Saturday 10 September 2011

சுயமாய் விந்து வெளியேற்றல் பற்றிய கேள்விகளும் பதில்களும்


சுயமாய் விந்து வெளியேற்றல் பற்றிய கேள்விகளும் பதில்களும்

ஓர் இணையத்தில் வெளிவந்த மருத்துவக் கட்டுரை
தமது பிறப்புறுப்பைத் தாமே தூண்டி உணர்ச்சியின் உச்சக் கட் டத்தை அடைந்து பாலியல் பதட்டத்தை தணிக்கின்றனர். அநேக பையன்கள் ஓரளவுக்குச் சுயமாகவே விந்து வெளி யேற்றம் செய்கின்றனர். பெண்களும் கூடத் தம் பிறப்புறுப்போடு இப்படித்தான் செய்கின்றனர்.
பாலியல் உறவின் உச்சக் கட்டம் அடை வது என்றால் என்ன?
பாலியல் உறவின் உச்சக் கட்டம் அடை வது என்பது ஆணுக்கு விந்து வெளியே பாயும் கட்டம். இன்பத்தை அடைந்து விடத் துடிக்கும் நிலை. தவறுதலாக விந்தை வெளியேற்றி விட்டால் அடை ய வேண்டிய பாலியல் நிலைகளை அடைய இயலாது போய் விடுவர். ஆகவே விந்து வெளியேற்றம் என்பது பாலியல் உறவின் உச்சக்கட்டம் அடைந்த நிலை ஆகாது.
இது போலவே பெண்களின் பாலியல் உறவின் உச்சக் கட்டம் என்பது யோனித் துவாரத்தசைகள் சுருக்கம் அடைந்து சுழற்சி யுற்று இன்பத்தின் உச்சக் கட்டத்தை அடைகிறது. பெண்களுக்கு யோனியின் உட்புறத்தில் உணர்ச்சித் தூண்டல்கள் இரு ப்பதில்லை. யோனித் துவார வாயிலுள்ள சவ்வுதான் உண ர்வின் உச்சக் கட்டத்தை அடைகிறது. (இதுவே ஆணின் பாலியல் புற உறுப்புப் போல உள்ளது. ஆனால் மிகவும் சிறி யது)
ஆகவே சுயமாக விந்தை வெளியேற்றுவது தவறல்ல
சாதாரணமாக இதனை விருந்தினர் முன்பாகச் செய்யமாட்டீர்கள். ஆனால் இது சாதாரணானதே. இதனால் தீங்கு ஒன்றுமில்லை.
இதனை பருவமானவர் மட்டும் செய்வார்கள் என்றில்லை. நடக்கக் கூடிய நிலைக்கு வராத சிறு குழந்தைகள் கூடத் தமது ஆண் பாலி யல் உறுப்புடன் விளையாடுவார்கள். இதற்கும் பாலியல் வேட்கை க்கும் எவ்வித தொடர்பும் இல்லை. விரக்தியை வெளிப்படுத்தும் ஓர் அம்சமே. இது பாலியல் பிரச்சினை என்று கொள்ள இயலாது. விருப்பம் இல்லாத ஆசிரியர் ஒருவரோடு பழ குகின்ற நிலையே. விரைவில் பிள் ளைகள் சுயமாக விந்தை வெளியே ற்றுவது நல்லதோர் உணர்வைத் தருகிறது என்றும் சலிப்பு ஏற்படு வதை நீக்கும் நிவாரணி ஒன்று என்றும் கருதுகிறார்கள். பல மாதங்க ளுக்கு இதனைத் தொடராதே இருப் பர்.
ஏன் பெற்றோர் சுயமாக விந்தை வெளியேற்றுவதைத் தவறு என்கி றார்கள்?
பிள்ளை ஓமோன்களால் வழி நடத்திச் செல்லும் போது பெற் றோர்களால் தம்பிள்ளைகளைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திரு க்க முடிவதில்லை. பிள்ளைகளில் பெரியமாற்றம் ஏற்படுகிறது. பிள்ளை மாற்றம் காரணமாக பருவமாகி ன்றபோது பாலியல் உந்தல்களுக்கு ஆட் பட்டு விடக்கூடாதே என்று நினைத்து பெற்றோர்கள் பிள்ளைகளை அடக்கி ஆள முயலுகிறார்கள். எல்லாப் பெற்றோர் களுக்குமே இப்படிப்பட்ட போக்கு இருப்ப தில்லை. பிள்ளைகளின் விந்து வெளி யேற்றும் போக்கு பெற்றோர்களுக்குத் தெரிவதில்லை.
மற்றது பெற்றோரின் பாலியல் வேட்கை தணிந்து வரும்பொழுது பிள்ளைகள் பருவ மாகியவர்கள் விந்து வெளியேற்ற ஆரம்பிக்கின்றார்கள். பருவம் ஆனவர் களுக்கு பாலியல் தாகம் தம்மைப் போலக் குறைவாக இல்லையே என்று பெற்றோர் நினைக்கிறார்கள்.
வருத்தமான சம்பவம் அல்லது விஷயம் என்னவென்றால், பாலி யல் உந்தல்கள் வெட்கப்படத்தக்கவை என்றும் தூய்மையற்ற செயல் என்றும் கருத்து புகுத்தப்பட்டுள்ளதால் பருவம் ஆனவர் களின் பாலியல் செயல்பாடு கட்டுப்படுத்தப்படுகிறது.
click me
விந்தை வெளியேற்றுவது பையன் களைப் பலமற்றவர்கள் ஆக்கிவி டாது. ஆனால் விந்து வெளியேறிய பின் களைப்பு தோன்றுகிறது. எந்த உடற்பயிற்சிக்குப் பிறகும் இது தானே நடப்பது. களைப்புத்தன்மை தற்காலிகமானதே. சுயமாய் விந்து வெளியேற்றுவதனால் வளர்ச்சி குன்றிவிடாது. ஆணுறுப்பு சிறுத்து விடாது. சுயமாக விந்து வெளி யேற்றுவது பாலியல் உந்தலின் ஒரு அம்சமே. இதனை ஏற்படுத்துவது அன்ட்றோஜன் என்னும் ஓமோனின் செயல்பாடே. இதுவே வளர்ச் சிக்கும் பாலியல் வேட்கைக் கும் காரணமாகும்.
பாலியல் உறவுக்குப் பிறகு மனிதர் சிறிது நேரம் உறங்க விரு ம்புகிறார்கள். அதுபோலவே சுயமாக விந்தை வெளியேற்றியபின் படுத்துறங்க விரும்புகிறார்கள். பெண்களும் பாலுறவுக்குப் பின் படுத்திருந்தால் யோனிக்குள் புகுந்த விந்து வெளியில் சிந்திப் போகாது. அவர்களுக்கும் பாலுறவுக்குப் பிறகு சற்று களைப்புத் தோன்றும். இத்தகைய களைப்புத் தன்மைதான் கருப்பம் தரிக்க உதவி புரிகிறது.
விந்து வெளியேறியதும் ஓய்வு கொ ண்டால் தான் மறுபடியும் ஆண் உறுப்பு புடைத்தெழும் என்பதில்லை. அடுத்த புடைத்தெழும் நிகழ்வு சில நிமிட நேரங் களுக்குள் அல்லது சில மணி நேரங் களுக்குள் ஏற்பட்டு விடும். இது பாலு ணர்வு அற்ற நிலைக்குக் கொண்டு சென் று விடும் என்பதும் இல்லை. முழுநாளும் எந்திரங்களைப்போல இதைத்தான் செய் து கொண்டிருக்க வேண்டும் என்பதில் லை. உங்களுக்கு வேறு பல வேலை களும் உண்டு.
அநேக விளையாட்டு வீரர்கள் பெரிய விளையாட்டுப் போட்டி க்குமுன் பாலியல் உறவில் ஈடுபடக் கூடாது என்று நினைப்பதேன்?
அவர்கள் பாலியல் உறவுகொள்வதை யோ சுயமாகவோ விந்து வெளியேறு வதையோ விரும்புவதில்லை. இத னால் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு நன்மை இருக்கிறது. பாலியல் உறவில் ஈடுபடவில்லையே என்ற ஆத்திரத்தில் ஆவேசமாக விளையாட இடமுண்டு. இன்பம் துய்த்த சந்தோசத்தோடு விளையாடச் சென்றால் வெற்றி வாய்ப்பை இழந்துவிடுவார்கள்.
சுய வெளியேற்றத்தின் பயனால் விந்தின் தொகை குறைந்து விடுமா?
