Sunday 12 August 2012

எந்தெந்த உணவுகளை சாப்பிட்டால் தலைவலி வரும் என்று உங்களுக்கு தெரியுமா?


இன்றைய காலத்தில் தலைவலி வராமல் இருக்கும் மனிதர்களை பார்க்கவே முடியாது. ஏனெனில் ஆரோக்கிய மற்ற வாழ்க்கைமுறை மற்றும் மன அழுத்த மே, அந்த தலைவலிக்கு காரணம் என்று நினைத்து வருத்தப்படுகின்றனர். ஆனால் அத னால் மட்டும் தலைவலி வரு வதில்லை, ஒரு சில உணவுகளை உண்பதாலும் தலைவலி வரும். சிலருக்கு உண்டப்பின் தலைவலி அதி கம் வரும், ஆனால் அப்போது அவர்கள் டென்சனால்தான் தலை வலி வருகின்றது என்று எண்ணுவர். மேலும் தலைவலி வரும்போ து அதற்கான மாத்திரைகளை அடிக்கடி போடுவர். ஆகவே இத்தகை ய தலைவலியை ஏற்படுத்தும் உணவுகள் என்ன என்பதை அறிந்து, அவற்றை அதிகமாக உண்பதை தவிர்த்து, தலைவலி ஏற்படாமல் தடுக்கலாமா!!!
சாக்லேட்: நிறைய பேருக்கு சாக்லேட் மிகவும் பிடித்ததாக இருக்கு ம் என்பதால், அவற்றை அடிக்கடி சாப்பிடுவார்கள். ஆனால் தற்போ து சாக்லேட் நிறைய ஆராய்ச்சியி ன்மூலம் சாக்லேட் கெட்டபெயரை வாங்கிக் கொண்டு வருகிறது. அத் தகைய ஒரு ஆராய்ச்சியில்தான், தலைவலியை ஏற்படுத்தும் உண வுப்பொருட்களில் சாக்லேட் ஒன்று என்று தெரியவந்துள்ளது. அந்த சாக்லேட்டில் இருக்கும் பினைல் தைலமின் மற்றும் தியோ புரோ மின் என்னும் பொருட்கள் உடலில் இருக்கும் இரத்தக் குழாய்களின் அளவை நீட்டிக்கச் செய்து, தலைவலியை ஏற்படுத்துகின்றன.
சீஸ்: சீஸ் கூட தலைவலியை ஏற்படுத்தும். ஏனெனில் சீஸில் இருக் கும் நொதிப்பொருளான தைரமின், உடலி ல் இரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும். அதன் விளைவு தலைவலியில் முடியும். அதிலும் பழைய சீஸில் அதிகமான அளவு தைரமின் இருக்கிறது. ஆகவே பழைய சீஸ் சாப்பிடுவதை தவிர்த்து, புதியதை எப்போதாவது மட்டும் சாப்பிட்டால் நல்ல து.
மதுபானம்: அனைத்து மதுபானங்களும் தலைவலியை ஏற்படுத்தும், அதிலும் ரெட் ஒயின் சொல்லவே வேண்டாம். ஏனெனில் மதுபானங் கள் இரத்த ஒட்டத்தை சரியாக அளவில் ஓடச் செய்யாமல், அதிக மான அளவில் மூளைக்கு பாயும் படிச்செய்யும் இதனால் தான், அதைக் குடித்தபின் வரும்தலை வ லியைத் தாங்க முடியாமல் இருக் கும். மேலும் ரெட்ஒயினில் தலை வலியை ஏற்படுத்தும் பொருட்களில் ஒன்றான சல்பைட் அளவுக்கு அதிகமாக உள்ளது.
காபி: அலுவலகங்களில் தலைவலி குறையும் என்று நினைத்து, காபியை அதிகம் குடிப்பர். ஆனால் அது முற்றி லும் தவறு. காபியில் இருக்கும் காப்பைன் என் னும் பொருள் மெக்னீசியமாக உடலில் மாறும் போது, தலைவலி வரும். அதிலும் அதிக அளவு காபி குடித்தால், அதிகளவு தலைவலியானது வரக்கூடும்.
ஐஸ் கிரீம்: ஐஸ் கிரீம் என்று சொன்னால் யாரும் ஒப்புக்கொள்ள மா ட்டீர்கள். ஏனெனில் அதை சாப்பிடக்கூடாது என்று சொல்லி விடு வார்களோ. உங்களுக்கே தெரிகிறது, பின்னர் என்ன? உண்மையில் நாம் ஐஸ் கிரீமை அல்லது ஐஸ் கலந்த பானங்க ளை உடல் சூடாக இருக்கும் போது குடிப்போம். இதனால் உடலில் இருக்கும் இரத்தக் குழாய்க ள் சுருங்கி விடுகின்றன. ஆகவே அப்போது போதிய இரத்த சுழற்சி ஏற்படுவதில்லை. இத னால் தலைவலி ஏற்படுகிறது.
சோயா சாஸ்: இப்போதெல்லம் நிறைய உணவுகளில் சுவைக்காக சோயா சாஸ் பயன்படுத்துகின்றனர். இவ் வாறு அதிகளவு சோயா சாஸ் கலந்துள்ள உணவுகளை உண்டால், தலைவலி ஏற்படு ம். மேலும் சோயாசாஸில் மோனோ சோடி யம் குளுட்டமேட் என்னும் பொருள் உள்ள து. இது தலைவலியை ஏற்படுத்தும். அது மட்டுமல்லாமல், சோயா சாஸில் அதிகள வு உப்பு உள்ளது, இது உடலில் வறட்சியை ஏற்படுத்தி, தலைவலியை உண்டாக்கு ம்.
ஆகவே தலைவலியால் அவஸ்தைப்படுகிறீர்கள் என்றால், மேற் கூறிய உணவுகளையெல்லாம் அதிக அளவு உண்ணாமல் இருந்தா ல், ஆரோக்கியமாக வாழலாம்.

