Saturday 18 February 2012

இல்லத்தரசியா? நிதி ஆலோசகரா?

Posted On Feb 18,2012,By Muthukumar
வீட்டின் செல்வ செழிப்புக்கு உறுதுணையாகும் பெண்கள், வீட்டுப்பராமரிப்பில் மட்டுமே பெண்கள் கவனம் செலுத்தி வந்த காலங்கள் எல்லாம் பழங்கதையாகிப்போயிற்று. நாகரீக உலகில் ஆண்களின் சேமிப்புகளை முறையாக முதலீடு செய்வதற்கும் செல்வம் சேர்க்கும் அவர்களது முயற்சியில் உதவிடவும் இன்றைய பெண்கள் தயாராகி வருகின்றனர்.
வீட்டின் சேமிப்பை வளப்படுத்துவதில் ஆண்களின் முதல் சொத்தாக விளங்குவது அவர்களது இல்லத்தரசிகளே. செல்வ வளம் சேர்ப்பதில் ஆண்களின் நிதி ஆலோசகராக விரும்பும் பெண்மணி நீங்களானால், இந்த கட்டுரை உங்களுக்காகத்தான். தொடர்ந்து படியுங்கள். இதோ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில நிதி நிர்வாக நுட்பங்கள். இதை தெரிந்து கொண்டால் பணம் சேர்ப்பதில் உங்கள் கணவருக்கு நீங்கள் சிறந்த துணையாக முடியும்.
திட்டமிடுங்கள்
எதற்கும் திட்டமிடுவது தான் முதல் படி. `திட்டம் சரியாக இருந்தால் பாதி வெற்றி அடைந்தாயிற்று' என்னும் ஆங்கில பழமொழியை நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் செலவுகளை- அடிப்படை செலவுகள், அதிக அவசியமல்லாத செலவுகள், சொத்துக்கள் மீதான முதலீட்டு செலவுகள் மற்றும் சேமிப்புக்கள் என வகைப்படுத்திக்கொள்ளுங்கள்.
மளிகை, மருந்து, வாடகை, வீட்டுப்பணியாள் சம்பளம், கல்விக்கட்டணம், மின் கட்டணம், டெலிபோன் கட்டணம் போன்றவை அடிப்படை செலவுகளாகும். சுற்றுலா, சினிமா, உணவு விடுதிகளுக்கு செல்லுதல் போன்றவை அதிக அவசியமல்லாத செலவுகளாகும். வீட்டுக்கடன், வாகன கடன் மற்றும் தனி நபர் கடன் ஆகியவை சொத்துக்கள் வாங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட செலவுகளாகும். தங்க ஆபரணங்கள், வங்கி டெபாசிட்டுகள், பங்கு வர்த்தக முதலீடுகள் போன்றவை சேமிப்புகளாகும்.
மேற்சொன்ன ஒவ்வொரு இனத்திற்கும் அடுத்த மாதம் எவ்வளவு பணம் தேவைப்
படும் என்பதை முன்னதாக திட்டமிட்டு அந்தந்த தொகையை தனித்தனியே எடுத்து வையுங்கள்.
வரவோ செலவோ அவற்றை தனித்தனியாக எழுதி வையுங்கள். என்னென்ன வகைக்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்பதை சரியாக எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.
உதாரணமாக பேப்பர்காரர், காய்கறிக்காரர், பால்காரர், சலவை தொழிலாளி இவர்களுக்கு கொடுக்க வேண்டிய தொகை, வீட்டுப்பணியாளருக்கு கொடுத்த முன்பணம், வங்கியில் செலுத்த வேண்டிய பணவிடை, மற்றும் காசோலை பற்றிய தகவல்களை ஞாபகமாக எழுதி வையுங்கள். அந்தந்த செலவுகள் முடிந்ததும் அதையும் மறக்காமல் குறிப்பெடுங்கள்.
ஒவ்வொரு இனத்துக்கும் நீங்கள் திட்டமிட்ட செலவு அதனை மிகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஒருவேளை ஒரு இனத்தில் நீங்கள் திட்டமிட்டதை விட அதிகமாக செலவு செய்து விட்டதாக தெரிய வந்தால், வேறு ஏதாவது ஒரு செலவை நிறுத்தவோ அல்லது குறைக்கவோ முடியுமா என்று பாருங்கள்.
பல நேரங்களில் உபரி வருமானத்தை எவ்வாறு செலவு செய்வது என்பதில் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படுவதுண்டு. உதாரணமாக, போனஸ் பணத்தில் தனக்கொரு செல்போன் அல்லது லேப்டாப் அல்லது கேமராவை வாங்கலாமென கணவர் நினைக்கும் போது, தங்க ஆபரணங்கள் வாங்குவதே சரி என மனைவி கருதலாம். இதுபோன்ற தருணங்களில் எதற்கு முக்கியத்துவம் தருவது என்பதை இருவரும் கலந்து பேசி முடிவெடுப்பது நல்லது.
கல்வி, மருத்துவம் மற்றும் உணவுக்கு முன்னுரிமை தருவது மிகவும் சரியானது. செலவுகளை கட்டுப்படுத்தி மாதாந்திர வருமானத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சேமிக்க கற்றுக்கொண்டால் அவற்றை சிறப்பான அளவில் முதலீடு செய்யலாம்.
அதிக தேவையற்ற செலவுகள், வாகன மற்றும் தனி நபர் கடன்களை கட்டுப்படுத்தினால் சேமிப்பதொன்றும் கடினமானதல்ல. சேமிப்புகள் வளரும் போது அவற்றை சொத்துக்களாக மாற்றிக்கொள்ளலாம்.
சரி. வருவாயை பெருக்குவது எப்படி?
மொத்தமாக வாங்குங்கள். முடிந்த வரை பேரம் பேசி வாங்குங்கள். தள்ளுபடி விலையில் பொருட்கள் கிடைக்கும் போது வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் கணவர் சேமிக்கும் விதங்களை தெரிந்து வைத்திருங்கள். சேமிப்பின் வளர்ச்சியை கண்காணியுங்கள். சேமிப்பின் வளர்ச்சி எதிர்பார்த்த விதத்தில் இல்லாமல் போனால் அவற்றை மாற்றி லாபகரமான இனங்களில் மறு முதலீடு செய்யுங்கள். அதே நேரம் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை கவனத்தில் கொண்டு முதலீடுகளை மேற்கொள்ளுங்கள்.
நீங்களும் நிதி ஆலோசகர் தான் இல்லத்தரசிகளே!

