Saturday 28 January 2012

தாம்பத்தியம் கொள்ளாமல் குழந்தை பெற்றுக்கொள்ள‍ முடியும் – நவீன அறிவியலின் அற்புத சாதனை


இந்த நூற்றாண்டிலேயே அறிவியலில் பல அற்புத சாதனைகள் நிகழ்த்தப்பட இருக்கின்றன. மனிதனைக் குளோனிங் முறையில் உரு வாக்கி விடுவார்கள். அதாவ து ஒரு மனித உடலிலிரு ந்து மற்றொரு மனிதனை உரு வாக்கிட முடியும்.
 ஆண், பெண் உடலுறவு கொண்டுதான் குழந்தையை உருவாக்க வேண்டும் என்ற அவசியமில்லை. உடலுறவு என்பது உடல் சுகத் திற்காகவே தவிர சந்ததி உற்பத்திக்கு அல்ல என்ற நிலை உருவாகி விடும். உடலுறவினால் கிடைக்கும் சுகத்திற்காக அதை விட்டு விடவும் மாட்டார்கள்.
 வசதி படைத்தவர்கள் தம்மையே நகல் எடுத்த மாதிரி பிள்ளைக ளைப் பெற் றுக் கொள்ள இயலும். ஜெனடிக் குறை பேதங்கள் இன் றிக் குழந்தை களை உருவாக்கிக் கொள்வார்கள்; தம் உட லில் உள்ள மரபியல் (ஜீன்) குறைக ளையும் நீக்கிக் கொள்வார்கள்.
 1978-லூயி பிரவுன் என்ற பெண் குழந்தை சோதனைக் குழாயில் கருவுற்று உருவானது முதல் ஆயிரக்கணக்கான குழந்தைகள் கட்டி லுக்குப் பதிலாகப் புட்டிகளில்தான் கருவுற்று உருவாகியிருக்கி றார்கள். 1960இல் கருத்தடைச் கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டது முதல் பெண்களுக்கு உடலுறவு வேறாகவும், பிள்ளைப்பேறு வே றாகவும் பிரிந்துவிட்டது.
 சில வகை ஓணான்கள், மீன்கள், மரப் பேன்கள், ரோடிஃபர் என்ற நுண்ணுயிரி கள் உடலுறவு இல்லாமலேயே சந்ததி களை உருவாக் குகின்றன. தாவரங்கள் திசு மாற்றம் செய்யப்படு வதைப் போல மனிதனின் மரபணு மாற்றம் மூலம் மனிதனை உருவாக்கும் நிலை வந்து விடும்.
அப்படிப்பட்ட நிலையில் ஜீன் மருத்துவமும் கலந்து வழுக்கை, நரை, வியாதி, கண் மற்ற உடலுறுப்புக் குறைபாடுகள் எதுவுமில் லாத குழந்தை களை உரு வாக்குவது எளிதாகி விடும். ஆர்கானிக் என்ஸானஸ்மெ ன்ட் புரோட்டோகால் இப்படி ஒரு விளம்பரம் 2020–களி ல் வெளியிடப்படும்.
 கணினி தகவல் தளத்தில் புகுந்து மருத்துவர் ஜென்னி டம் அனுமதி பெற்ற 100 விழுக்காடு குறையற்ற குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள பெண் கள் வரிசையில் நிற்பார்கள். இதய நோய், ரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு, புற்றுநோய், எய்ட்ஸ், ஒவ்வாமை, ஆஸ்துமா போன்ற நோய்களிலிருந்து இயற்கையாகவே உடல் எதிர்ப்புடைய ஜீன்க ளைக் குழந்தைகளின் உடலில் ஏற்றித்தரும் ஒரு வாய்ப்புதான் இந்த ஆர்கானிக் என்ஹேன் ஸ்மென்ட் புராட் டோகால்.
 இந்தப் புதிய குழந்தைப் பேறு மருத்துவம், குழந்தையை உருவாக்குவதற்கு அல்ல. ஏற் கெனவே உருவான கருவிற் குள் மேற்கூறிய நோய் எதிர் ப்பு ஜீன்களைச் செலுத்துவது தான். இந்த நூற்றாண்டின் இறுதியிலேயே மனித ஜீனோம் திட்டம் (ஹ்யூமன் ஜீனோம் புரா ஜெக்ட்) நிறைவேறி விடும்.
மனிதனின் அனைத்து ஜீன் களும் வரிசைப்படுத்தி பதிவு செய்யப் படும். எல்லா ஜீன்களின் குறைகளும் நீக்கப்படும். இயற்கையிலே யே நோய் எதிர்ப்புடைய மனிதர்களிடமிருந்து ஜீன்கள் சேகரிக் கப்பட்டு குறைவற்ற மிகச் சிறந்த ஜீனோம் உருவாக்கப்படும்.

இந்திய சமையல் பொருட்கள், மூலிகைகள் மையலுக்கு ஏற்றவை-ஆய்வில் தகவல்

Posted On Jan 28,2012,By Muthukumar
இந்தியாவில் கிடைக்கும் மூலிகைகளும், சமையலுக்கு பயன்படுத்தப்படும் வாசனைப் பொருட்கள் உணர்வுகளை தூண்டி உற்சாகத்தை ஏற்படுத்தக்கூடியவை என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த உணவுகள் உடலின் பாலுணர்ச்சியை தூண்டும் ஹார்மோன்களை ஊக்குவிக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் சமையலுக்கு ருசிக்காகவும், வாசனைக்காகவும், ஏலம், கிராம்பு, பூண்டு, வெங்காயம், போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. இவை உணவுக்கு உடலுக்கு ஊட்டம் தருவதோடு உற்சாகத்தையும் தரும் என்றும் பாலுணர்வை தூண்டுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் ஆஸ்திரேலியாவைத் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்
பாலுணர்வு அதிகம்
25 லிருந்து 52 வயது வரை உடைய 60 ஆரோக்கியமான ஆண்கள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு ஆறுவாரங்களுக்கு வாரம் இரண்டு முறை மூலிகை உணவுகள் தரப்பட்டன. மூலிகைகளை உண்டவர்களின் பாலுணர்வை தூண்டும் ஹார்மோன் அளவு அதிகபட்சமாக 28 சதவிகிதம் அதாவது 16.1 லிருந்து 20.6 சதவிகிதமாக உயர்ந்திருந்தது.
இந்திய சமையலில் பயன்படுத்தப்படும் நறுமணப் பொருட்கள், மூலிகைகள் போன்றவை மனிதர்களின் பாலுணர்வை தூண்டுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இந்த ஆய்வு முடிவை 'டெய்லி மெயில்' பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

ஆங்கில மொழி புலமையை அதிகரிக்க அசத்தலான ஐடியாக்கள்!