ஒன்றன் பின் ஒன்றாகப் பலமுறை வெளியேறினால் தொகை கு றையக் கூடும். சில தினங்களுக்கு தடிப் பாக இருக்கும். வெளியேற்றப்படாதிரு ந்தால் இது எல்லா வெளியேற்றங்களு க்கும் பொருந்தும். சுயமாக வெளியேற் றும் போது நீங்கள் விந்துவின் தன்மை யை அறிந்து கொள்ள இயலும். அதே வேளை பாலியல் உறவு கொள்ளும் போது வெளியேறுவது கண்ணுக்குப் புலப்படாது. நீங் கள் சுயமாக விந்தை வெளியேற்றுவதில்லை. ஏனெனில் விந் தை மீதப்படுத்தவிரும்புகிறீர்கள். விந் தை ஆண்தன்மையே அற்ற கணவன் மார்களின் மனைவியருக்கு செயற்கை சினைப்படுத்தல் செய்ய தானம் செய்ய விரும்புகிறீர்கள். நீங்கள் சுயமாக விந்தை வெளியேற்றுகிறீர்கள் அவ்விதம் செய்ய விரும் புவதால் கவலைப்பட வேண்டாம். சில மணி நேரங்களில் சகஜமான தொகையை மீண்டும் பெற்றுவிடுவீர்கள். உங்கள் விந்து எண்ணிக்கைக்கு ஏற்ப சுயமாக விந்தை வெளியேற்றுவதால் பாலியலில் ஈடுபடத் தகுதியற்றவர்கள் ஆகிவிடமாட்டீர்கள். குழந்தைகளை உருவாக்கும் ஆசை யும் முயற்சியும் அற்றுப் போகாது.
ஒன்றை மற்றதாக்குவது என்றால் என்ன?
பாலியல் உறவுமூலமோ அல்லது சுயவெளியேற்றுதல் முறை மூல மோ விந்தை வெளிவர விடாது பாலியல் உறவைத் திசை திருப்பும் நோக்கில் விளையாட்டிலோ சங்கீ தத்திலோ இலக்கிய முயற்சியிலோ திசை திருப்பி விடலாகும். விரக்தி முயற்சிக்கு உத்வேகம் ஊட்டுகிறது.
திசை திருப்பிவிடுவது பாலியல் உறவாலோ சுயமாகவோ விந்து வெளியேற்றுவதைத் தவறான செயல் என்ற கருத்தினைக் கொண் டதாலோ அல்ல. திசை திருப்பி விடுவது இரண்டாம் வகைச் செய லாகவே கருதுகிறார்கள்.
இது பிரம்மச்ரியத்தைப் போன்ற செயல்தானா?
அப்படி ஒன்றும் இல்லை. ஆரம்ப கட்டங்களில் பிரம்மச்சரிய பயி ற்சி பெறும் இளம் வயதினர் விரக்தி நிலை அடைவர்.
பிரம்மசாரியாவது பற் றிய இந்து சமயக் கொ ள்கை என்ன வென்றால் இதில் ஈடுபடுவோர் பா லியல் உணர்வுகளை ஒதுக்கி விட வேண்டும் என்பதாகும். சிற்றின் பம் மிருகங்களுக்கே உரியது. இதை விட உய ர்வான பேரின்பம் பிரமச்சரியத்தால் கிடைக்கின்றது எனப்படும்.
ஒரு துளி விந்து நூறு துளி இரத்தத்திற்குச் சமம் என்கின்ற கருத்து உணர்த்துவது என்ன?
இதுவும் ஒரு மூடநம்பிக்கைதான். முன்னொரு காலத்தில் பூமி தட்டையானது என்று ஒரு கருத்து நில வியது. புதிய தகவல்களின் அடிப்ப டையில் இக்கருத்துகள் தவறானது என்று அறிந்து கொண்டனர்.
உண்மையில் உங்கள் உடல் விந்தைத் தயாரித்தபடி இருக்கும். நீங்கள் சுய மாகவோ பாலியல் உறவு மூலமாக வோ விந்தை வெளியேற்றாவிட்டால் தேக்கம் ஏற்பட்டு தொகை பெருகி இரவில் கனவில் பாலியல் சிந்தனை ஓங்கி படுக்கையை ஈரமாக்குகின்றனர். இதனை ஈரமாக்கிய கனவு என்பர். இத்தகைய வீணடிப்புக்களைப்பற்றி இயற்கை பதட்டப்படுவதில்லை. ஒவ்வொரு முறையும் புடைத் nழுந்து விந்து வெளியாகும் போது நூற்றுக்கணக்கான மில்லியன் விந்துக்கள் வெளியாகின்றன. இவற்றில் ஒன்றோ இரண்டோ மட்டுமே தேவைப்படுகிறது. அநேக சந்தர்ப்பங்களில் ஒன்றுமே பயன்படுத்தப்படுவதில்லை. ஏனெனில் குழந்தை ஒன்றுக்கு உரிய வராக விரும்ப வி ல்லை.
சுய விந்து வெளி யேற் றுவது நிரந் தரப் பழக்க மாகப் போய் விடும் என்கி றார் களே?
உண்மையி ல் நடப்பது இ துதான். சுய விந்து வெளி யேற்றம் சதா காலமு ம் செய்து வ ந்து ஓமோ னின் செயல்பாடு ஓய்ந்து விட பல நாட்களுக்கோ வாரங்களுக்கோ சுய விந்து வெளியேற்றம் நிறுத்தப்படுகிறது. ஓமோன் செயல்பாடு நிலையாக இருப்பின் சுய விந்து வெளியேற்றம் தொடர்ந்தபடி இருக்கும்.
இதனைப் பழக்கமான செயல் என்று கொள்ள முடியாது. மனவுறுதி அற்றவர் என்று கூறவும் முடியாது. பாலியல் உந்தல்கள் குறைவாகவுள் ளவர் குறைவாகவே சுயமாக விந்து வெளியேற்றத்தில் ஈ டுபடுவார்கள். கூடுதலான அளவு பாலியல் உந்தல்கள் உடையோர் அதிகமாக சுய விந்து வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடு படுகிறார்கள். இது பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஒரே வித மானதே.
ஒரு பருவமானவர் சுயமாக விந்து வெளியேற்றுவதற்கு எப்பொ ழுதும் வெறுப்புற்று இருப்பதற்குக் காரணம் தீர்க்க முடியாத மன உளைச்சலே. இப்படிப்பட்ட நிலையில் ஆலோசகர் ஒருவரை அணுகி உதவி பெறுவது நல்லது.
சுயமாக விந்து வெளியேற்றுவது பரு க்கள் தோன்றவும் பார்வை குன்றவும் காரணமாகுமா?
பருவமாகின்ற போது பொதுவாக பிள் ளைகளுக்கு பருக்கள் தோன்று வதும், கண்பார்வை பாதிக்கப்படுவதும் சாதார ண சம்பவங்களே. பருவமானவர்கள் சுயமாக விந்து வெளியே ற்றத் தொடங்குகிறார்கள்.
இந்த மூன்று நிகழ்ச்சிகளும் ஒரே வேளையில் நடக்கின்றதால் சுயமாக விந்து வெளியேற்றுவதுதான் மற்ற இரண்டுக்கும் காரண மென்று கொள்ள முடியாது. அல்லது பார்வைக் குறைபாடு தான் பருக்கள் தோன்றக் கார ணம் என்று கொள்ள முடி யாது. இவை மூன்றும் ஒரே நேரத்தில் ஏற்பட்டது காரண ம் ஆகாதல்லவா?
சுயமாக விந்தை வெளிப் படு த்தினால் சித்தசுவாதீனம் ஏற் படும் என்று கூறக் காரணம் என்ன?
சித்த சுவாதீனம் உற்றவர்கள் புத்தி பேதலித்து இருக்கும் போது மற்றவர்கள் பார்க்கிறார்கள் என்ற சிந்தனை இன்றி வெளிப் படையாவே சுயமாக விந்தை வெளியேற்றுகிறார்கள். இச்செய லுக்கு அவர்களுக்கு ஏற்பட்ட விரக்தியே காரணம்.
இத்தகைய சித்த சுவாதீனம் பாரம்பரியமானதே. உங்களிடம் பரம் பரை அலகு இல்லாவிட்டால் இது ஏற்படும். பரம்பரை அலகு இரு ப்பின் இந்நிலை ஏற்படாது. சுயமாக விந்தை வெளியேற்றுவதால் இத்த கைய கோளாறுகள் ஏற்படாது. ஆ னால் இவை அனைத்தும் பருவம் ஆன பிறகே ஏற்படுகிறது.
சுயவிந்து வெளியேற்றம் இடைவி டாது செய்து வருவதற்கு குழம்பிய மனநிலையே காரணமாகிறது. வேறு காரணங்களாகவும் இரு க்கக் கூடும். நன்கு பயிற்றப்பட்ட மன நோய் வைத்தியரை அணுகி இத்த கையோர் ஆலோசனை பெறுவது நல் லது. மனவேதனை க்குரிய காரணத்தை அறிந்து கொண்டால் அதனை நிவர்த்தி செய்து கொள்ள இயலும். இதனை அறிந்து நிவ ர்த்தி செய்த பிறகு அடிக்கடி சுயமாக விந்து வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் அவசியம் ஏற்படாது.
சுயமாக விந்து வெளியேற்றிவருபவர் வெறொரு பெண்ணோடு பாலுறவு கொள்வது கடினமானதா?
இல்லை. உங்கள் உடலைப் பற்றி நன்கு அறிந்த பிறகு வேறொரு வரோடு பாலுறவு கொள்வது சுலபமாகிவிடும்.