Thursday 16 February 2012

உங்கள் குழந்தை அடிக்கடி சிறுநீர் கழிக்கிறதா?

Posted On Feb 16,2012,By Muthukumar

சில குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழித்துக்கொண்டிருக்கும். அதனால், பல தாய்மார்கள், அந்தக் குழந்தைகளை கீழாடை அணியாமல் `ப்ரீ'யாக விட்டுவிடுவார்கள்.
அவ்வாறு செய்பவர்கள், ஏன் தங்கள் குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறார்கள் என்று யோசித்திருக்க மாட்டார்கள்.
உங்கள் குழந்தையும் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறதா? அதற்கு காரணம், இதுதான்...
பொதுவாக பாலில் தண்ணீர் அதிகமாகக் கலந்து தருவதால் குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறார்கள். அதனால், குழந்தைகளுக்கு தரும் பசும்பால் அல்லது ஆவின் பாலில் தண்ணீர் சேர்ப்பதை தவிர்த்திடுங்கள்.
டின் பவுடர் பாலாக இருந்தால் ஒரு கரண்டி பவுடருக்கு ஒரு அவுன்ஸ் தண்ணீர் சேர்த்தால் போதும். பொதுவாக, 4 கிலோ எடையுள்ள குழந்தையாக இருந்தால் ஒரு வேளைக்கு 4 அவுன்ஸ் பால் கொடுத்தாலே போதும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