Posted On Jan 28,2012,By Muthukumar
 
ஆங்கிலம் என்றால் நம்மில் அதிகளவானோருக்கு ஓர் இனம் புரியாத கசப்புணர்வு ஏற்படும். சிலரைப் பார்த்தால் ஆங்கில மொழியில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களாக எழுத்து, வாசிப்பு ஆகிய துறைகளில் நன்றாக வெளுத்து கட்டுவார்கள். ஆனால் பேசும் போது பம்மிடுவாங்க. இன்னும் சிலரைப் பார்க்கையில் நம்மில் சிலருக்கு "அடடா இவனு ரொம்ப நல்லா இங்கிலீசு பேசுறானே...நம்மால முடியலையே" என்கிற தாழ்வு மனப்பான்மை ஏற்படும். இன்னும் சிலர் என்னா பண்ணுவாங்க என்றால் நம்ம டீவி, ரேடியோக்களில் புரோக்கிராம் பண்றவங்க மாதிரி ஒரு வசனம் பேசும் போது மூனு தமிழ்ச் சொற்களையும், நாலு ஆங்கிலச் சொற்களையும் கலந்து கட்டிப் பேசுவாங்க. இவங்க பேசும் இங்கிபீசைக் கேட்டால் நம்மளுக்கு இருக்கிற ஆங்கில அறிவும் பறந்தோடிப் போயிடுமுங்க.
இந்தப் பதிவோட நோக்கம், நமது ஆங்கில அறிவினை அதிகரிப்பதற்கான இலகுவான வழிகளைப் பற்றி அலசுவதாகும்.
பல்தேசக் கம்பனிகளின் தொழிற் புரட்சியானது இன்றைய கால கட்டத்தில் நம் நாடுகளை நோக்கி அதிகளவில் இடம் பெறுகின்றது. இதனால் நாம வேலை தேடிப் போகும் போது ஆங்கிலத்தில் எவ்வளவு தேர்ச்சி பெற்றிருக்கின்றோம் எனப் பரிசோதிக்கும் முறையினை ஒவ்வோர் கம்பனிகளும் கையிலெடுத்திருக்கிறாங்க. சிலருக்கு எவ்வளது தான் தலை கீழா நின்னாலும் ஆங்கில அறிவினை இம்ப்ரூப் பண்ணிக்கவே முடியாம இருக்கும். இதுக்கான பிரதான காரணம் சில ஈஸியான வழிகள் இருக்கையில் ஆங்கிலத்தை முழுமையாக மனப்பாடம் செஞ்சு கரைத்து குடிச்சிட்டு; வாந்தியெடுப்பது போன்று பேசுவதற்கு ரெடியாகுவது தானுங்க. உங்களில் எத்தனை பேரிடம் 90 நாட்களில் இலகுவாக ஆங்கிலம் படிப்பது எனும் புக் இருக்கிறதோ? அவங்க எல்லோரும் இன்னைக்கே அந்த புக்கை தூக்கி தூர வீசிடுங்க. 
இனி நம்ம ஐடியாக்கள் என்னான்னு பார்ப்போமா?
*எம்மால் இயன்றவரை வழுவின்றி தெளிவான உச்சரிப்புக்களை கையாளப் பழக வேண்டும். எல்லோருக்கும் உச்சரிப்பு விடயத்தில் சில ஆங்கிலச் சொற்களை இலகுவாகச் சொல்ல முடிவதில்லை. இதற்கு நாம என்ன பண்ணிக்கனும் என்றால் Tongue Cleaner வாங்கி நம்மளோட நாக்கில இருக்கிற அழுக்கினை ஒவ்வோர் நாளும் மளித்து எடுக்கனும்.
*அடுத்த கட்டமாக ஆங்கில நிகழ்ச்சிகளின் வீடியோ தொகுப்பினை உன்னிப்பாக பார்க்கனும். வீடியோ தொகுப்புக்களில் டாக்குமென்டரி வகை வீடீயோக்கள் ரொம்பமும் பயனுள்ளவை. Animal Planet, BBC World, National Geography Channel, முதலிய சானல்கள் ரொம்பவே பயனுள்ளவை. இதனை விடவும் உங்களுக்கு தெரிந்த ஆங்கில விவரணச் சித்திரங்களை ஒளிபரப்பும் சானல்களும் ரொம்ப யூஸ்புல்லா இருக்குமுங்க.
*அடுத்த முக்கிய விடயம், நம்ம ரசனைக்கு ஏத்த மாதிரி நம்மளை மிகவும் கவர்ந்த ஆங்கில டீவி நிகழ்ச்சியினை பார்ப்பது. இந்த விடயத்தில் விளையாட்டுப் பிரியர்களுக்கு கிரிக்கட் நேரடி வர்ணனை, மற்றும் இதர நேரடி வர்ணனைகள் ரொம்பவே பயனுள்ளதாக இருக்குமுங்க.

*அடுத்த மிக மிக முக்கியமான விடயம், பேசுவோரின் வாயினை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். ஆங்கிலத்தில் British English உச்சரிப்பு, American English உச்சரிப்பு, ஆஸ்திரேலியர்களின் ஆங்கில உச்சரிப்பு, ஆகியவை கொஞ்சம் வேறுபாடு உடையவை. இதில் பிரித்தானியர்களின் ஆங்கில உச்சரிப்பானது நமக்கு நன்கு பரிச்சயமாகும் வரை எளிதில் புரிந்து கொள்ள முடியாதவாறு இருக்கும். அதுவும் ஆரம்பத்தில் நாம British ஆங்கில உச்சரிப்புக்களை கேட்கும் போது ஒன்னுமே புரியாத மாதிரி, ரொம்ப வேகமாக பேசுவது போல இருக்கும். ஆனால் அவங்க வாயினை உன்னிப்பாக அவதானித்து, கூர்மையாக என்ன பேசுறாங்க என்று கவனித்தால் கண்டிப்பாக நமக்கு அவங்களின் உச்சரிப்பு புரியும்.
*கதைப் புத்தகங்கள், மற்றும் ஆங்கில நூல்களை வாசித்தல். இதுவும் எமது பேச்சுத் திறனை அதிகரிக்க வாய்ப்பாக அமையும். எப்பவுமே சிறிய சிறிய கதைப் புத்தகங்களிலிருந்து ஆரம்பித்து படிப்படியாக; கடினமான மொழி நடையில் அமைந்த ஆங்கில நூல்களை வாசிக்க முயற்சிப்பது நன்மை பயக்கும்.கதைப் புத்தகங்களை நாம படிக்கும் போது, அதில் உள்ள உரையாடல் பாணியிலான தகவல்களை கிரகித்துப் படிப்பதும், எமது பேச்சு வன்மையினை அதிகரிக்க வாய்ப்பாக அமையும்.
*இந்த ஐடியாக்களை விட; இன்னும் ஓர் ரொம்ப சூப்பரான + கொஞ்சம் காமெடியான விடயம் இருக்கு.அது என்னவென்று தெரியுமா? கால்சென்டர்களுக்கு போன் செஞ்சு, ஆங்கிலத்தில் உரையாடுவதும், கடலை போடத் தொடங்குவதும் உங்கள் பேச்சு வன்மையினை சபைக் கூச்சமின்றி அதிகரிக்க உதவும். உங்க சொந்தப் பேரில் பேசினால் பல்பு வாங்கிடுவீங்க என்று நினைத்தால், கண்டிப்பாக நீங்க ஒரு புனை பெயரைத் தெரிவு செய்து உரையாடலாம். ஏர்டெல், ஏர்செல், அலைபேசி நிறுவனங்கள், மற்றும் வங்கிகளுக்கு போன் செஞ்சு நீங்க உந்த முறையினை ட்ரை பண்ணிப் பேசிப் பார்க்கலாம்.

*உங்கள் அலுவலகத்தில் அல்லது நீங்கள் காவிச் செல்லும் பையில் கண்டிப்பாக ஒரு ஆங்கில டிக்சனரி வைத்திருங்கள். ஒரு நாளைக்கு பத்துப் புதிய சொற்கள் வீதம் ஒவ்வோர் நாளும் தேடிப் பிடித்து அந்தச் சொல்லுக்கான அர்த்தங்களையும் அறிந்து நினைவில் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். இந்த ஐடியாவும் உங்களுக்கு கை கொடுக்கும்.

இந்த ஆலோசனைகளை விட, வாசகர்கள் வசம் ஆங்கில மொழிப் புலமையை அதிகரிக்க ஆலோசனைகள் இருந்தால் பின்னூட்டங்கள் ஊடாகப் பகிர்ந்து கொள்ளலாம்.
இப் பதிவு யாருக்கும் அறிவுரை கூறும் பதிவு அல்ல. ஐ மீன் இது ஓர் அட்வைஸ் பதிவு அல்ல. என்னுடைய வாழ்வில் நான் பெற்ற அனுபவங்களை இங்கே பகிர்ந்திருக்கிறேன்.ஆங்கில மொழிப் புலமையினை அதிகரிக்க விரும்பும் ஆர்வலர்களுக்கு சிறிதளவேனும் இந்த ஆலோசனைகள் உதவினால் மகிழ்ச்சியாக இருக்கும். 


பதிவினைத் தூய தமிழில் எழுத முடியவில்லை. காரணம் பலருக்கு புரிந்து கொள்வதில் சிக்கல் இருக்கலாம் என்பதால் ஆங்காங்கே ஆங்கில வார்த்தைகளையும் சேர்த்திருக்கிறேன்.

மூளையில் ரத்த அழுத்தத்தை கண்காணிக்கும் புதிய கருவி!