காலை உணவு

Posted On Aug 12,2012,By Muthukumar
உணவின் மகத்துவம் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் ஒவ்வொரு வேளை உணவும் உடலுக்கு எப்படி அவசியமாகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
Photo: காலை உணவை தவிர்க்காதீர்கள்!

உணவின் மகத்துவம் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் ஒவ்வொரு வேளை உணவும் உடலுக்கு எப்படி அவசியமாகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

காலை:

காலை உணவு உடலுக்கும், மூளைக்கும் சிறந்த ஊட்டச்சத்தாகும். காலை உணவு சாப்பிடாவிட்டால் மூளை சுறுசுறுப்பை இழப்பதால் நீங்களும் சோர்வடைந்து விடுவீர்கள். மேலும் இடைவேளை நேரத்தில் தேவையில்லாமல் எதையாவது சாப்பிடத் தூண்டும். பிறகு மதியசாப்பாடு சாப்பிட வேண்டிய நேரத்தில் பசியின்மையும், சலிப்பும் ஏற்படும். இதனால் மதிய சாப்பாடும் தடைப்படலாம்.

சிலர் காலை சாப்பாட்டை குறைப்பதன் மூலம் உடல் எடையை கட்டுப்படுத்தலாம் என்று நினைப்பதுண்டு. தவறாமல் காலை உணவை சாப்பிட்டாலே உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதுதான் உண்மை.

காலையில் பணிகள் செய்யத் தொடங்குவதால் உடலுக்கு புரதம் மற்றும் நார்ச்சத்து அவசியம். எனவே கொழுப்பு குறைந்த மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை உண்ணலாம். முட்டை, பீன்ஸ், பால் பொருட்களை சாப்பிடலாம். முளைகட்டிய தானியம், கொட்டை வகைகள், காய்கறி மற்றும் பழங்களும் காலையில் சாப்பிட ஏற்றது.