Monday 13 February 2012

சுக பிரசவத்திலும் மயக்கவியலின் பங்கு

Posted On Feb 13,2012,By Muthukumar
நம் உடலை தாக்கும் ஒவ்வொரு நோய்க்கும், அந்நோயை குணப்படுத்தும் வல்லமை மிக்க டாக்டர்கள் உள்ளனர். இவர்கள் குறிப்பிட்ட ஒரு நோயை குணப்படுத்துவதில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள். சில நோய்கள் மற்றும் பாதிப்புகளுக்கு, அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை இருப்பின், டாக்டர்களுக்கு மிகமிக முக்கிய பங்காற்றுபவர்கள், மயக்கவியல் நிபுணர்கள்.
அறுவை சிகிச்சை தேவைப்படும் நபருக்கு, முதலில் மயக்க மருந்து கொடுக்க வேண்டும். மயக்க மருந்து கொடுத்த பின், ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குப் பின் அறுவை சிகிச்சையை துவக்கி, குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிக்க வேண்டியது அவசியம்.
உடல்நிலை பரிசோதனை
அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிக்கு, உடனடியாக மயக்க மருந்து செலுத்துவது ஆபத்தில் முடியும். நோயாளியை மயக்கமடைய செய்வதற்கு முன், அவர் உடல்நிலையை பரிசோதிப்பது முக்கியம். அவர் உடல் மயக்க மருந்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தில் உள்ளதா என்பதை முதலில் அறிந்து, அதன் பின்தான் மயக்க மருந்து செலுத்த வேண்டும்.
ரத்தத்தில், செல், ஹீமோகுளோபின், யூரியா, சர்க்கரை உட்பட அனைத்தும், சிறுநீர், மார்பு எக்ஸ்ரே, ரத்த அழுத்தம், ஈ.சி.ஜி., தேவைப்பட்டால் டிரட்மில் பரிசோதனையும் செய்து, இருதயம் உள்ளிட்டவை சரியாக இயங்குவதை உறுதி செய்வது அவசியம். இந்த நடைமுறையை மயக்கவியல் நிபுணர் தெரிவித்து, அதன் பின் பரிசோதனைகளை செய்வதை விட, அறுவை சிகிச்சை தேவைப்படும் நபருக்கு, அறுவை சிகிச்சைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே இப்பரிசோதனைகளை மேற்கொண்டு, அதன் அறிக்கையை தயாராக வைத்திருப்பது, மருத்துவமனைகளின் முக்கியப் பணி.
இந்த பரிசோதனைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாததால், நோயாளிகள் மற்றும் உறவினர்கள், "பணம் செலவாகுமே...' என்று, இவற்றை தவிர்க்க முயல்கின்றனர்.
நோயாளி மயக்க நிலையில் இருக்கும் போது ஏற்படும் உயிரிழப்பு மற்றும் பக்க விளைவுகளை தவிர்க்க, இப்பரிசோதனைகள் மிகமிக அவசியம். இருந்தாலும், உயிருக்கு போராடும் நோயாளிக்கு செய்யப்படும் அறுவை சிகிச்சைக்கு இந்த பரிசோதனைகள் செய்வதில்லை; அனுபவம் வாய்ந்த மயக்கவியல் நிபுணர் மூலம், அந்நோயாளிக்கு தேவையான மயக்க மருந்து செலுத்தி, சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
சிகிச்சை முறை
அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் நபரை, முழு மயக்க நிலைக்கு கொண்டு சென்று, மூச்சுக்குழாய் வழியாக டியூப் மூலம் ஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு செலுத்தப்படுகிறது. ஆக்ஸிஜன், நோயாளியின் சுவாசத்துக்காகவும், நைட்ரஸ் ஆக்சைடு மூளை மற்றும் திசுக்களை கட்டுப்படுத்தும் பணியையும் செய்கின்றன.
அறுவை சிகிச்சை முடிந்தவுடன் சில மருந்துகளை நோயாளிக்கு செலுத்தி, மயக்க நிலையை சிறிது சிறிதாக எடுக்க வேண்டும். நோயாளிக்கு நினைவு திரும்பியவுடன் தனி அறையில் அல்லது அவசர சிகிச்சைப் பிரிவில், போதிய மருத்துவப் பாதுகாப்புடன் சில மணி நேரம் வைத்திருக்க வேண்டும்.
உடல் ரீதியான எவ்வித பிரச்னையும் ஏற்படவில்லை, ஏற்பட வாய்ப்பில்லை என்பதை உறுதிசெய்த பின், நோயாளிக்கு ஒதுக்கப்பட்ட அறையில் அனுமதிக்கப்படுவார். மயக்க நிலைக்கு கொண்டு செல்ல செலுத்தப்படும் மருந்தின் அளவு அதிகமானாலோ அல்லது குறைந்தாலோ நோயாளியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.
குறிப்பிட்ட பகுதி முழு மயக்க நிலை இல்லாமல், ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் செயலிழக்கச் செய்யலாம். குறிப்பாக, வயிற்றுக்கீழ் பகுதி முழுவதையும் செயலிழக்கச் செய்து, அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம்.
இதுபோன்ற சிகிச்சையின் போது, முதுகு தண்டில் மயக்க மருந்து செலுத்தப்படுகிறது; அறுவை சிகிச்சை செய்யப்படும் நேரத்துக்கு ஏற்ப, சிறிது சிறிதாக மருந்து செலுத்தப்படுகிறது. இதுபோன்ற சிகிச்சை முறையில் வலி குறைவாக இருக்கும்; ஆபத்தும் ஏற்படாது.
உறுப்பு
இதேபோல், லோக்கல் அனஸ்தீசியா முறையும் உள்ளது. இதில், ஒரு உறுப்பை மட்டும் செயலிழக்கச் செய்து அந்த உறுப்பில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம். அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் நபர், ஏற்கனவே ஏதாவது நோய் பாதிப்புக்காக மருந்து, மாத்திரைகளை தொடர்ந்து உட்கொண்டு வருபவராக இருந்தால், அவற்றை அறுவை சிகிச்சை செய்யும் நாள் வரை தொடர்ந்து உட்கொள்ளலாம்; நிறுத்தக் கூடாது. டாக்டரின் பரிந்துரையின் பேரில், ஒரு சில மாத்திரைகளை மட்டும் தவிர்க்க வேண்டும்.
பிரசவம்
பிரசவம் என்பது, தாயின் மறு பிறப்பு. சுகப்பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சை முறையில் பிரசவம் பார்க்கப்படுகிறது. இதில், சிசேரியன் முறைக்கு மட்டுமே மயக்கவியல் நிபுணர்களின் பங்களிப்பு இருந்து வந்தது.
தற்போது சுகப்பிரசவத்துக்கும் மயக்கவியல் நிபுணரின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. வெளிநாடுகளில், "பெயின்லஸ் எபிடூரல் டெக்னிக்' முறையில், கர்ப்பிணிகளுக்கு வலியில்லாமல் சுகப்பிரசவம் பார்க்கப்படுகிறது. இந்தியாவிலும் இம்முறையில் பிரசவங்கள் ஒரு சில மருத்துவமனைகளில் நடக்கின்றன. இம்முறையில் கர்ப்பிணியின் முதுகுத்தண்டுவடத்தில் மெல்லிய டியூப் ஒன்றை செருகி, அதன் வழியாக மருந்தை தேவையான அளவு சிறிது சிறிதாக செலுத்தி வந்தால், சுகப்பிரசவத்தின் போது வலி ஏற்படாது.