Posted On Jan 28,2012,By Muthukumar


இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும்போது ஹெல்மெட் அணிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஏனென்றால், விபத்துகள் நேரும்போது தலையில் அடிபட்டு மூளைக் காயங்கள் ஏற்படும் ஆபத்து மிக அதிகம்.
இதுபோன்ற நிலையில் ஏற்படும் ஆபத்துகளில் ஒன்றுதான் செரிப்ரல் வாசோஸ்பாசம். வெடி விபத்துகளால் பாதிக்கப்படும் ராணுவ வீரர்கள் மற்றும் அனியூரிசம் எனப்படும் இதய நோயினால் பாதிக்கப்படும் நோயாளிகள் போன்றோருக்கு இந்த பாதிப்பு அதிகம். இந்த மூளைக் கோளாறு, ரத்த நாளங்கள் திடீரென்று சுருங்குவதால் ஏற்படும் ஒரு ஆபத்தான கோளாறு. அதாவது ஒரு தண்ணீர் குழாயை அழுத்தி பிடிப்பது போல ரத்த நாளங்கள் அழுத்தப்படும்போது ரத்த நாளங்களுக்குள் அழுத்தம் அதிகரிக்கிறது.
இதனால் ரத்த ஓட்டத்தின் வேகமும் அதிகரிக்கிறது. இதன் காரணமாக மூளைக்கு செல்லும் ரத்தத்தின் அளவும் குறைந்து போகிறது. இத்தகைய ஒரு கோளாறு ஒரு விபத்து நிகழ்ந்து பல நாட்களுக்கு பின்னர்கூட ஏற்படலாம். இந்த கோளாறினை கண்டறிய தற்போது அல்ட்ரா சவுண்டு கருவி பயன்படுத்தப்படுகிறது. இதில் சிக்கல் என்னவென்றால், இந்த பரிசோதனையை ஒரு தேர்ந்த தொழில்நுட்ப வல்லுனரால் மட்டுமே செய்ய முடியும்.
எல்லாமே எந்திர மயமாகிவிட்ட இந்த காலத்தில், இந்த பரிசோதனையையும் எந்திரமயமாக்கிவிட வேண்டும் என்று முயற்சித்த பிசியோசானிக்ஸ் என்னும் அமெரிக்க நிறுவனத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது. அதாவது செரிப்ரல் வாசோஸ்பாச கோளாறினை ஒரு தொழில்நுட்ப வல்லுனரின் உதவியின்றி கண்டறியும் வண்ணம், இசை கேட்க பயன்படுத்தப்படும் `ஹெட்செட்' போன்ற ஒரு அல்ட்ராசவுண்டு கருவியை தயாரித்துள்ளது இந்த நிறுவனம்.
சோதனையின் போது இந்த கருவியில் இருந்து வெளியாகும் பல அல்ட்ரா சவுண்டு கதிர்கள் தலைக்குள் ஊடுருவிச் செல்கின்றன. பின்னர், இந்த கருவியிலிருக்கும் பிரத்தியேகமான அல்காரிதம் மூளைக்கு ரத்தத்தை கொண்டுசெல்லும் மைய ரத்த நாளத்தை கண்டறிகிறது. அதன்பிறகு, கருவியிலிருந்து வெளியாகும் அல்ட்ரா சவுண்டு கதிர்கள் அந்த மைய ரத்த நாளத்தில் மட்டும் பாய்ச்சப்பட்டு அதன் ரத்த ஓட்டம் கணக்கிடப்படுகிறது. பின்னர், இந்த ஹெட்செட் கருவியுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு எந்திரம் மைய ரத்த நாளத்திலுள்ள ரத்த ஓட்டத்தின் வேகம் போன்ற விவரங்களைக் காட்டுகிறது.
இதயத் துடிப்பை கண்காணிக்கும் கருவியை போலவே மூளையின் மைய ரத்த நாளத்தின் ரத்த ஓட்டத்தையும் கண்காணிக்க ஒரு கருவியை கண்டறிய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்கிறார் இதனை உருவாக்கிய வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் நரம்பு அறுவை சிகிச்சை நிபுணரும், இந்த நிறுவனத்தின் பங்கு
தாரர்களில் ஒருவருமான மைக்கேல் க்ளியட்.
மூளையின் மைய ரத்த நாளத்தின் ரத்த அழுத்தத்தை கண்டறியும் இந்த புதிய கருவியின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தலைக்குள் இருக்கும் அழுத்தத்தை கண்டறியும் மற்றொரு அல்காரிதத்தையும் உருவாக்கி வருகிறது பிசியோசானிக்ஸ் நிறுவனம் என்பது மகிழ்ச்சியான மற்றொரு செய்தி.
ஏனென்றால், தற்போது தலையில் உள்ள அழுத்தத்தை கண்டறிய வேண்டுமானால் மண்டை ஓட்டில் ஒரு துளையை போட்டாக வேண்டும். மாறாக, இந்த புதிய கருவியை பயன்படுத்தினால் அந்த சிக்கலை தவிர்த்து, வலியில்லாமல் பரிசோதனை செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

விண்வெளி ஆச்சர்யங்கள்


நமது அறிவிற்கு அப்பாற்பட்ட பல ஆச்சர்யங்கள் நிறைந்தது தான் விண் வெளி. என்னதான் விஞ்ஞானம் மூலம் ஆராய்ச்சிகள் பல மேற் கொண்டாலும் இன்னும் புதிய புதிய தகவல்கள் கிடை த்துக் கொண்டே தான் இருக்கின்றன. சூரியன், கிரகங்கள், நட்சத்திரங்கள், விண் கற்கள் எனப் பல புதுமைகள் இந்தப் பால்வீதியில் நிறைந்துள்ளன. அவற்றைப் பற்றிய சில தகவல்கள் இங்கே..
1. சூரியனில் ஆண்டுக்கு ஏழு முறை கிரகணம் தோன்றுகிறது.
2. ஒருவரின் எடை பூமியில் 70 கிலோ என்றால், சூரியனில் அவரது எடை 2000 கிலோ.
3. அண்டார்டிகாவில் செப்டம்பர் 21-ஆம் தேதி மட்டும் சூரியன் உதய மாகும்.
4. விண்வெளியில் பயணம் செய்த முதல் மிருகம் லைக்கா (Laika) என்ற நாய்.
5. விண்வெளி வீர்ர்களுக்கு உணவாகப் பயன்படுவது பாசி குளோரெல்லா.
6. சூரியனின் வெப்பக்கதிர்கள் 930 இலட்சம் மைல்கள் பயணித்து, பூமிக்கு வர சுமார் எட்டு நிமிடங்கள் ஆகின்றன. நாம் பார்க்கும் ஒளி, எட்டு நிமிடங்களுக்கு முந்தையது. மிக வேகமான ஒரு ஜெட் விமானம் இந்த தூரத்தைக் கடக்க 18 ஆண்டுகள் ஆகும்.
7. பூமி தன்னைத்தானே ஒரு முறை சுற்றிக்கொள்ள 23 மணி நேரமும் 56 நிமிடங்களும் ஆகின்றன.
8. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் பெயர் நாசா.
9. இரவு வானில் கிட்டத்தட்ட 3000 நட்சத்திரங்களை, வெறும் கண் களாலேயே நம்மால் பார்க்க முடியும்.
10. பூமி விண்வெளியில் சுமார் 1,07,343 கி.மீ வேகத்தில் சுற்றுகிறது.
11. சூரிய கிரகணம் சுமார் 8 நிமிடங்கள் மட்டுமே நிகழும். ஆனால் சந்திர கிரகணம் 10 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கலாம்.
12. நட்சத்திரங்கள் என்பது சொந்த ஒளியைக் கொண்டு மிளிரும். கிரகம் என்பது சூரிய ஒளியை வாங்கிப் பிரதிபலிக்கும்.
13. சூரிய வெளிச்சத்தில் பூமியின் நிழல் சுமார் 8,59,000 மைல்கள் தூரம் விழும்.
14. ஒரு விண்மீன் வெடித்துச் சிதறும் ஒளி, நம் கண்ணுக்குத் தெரிய ஆகும் காலம் 1,70,000 ஆண்டுகள்.
15. 1866-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பவுர்ணமியே தோன்றவில்லை. அதே ஆண்டு ஜனவரி மற்றும் மர்ர்ச் மாதங்களில் இரண்டு பவுர்ணமி கள் தோன்றின. இது போன்று அதிசயம் 25 லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு தான் தோன்றுமாம்.
16. ஒவ்வொரு வருடமும் பூமியிலிருந்து 3.82 செ.மீ தூரம் நிலா விலகிச் செல்கிறது.
17. சூரிய மண்டலத்தைப் பற்றிய படிப்பு ஆஸ்டீரியோலஜி எனப்படும்.
18. உலக அளவில் ஆண்டுதோறும் 800 கோடி டன் கார்பன்-டை- ஆக்ஸைடு தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களால் நாம் இயற் கையை மாசுபடுத்துவதால் வளி மண்டலத்திற்குள் திணிக்கப் படுகிறது.
19. சந்திரனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் 3,64,000 கி.மீ
20. உலகிலேயே முதல் வான்வெளிப் புகைப்படம், அமெரிக்க உள் நாட்டுச் சண்டையின்போது பாராசூட்டிலிருந்து எடுக்கப்பட்டது.
21. யுரேனஸ் கிரகத்தில் கோடைகாலம் 21 ஆண்டுகளும், குளிர் காலம் அதையடுத்த 21 ஆண்டுகளும் நீடிக்கின்றன.
22. மனிதனை விண்வெளிக்கு அனுப்பிய 14வது நாடு இந்தியா.
23. 1970ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி பூமியிலிருந்து இயக்கப் பட்ட லூனா கோடி என்ற ஆளற்ற ஓடமே சந்திரனில் இறங்கிய முதல் ஓடமாகும்.
24. ஒரு மின்னல் 250 கோடி வோல்ட்ஸ் மின்சக்தி கொண்டது.
25. நிலவு ஒளி பூமிக்கு வர எடுக்கும் நேரம் 1.3 நொடி.
26. நிலவை முதலில் டெலஸ்கோப் வழியாகப் பார்த்தவர் கலிலி யோ.
27. பூமி சந்திரனுக்கு மிக அருகில் வருவது டிசம்பர் மாதத்தில். பூமி சூரியனுக்கு மிக தொலைவில் போவது ஜூலை மாதத்தில்.
பூமியிலிருந்து சுமார் 20 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் நிலைநிறுத்தப்பட்ட செயற்கை கோள் மூலம் பூமியின் நடவடிக்கை களை கண்காணிக்கலாம். அதாவது பூமியின் ஏதாவதொரு இடத் தில் நடக்கும் சம்பவங்களை, சிக்னல்கள் அனுப்பியும் பெற்றும் கண் காணிக்க முடியும். சாதாரணமாக ஒரு தெருவில் கீழே கிடக்கும் ஒரு தபால் தலையின் அச்சிடப்பட்ட முகத்தைக் கூட பார்க்க முடி யும் என்பதே இதன் சிறப்பு. இந்த தொழில்நுட்ப உதவியைக் கொண் டு சீற்றங்களை முன் கூட்டியே அறியலாம். இந்தப் புவி ஆய்வு முறை யை ஆங்கிலத்தில் Global Positioning System (GPS) என்று அழைக் கிறார்கள்.
பூமி சூரியனைச் சுற்றுவது நமக்குத் தெரியும். அதேபோல் விண் வெளியின் மையத்தைச் சூரியன் சுற்றும். வட்டப் பதையில் இது நொ டிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றும். ஒரு முறை மையத் தைச் சுற்றி முடிக்க 250 மில்லியன் வருடங்களாகும். இது ஒரு காஸ் மிக் வருடம் (Cosmic year) எனப்படுகிறது.
இன்னும் நம் கண்களுக்குப் புலப்படாத பல அதிசயங்கள் வான் வெளியில் உள்ளன. எத்தனை எத்தனையோ புதுமைகள் கிடைக் கப்பெறலாம். வளர்ந்து வரும் விஞ்ஞானமே இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