மதியம்:

மதிய உணவு சரியாக 12.30 மணியில் இருந்து 1.30 மணிக்குள்ளாக சாப்பிடுவது அவசியம். நமக்கு பெரும்பாலான வியாதிகள் வரக்காரணமே காலம் தவறி சாப்பிடுவது மற்றும் கண்டதையும் சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக்கொள்வதால் தான். எனவே சாப்பாட்டு நேரத்தை ஒழுங்காக கடைப்பிடித்தால் சில வியாதிகளை கட்டுப்படுத்த முடியும்.

காலை உணவுக்குப் பின் சிலர் நொறுக்குத் தீனி, டீ, ஜூஸ் என்று கண்டதையும் சாப்பிடுகிறார்கள். இது மதிய உணவை தள்ளிப் போடச் செய்யும். மதிய உணவும் உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது. ஏனெனில் நாம் பகல் முழுவதும் உழைப்பதால் உடலுக்கு சக்தி தேவை. அதற்கு மதிய உணவுதான் சரியானது. எனவே எக்காரணத்தைக் கொண்டும் மதிய உணவை தவற விடாதீர்கள்.

மதிய உணவுக்குப் பிறகு சிறிது பழ ஜூஸ் குடிக்கலாம். எலுமிச்சை, ஆப்பிள், திராட்சை ஜூஸ் போன்றவை நல்லது. மதிய உணவு தரமானதாக இருக்க வேண்டும். முழு வயிற்றுக்கும் சாப்பிட வேண்டும். தரமற்ற உணவுகள் செரிமானம் ஆகாமல் பாதிப்பை ஏற்படுத்தும். உடல் எடை கூடவும் வாய்ப்புள்ளது.

இரவு:

இரவு உணவு நல்ல தூக்கத்திற்கு வழி வகுக்கும். பெற்றோருடன் ஒன்றாக அமர்ந்து இரவு உணவை சாப்பிடுவது சிறந்த பலன்களை தருவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. மாதத்தில் அதிக நாட்கள் பெற்றோருடன் அமர்ந்து சாப்பிட்ட பருமனான குழந்தைகளின் எடை 15 சதவீதம் குறைந்திருந்தது. இதற்கு பெற்றோரின் கண்டிப்பும், கண்காணிப்பும் ஒரு காரணம்.

மற்றொரு ஆய்வு, "பெற்றோருடன் ஒன்றாக இரவு சாப்பாடு சாப்பிடும் பழக்கமுள்ள டீன்ஏஜ் குழந்தைகள் மது, போதை போன்ற தவறான பழக்கத்தின் பக்கம் செல்வதில்லை" என்று கூறுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வழக்கத்தைவிட ஒரு மணி நேரம் முன்பாக இரவு உணவைச் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

இரவு பெரும்பாலும் ஓய்வுதான் என்பதால் அளவோடு உணவு சாப்பிட்டால் போதுமானது. வேலை செய்பவர்களாக இருந்தால் இரவில் புரோட்டா போன்ற கடினமான உணவுகளை உண்ணலாம். குழந்தைகள், தூங்கச் செல்பவர்களுக்கு சப்பாத்தி, இட்லி போன்ற உணவுகளே போதுமானது.

காலை:
காலை உணவு உடலுக்கும், மூளைக்கும் சிறந்த ஊட்டச்சத்தாகும். காலை உணவு சாப்பிடாவிட்டால் மூளை சுறுசுறுப்பை இழப்பதால் நீங்களும் சோர்வடைந்து விடுவீர்கள். மேலும் இடைவேளை நேரத்தில் தேவையில்லாமல் எதையாவது சாப்பிடத் தூண்டும். பிறகு மதியசாப்பாடு சாப்பிட வேண்டிய நேரத்தில் பசியின்மையும், சலிப்பும் ஏற்படும். இதனால் மதிய சாப்பாடும் தடைப்படலாம்.

சிலர் காலை சாப்பாட்டை குறைப்பதன் மூலம் உடல் எடையை கட்டுப்படுத்தலாம் என்று நினைப்பதுண்டு. தவறாமல் காலை உணவை சாப்பிட்டாலே உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதுதான் உண்மை.

