள்ளங்கி, வாழைத்தண்டு, வெள்ளரி, தர்பூசணி இவற்றை எல்லாம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, கிரேன்பெரி ஜூஸ் (cranberry juice) நல்ல பலன் தரும். உலகம் முழுக்கவே 150 வருடங்களுக்கு முன் சிறுநீரகப் பிரச்னைகளுக்கு இதுவே மருந்தாகப் பயன்பட்டிருக்கிறது”என்று விளக்கங்களைத் தந்த டாக்டர், ”சிறுநீரகங்கள்தான் நம் உடலின் துப்புரவுத் தொழிற்சாலை. நம் கழிவறையில் பிரச்னை என்றாலோ, பழுதானாலோ, வீடே என்ன கதிக்கு ஆளாகிறது? நம் உடலின் கழிவறையில் பிரச்னை என்றால், உடல் என்னவாகும் யோசித்துப் பாருங்கள்!” என்று கேட்டார்.
‘இதெல்லாம் ஒரு பிரச்னையா?’ என்று நினைக்காமல், இனி ‘நம்பர் ஒன்’ பிரச்னைக்கு கொடுங்கள் நம்பர் ஒன் முக்கியத்துவம்!

தினமும் எவ்வளவு தண்ணீர்?
கோடை காலத்தில் 3 லிட்டர்.
மற்ற பருவ காலங்களில் 2 லிட்டர்.
ஏ.சி. அறை, ஏ.சி. வாகனங்களில் இருப்பவர்கள் 1  2 லிட்டர்
(தாகம் எடுக்காவிட்டாலும்)

எவ்வளவு சிறுநீர்?
ஆரோக்கியமான மனிதன் 4  6 மணி நேரத்துக்கு ஒருமுறை சிறுநீர் கழிக்க வேண்டும். ஒன்றிரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை கழித்தால், அது ஃப்ரீக்வன்ஸி என்கிற வகையில் வரும். (அதேசமயம் அதிக குளிர், மழைக்காலங்கள் மற்றும் ஏ.சி. அறை, ஏ.சி. வாகனங்கள் பயன்படுத்தும்போது ஒன்றிரண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவை வருவதில் தவறில்லை). சிறுநீரக டி.பி, குடி, சிகரெட், முதுமை, சிறுநீர்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த ஃப்ரீக்வன்ஸி ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
சிலர் ஏழெட்டு மணிநேரம் கூடத் தண்ணீரே குடிக்காமல் இருப்பார்கள். இதனால், வெளியேற வேண்டிய கழிவு தேங்கி யூரினரி இன்ஃபெக்‌ஷன், எரிச்சல் ஏற்படும். அதேபோல, ஒரு நாளில் ஒன்றரை முதல் இரண்டு லிட்டர் சிறுநீர் வெளியேறுவதுதான் இயற்கை. மூன்று லிட்டருக்கும் மேல் சிறுநீர் வெளியேறினால், அது பாலியூரியா (polyuria). அதாவது, அளவுக்கு அதிகமாக சிறுநீர் வெளியேறும் நோய். பிறந்த குழந்தைக்கு ஒரு நாளில் இருநூறு மில்லி சிறுநீர் வெளியேறினாலே போதுமானது.

தாம்பத்தியத்தின் போது விந்து வெளியேற்ற இயலாத‌ ஆண்களின் பிரச்சனைகளும்! தீர்வுகளும்!



 
ஆண்களே! உங்களுக்கு தாம்பத்தியத்தின் போது
தாமதமாக விந்து வெளியே றும் நிலை உள்ளது. இதைஆங்கிலத்தில் Delayed Ejaculation அல்லது Anorgasmia என்று சொல் வார்கள். ஒரு ஆணால் முப்பத்து நிமிடத்திற்குமேல் உறுப்பை உள் ளே தள்ளி உடலுறவு செய்தும் விந்து வெளியேற வில்லை என்றால் உங்களுக்கு இந் நோய் உள்ளதாக அர்த்தம்.

இந்த பிரச்சனைக்கு இரண்டு விதமான காரணங்கள் உண் டு. அவை மன ரீதியான பிரச்ச னைகள் மற்றும் உடல் ரீதியா ன பிரச்சனைகள்.
 
மன ரீதியான பிரச்சனைகள்
1) உங்கள் மனைவி அழகில்லை என்று கருதுவது.