டெங்கு ஜுரத்தை ஒழிக்கும் மரபணு மாற்ற கொசு!

Posted On Jan 28,2012,By Muthukumar


மலேரியா, யானைக் கால் நோய், மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட பல நோய்கள் உருவாகக் காரணமானவை கொசுக்கள்.
கொசுக்களால் உண்டாகும் ஆபத்தான நோய்களுள் முக்கியமானது டெங்கு ஜுரம். வருடம் ஒன்றுக்கு 5 கோடி முதல் 10 கோடி மக்கள் வரை டெங்கு ஜுரத்துக்கு பலியாகிறார்கள் என்று அதிர்ச்சியூட்டுகிறது சமீபத்திய புள்ளி விவரம். ஆனால், டெங்கு ஜுரத்துக்கு தடுப்பூசியோ அல்லது மருந்தோ இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது மேலும் அதிர்ச்சியான செய்தி.
டெங்கு ஜுரத்துக்கு பலியாகாமல் தப்பித்துக்கொள்ள தற்போது இருக்கும் ஒரே வழி, இதற்கு காரணமான கொசுக்களை ஒழித்துக்கட்டுவது. ஆனால் கொசுக்களோ, `டெங்குவுக்கு முன்னாடி நாங்க பரப்புன மலேரியாவுக்கே நீங்க இன்னும் மருந்து கண்டுபிடிக்கல, நீங்க எங்க எங்களை ஒழிச்சுக்கட்ட போறீங்க. போங்கப்பா போங்க, எங்கள ஒழிச்சுக்கட்ட முயற்சி பண்றத விட்டுட்டு போய் பொழப்ப பாருங்கப்பா' என்பது போல தெனாவெட்டாக, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் புதிய புதிய நோய்களை பரப்பிக்கொண்டு இருக்கின்றன.
இது ஒருபுறமிருக்க, கொசுக்கள் பரப்பும் உயிர்க்கொல்லி நோய்களை குணப்படுத்துவதா, அல்லது இந்த நோய்களை பரப்பும் அந்த கொசுக்களை ஒழித்துக்கட்டுவதா என்று விழிபிதுங்கிக் கொண்டிருக்கிறார்கள் ஆய்வாளர்களும் மருத்துவர்களும். இப்படிப்பட்ட சூழலில்தான், கொசுக்களை ஒழித்துக்கட்ட ஒரு புதிய மரபணு மாற்ற யுக்தியை கண்டுபிடித்துவிட்டோம் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் இங்கிலாந்து நாட்டின் ஆக்சிடெக் என்னும் நிறுவன ஆய்வாளர்கள்.
`தன் கைகளைக் கொண்டு தன் கண்களையே குத்திக்கொள்வது போல' என்றொரு பழமொழி உண்டு. கொசுக்களை ஒழித்துக்கட்டும் புதிய மரபணு மாற்ற யுக்தியில் இந்த பழமொழிதான் உண்மையாகி இருக்கிறது. அதாவது, ஒரு குறிப்பிட்ட வேதியியல் பொருளை உணவாக கொடுக்காவிட்டால் இறந்து போகும் வண்ணம் கொசுக்களில் மரபணு மாற்றம் செய்து, மரபணு மாற்ற கொசுக்கள் உருவாக்கப்பட்டன.
இந்த கொசுக்கள் புழுவாக இருக்கும் வரை, குறிப்பிட்ட அந்த வேதியியல் பொருள் உணவாக கொடுக்கப்பட்டு சோதனைக்கூடத்தில் வளர்க்கப்படும். வளர்ந்த பின்னர், மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஆண் கொசுக்கள் சுற்றுச்சூழலுக்குள் விடப்படும். இக்கொசுக்கள் சுற்றுச்சூழலிலுள்ள சாதாரண பெண் கொசுக்களுடன் சேர்ந்து இனப்பெருக்கம் செய்து, அதனால் உருவாகும் சந்ததிகள் எல்லாம், குறிப்பிட்ட அந்த வேதியியல் பொருள் உணவு இல்லாமல் இறந்து போகும். இதனால் காலப்போக்கில் கொசுக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துபோகும்.
இந்த ஆய்வு தொடர்பான சோதனையில், சுமார் 33 லட்சம் கொசுக்கள் சுற்றுச்சூழலுக்கு விடப்பட்டபோது, மொத்த கொசுக்களின் எண்ணிக்கையில் 80 சதவீதம் குறைந்துபோயின. ஆனால், கொசுக்களை ஒழித்துக்கட்ட மேற்கொள்ளப்பட்ட இதற்கு முந்தைய பல முயற்சிகள் பலனளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உதாரணமாக, காய்கறி மற்றும் பழங்களை சேதம் செய்யும் பழப்பூச்சிகளை கட்டுப்படுத்த, அந்த பூச்சி களிலுள்ள ஆண்களின் இனப்பெருக்க உறுப்புகள் செயலிழக்கம் செய்யப்பட்டு சுற்றுச்சூழலுக்கு விடப்பட்டன. இதனால் அவற்றின் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டு அவை அழிந்துபோயின. ஆனால் இதே யுக்தியை கொசுக்களில் பயன்படுத்தியபோது தோல்விதான் கிட்டியது. காரணம், இனப்பெருக்க உறுப்புகள் செயலிழக்கம் செய்யப்பட்ட ஆண் கொசுக்கள் எல்லாம் உடல் பலவீனப்பட்டு, சாதாரண கொசுக்களுடன் இணைந்து இனப்பெருக்கம் செய்யமுடியாமல் போனது. இதனால் கொசுக்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றமுமில்லை.
கொசுக்களைக் கொண்டே கொசு இனத்தை அழிக்க உதவும் இந்த மரபணு மாற்ற யுக்தி, டெங்குவால் பாதிக்கப்படும் கோடிக்கணக்கான மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. ஆனால் பாவம் இந்த கொசுக்கள், தங்கள் இனத்தையே அழிக்கப்போகும், ஆனால் தங்களுக்குள்ளேயே இருக்கும் கருப்பாடான, மரபணு மாற்ற கொசுக்களை பற்றி தெரியாமலேயே அவற்றுடன் கூடி, குடியும் குடித் தனமுமாக இருந்துவிட்டு மடிந்துபோகின்றன. எப்படியோ, டெங்குவுக்கு ஒரு தீர்வு கிடைத்தால் சரிதானே?