காலையில் பணிகள் செய்யத் தொடங்குவதால் உடலுக்கு புரதம் மற்றும் நார்ச்சத்து அவசியம். எனவே கொழுப்பு குறைந்த மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை உண்ணலாம். முட்டை, பீன்ஸ், பால் பொருட்களை சாப்பிடலாம். முளைகட்டிய தானியம், கொட்டை வகைகள், காய்கறி மற்றும் பழங்களும் காலையில் சாப்பிட ஏற்றது.

மதியம்:

மதிய உணவு சரியாக 12.30 மணியில் இருந்து 1.30 மணிக்குள்ளாக சாப்பிடுவது அவசியம். நமக்கு பெரும்பாலான வியாதிகள் வரக்காரணமே காலம் தவறி சாப்பிடுவது மற்றும் கண்டதையும் சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக்கொள்வதால் தான். எனவே சாப்பாட்டு நேரத்தை ஒழுங்காக கடைப்பிடித்தால் சில வியாதிகளை கட்டுப்படுத்த முடியும்.

காலை உணவுக்குப் பின் சிலர் நொறுக்குத் தீனி, டீ, ஜூஸ் என்று கண்டதையும் சாப்பிடுகிறார்கள். இது மதிய உணவை தள்ளிப் போடச் செய்யும். மதிய உணவும் உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது. ஏனெனில் நாம் பகல் முழுவதும் உழைப்பதால் உடலுக்கு சக்தி தேவை. அதற்கு மதிய உணவுதான் சரியானது. எனவே எக்காரணத்தைக் கொண்டும் மதிய உணவை தவற விடாதீர்கள்.

மதிய உணவுக்குப் பிறகு சிறிது பழ ஜூஸ் குடிக்கலாம். எலுமிச்சை, ஆப்பிள், திராட்சை ஜூஸ் போன்றவை நல்லது. மதிய உணவு தரமானதாக இருக்க வேண்டும். முழு வயிற்றுக்கும் சாப்பிட வேண்டும். தரமற்ற உணவுகள் செரிமானம் ஆகாமல் பாதிப்பை ஏற்படுத்தும். உடல் எடை கூடவும் வாய்ப்புள்ளது.

இரவு:

இரவு உணவு நல்ல தூக்கத்திற்கு வழி வகுக்கும். பெற்றோருடன் ஒன்றாக அமர்ந்து இரவு உணவை சாப்பிடுவது சிறந்த பலன்களை தருவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. மாதத்தில் அதிக நாட்கள் பெற்றோருடன் அமர்ந்து சாப்பிட்ட பருமனான குழந்தைகளின் எடை 15 சதவீதம் குறைந்திருந்தது. இதற்கு பெற்றோரின் கண்டிப்பும், கண்காணிப்பும் ஒரு காரணம்.

மற்றொரு ஆய்வு, "பெற்றோருடன் ஒன்றாக இரவு சாப்பாடு சாப்பிடும் பழக்கமுள்ள டீன்ஏஜ் குழந்தைகள் மது, போதை போன்ற தவறான பழக்கத்தின் பக்கம் செல்வதில்லை" என்று கூறுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வழக்கத்தைவிட ஒரு மணி நேரம் முன்பாக இரவு உணவைச் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

இரவு பெரும்பாலும் ஓய்வுதான் என்பதால் அளவோடு உணவு சாப்பிட்டால் போதுமானது. வேலை செய்பவர்களாக இருந்தால் இரவில் புரோட்டா போன்ற கடினமான உணவுகளை உண்ணலாம். குழந்தைகள், தூங்கச் செல்பவர்களுக்கு சப்பாத்தி, இட்லி போன்ற உணவுகளே போதுமானது.
 

காக்க… காக்க… கிட்னி காக்க!