மூல நோய்க்கு காட்டுக்கருணை


                                       மூல நோய்க்கு காட்டுக்கருணை



நாம் மலம் கழிக்க தாமதப்படுத்தும்பொழுதும் அல்லது மலவாயில் இறுக்கம் ஏற்படும்பொழுதும் மலக்கடலில் தங்கியுள்ள மலமானது இறுகி, சுற்றியுள்ள மலக்குடல் திசுக்களையும், நுண்ணிய ரத்தக்குழாய்களையும் அரிக்க ஆரம்பிக்கின்றன. மலத்திலுள்ள பாக்டீரியா போன்ற நுண்கிருமிகளும், அமோனியா, பொட்டாசியம், நைட்ரஜன் போன்ற வேதிப்பொருட்களும் மலக்குடலை சேதப்படுத்துகின்றன. அதுமட்டுமின்றி மியூகஸ் என்னும் சளிச்சவ்வையும் பாதித்து மலக்குடல் பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்துகின்றன. இவ்வாறு ஏற்பட்ட வீக்கமானது மலக்குடலின் நுண்ணிய ரத்தக்குழாய்களில் ரத்தத்தை தேங்கவைத்து, குழாய்களை வெடிக்கவைத்து விடுகின்றன. அத்துடன் அந்த ரத்தக்குழாய்களில் குழிப்புண்களோ, வளர்ச்சிகளோ ஏற்பட்டு மூலமாக மாறுகின்றன.
சில நேரங்களில் ரத்தக்கசிவை ஏற்படுத்த ரத்த மூலமாக மாறுகின்றன. வீக்கங்கள் மற்றும் சதை வளர்ச்சிகள் வெளியே பிதுங்கி, உள் மற்றும் வெளிப்புறமாக மாறுகின்றன. இவ்வாறு கவனிக்கப்படாத குழிப்புண்களானது மலவாய்பகுதியை சுற்றியுள்ள சதைகளை குடைந்து, தோலைவிட்டு வெளியேறி, துளைப்புண்களாக மாறி, பவுத்திர நோயாகவும் உருவெடுக்கின்றன. இதனால் மூலநோயாளியாக மாறி, உட்காரவும் எழவும் சிரமப்பட்டு அன்றாட காலைக்கடன்களை கழிக்கவே பெரும் அவதிக்குள்ளாக நேரிடுகிறது.
மூலநோய் வராமல் தடுக்க நார்ச்சத்து மிகுந்த, கொழுப்புச்சத்து குறைந்த, காரமில்லாத உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். ஒரே இடத்தில் நீண்டநேரம் அமருவதை தவிர்த்து, போதுமான நீர் அருந்தவேண்டும். புரோட்டா, அசைவ உணவுகள், பொரித்த உணவுகளையும், இரவில் வயிறுமுட்ட உணவு உண்பதையும் தவிர்க்க வேண்டும். மலத்தையும் அபான வாயுவையும் அடக்கக்கூடாது.
வாயுவை பெருக்கக்கூடிய கிழங்குகளையும், வறுத்த காரமான பொருட்களையும் தவிர்க்க வேண்டும். கீரை, காய்கறி, பழங் களை அதிகம் உட்கொள்ள வேண்டும். வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து தலை முழுக வேண்டும். விரைவில் தூங்கி அதிகாலை எழ வேண்டும். கணினி, சமையல் வேலை போன்ற உஷ்ணத்தைப் பெருக்கக்கூடிய பணிகளை போதுமான இடைவெளி விட்டு செய்ய வேண்டும். மூலத்தை நீக்கி, மூலநோய் வராமல் காக்கும் அற்புத கிழங்கு காட்டுக்கருணை. இதன் வேர்கிழங்கில் 76 சதவீதம் ஸ்டார்ச் அமைந்துள்ளது.
மூலநோயில் தோன்றும் கட்டி, வீக்கம், சீர் மற்றும் கழிச்சலை நீக்கக்கூடியவை. ஆசனவாய் பகுதியிலுள்ள தோலில் தோன்றும் சிறு சிறு வெடிப்புகளையும் ஆற்றக்கூடியவை.
காட்டுக்கருணை, காராக்கருணை, புளியம்பிரண்டை, நாப்பிரண்டை, மருள்கிழங்கு, கற்றாழை வேர், சமையல் கருணை, மாம்பருப்பு, தோல் நீக்கிய சுக்கு, கடுக்காய்த்தோல், கொடிவேலி வேர்ப் பட்டை, கோரைக்கிழங்கு, சரக்கொன்றை புளி ஆகியவற்றை சம அளவு எடுத்து, தோல் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக வெட்டி, வெயிலில் போட்டு உலர்த்தி இடித்து, சலித்து, லேசாக நெய்யில் பிசறி, இளவறுப்பாக வறுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இத்துடன் 2 பங்கு கருப்பட்டி தூளையும் கலந்து வைத்துக்கொள்ளலாம். இந்தச்சூரணத்தை காலை மற்றும் இரவு 2 முதல் 5 கிராமளவு சாப்பிட்டுவர மூலநோய் நீங்கும். சிலருக்கு லேசாக நாக்கில் அரிப்பு ஏற்படலாம். இதனை தவிர்க்க காட்டுக்கருணை, காராக்கருணை, நாப்பிரண்டை, சமையல் கருணை, கோரைக்கிழங்கு ஆகியவற்றை நல்லெண்ணெயில் லேசாக வதக்கி, பின் பொடித்து லேகியமாக செய்து கொள்ளலாம்.
சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும் கருணை லேகியத்தை வாங்கி 5 முதல் 10 கிராமளவு தினமும் 2 வேளை சாப்பிடலாம்.
Posted On September 10,2011,By Muthukumar