ஆன்லைனில் பஸ் டிக்கெட்டுகள்…

Posted On Jan 28,2012,By Muthukumar

ரெயில்களுக்கு இணையாக குளிர்சாதன வசதி, படுக்கை வசதி போன்றவற்றுடன் ஆம்னி (தனியார்) பஸ்கள் இயங்குகின்றன. ரெயில்களில் டிக்கெட் எடுக்க கடும் போட்டி நிலவுவதால், அதிக வசதிகள் கொண்ட ஆம்னி பஸ்களில் பயணம் செய்ய பலர் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த ஆம்னி பஸ்கள் பைபாஸ் சாலைகளில் பயணம் செய்வதால் குறிப்பிட்ட நேரத்தில் ஊர்களுக்கு செல்ல முடியும் என்ற நம்பிக்கை பயணிகளில் காணப்படுகிறது. இதனால் ஆம்னி பஸ்களில் சொகுசு பயணத்திற்கு அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
இந்த ஆம்னி பஸ்களில் பயணம் செய்ய டிக்கெட் எடுக்க ஒவ்வொரு பஸ் கம்பெனியாக ஏறி இறங்க வேண்டிய அவசியம் இப்போது இல்லை. ரெயில் டிக்கெட்டுகள் எடுக்க ஆன்லைன் வசதி இருப்பது போல ஆம்னி பஸ் டிக்கெட்டுகளையும் இணைய தளம் மூலம் ஆன்லைன் வசதியை பயன்படுத்தி எடுக்கலாம். இதற்காக ரெட் பஸ் (www.redbus.in), மேக் மை டிரிப் (www.makemytrip.com), டிக்கெட்கூஸ் (www.ticketgoose.com) போன்ற இணைய தளங்கள் உள்ளன. இது தவிர முன்னணி ஆம்னி பஸ் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் பெயர்களிலும் இணைய தளங்கள் மூலம் முன்பதிவு செய்யும் வசதியை அளிக்கின்றன. தமிழக அரசு விரைவு போக்குவரத்து சார்பிலும் ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இதற்கான இணைய முகவரி www.tnstc.in/TNSTCOnline/
ஆன்லைனில் பஸ் டிக்கெட்டுகள் வாங்குவது மிக எளிதானது. இத்தகைய பொது இணைய தளங்களில் நாம் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு செல்ல தேதியை குறிப்பிட்டு தேடினால், அந்த தேதியில் உள்ள அனைத்து ஆம்னி பஸ்களும் புறப்படும் நேரம், டிக்கெட் விலை, பஸ் வகை, பஸ் ஏறும் இடங்கள், காலி இருக்கைகளின் எண்ணிக்கை போன்ற விவரங்களை அறிந்து கொள்ள முடியும். நாம் விரும்பும் பஸ்சினை தேர்வு செய்தால் அந்த பஸ்ஸின் இருக்கை அமைப்பு உள்ள பக்கம் தோன்றுகிறது. அதில் நமக்கு விருப்பமான
இருக்கையை தேர்வு செய்யலாம்.
பிறகு, பயண விவரங்கள் அளித்து டிக்கெட் முன்பதிவு செய்யலாம். டிக்கெட் கட்டணத்தை கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, அல்லது நெட்
பாங்கிங் மூலம் செலுத்தலாம். இவ்வாறு வீட்டில் இருந்தபடியே அனைத்து பஸ்களிலும் அனைத்து ஊர்களுக்கும் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யலாம்.
சில சமயங்களில், பணம் நமது கார்டிலோ, பேங்க் அக்கவுண்டிலோ கழிக்கப்பட்டு, டிக்கெட் வழங்கப்படாமல் நடப்பதும் உண்டு. அத்தகைய நேரங்களில், சம்பந்தப்பட்ட இணையதளத்தில் இருந்து 7 முதல் 10 நாட்களுக்குள் பணம் மீண்டும் உங்கள் கணக்கிற்கு திருப்பி செலுத்தப்படும்.
மேலும் சில பஸ் நிறுவனங்கள் காகிதத்தை மிச்சப்படுத்தும் வகையில் மொபைல் டிக்கெட் என்ற புதிய வசதியையும் அறிமுகம் செய்துள்ளனர். இதன்படி நாம் ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்யும் போது அது தொடர்பான விவரங்கள் நமது மொபைல் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பி வைக்கப்படும். இந்த குறுந்தகவலை டிக்கெட் ஆக பயன்படுத்திக்கொள்ளலாம். பஸ்சில் பயணம் செய்யும் போது இந்த குறுந்தகவலை காட்டினால் போதும். இந்த வசதி மூலம் டிக்கெட் பிரிண்ட் எடுக்க காகிதம் செலவு செய்வதை தடுக்க முடியும். இது சுற்றுச்சூழலுக்கும் ஏற்ற வசதியாகும்.

காந்த புயல் பூமியை தாக்க தொடங்கி விட்டது – நாசா விஞ்ஞானி எச்சரிக்கை


சூரியனில் இருந்து வெடித்து சிதறிய காந்த புயல் பூமியை தாக்க வருகிறது என்று அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
சூரிய புயல் பூமியை நோக்கி பல கோடி மைல் வேகத்தில் வந்து கொ ண்டிருப்பதாகவும், இது செயற்கை கோள்களுக்கு பாதிப்பை ஏற்படுத் தும் எனவும், இதன்மூலம் கணணி, கைபேசி மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் பாதிக்கப்படும் என்று எச்சரித்து இருந்தனர். குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இந்த தாக்கு தல் அச்சம் அதிகம் இருந்தது.
இதனால் ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டு விமானங்கள் செல் லும் பாதைகளை தற்காலிகமாக மாற்றி அமைத்து இருந்தனர். இந்த காந்த புயல் பூமியை தாக்க தொடங்கி விட்டதாக விஞ்ஞானி கள் தெரிவித்துள்ளனர்.
சூரியனில் நேற்று முன் தினம் கரோனா பிளாஸ்மா கதிர்வீச்சு உருவாகி அன்றைய தினமே பூமி யின் காந்த மண்டலத்திற்குள் வந் துவிட்டதாக நாசா விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தினர்.
பூமியின் வடமுனையில் உள்ள அயர்லாந்து, இங்கிலாந்தின் வட பகுதியான ஸ்காட்லாந்து, நோர் வே ஆகிய நாடுகளை காந்த புயல் தாக்கியது. அப்போது வானில் நீலம் -பச்சை நிறம் கலந்த ஒளி வெள்ளம் காணப்பட்டது. மின்னல் போல் வானில் ஒளி பாய்ச்சுவது போல் காந்தப்புயல் தாக்கியது. இதை விஞ்ஞானிகள் அதிநவீன டெலஸ்கோப் மூலம் படம் பிடித்து வெளியிட்டுள்ளனர்.
பூமியின் வடமுனையில் ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபர் மற் றும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் இது போன்ற ஒளிவெள்ளம் தோன் றுவது வழக்கம். என்றாலும் இந்த முறை சூரிய காந்த புயலால் ஜன வரி மாதத்தில் இந்த ஒளி வெள்ளக்காட்சி தோன்றிய தாக தேசிய பெருங்கடல் மற்றும் வளி மண் டல நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சூரிய காந்த புயல் கதிர் வீச்சால் பூமியின் வடமுனையில் தகவல் தொடர்பு பாதிக் கப்படலாம் என கருதி அமெரிக்காவின் டெல்டா ஏர் லைன்ஸ் நிறு வனம் ஹாங்காங், ஷாங்காய், சியோல் ஆகிய நகரங்களில் இருந்து வரும் விமானங்களை தென் பகுதி வழியாக வரும்படி பாதைகளை மாற்றியுள்ளது.
 