2) தூக்கமின்மை.
3)உங்கள் மனைவி மீதுள்ள வெறுப்பு, கோபம், எரிச்சல்போன்ற உணர்வுகள்
4)அடிமனதில் உள்ள ஓரினச்சேர்க்கை ஆசை.
5) பணரீதியான, குடும்பரீதியான கவலை மற்றும் மனஉளைச்சல்.
6) உங்கள் துணையை காம ரீதியாக திருப்தி படுத்த வேண்டுமே என்கிற அச்சம்.
7) உங்களுக்கு காம ரீதியான பிரச்ச னைகள் உள்ள தான மனபிராந்தி. உதாரணமாக உங்களுடைய ஆண் குறி சிறியதாக இருப்பதாக நினைத் துக் கொள்வது, அல்லது சுன்னி வளைந்திருப்பதாக நினைத்துக் கொள்வது.
8 மனதில் ஏற்பட்ட வடுக்க ள் (Psychological Trauma).
9)சிறுவயதில் பெற்றோர்க ளால் காமம் தவறு என்று வலியுறுத்தப்படுவது, அல் லது மதரீதியாக காமம் ஒருகேட்ட விஷயம் என்று மனதில் ஆழமாக பதிந்து விடுவது.
10) உங்கள் மனைவி இந்தப் பிரச் சனையை புரிந்து கொள்ளாமல், குத்திக் காட்டுவது.
உடல் ரீதியான பிரச்சனைகள்
வித்தியாசமான சுய இன்பப் பழக்கம். உதாரணமாக நீங்கள் உங்கள் ஆண்குறியை தொடாமல், தொடையை இறுக்கியே கூட விந்துவை வெளியேற்ற முடியும். இந்த மாதிரி வித்தியாசமான முறை யில் உங்களுக்கு சுய இன்பப் பழக்கம் இருந்தால், உங்களு க்கு உடலுறவின் போது விந்து வராது. ஏனென்றால், உங்கள் சுய இன்பமுறை, சாதார ண உடலுறவு முறையிலிருந்து ரொம்ப வித்தியாசப்ப டுகிறது.
குடி அல்லது போதைப் பழக்கம்.

நீங்கள் மற்ற நோய்களுக்காக சாப்பிடும் மருந்துகள் கூட இது போன்ற பக்க விளைவுகளை ஏற் படுத்தலாம். குறிப்பாக நீங்கள் மனநோய்க்காக சாப்பிடும் மருந் துகள் (mood altering drugs) இந்த மாதிரி பக்க விளை வுகளை ஏற்படுத்தும்.
உடலுறவுக்கு முன் சுய இன்பம் செய்தல். உடலுறவுக்குமுன் னால் சுயஇன்பம் செய்துவிட்டு ப்போனால் இப்படி ஆக வாய்ப் புண்டு.
 
நரம்புத்தளர்ச்சி மற்றும் நரம்புரீதியான நோய்களாலும் விந்து வெளியேறத் தாம தப் படலாம்.
 
மனப் பிரச்சனையா? உடல் பிரச்சனையா?
இதைமுதலில் கண்டுபிடிக்க வே ண்டும். பெரும்பாலான ஆண்க ளுக்கு இப்பிரச்சனை மனரீதியா ன காரணங்களால்தான் வருகிறது. ரொம்ப குறைந்தபட்ச ஆண்களுக்கே, இது உடல் ரீதியான பிரச்சனையால் நடக்கிறது.
இது மனப் பிரச்சனையா, அல்லது உடல் பிரச்சனையா என்று நீங்களே கண்டு பிடிக்கலாம்.

முதலில் ஒரு தனி அறைக்கு செ ன்று, உங்கள் கையை வைத்து, மேலும் கீழுமாக ஆட்டி சுய இன்பம் செய்யுங்கள். உங்கள் கற்பனை யை உபயோகியுங்கள்.
உங்களுக்கு இருபது நிமிடத்திற்குள் விந்து வெளியே றினால், உங்களுக்கு உடல் ரீதியாக எந்தப் பிரச்சனையும் இல்லை. இது மனப்பிரச்ச னையே.
இப்படி சுயஇன்பம் செய்தும், 30 நிமிடத்திற்கு மேலும் விந்து வெளியேறவில்லை என்றால், இதுஒரு உடல்ரீதியானபிரச்சனையாக இருக்கக்கூடும் 
 