Wednesday 7 September 2011

புகை பிடிப்பதால் விளையும் நன்மைகள் 25

புகை பிடிப்பதால் விளையும் நன்மைகள் 25

புகை பிடிக்கும் ஒருவரிடம் புகை பிடிப்பதால் உண்டாகும் தீமையை எவ்வளவு எடு த்து சொன்னாலும் எந்த பலனும் உண்டாவதில் லை. அட்வைசுக்கு பயந்து நம்மைக் கண்டா லே மறைந்து நின்று ஒரு சிக ரெட் பற்ற வைப்பார்கள். புகை பிடிப்பது கேடு என் று அவர்களுக்கு நன்றாகத் தெரியும் ஆனால் அந்த கேடு தனக்கு வந்து சேரு ம் வரை தன்னை சிகரெட் ஒன்றும் செய்யாது என்று தான் நினைப்பார்கள். வீணாக நண்பர்களை இழப்பானேன். எனவே புகை பிடிப்பதால் என்ன நன்மைகள் என்று யோசித்தேன். எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.
  1. பிறருக்கு உதவும் சந்தோ சம் கிடைக்கிறது. தினமும் சிகரெட்டுக்கு செலவளிக் கும் பணத்தில் பெட்டிக் கடைகாரர்கள், பீடி, சிகரெ ட், தீப்பெட்டி கம்பெனியின் தொழிலாளர்கள், புகையி லை உற்பத்தியாளர்கள் குடும்பத்துக்கு உணவு கிடைக் கும்.
  2. நாட்டுக்கு உதவுகிறீர்கள். சிகரெட்டுகள் மீது விதிக் கப்படும் கணிசமான வரியால் நாட்டுக்கு நன்மை.
  3. நாற்றம் பிடித்த மோசமான சுற்று சூழலில் இருக்க வே ண்டி வந்தாலும் ஒரு சிக ரெட்டை பற்ற வைத்து புகை யால் எல்லா அசிங்கங்களை யும் மறைத்து புகை மேக த்துக்குள் இருப்பது. தேவ லோகத்தில் இருப்பது போ ல, மேகத்துக்கிடையே சஞ்ச ரிப்பது போன்ற அனுபவம் தரும்.
  4. சிகரெட் நெடியால் மோப்ப சக்தி குறைந்து போவதால் சுற்றுப் புறத்தின் எந்த நாற் றமும் மூக்கை உறுத்தாது. வீட்டு சாப்பாட்டில் குறையி ருந்தாலும் ஒன்றும் பெரி தாக தெரியாது.
  5. சிகரெட் புகைக்குள் எப்போதும் மறைந்திருந்தால் கட ன்காரர்கள் எளிதில் அடையாளம் கண்டு கொள்ள மாட்டார்கள்.
  6. சிகரெட்டைக் கொடு த்து, வாங்கி நட்பை வளர்த்துக் கொள்ள லாம். முன் பின் தெரியாதவர்களுடன் கூட தீப் பெட்டி கேட்டு எளிதில் நட்பு கொள் ளலாம்.
  7. எப்போதும் தீப்பெட்டி அல்லது லைட்டர் வைத்துக் கொண்டிருப்பது இரவு மின்வெட்டு ஏற்படும் போது மிக உதவியாக இருக்கும்.
  8. சுற்றி எப்போதும் புகை பரப்பிக் கொண்டிருப்ப தால் கொசுத்தொல்லை அதிகம் இருக்காது. சிக ரெட் தயாரிப்பாளர்கள் புகையிலையுடன் கொ சு மருந்தையும் கலந்து தயாரித்தால். தனியாக கொசு வர்த்தி வாங்கும் செலவு மிச்சம்.
  9. பிரச்சனைகள் வந்தால் அதை எப்படி எதிர்கொ ள்ள வேண்டும் என்று சிந்தித்து தலையை புண்ணாக்க வே ண்டியதில்ல. டென்சனே தேவையில்லை ஒரு சிக ரெட்டை பற்ற வைத்தால் போதும். தீக்குச்சியை உரசும் போது கோபத்தை வெளிப்படுத்தலாம் , தீக்குச்சி எரிவதை ஒரு வினாடி ரசித் து அதில் எதிரியின் அழிவைக் கற்ப னை செய்து ஆசு வாசப்படலாம், சிக ரெட்டை பற்ற வை த்து ஊதி தள்ளும் போது பிரச்சனைக ளை புகை போல் ஊதித் தள்ளுவதை போல் கற்பனை செய்ய லாம். எஞ்சிய துண்டு சிகரெட்ட நசுக்கித் தள்ளி ஆத்தி ரத்தை தீர்த்துக்கொள்ளலாம்.
  10. சிகரெட் பிடித்து லொக் லொக்கென் று இருமி மற்றவர் களின் அனுதாபத் தை சம்பாதிக்கலா ம். பிறர் கவனத் தை தன் பக்கம் இழுக்கலாம்.
  11. அதிகம் சிகரெட் பிடிப்பதால் சீக்கி ரம் முதுமைத் தோ ற்றம் வந்து விடும். முதியவர் என்றால் அதற்குரிய மரியாதையும் கவுரவுமும் எளிதில் கிடைக்கும் . பஸ் ஸில் இடம் கிடைப்பது கூட எளிது.
  12. தொடர்ந்து புகைப்பதால் சீக்கிரமே உடல் தளர்ந்து கை த் தடியுடன் நடக் கும் நிலை ஏற்ப டும். துரத்தும் தெ ரு நாய்களை விர ட்ட உதவும்.
  13. இரவு முழுதும் இரு மிக் கொண்டிருப்ப தால் வீட்டில் திரு டர்கள் வரும் பய மில்லை. வேறு த னியாக நாய்கள் வளர்த்த வேண்டியதில்லை.
  14. வாய் துர்நாற்றத்தை புகை நாற்றத்தால் எளிதில் மறை த்து விடலாம்.
  15. எப்போதும் புகை அடித்துக் கொண்டிருப்பதால் வாய் மற்றும் நுரையீரல்களில் உள்ள கிருமிகள் செத்துப் போகும் அல்லது வேறு இட ம் பெயர்ந்து போய் விடும்.
  16. வேண்டாத விருந்தாளியை விரட்ட புகையை அவர்கள் முகத்துக்கு நேரே அடிக்கடி ஊதி விட்டால் போதும்.
  17. புகை பிடித்து கேன்சர் வந்து படும் அவஸ்தையை பார்க் கும் போது பிள்ளைகள் அதற்கு எதிராக வைராக்கியம் எடுத்துக்கொண்டு அதன் பக்கமே போகாமல் நல்ல பிள்ளைகளாக வளர உத வும். மிகவும் அத்தியாவ சியமாக இருந்தாலொ ழிய யாரும் அருகில் வ ந்து பேச்சுக் கொடுத்து தொல்லை பண்ன மாட் டார்கள்.
  18. சிகரெட் பிடிப்பதில் பல ஸ்டைகளை கற்றுக் கொள்வது சினிமாத் துறையில் நல்ல எதிர்காலத்தை உருவாக் கித் தரலாம்.
  19. வாழ்வின் பிற்பகுதியில் டா கடர்களுக்கும் மருத்துவம னைகளுக்கும் அள்ளி அள் ளி தந்து வள்ளலாகலாம்.
  20. சிகரெட் பாக்கெட்,காலி தீப் பெட்டி,எரிந்த தீக்குச்சி, சிக ரெட்டின் எஞ்சிய துண்டுகள் போன்றவற்றை அதிக மாக சேர்த்து வைத்து சாதனை ப டைக்கலாம். கலைப் படை ப்புகள் உருவாக்கலாம்.
  21. வீட்டில் இறைந்து கிடக்கும் சிகரெட் துண்டுகளை சின் னக் குழந்தைகள் விரும்பி எடுத்து விளையாடுவதால் அவர்களுக்கு வேறு விளை யாட்டுப் பொருட்கள் வாங் கத் தேவையில்லை.
  22. மக்கள் நெருக்கமாக உள்ள இடங் களில் புகை பிடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்க்கலாம். கூட்டத்தில் தனியாக தெரியலாம்.
  23. சில்லரைத் தேவைப்பட்டால் சட்டென ஒரு பெட்டிக் கடையில் சிகரெட் வாங்கி சில்லரை பெற்றுக் கொள்ள லாம்.
  24. நாட்டில் பொறுப்பற்ற மக்க ளின் ஆயுளை குறைத்து ம க்கள் தொகை கட்டுப்பாட் டிற்கு உதவுகிறது.
சிகரெட் பிடிப்பதில் இவ்வளவு நன்மைகள் இருப்பதை கருத் தில் கொண்டு புகை பிடிப்பவர்கள் யாரும் இனி யாரைக் கண் டும் சங்கோஜப்படத் தேவையில்லை. நாம் எக்கேடு கெட்டா லும் பிறருக்கு உதவுகிறோமே நிம்மதியுடன் தொடருங்கள் சேவையை.