Thursday 26 January 2012

முன்னதாகவே புற்றுநோயை கண்டுபிடிக்கும் கருவி

Posted On Jan 26,2012,By Muthukumar
நம் உடலிலுள்ள பல கோடி உயிரணுக்கள் ஒவ்வொன்றுக்கு உள்ளேயும் மிக மிக நுண்ணிய பகுதிகள் கொண்ட ஒரு அழகிய உலகம் உண்டு. `டி.என்.ஏ.' என்னும் மரபுப்பொருள்தான் இந்த அழகிய உலகின் ஆதார சுருதி!
இந்த டி.என்.ஏ.வில் ஏற்படும் சிறிய அளவிலான மாற்றங்கள் பல வருடங்கள் கழித்து புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களை தோற்றுவிக்கலாம். இத்தகைய மாற்றங்களை தொடக்கத்திலேயே கண்டறிந்து விட்டால், புற்றுநோய் மற்றும் அல்சீமர்ஸ் போன்ற நோய்கள் நம்மை தாக்கும் முன்பே பாதுகாத்துக் கொள்ளலாம்.
புற்றுநோய் போன்ற நோய்கள் முழுமையாக உடலை ஆட்கொள்ளும் முன்பு நம் உயிரணுக்களில் மூலக்கூறு அளவிலான பல வகையான மாற்றங்கள் ஏற்படுகின்றன.
உதாரணமாக, டி.என்.ஏ மற்றும் புரதங்களாலான `க்ரொமாட்டின்' எனும் ஒரு மூலக்கூறு டி.என்.ஏ.வை உயிரணுக்களிலுள்ள நியூக்ளியஸ் என்னும் மையப்பகுதிக்குள் பொருத்து கிறது. புற்றுநோய் ஏற்படுத்தும் காரணிகளாலான கார்சினோஜென்கள் மற்றும் அல்ட்ராவயலட் கதிர்கள் ஆகிய இரண்டும் இந்த க்ரொமாட்டின் மூலக்கூறில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.
புற்றுநோய் உபாதைகள் ஏற்படுவதற்கு பல வருடங்களுக்கு முன்பே க்ரொமாட்டினில் மாற்றங்கள் ஏற்பட்டுவிடுகின்றன. ஆனால் இந்த மாற்றங்களை தொடக்கத்திலேயே கண்டறியும் வசதி இதுவரை இல்லை.
ஏனென்றால் க்ரொமாட்டினில் ஏற்படும் மாற்றங்களின் அளவு வெறும் 400 நானோ மீட்டர்களே. (ஒரு நானோ மீட்டர் என்பது ஒரு மீட்டரில் 100 கோடியில் ஒரு பகுதி). இது ஒரு சாதாரண நுண்ணோக்கியில் (மைக்ராஸ்கோப்) பயன்படுத்தப்படும் ஒளியின் அலைநீளத்தை விட சிறியது என்பது குறிப்பிடத்தக்கது. ஒளியின் அலைநீளத்தைவிட சிறிய க்ரொமாட்டின் மாற்றங்களை, ஒரு சாதாரண மைக்ராஸ்கோப் மூலமாக பார்க்கும்போது அவற்றை துல்லியமாக இனம்கண்டு கொள்வது சாத்தியமில்லை. மாறாக, அவை ஒரு தெளிவற்ற புள்ளியாகவே தோன்றும் என்கிறார் அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக் கழகத்தின் மூத்த ஆய்வாளர் வாடிம் பாக்மேன்.
இந்த தெளிவற்ற புள்ளியிலுள்ள க்ரொமாட்டின் மாற்றங்களை துல்லியமாக கண்டறிய, `பார்ஷியல் வேவ் ஸ்பெக்ட்ராஸ்கோபிக் மைக்ராஸ்கோபி' (Partial Wave Spectroscopic (PWS) Microscopy) என்னும் புதிய வகை நுண்ணோக்கி தொழில்நுட்பத்தின் உதவியை நாடினார் ஆய்வாளர் வாடிம் பாக்மேன். இந்த நவீன நுண்ணோக்கி ஒரு ஒளிக்கற்றை, உயிரணுவை எப்படி எதிர்கொள்கிறது என்பதை காண உதவுகிறது. ஒளிக்கற்றையானது ஒரு உயிரணுவினுள் பயணிக்கும் போது அதனுள் இருக்கும் நுண்ணிய பகுதிகளை அவற்றின் அடர்த்தியின் அடிப்படையில் பிரதிபலிக்கிறது. அவ்வாறு பிரதிபலிக்கும் ஒளியைக் கொண்டு உயிரணுவினுள் இருக்கும் நானோ அளவிலான பகுதிகள் மறுகட்டமைப்பு செய்யப்படுகின்றன.
நவீன நுண்ணோக்கி, க்ரொமாட்டின் அடர்த்தியில் ஏற்படும் மாற்றங்களை துல்லியமாக கணக்கிடக்கூடியது. எனினும் பாக் மேன், நுரையீரல், பெருங்குடல், கணையம், சினைப்பை மற்றும் உணவுக்குழாய் புற்றுநோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் உடலிலுள்ள ஆரோக்கியமான உயிரணுக்களிலுள்ள க்ரொமாட்டின் அடர்த்திகள் வழக்கத்துக்கு மாறாக, வித்தியாசமாக இருக்கின்றன என்கிறார். இத்தகைய க்ரொமாட்டின் அடர்த்தி வித்தியாசங்கள் புற்றுநோயால் பாதிக்கப்படாதவர்களின் உயிரணுக்களில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய க்ரொமாட்டின் மாற்றங்களை கண்டறிவது மிகவும் எளிது. ஏனென்றால், இவ்வகை மாற்றங்கள் ஆரோக்கியமான மற்றும் எதிர்காலத்தில் புற்றுநோய் உயிரணுவாக மாறவிருக்கும் உயிரணுக்கள் என இரண்டிலும் ஏற்படக்கூடியவை.
நவீன நுண்ணோக்கியை பயன்படுத்தி, தாடையின் உட் புறமிருக்கும் உயிரணுக்களை பரிசோதனை செய்து, புகைப் பழக்கம் உள்ள 135 பேரில் எத்தனை பேருக்கு நுரையீரல் புற்றுநோய் இருக்கிறது, எத்தனை பேருக்கு இல்லை என்பதை கண்டறிந்திருக்கிறார் பாக்மேன்.
இந்த PWS நுண்ணோக்கி மிகவும் நவீனமானது, நம்பிக்கையானதும்கூட என்கிறார், ஆரோக்கியமான மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் உயிரணுக் களுக்கிடையிலான வித்தியாசங்களை அட்டாமிக் ஃபோர்ஸ் மைக்ராஸ்கோபி (Atomic Force Microscopy) என்னும் மற்றுமோர் நானோ நுண்ணோக்கி தொழில்நுட்பத்தை பயன்படுத்திவரும் அமெரிக்காவின் க்ளார்க்சன் பல்கலைக்கழக ஆய்வாளர் ஐகோர் சொகோலோவ்.
உயிரணுவின் உள்ளே சஞ்சரித்து அங்கே இருக்கும் நானோ அளவிலான நுண்ணிய பகுதிகளை துல்லியமாக வடிவமைக்க உதவும் எல்லா தொழில்நுட்பங்களும் நோய்களை கண்டறிவதற்கும், அவற்றை முழுமையாக புரிந்துகொள்வதற்கும் மிகவும் பயனுள்ளவை என்கிறார்கள் நானோ தொழில்நுட்ப ஆய்வாளர்கள்.

நீண்ட நாள் வாழ நல்லா முத்தம் கொடுங்க!