தீர்வுகள்:

இந்த பிரச்சனைக்கு காரணம் உடல் ரீதியான விஷயம் என்றால், ஒரு மருத்துவரை அணுகி, உங்கள் உட லை பரிசோதித்துக்கொள்ளுங்கள். இதற்கு தீர்வு, நீங்கள் ஏற்கனவே உட்கொள்ளும் மருந்துகளை நிறுத்துவது, அல்லது குடிப்பழக்கத்தைவிடுவது போன்றவையாக இருக்கும்.
இதற்குஒருமனரீதியான காரண ம் இருந்தால்,ஒரு Sextherapist ஐ அணுகுங்கள். இவர், உங்களை யும் உங்கள் மனைவியையும் சே ர்ந்து வரச்சொல்லி, உங்கள் திரு மண உறவு சுமுகமாக இருக்கிற தா என்று பார்ப்பார். உங்கள் இருவருக்கும், வெறுப்பு, கோபம் போன்ற உணர்வுகள் இருந்தால், அவற்றை சரி செய்ய முனை வார்.

இக்கட்டம் முடிந்தபின், இரண்டு விதமான செயல்முறைகள் பரிந் துரைக்கப்படும். இது என்ன என்று பார்க்கலாம்.
செயல் முறை 1 :
1)ஆண் (நீங்கள்தான்) பெண்ணின்முன்னால் உட்கார் ந்து சுய இன்பம் செய்து, விந்தை வெளியேற்றவேண்டும். இதுமுதலி ல் கஷ்டமாக இருக்கலாம், ஆனால் இப்படி ஒரு வாரம் செய்ய வேண் டும்.
2) மேலே சொன்னது பழகிய பின், பெண், ஆணின் குறி யைப் பிடித்து ஆட்டி, விந்தை வெளியேற்றவேண்டும். இந்நிலையில் விந்து வெளியேற சிலசமயம் 1 மணி நேரத்துக்கு மேல் கூட ஆகலாம். ஆனால், பெண் பொறுமையாக ஆணு டைய குறியைப் பிடித்து ஆட்டி, விந்தை வெளியேற்ற வேண்டும்.
3)மேலே சொன்ன இரண்டாவது கட்டமு ம் நன்கு பழ கிய பின்னர், பெண் வாயை வைத்து உறிந்து, விந்தை வெளியேற்ற வேண்டும்.
4) கடைசி கட்டமாக, மெல்ல மெல்ல பெண்ணின் உடலின் மேல் விந்தை பாய் ச்சுவது பழகி, பிறகு பெண்ணுறுப்புக்குள்ளே நுழைத்து ம் விந் தைப் பாய்ச்சலாம்.
செயல்முறை 2:
இந்தசெயல்முறை மாஸ்டர்ஸ் – ஜான்சன் என்ற புகழ்பெற்ற காம நிபுணர்கள் பரிந்துரைப்பது. அதுகீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1) ஒரு குறிப்பிட கால கட்டத்துக்கு, ஆணும் பெண்ணு ம் உடலுறவு கொள்ளக் கூடாது. ஆனால், தொடுவது, த டவுவது, ஆழமாக முத்தம்கொடுப்பது போன்றவற்றை செய்ய வேண்டும்.
2)அடுத்து பெண், ஆணை உட்கார வை த்து, அவன் ஆணுறுப்பை கையை வை த்து ஆட்டவேண்டும். ஆண் உச்ச கட்ட த்துக்கு அருகில் வரும் வரை இப்படி செய்ய வேண்டும்.
3) ஆண் உச்ச கட்டத்தை நெருங்கி யதும், பெண் அவன் மேல் உட்கார் ந்து, ஆணுறுப்பை தனக்குள்ளே நுழைத்து, விந்தை வெளியேறுமா று செய்ய வேண்டும்.
விந்து தாமதாக வெளியேறுவதை குணப்படுத்த முடி யாத பல ஆண்களுக்கு, தங்கள் மனைவிக்கு விந்து வ ங்கிமூலம் (அல்)செயற்கை சினை சேர்த்தல் (artificial insemination) மூலமாக குழந் தைபெறுவதுதான்தீர்வு. அதே போல இந்த தம்பதிகள் அடிக் கடி மனநல மருத்துவரிடம் சென்று மன அழுத்தத்திலிருந்து விடுபட முயல வேண் டும்.