Tuesday 6 September 2011

சித்தமெல்லாம் சிவமயம் (அகத்தியர் கதை)

சித்தமெல்லாம் சிவமயம் (அகத்தியர் கதை)

அகத்தியர் தோற்றம் பற்றி பல விதமாகக் கூறப்படுகிறது. தாரகன் முதலிய அரக்கர்கள் உல கை வருத்த, அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி ஆகி யோர் பூமிக்கு வந்தனர். இவர்க ளைக் கண்ட அசுரர்கள் கடலு க்குள் ஒளிந்தார்கள். இந்திரனின் யோசனைப்படி அக்கினி வாயுவுட ன் கூடி பூமியில் விழுந்து அகத்தி யராய் அவதரித்தார் என்றும், மிர் திரர் குடத்திலிட்ட வீரியத்திலிரு ந்து அகத்தியரும், வருணன் தண் ணீரி லிட்ட வீரியத்திலிருந்து வசி ஷ்டரும் அவதரித்தனர் என்றும், மிர்திரர் குடத்திலிருந்து தோன்றி யமையால் அகத்தியர் குடமுனி, கும்பயோகி என்னும் பெயர்களைப் பெற்றார் என்றும் பலவாரான கருத்துகள் நிலவுகின்றன.
முன்பு தேவர்களை வருத்திய அசுரர் இப்போதும் வருத்த ஆரம்பித்தனர். இந்திரன் அவர்களை அழிக்க வரும் போது அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்து கொண்டனர். தே வேந்திரன் வேண்டுகோளு க்கிணங்க அகத்தியர் சமுத் திர நீர் முழுவதையும்  குடித்து விட, இந்திரன் அசுரர்களை அழித்தார். அதன்பின் நீரை  மீண்டும் கடலுள் விடுவித்தார் அகத்தியர். அகத்தியர் நீரின் மேல் படுத்தபடியே பன்னிரெ ண்டாண்டுகள் கடுந்தவமியற்றி அரிய சக்திகளை பெற்றார். கைலையில் நடந்த சிவபெருமான் திருமணத்தின் போது வட திசை தா ழ்ந்து தெந்திசை உயர்ந்தது. அதனால் அகத்தியரை தென் திசைக்கு செல் லுமாறு சிவபெருமான் கட்டளையி ட்டார்.
மேருமலைக்கு செல்ல வழிவிடாமல் நின்ற விந்தியமலை, அகத்தியரைக் க ண்டதும் பணிந்து தாழ்ந்து நின்றது. தான் தென் திசை சென்று வரும் வரையில் பணிந்து இருப்பாயாக என்று கூறி ச் சென்ற அகத் தியர் மீண்டும் வடதிசை செல்லாததால் விந்திய மலையும்
உயரவில்லை.
இராமபிரானுக்கு சிவகீதையை போதித்துள்ளார் அகத்தியர். சுவேதன் என்பவன் பிண ந்தின்னுமாறு பெற்றிரு ந்த சாபத்தை போக்கினா ர். தமக்கு வழிபாடு செய் யாது யோகத்தில் அமர் ந்திருந்த இந்திரத் துய் மன் என்பவனை யானை யாகுமாறு சபித்தார். அக த்தியர்தம் முன்னோ ர்களுக்காக விதர்ப்ப நாட் டை அடைந்து அவ்வ ரசன் மகள்
உலோபமுத்திரையை மணந்து தென்புலத்தார் கடனை தீர்த்தார்.
தென் திசைக்கு வந்த அகத்தியர் பொதிகை மலையில் தங்கி முருகக் கடவுளின் ஆணைப்படி *அகத்தியம்*என்னும் நூலை இயற் றினார்.
அகத்தியர் இந்திரன் சபைக்கு சென்றபோது இந்திரன் ஊர்வசியை நடனமாட செய் தான். ஊர்வசி இந்திரன் மகன் சயந்தனிடம் கொண்ட காதலால் தன்னிலை மறந்தாள். அதனால் அகத்தியர் சயந்தனையும் ஊர்வ சியையும் பூமியில் பிறக்கும்படி சபித்தார்.
வாதாபி, வில்வளவன் என்னும் அரக்கர் இருவரில் வில்வளவன் வேதியர் உருக்கொண்டு வழியில் செல்லும் வேதியர், முனிவர் முதலானோரை விருந்திற்கு அழைத்து வாதா பியைக் கறி சமைத்து படைத்து வாதா பியை திரும்ப அழைக்க; அவன் அவர்கள் வயிற்றைக் கிழி த்து வெளியே வருவதால் அவ ர்கள் இறந்து போவார்கள். முனிவர் இதனை அகத்தியரி டம் முறையிட்டனர். அகத்தியர் அவர்க ளிடம் விருந்து உண்ண சென்றார். வில் வளவன் உணவு படைத்துவிட்டு அகத்தியர் வயிற்றி லிருக்கும் வாதாபியை கூப்பிட அகத் தியர் “வாதாபே ஜீர்ணோ பவ” என்று வயிற் றைத் தடவ வாதாபி இறந்தான். நிலமையை அறிந்த வில்வளவன் அகத்தியரிடம் மன்னிப்பு கோரினான்.
சிவ பூசை செய்வதற்காக கமண்டலத்தில் அகத்தியர் கொ ண்டு வந்த கங்கை நீரை விநாயகர் ‘காக உரு’ கொண்டு சாய்த்துவிட கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி ஆறு ஆனது. இலங்கை மன்னர் இராவ ணனை தம் இசை திறத்தால் வென்றார் அகத்தியர். தூங்கெயிலெறிந்த தொடி த்தோட் செம்பியன் காலத்தில் காவிரி பூம்பட்டிணத்தில் இந்திர விழாவை எடுப்பித்தார்.
புதுச்சேரிக்கு அருகிலுள்ள ‘உழவர் கரை’யில் ஆசிரமம் அமைத்து வேதபுரி பல்கலைக் கழகத்தில் தமிழை போதித்தார். எனவே அவர் தங்கியிருந்த பகு தி ‘அகத்தீஸ்வரம்’ என்று அழை க்கப்பட்டு அங்கு பெரிய சிவால யம் கட்டப்பட்டது. அதனை அகத் தீஸ்வரமுடையார் ஆல யம் என் றும் கூறுகின்றனர்.
சித்தராய் விளங்கிய அகத்தியரை பற்றிய அகத்தியர் காவி யம் பன்னிரெண்டாயிரம் வாயிலாக சில கருத்துக்களை மட் டுமே தெரிந்து கொள்ள முடிகிறது. அகத்தியர் அனந்தசய னம் என்ற திரு வனந்தபு ரத்தில் சமாதிய டைந்த தாகக் கூறப்படுகிறது.
ஒரு சிலர் அவர் கும்பகோ ணத்தில் உள்ள கும்பேசுவ ரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறு கின்றனர்.
அகத்தியர் தென்நாடு வந் த வரலாற்றை ஆய்வியல் நோக்கில் திரு.N. கந்த சாமி பிள்ளையின் சித்த மருத்துவ வரலாறு நூலில் காண லாம்.
அகத்திய மாமுனி சித்த வைத்தியத்திற்கு செய்த பணி அளவிடற்கரியது. பல நோய்களுக்கும் மருத்துவ சந்தே கங்களுக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளி வாக விளக்கம் கொடுத்துள் ளார். அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள சமரச நிலை ஞானம் என்னும் நூலில் உடம் பில் உள்ள முக்கியமான நர ம்பு முடிச்சுகள் பற்றிய விள க்கம் காணப்படுகிறது. அகத் தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான மன நோய் பற்றி யும் அதற்குரிய மருத் துவம் பற்றியும் விளக்கப்பட் டிரு க்கின் றன.
அகத்தியர் அஷ்ட மாசத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷ ங்கள் பற்றி கூறியுள்ளார்.
*மேலும் அவர் எழுதிய நூல்களில் கிடைத்தவை:*
**
1. அகத்தியர் வெண்பா
2. அகத்தியர் வைத்தியக் கொம்மி
3. அகத்தியர் வைத்திய ரத்னாகரம்
4. அகத்தியர் வைத்தியக் கண்ணாடி
5. அகத்தியர் வைத்தியம் 1500
6. அகத்தியர் வைத்திய சிந்தாமணி
7. அகத்தியர் கர்ப்பசூத்திரம்
8. அகத்தியர் ஆயுள் வேத பாஷ்யம்
9. அகத்தியர் வைத்தியம் 4600
10. அகத்தியர் செந்தூரம் 300
11. அகத்தியர் மணி 4000
12. அகத்தியர் வைத்திய நூல் பெருந்திரட்டு
13. அகத்தியர் பஸ்மம் 200
14. அகத்தியர் நாடி சாஸ்திரம்
15. அகத்தியர் பக்ஷணி
16. அகத்தியர் கரிசில் பஸ்யம் 200
17. சிவசாலம்
18. சக்தி சாலம்
19. சண்முக சாலம்
20. ஆறெழுத்தந்தாதி
21. காம வியாபகம்
22. விதி நூண் மூவகை காண்டம்
23. அகத்தியர் பூசாவிதி
24. அகத்தியர் சூத்திரம் 30
போன்ற நூலகளை இவர் எழுதியதா கக் கூறப்படுகிறது. மேலும்
25. அகத்திய ஞானம் என்னும் அகத்தியம் என்னும் ஐந்திலக் கணம்
26 அகத்திய சம்ஹிதை என்னும் வடமொழி வைத்திய நூ லும் இவ ரால் செய்யப்பட்டதாகக்கூறப்படுகிறது.
Thanks to Mr. Jagadeeswaran