Posted On Jan 26,2012,by Muthukumar
காதலின் மொழி முத்தம். காதலர்கள் ஒருவருக்கொருவர் தங்களின் அன்பை பரிமாற பயன்படுத்தும் ஆயுதம். அந்த முத்தம் மனிதர்களுக்குள் எண்ணற்ற ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆர்வம் அதிகரிக்கும்
இந்தியாவில் காதல் திருமணம் செய்து கொண்டவர்களை விட வீட்டில் பெற்றோர் பேசி திருமணம் செய்து கொண்டவர்கள் அதிகம் முத்தமிட்டுக் கொள்வதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. வேலைக்குச் செல்லும் முன் தன் மனைவியை முத்தமிட்டுச் செல்பவர்கள் அப்படி செய்யாதவர்களை விட 5 ஆண்டுகள் கூடுதலாக ஆர்வமுடன் வேலை பார்த்ததாக அந்த ஆய்வு ஆச்சரியமான தகவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் பெண்கள் திருமணத்திற்கு முன்னர் 80 ஆண்களை முத்தமிட்டுள்ளதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
இதழோடு இதழை இணைத்து முத்தமிடுகையில் பரிமாபப்படும் எச்சிலில், புரதம், கொழுப்பு, ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. அதேசமயம் 5 மில்லியன் பாக்டீரியாக்களும் பரிமாறப்படுகிறதாம்.
தொப்பை குறையும்
ஒருமுறை முத்தமிடுவதால் முகத்தின் 29 தசைகள் இயங்கவைக்கப்படுகிறது. எவ்வளவுக்கு எவ்வளவு முத்தமிடுகிறோமோ அந்த அளவிற்கு முகத்தில் சுருக்கம் விழுவது தவிர்க்கப்படும். ஒருமுறை முத்தமிடுவதன் மூலம் உடலில் 3 கலோரிகள் வரை எரிக்கப்படுகிறதாம். அதேசமயம் லிப் கிஸ் என்றால் 5 கலோரிகள் வரை எரிக்கப்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குண்டாக இருப்பவர்கள் தொடர்ந்து ஒரு நிமிடம் முத்தமிடுவதன் மூலம் 26 கலோரிகள் எரிக்கப்படுகிறதாம். அதனால் தொப்பை குறைவதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன அழுத்தம் குறைகிறது
66 சதவிகிதம் பேர் முத்தமிடுகையில் தனது முகத்தை மூடிக்கொள்கின்றனர். மீதமுள்ள 34 சதவிகிதம் பேர்தான் கண்களைத் திறந்து தனது பார்ட்னரை பார்த்து முத்தமிடுகின்றனராம். முத்தமிடுவதால் பெண்களுக்கு மன அழுத்தம் குறைகிறது. அதேசமயம் ஆண்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கிறதாம்.

Wednesday 25 January 2012

கர்ச்சீப்

Posted On Jan 25,By Muthukumar



நாம் பயன்படுத்தும் கைக்குட்டைக்கு ஆங்கிலத்தில் `கர்ச்சீப்' என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா?
சீனாவில் வயல்வெளியில் வேலை செய்வோர் வெயிலில் இருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள தலைப்பாகை கட்டிக்கொள்வார்கள். சீனர்கள் அதை `கவுர் செப்' என்று குறிப்பிட்டனர்.
அதற்கு, தலையை மூடுவது என்று பொருள். அதுதான் ஆங்கிலத்தில் கர்ச்சீப் என்றானது. கையில் எடுத்துச் செல்லப்படுவதால் `ஹேண்ட் கர்ச்சீப்' (கைக்குட்டை) என்று வழங்கப்படுகிறது.

Monday 23 January 2012

நவ்காசனம்

Posted On Jan 23,2012,By Muthukumar


மனிதனின் உடலும் உள்ளமும் சீராக இருந்தால்தான் நீண்ட ஆரோக்கியத்தைப் பெற முடியும்.
இன்றைய நவீன சூழலில் மன அழுத்தம், கோபம், பயம், எதிர்கால நம்பிக்கையின்மை, பொறுமையின்மை, குறுக்கு வழியில் முன்னேறத் துடிப்பு என பல வகையில் இளைய தலை முறையினர் மாட்டிக்கொண்டு தவிக்கின்றனர்.
இவர்கள், தாங்கள் சாம்பாதிக்கும் பணம் வாழ்வின் அனைத்து சந்தோஷத்தையும் கொடுத்துவிடும் என்று எண்ணி இரவைப் பகலாக்கி உழைக்கின்றனர்.
மூளைக்கு வேலை கொடுப்பது மட்டுமே சிறந்தது என எண்ணி பொருள் தேடி கடைசியில் நோயின் பிடியில் சிக்கி மருந்து மாத்திரை என காலத்தைக் கழிக்கின்றனர். இத்தகைய மக்களின் பிரச்சனையைத் தீர்க்க இன்று பல இடங்களில் உடற்பயிற்சி கூடங்களும் யோகா பயிற்சி மையங்களும் அதிகம் முளைத்துள்ளன.
நீண்ட ஆரோக்கியம் பெற தினமும் அரை மணி நேரமாவது யோகா, தியானம் செய்வது சாலச் சிறந்தது.
யோகாவை பதஞ்சலி முனிவர் முதல் பல சித்தர்கள் வரை போதித்துள்ளனர். இவற்றில் நவ்காசனம் என்ற ஆசனமும் ஒன்று.
நவ்காசனத்தை படகு ஆசனம் என்றும் அழைக்கின்றனர். நவ்கா என்றால் படகு என்று அர்த்தம்.
செய்முறை
விரிப்பின் மீது கால்களை நீட்டி மல்லாந்து படுத்துக்கொள்ளவும்.
இரண்டு கால்களையும் படத்தில் காணப்படுவது போல் மெதுவாக மேலே தூக்கவும்.
அதேபோல் தலை, கழுத்தை மெதுவாக மேலே தூக்கவும். 600 அளவுக்கு உயர்த்தவும். இது பார்க்க படகு நீரில் மிதப்பது போன்ற தோற்றத்தைக் கொடுக்கும்.
கைகளை நேராக நீட்டிக்கொள்ளவும். மூச்சை சாதாரண நிலையில் வைத்துக்கொள்ளவும்.
பயன்கள்
· வயிற்றுத் தசைகள், உள் உறுப்புகளுக்கு பயிற்சி கொடுப்பதால் அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் போன்றவை நீங்கும்.
· வயிற்றில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைவதால் தொப்பை குறையும். வயிற்றுக்குத் தேவையான இரத்தம் சீராகச் செல்லும்.
· கணையத்தைத் துண்டி கணைய நீரை அதிகம் சுரக்கச் செய்கிறது. இதனால் நீரிழிவு நோய் போன்ற பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது.
· நரம்புத் தளர்ச்சியைப் போக்கி உடலுக்கு வலு கொடுக்கிறது.
· நுரையீரலைப் பலப்படுத்துகிறது. இதனால் ஆஸ்துமா போன்ற நோய்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைகிறது.
இளமையைக் காப்பதில் இவ்வாசனம் பெரும்பங்கு வகிக்கிறது.

பதற்றம் – மனித பலவீனம்


பதற்றம்! ஆங்கிலத்தில் இதனை Anxiety என்று குறிப்பிடுகின்றார் கள். அடுத்து என்ன நடந்திடுமோ என்ற பயம் கலந்த அச்சம். இது ஒரு மனித பலவீனம். இதனை நாம் வென்றாக வேண்டும்.
தனி மனித வாழ்விலும் சரி, குடும்ப வாழ்விலும் சரி, தொழில் துறை அல்லது பணியிடம் ஆனாலும் சரி, தொண்டனாக இருக்கும் போதும் சரி, தலைவர் பொறுப்பில் இருக்கும் போதும் சரி – இந்த பதற்றம் கூடவே கூடாது.
ஏனெனில் – பதற்றம் – நமது செயல் திறனை பாதிக்கும் (performance).
பதற்றம் – நமது முடிவெடுக்கும் திறனை பாதிக்கும் (interferes decision making).
பதற்றம் – எந்த ஒன்றிலும் நமது கவனத்தைக் குவித்திட இயலாமல் தடுக்கும் (shatters concentration).
எந்த ஒரு செயலையும் நாம் அழகே செய்து முடித்திட நிதானம் தேவை. அவசரம் கூடாது. பதற்றம் எந்த ஒரு காரியத்தையும் கெடுத்து விடும். பதறாத காரியம் சிதறாது என்பது முதுமொழி.
சாதாரண சூழலில் யாரும் பதற்றம் அடைய மாட்டார்கள் தான். ஆனால் சில அழுத்தம் தரும் சூழல்கள் (stressful situations) பதற்றத் தைக் கொண்டு வரலாம். அந்த சமயங்களில் நாம் எவ்வாறு நடந்து கொள்கி றோம் என்பதே நமது ஆளுமையை (personality) நிர்ணயிக் கும்.
இதோ பதற்றம் வரவழை க்கும் சூழல்களில் சில:
மாணவர்கள் தேர்வு எழு தும் முன்பு.
ஏதேனும் அவசியமான பொருள் ஒன்று அவசியமான நேரத்தில் தொலைந்து விட்டால்.
அவசிய வேலைக்குச் சென்று கொண்டிருக்கும் போது Traffic jam ஏற்பட்டால்.
புதிதாக ஒரு இடத்துக்குச் சென்றிருக்கும் போது.
முற்றிலும் புதிதான மனிதர்கள் (strangers) இருக்கும் இடத்தில்.
சொற்பொழிவுக்கு முன்னர்.
நேர்முகத் தேர்வுக்கு முன்னர் – நேர் முகத் தேர்வின் போது.
சரி, இப்படிப்பட்ட தருணங்களில் பதற்றம் தவிர்க்க என்ன வழி?
ஆசுவாசப் படுத்துதல் – Relaxation!
நன்றாக மூச்சை இழுத்து விடுதல்.
நகைச்சுவை உணர்வை வரவழைத்துக் கொள்ளுதல்.
“நல்லதே நடக்கும்” என்ற சிந்தனையை வலிந்து நினைத்தல்.
எது நம் கைகளில் இல்லையோ அது குறித்து கவலைப் படுவதைத் தவிர்த்தல்.
எது நம் கைகளில் உள்ளதோ அது குறித்து ஆகக் கூடிய காரியத்தில் இறங்குதல்.