Posted On Aug 12,2012,By Muthukumar
நம் வாழ்க்கை முறை, ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், உணவுப் பழக்கம், பரம்பரை காரணமாக, சிறுநீரக நோய்கள் நம்மை தாக்குகின்றன. இந்திய இளைஞர்களில் அதிக சதவீதத்தினர், சிறுநீரக அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ""நம் வாழ்க்கை முறைகளால், 20 முதல் 40 வயதிற்குட்பட்ட இளைஞர்களை, வெகுவாக பாதிக்கிறது, ஐ.ஜி.ஏ., நெப்ரோபதி என்ற நோய். உலகில், ஜப்பானுக்கு அடுத்த படியாக, நம் நாட்டிலும், சீனாவிலும், இந்நோயால் அவதிப்படுவோர் ஏராளம்,'' என்ற அதிர்ச்சி தகவலை தருகிறார், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சிறுநீரகவியல் துறை தலைமை நிபுணர், டாக்டர் கே. சம்பத் குமார்.
இத்துறையில், 20 ஆண்டுகால அனுபவம் பெற்ற இவர், தென் மாவட்டங்களில் மக்களை பாதித்திருக்கும் சிறுநீரக நோய்கள் பற்றி ஆய்வு செய்தவர். வெளிநாட்டில் பல்வேறு கருத்தரங்குகளில், சிறுநீரக நோய்கள் தொடர்பாக, ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்தவர். இளைஞர்களை தாக்குகிறது டாக்டர் சம்பத் குமார் கூறியதாவது: சிறுநீரக நோய்கள் தொடர்பாக, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. எனினும், புதுப் புது ஆராய்ச்சிகள் காரணமாக, நோய்கள் பற்றி நிறைய விஷயங்கள் தெரிய வருகின்றன. நம் வாழ்க்கை முறை, ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், உணவுப் பழக்கம், பரம்பரை காரணமாக, சிறுநீரக நோய்கள் நம்மை தாக்குகின்றன. இந்திய இளைஞர்களில் அதிக சதவீதத்தினர், சிறுநீரக அழற்சி நோயால் (ஐ.ஜி.ஏ., நெப்ரோபதி) பாதிக்கப்பட்டுள்ளனர். ஜப்பான் பள்ளிகளில், இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
வாழ்க்கை முறையில் மாற்றம்: இந்நோயின் ஆரம்ப அறிகுறியாக, ரத்தத்தில் அலர்ஜி உருவாகி, சிறுநீரில் ரத்தக்கசிவு ஏற்படும். இந்த நோய் தாக்கிய பத்தாண்டுகளில், சிறுநீரகம் முழுமையாக பாதிக்கப்படும். சிறுநீரைச் சோதனை செய்வதன் மூலம், இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால், மாத்திரைகள் மூலம் குணமாக்க முடியும். இந்த நோய்க்கான காரணம், முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் நம் வாழ்க்கை முறைகள் காரணம். உணவில் உப்பை குறைப்பது, ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைப்பது, உடல் பருமனை குறைப்பது போன்றவை பயன்தரும். இளைய தலைமுறையினர், மைதா உணவினை தவிர்ப்பது அவசியம். இதில், கணையத்தைத் தாக்கும், மூலப்பொருள் உள்ளது. அசைவ உணவுகளை அதிகம் சாப்பிடும் போது, யூரிக் அமிலம் உருவாகி, சிறுநீரக கல் ஏற்படும். சிறுநீரக கல் பெரிதானால், அது இரண்டு கிட்னியையும் அடைத்து விடும். வயிற்றில் வலி, ரத்தக்கசிவு ஏற்படும். ரத்தத்தில் யூரியா, கிரியாட்டின் அளவை, ஆண்டிற்கு ஒரு முறை, தரமான ஆய்வகத்தில் சோதிக்க வேண்டும். ஆண்டிற்கு ஒரு முறை, சிறுநீர் பரிசோதனை செய்வது அவசியம். முப்பது வயதிற்குள், ரத்த அழுத்த நோய் இருந்தால், சிறுநீரக பாதிப்பு ஏதும் உள்ளதா என, பரிசோதிப்பது அவசியம். சர்க்கரை நோய் உள்ள, 100 பேரில், 40 பேருக்கு பத்தாண்டுகளில் சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறது. இவ்வாறு டாக்டர் சம்பத் குமார் கூறினார்.