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு காயங்கள் சீக்கிரம் ஆறாதது ஏன்?

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு காயங்கள் சீக்கிரம் ஆறாதது ஏன்?

பொதுவாகவே சர்க்கரை வியாதிக்காரர்களின் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிக மாகவும் அதிக நாட்களாக வும் இருந்தால் நுண்ணிய, மெல்லிய, சிறிய, பெரிய என இரத்தக் குழாயில் பல விதமா ன பாதிப்புகள் ஏற்படக்கூடும். இதனால் நரம்புகள், சிறுநீரக ங்கள், கண் கள் ஆகிய உறுப்புகள் பாதிப்படைகின்றன.
இதில் பெருமளவு பாதிக்கப்படுவது நரம்பு பகுதிகளே. தொடு உணர்வு, அழுத்துகின்ற உணர்வு, வெப்பமானது எது? குளிர் ச்சியானது எது? என அ னைத்துவிதமான உணர் வுகளையும் நமக்கு உண ரச் செய்யும் நரம்பு பகுதி கள் பாதிக்கப்படுவதால், சர்க்கரை வியாதிக்காரர் கள் உணர்விழந்த நிலை க்குத் தள்ளப்படு கின்ற னர்.
இதனால் அனைத்து வித மான உணர்வு பாதிப்புகளும் ஏற்பட ஆரம்பிக்கிறது. எனவே தான் டயாபடீஸ்காரர்களின் காலில் சிறிய கல்லோ, முள் ளோ குத்தி காயங்கள் ஏற்பட்டால் கூட வலியும் பாதிப்பும் உணர முடியாமல் போய் விடுகிறது. மேலும் இர த்தக் குழாயில் பாதிப்பு ஏற்பட்டு கால் பாதங்களு க்குப் போதுமான இரத் தம் செல்லாமல் தடைப ட்டு நிற்கும். இதனால் தான் சிறிய காயம் ஏற் பட்ட டயாபடீஸ்கார ருக்கு அதிகளவு சர்க்க ரை இரத்தத்தில் இருப்ப தால் கிருமி தயக்க மின்றி உள்ளே நுழைந்து உடனடி தாக்கு தலுக்கு ஆளாகின் றார்.
அதோடு, சர்க்கரை வியாதி க்காரர்களுக்கு நோய் எதிர் ப்புத் திறன் குறைந்து கொ ண்டே இருப்பதால் சிறிய கா யம் ஏற்பட்டாலும்கூட கிரு மிகளின் பாதிப்பு அதிகமாகி காயத்தையும் சீக்கிரம் ஆற விடாமல் செய்து விடுகி றது. இந்தப் பாதிப்பு ஆரம்ப த்தில் டயாபடீஸ்காரர்களுக் கு உணரமுடியாமல் இருந் தாலும் ‘காலை’யே கட் பண் ணி எடுக்கக்கூடிய அளவுக்கு கொ ண்டு போய் விட்டுவிடும். எனவே, டயாபடீஸ்காரர்கள் அவரவர் களுக்கு மருத்துவர் வழங்கிய ஆலோசனையின்படி உணவுக் கட்டுப்பாடு, உடற் பயிற்சி என இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக் காமல் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டால் பிரச்சினை இல்லை. எனவேதான் டயாபடீஸ் காரர்கள் சிறிய புண்ணோ காயங்களோ ஏற்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவேண்டும் என்று அறிவு றுத்தப் படுகின்றனர்.

Monday 5 September 2011

வயிற்றுக் கோளாறை நீக்கும் பிரண்டை !