Sunday 22 January 2012

தமிழ் எண்கள்

Posted On Jan 22,2012,By Muthukumar


நம்மில் பலருக்கு தமிழில் எழுத்துகள் இருப்பதைப் போல எண்களும் இருக்கின்றன என்பது தெரியாது.நாம் ஆங்கிலத்தின் பிடியில் சிக்கி நாட்கள் பல ஆகின்றன.சென்றதைப் பற்றி பேசுவதில் பலன் இல்லை என நினைப்பவன் நான்.இதுவரை அறியாததை அறிந்து கொள்ள வேண்டுமல்லவா.உங்களின் உதவிக்காக இந்த இடுகை.


நம்முடைய தமிழைப் பொருத்த வரை சுழிக்கென (பூஜ்ஜியத்திற்கென) தனியாக எண் இல்லை.அதற்கு பதிலாக 10,100 மற்றும் 1000க்கென தனியான எண்கள் உள்ளன.தமிழுடைய எண்களும் அதனுடைய எழுத்துக்களைப் போலவே இருக்கின்றன.சில எண்கள் தமிழ் எழுத்துகளின் பின்பமாக இருக்கின்றன.


எடுத்துக்காட்டாக 3782 என்பதை எடுத்துக் கொள்வோம்.இதை ௩௭௮௨ என்று நவீன முறைப்படியெல்லாம் எழுத முடியாது.அதற்கு பதிலாக ௩ ௲ ௭ ௱ ௮ ௰ ௨ என்று எழுதுவது சாலச் சிறந்தது.படிக்கும் போது எப்போதும் போல மூன்றாயிரத்து எழுநூற்றி என்பத்தி இரண்டு என படிக்கலாம்.


கீழே இருக்கும் பட்டியல் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.இதை படிப்பதோடு நிறுத்திவிடாதீர்கள்,பயண்பாட்டிற்கும் கொண்டு வாருங்கள்.


௧ = 1
௨ = 2
௩ = 3
௪ = 4
௫ = 5
௬ = 6
௭ = 7
௮ = 8
௯ = 9
௰ = 10
௰௧ = 11
௰௨ = 12
௰௩ = 13
௰௪ = 14
௰௫ = 15
௰௬ = 16
௰௭ = 17
௰௮ = 18
௰௯ = 19
௨௰ = 20
௱ = 100
௨௱ = 200
௩௱ = 300
௱௫௰௬ = 156
௲ = 1000
௲௧ = 1001
௲௪௰ = 1040
௮௲ = 8000
௰௲ = 10,000
௭௰௲ = 70,000
௯௰௲ = 90,000
௱௲ = 100,000 (lakh)
௮௱௲ = 800,000
௰௱௲ = 1,000,000 (10 lakhs)
௯௰௱௲ = 9,000,000
௱௱௲ = 10,000,000 (crore)
௰௱௱௲ = 100,000,000 (10 crore)
௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)
௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)
௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore)
௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)
௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore)

பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிப்ப‍து ஏன்? எதற்கு?


சமுதாயத்தைப் பொறுத்தவரை எந்த தவறையும் ஆண்கள் செய் யலாம். ஆனால் பெண்கள் செய் யக் கூடாது என்பது கட்டாயமாக் கப்பட்டுள்ள ஒரு விதி. ஆனால் இதை பெண் அடிமைத்தனம் என் று எடுத்துக் கொள்வதை விட, ஆண் செய்யும் தவறால் சமு தாயத்தில் எந்த பெரும் சிக்கலும் உருவாகாது. ஆனால் அதே தவறை பெண் செய்யும் போது பல கேள்விக்குறிகள் எழும்.
உதாரணமாக, ஒரு ஆண் திருமணத்திற்கு முன்பு உடலுறவில் ஈடுபடலாம். அதனால் அவனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால் ஒரு பெண் திரு மணத்திற்கு முன்பு உட லுறவில் ஈடுபடுவதால் கர்ப்பமுற நேரிடும். இத னால் அவள் பெற்றெடுக் கும் பிள்ளையின் எதிர் காலம் கேள்விக் குறியா கலாம்.
இதேப்போல, திருமண த்திற்குப் பிறகு ஆண் வேறு ஒரு பெண்ணு டன் வாழ்ந்தாலும் சமுதாயத்தில் இரண்டாம் தாரம் என்று பெயர் வைத்து விடுவார்கள். ஆனால் இதே ஒரு பெண் வேறு ஆணுடன் தொடர்பு கொண்டால், அது அந்த பெண் ணின் குடும்பத்தையே சீர்குலைத்து விடும்.
ஒரு ஆண் பிடித்த பெண்ணை பெற்றோ ருக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொள்ளலாம். அதற்கு அவன் காதலிச்ச பொண்ணைக் கட்டிக்கிட்டான் என்று சொல்வார்கள். ஆனால், ஒரு பெண் இதைச் செய்தால் அவள் ஓடிப் போய் விட்டாள் என்று கூறுவார்கள்.
இது போல ஒரு குடும்பத்தில் வாழும் பெண், தான் காதலிக்கும் ஆணை நம்பி வீட்டை விட்டு வெளியேறுவதால், அவள் வாழ்க்கை மட்டும் பாதிக்கப்படுவதில்லை, அந்த பெண்ணின் குடும்பத்தாரும் பல வழிகளில் பாதிக்கப்படுகிறார்கள்.
பெண் வீட்டை விட்டு ஓடுவதால் ஏற்படும் துக்கத்தை விட, அதனால் ஏற்படும் அவமானமே அவர்க ளை நிலைகுலையச் செய்து விடும். உற்றார், உறவினர்களுக் கும், அண்டை வீட்டாருக்கும், பெண் எங்கே என்று கேட்கும் கேள்விக்கு சொல்வதறியாது கலங்கும் பெற் றோரின் நிலை பரிதாபத்துக்குரியது.
சிலர் இந்த அவமானத்தை தாங்க இயலாமல் தற்கொலை வரை செல்வதுண்டு. சிலர் ஊரை காலி செய்து கொண்டு சென்று விடு வதும், பெற்றவர் வேலையை விட்டு விட்டு சிலர் இந்த அவமா னத்தை தாங்க இயலாமல் தற் கொலை வரை செல்வதுண்டு. சிலர் ஊரை காலி செய்து கொண்டு சென்று விடுவதும், பெற்றவர் வேலை யை விட்டு விட்டு வேறு ஒரு இடத்தில் வேலைக்குச் செல்வதும் உண்டு.
உங்கள் பெண் எங்கே என்று கேட்பவர் களுக்கு எந்த பெற்றோரால், என் மகள் காதலித்தவனை திருமணம் செய்து கொண்டாள் என்று சொல்ல முடி யும். கூனிக் குருகி அவர்கள் நிற்பதைக் கண்டு கேள்வி கேட்டவர்களே புரிந்து கொண்டால்தான் உண்டு.
இந்த நிலையில், வீட்டை விட்டு செல்லும் பெண்ணிற் கு திருமணமாகாத சகோதரி கள் இருப்பின், அவர்களது வாழ்க்கை இன்னும் மோச மாகிறது. திருமணத்திற்காக வரன் தேடும் போது கேட்கும் முதல் கேள்வி அவர்களது குடும்பத்தைப் பற்றியதுதான். அதில் இப்படி ஒரு சிக்கல் இருப்பின், மாப்பிள்ளை வீட்டார் சற்று தயக்கம் காட்டத்தான் செய் வார்கள். அக்காள் இப்படி என்றால் தங்கை எப்படி இருப்பாளோ என்று வாய்விட்டு பேசுபவர்க ளும் உண்டு.
சமுதாயத்தின் ஆணி வேரே பெண்தான். இதனால்தான் ஆணி வேர் எந்த வகையில் தவறு செய்ய நேர்ந்தாலும் அத னால் பாதிக்கப்படு வது முழு மரமும்தான் என்று பயந்துதான் பெண்களுக்கு இவ்வளவு கட்டு ப்பாடுகளையும் இந்த சமுதா யம் விதித்துள்ளது.