வயிற்றுக் கோளாறை நீக்கும் பிரண்டை !
Posted On September 5,By Muthukumar,


பிரண்டை நாற்கோண வடிவ தண்டுகளையுடைய ஏறு கொடி இனமாகும். பற்றுக் கம்பிகளும் மடலான இலைகளும் கொண்டு இருக்கும். சாறு உடலில் பட்டால் நமைச்சல் ஏற்படும். சிவப்பு நிற உருண்டையான சிறிய சதைக் கனி உடையது. கால் அடி முதல் அரை அடி வரை நீளத்தில் கணுக்கள் அமைந்து இருந்தால் அது பெண் இனம் என்றும் அரை அடிக்கு மேல் ஓர் அடி வரை நீளவாட்டில் கணுக்கள் அமைந்து இருந்தால் அது ஆண் இனம் என்றும் அறிந்து கொள்ளலாம். இந்தக் கணுக்களில் இருந்தே சுருள் சுருளான விழுதுகள் வெளிப்பட்டு 15 நாளில் முற்றிய இலையாக மாறிவிடும். இது காட்டுப் பகுதிகளிலும் கரடுமுரடான கற்கள் நிறைந்த இடங்களிலும் காணப்படுகின்றன. இதற்கு அதிகமான தண்ணீரோ, ஈரப்பசையோ தேவையில்லை. காற்றில் கலந்திருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சி வாழும் ஆற்றல் உடையது. குடல் வாயுவை அகற்றுதல், பசியை அதிகப்படுத்துதல், நுண்புழுக்களைக் கொல்லுதல் ஆகிய மருத்துவக் குணங்களைக் கொண்டது.
வேறுபெயர்கள்: கிரண்டை அரிசணி.
வகைகள்: உருட்டை, சதுர வட்டை, முப்பிரண்டை, மூங்கிற்பிரண்டை, கோப்பிரண்டை.
ஆங்கிலப் பெயர்கள்: Cissus quadrangularis, Linn, Vitaceae.
இனி மருத்துவக் குணங்களைப் பார்ப்போம்.
பிரண்டையின் விழுது, கணு, மேல்தோல் இவற்றை நீக்கிவிட்டு உள்சதையில் இருக்கும் நரம்புகளையும் தனியாகப் பிரித்து நீக்கிவிட்டு பிரண்டையின் சதைப் பற்றை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொண்டு, கொத்தமல்லி, மிளகு, புதினா, கொஞ்சம் புளி, இஞ்சி, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு வகைக்குத் தகுந்தாற்போல் எடுத்துச் சுத்தம் செய்து நல்லெண்ணெயில் வதக்கி அரைத்து துவையலாக்கி உண்டுவர நாவறட்சி, பித்தம், கிறுகிறுப்பு குமட்டல், குன்மம், செரிமானக் கோளாறு, வாய்வுத் தொல்லை குணமாகும். பசியைத் தூண்டும்.
பிரண்டைச் சாற்றில் புளி, உப்பு கலந்து காய்ச்சி பொறுக்கும் சூட்டில் பற்றிட சதைப் பிடிப்பு, அடிபட்ட வீக்கம், எலும்பு முறிவு வீக்கம், எலும்பு முறிவு குணமாகும்.
பிரண்டையை அதிக அளவில் எடுத்து சுத்தம் செய்து நிழலில் காய வைத்து உலர்த்தி தீ வைத்துக் கொளுத்த சாம்பலாகும். இதை எடுத்து அதற்கு 3 பங்கு தண்ணீர் ஊற்றி சுத்தமான பாத்திரத்தில் வைத்து அலச வேண்டும். பின்னர் தும்பு, தூசிகளை நீக்கி விட்டு ஒரு பெரிய வாய் அகன்ற பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும். மறுபடியும் கசடு உள்ள முதல் பாத்திரத்தில் கொஞ்சம் நீரை ஊற்றி மறுபடியும் அலசி நீரை 2வது பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். ஒரு நாள் வடித்த நீரை மூடி அசையாமல் வைத்திருந்தால் நீர் தெளிவாகிப் பன்னீர் போல இருக்கும். இந்த நீரை மறுநாள் எடுத்துப் பார்த்தால் தெளிந்திருக்க வேண்டும். அப்போது சரியாக தெளிந்திருக்கவில்லையென்றால் ஏதாவது ஒரே வகையான விறகையோ அல்லது வரட்டியையோ(பருத்தி செடிமார், கம்புத் தட்டை, பசுமா வரட்டி, கருவேலம் மரத்தின் கட்டைகள்) வைத்து சிறு தீயில் எரிக்க தண்ணீர் வற்றச் செய்து மெழுகு பதத்திற்கு கொண்டு வர வேண்டும். தீ அதிகமானால் பொங்குவதோடு முறிந்து விடும். மெழுகுபதம் வந்ததும் கவனமாக அதை எடுத்து பீங்கான் கிண்ணத்தில் ஊற்றி அரை நாள் கழித்துப் பார்த்தால் குழம்பு பளிங்குப் பாறையாக வெண்மையான நிறத்தில் மாறி இருக்கும். இதைப் பிரண்டை உப்பு என்று கூறுவர். இதை ஒரு சம்பா அரிசி எடை எடுத்து பசும்பாலிலோ, ஆட்டுப் பாலிலோ, தாய்ப்பாலிலோ கலக்கிக் குழந்தைகளுக்குக் கொடுக்க நாக்கில் அச்சரம், வாயில் அச்சரம், உதட்டில் வெடிப்பு, புண், வயிற்றில் உள்ள குடல் புண், நுரையீரல் வீக்கம் குணமாகும்.
மிளகு அளவு பிரண்டை உப்பை பசும் வெண்ணெயில் குழைத்து 2 வேளை சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும். இரத்தப் போக்கு, இரத்தம் தடைபடுதல், குத்துக் கடுப்பு குணமாகும்.
குண்டுமணி அளவு பிரண்டை உப்பை எடுத்து 5 சொட்டு நெய்விட்டுக் கலந்து அதைக் கருணைக் கிழங்கு லேகியத்துடன் 2 வேளை உண்டு வர வாய்நாற்றம், மலவாய் அரிப்புடன் கூடிய உள், வெளி மூலங்களினால் சவ்வுகளில் ரத்தக் கசிவு, கம்பு முளைச் சீழ் வடிதல் குணமாகும்.
பிரண்டை உப்பு 2 அரிசி எடை எடுத்து பாலில் கலந்து 3 வேளை குடித்துவர சிறுகுழந்தைகளின் பேதி, வாந்தி, சீதபேதி, நுரைத்த பச்சைப் பேதி நிற்கும்.
பிரண்டை உப்பை 1 குண்டுமணி அளவு நெய் அல்லது வெண்ணெயில் 2 மண்டலம் 2 வேளை சாப்பிட்டு வர சூதகச் சிக்கல், சூதக வலி குணம் ஆகும்.

Sunday 4 September 2011

மாதவிலக்கையே தள்ளிப்போட முடியுமே??

மாதவிலக்கையே தள்ளிப்போட முடியுமே??

தோழியின் திருமணம், குழந்தையின் பள்ளி விழா, குலதெய்வக் கோயில் உற்சவம், பக்கத்து வீட்டுக் கிர ஹப்பிர வேசம்… இப்படி முக்கியமான நாட்கள் வரும் போது எல்லாம், ‘அந்த நாளி ல் மாதவிலக்கு வந்து விட்டால்…’ என்னா வது என்கிற பதற்ற மும் பெண்களுக்குப் பற்றிக் கொள்வது அந்தக் காலம்.
இதுவோ…. ”மாதவிலக்கைத் தள்ளிப் போ ட க்கூடிய மாத்திரைகள் மார்க்கெட்டில் நிறைய கிடைக்கின்றன. அவற்றைப் போட் டுக்கொண்டால்… மாதவிலக்கையே தள்ளிப்போட முடியுமே! விசேஷ நாட்களையும் ஜாலியாகக் கொண்டாட முடியுமே!” என்று குஷியாகும் பெண் களின் காலம்!
இவர்களில் பலரும், ‘இப்படி மாத்திரைகளை இஷ்டத்துக்குப் பயன் படுத்துவது ஆபத்தானது’ என்கிற அறிவுரைகளையெ ல்லாம் தெரிந் தோ… தெரியாமலோ கடந்து போய்க் கொண்டே இருக்க… கடைசியில் அதுவே பேராபத் தாக வந்து படுத்தி எடுக்க ஆரம்பித்து விடுகிறது என் பதுதான் உண்மை.
‘மாதவிலக்கைத் தள்ளிப்போட மாத்திரைகளைப் பய ன்படுத்துவது எந்த அளவுக்கு சரி?’ என்றபடி மகப் பேறு மருத்துவர் ஜெயம் கண்ணனிடம் பேசினோம்.
”மாதவிடாயைத் தள்ளிப்போட நினைப்பவர்கள்… மருத்துவர்களி ன் ஆலோசனைகளைப் பெறாமல் மாத்திரைகளின் பெயரைச் சொல்லி வாங்கிக் கொள்கிறார்கள். இது உடலைப் பெரிய அளவில் பாதி க்கச் செய்யும். பீரியட்ஸ் வருவதே தெரியாத அளவுக்கு பாது காப்பான நாப்கின்ஸ் இப்போது கிடைக்கிறது. அப்படியிருக்க, மாத்திரைகளைப் பயன்படுத்தி மாதவிலக்கை ஏன் தள் ளிப்போட வேண்டும்? இயற்கைக்கு மாறாக நாம் நிகழ்த்தும் எந்தச் செ யலுமே தவறானதுதான்” என்ற டா க்டர்,
”விசேஷமான நாட்களில் மாதவி லக்கு ஏற்பட்டால், சங்கோஜமாக த்தான் இருக்கும். ஆனால், அதை த் தள்ளிப்போடும் எண்ணத்தில் மாத்திரை களைச் சாப்பிடும்போது உடலுக்குத் தேவையற்ற சங்கடமாகிவிடும். மாதவிடாய் விஷயத்தில் மட்டும் அல்ல… எதற்காகவும் மாத்திரைகளைப் பயன்படுத்து ம் போது டாக்டரின் அறிவுரையை அவசியம் கேட்க வேண்டும்” என்று அழுத்தமாகச் சொ ன்னவர், மாத்திரைகளைப் பயன் படுத்துவது பற்றிய விஷயத்துக்கு வந்தார்.
”கடைகளில், ‘புரஜெஸ்ட்டரோன்’ (progesterone) கலந்த மாத்தி ரைகள் கிடைக்கின்றன. மூன்று முதல் ஐந்து நாட்கள்வரை அதனை எடுத்துக் கொள்ளலாம். எந்தவித பக்க வி ளைவும் இருக்காது. இருந்தும், ஒவ்வொரு வரின் உடலும் ஏற்றுக்கொள்ளும் விதமாக மாத் திரைகளின் செயல்பாடு அமைவது இல்லை. இதனால், மாத விலக்கு தள்ளிப் போக மாத்திரை போடுபவர்கள், முதலில் கர்ப்பப்பையை ஸ்கேன் செய்து கொள்ள வேண்டியது அவசியம். யூட்ரஸின் நிலை, ஏதேனும் பிரச்னை இருக்கிறதா, வயிற்று வலி, அல்சர், மாதவிடாய் கோளாறு, கர்ப்பப்பை கேன்சர் பாதிப்பு என எது வேண்டுமானாலும் நம்மை தாக்கி இருக்கலாம். அது குறித்து தெரியாமல் மாத்திரைகளைச் சாப்பிட்டால்… அத்தகைய பாதிப்புகள் பன்மடங்காகி, உடலை வரு த்திவிடும் வாய்ப்பு இருக் கிறது. டாக்டரி ன் அட்வைஸ் இல்லாமல் மாதவிலக்கு மாத்திரை களை உட்கொள்வதால் உடல் எடை கூடுவது, வயிற்றுப் புரட்டல், வா ந்தி, வாய்க்கசப்பு உள்ளிட்ட பல பாதிப் புகள் ஏற்படலாம். சிலருக்கு ‘மைக்ரேன்’ எனப்படும் ஒற்றைத் தலை வலியும் வர வாய்ப்பு இருக்கிறது.
இப்படி மாத்திரைகளைச் சாப்பிடும் போ து… மாதவிடாய் சுழற்சியும் மாறுபடும். அடுத்த மாத சுழற்சியை உடம்பு டேக் ஓவர் பண்ணாது. 100 மீட்டர் ரிலே ரேஸ் போகும்போது, குறிப்பிட்ட இடத்தில் அந்த ஸ்டிக்கை இன்னொருவர் வாங்க வேண்டும். இல்லை என்றால், ஓடியவர் நின்று கொண் டேதான் இருக்கவேண்டும். அதேபோல்தான் அடுத்த மாதவிடாய் சுழற்சி யை உடல் ஏற்றுக் கொள்ளாமல் போகும்போது… ரத்தப்போக்கு அதிகரிக்கும். நம் உடம்பின் உஷ்ணமும் அதிகமாகும்!” என விளக்க மாகச் சொன்ன ஜெயம் கண்ணன்,
”இந்தியாவில் வலி நிவாரணிக்கும், வைரஸ் பாதிப்பு உள்ளிட்டவ ற்றுக்கும் சேர்த்தே மாத்திரைகளைத் தயாரிக்கும் வழக்கம் இருக்கிறது. கடைகளிலும் தாராளமாகக் கிடைக்கிறது. இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் அதிகம். வெளிநாடுகளில் வலி நிவாரணி, ஹார்மோன் மாத்தி ரைகள் என எது கேட்டாலும், கடைகளில் கொடுக்க மாட்டா ர்கள். டாக்டரின் சிபாரிசு இருந் தால் மட்டுமே வாங்க முடியும். ஆனால், இங்கே மாத விலக் கைத் தள்ளிப்போட நினைக்கும் ஒரு பெண் சர்வசாதாரணமாக அதற்கான மாத்திரைகளின் பெ யரைச் சொல்லி மெடிக்கல் ஸ் டோரில் வாங்கிச் செல்கிறார். தா ன் செய்வது எவ்வளவு அபாயமா னது என்பது பற்றி அவர்களுக்குத் தெரிய வில்லை” என்று கவ லையை வெளிப்படுத்தியதோடு, தலைகோதும் தாயாகவும் மாறி இப்படிச் சொன்னார்-
 ’‘மாதவிடாய் மாத்திரை, கருத்தடை மாத்திரை அளவு க்கு ஆபத்தை விளைவிக்க கூடியது இல்லை. ஆனாலும், சிறு பாதிப்புகள்கூட ஏற்ப டாத அளவுக்கு நம் உடலைப் பாதுகாப்பது அவசியம். பெ ண்ணின் உடல் பூவுக்குச் சம மானது. மாத்திரைகளின் வீரியம் தெரியாமல், அவற் றைப் பயன்படுத்தும்போது அந்தப் பூ எத்தகைய அவ திக்கு உள்ளாகும் என்ப தை உணரவேண்டும். முடிந்த மட்டும் இயற்கைக்கு மாறாக மாத சுழற்சியைத் தள்ளிப்போடுவதைத் தவிர்க்க வேண்டும். இக்கட் டான சூழலில் மாத்திரைகளைப் பயன்படுத்தும்போது மருத்துவ ரின் உரிய அறிவுரை யைப் பெற்றே பயன்படுத்த வேண்டும்!”