அகில்

Posted On Feb 13,2012,By Muthukumar
னித இனம் தழைத்தோங்கவும், நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழவும், சித்தர்கள் தங்களின் ஞான சிருஷ்டியால் ஆராய்ந்து கண்டறிந்து சொன்ன சித்த மருத்துவம் மிகச்சிறந்த மருத்துவமாகும். எத்தகைய பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத மருத்துவமாகும்.
இயற்கையிலேயே மருத்துவ குணம் கொண்ட புல், பூண்டு, செடி, கொடி, மரம் போன்றவற்றைப் பற்றி சித்தர்கள் கூறியுள்ளனர். அவற்றைப் பற்றி ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். இந்த இதழில் அகில் மரம் பற்றித் தெரிந்துகொள்வோம்.
அகில் பெருமர வகுப்பைச் சார்ந்தது. இமய மலையின் வடகிழக்கு மாநிலங்களில் அதிகம் காணப்படுகிறது. தென்னிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரக் காடுகளில் தானாக வளருகிறது. இதுபோல் நேபாளம், மியான்மர், தாய்லாந்து, மலேசியா நாடுகளின் காடுகளில் காணப்படுகிறது.
இதற்கு அசுரு, அகருக்கட்டை, அகிற்கட்டை என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.
Tamil - Agil
English - Aloewood
Sanskrit - Agaru
Telugu - Krishnagaru
Malayalam - Kayagahru
Hindi - Agar
Botanical name - Aquilaria agallocha
அகில் மரத்தின் கட்டையே மருந்தாகப் பயன்படுகிறது.

தளர்ந்த விருத்தருக்காந் தக்க மணத்தால்
உளைந்த சுரமனைத்து மோடும்- வளர்ந்திகழு
மானே யகிற்புகைக்கு வாந்தியரோ சுகம்போத்
தானே தளர்ச்சியறுஞ் சாற்று
-அகத்தியர் குணவாகடம்
பொருள் - அகில் கட்டை வயோதிகர்களுடைய தளர்ந்த தேகத்தையும் இறுகச் செய்யும். இதன் வாசனையால் சிற்சில சுரம் நீங்கும். புகையால் வாந்தியும், பசியின்மையும், அழற்சியும் நீங்கும். அகில் கட்டை இந்திய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் அதிகம் சேர்க்கப்படுகிறது.

அகில் கட்டை தைலம்
அகில் கட்டையை சிறிது சிறிதாக நறுக்கி நீரில் போட்டு வற்றக் காய்ச்சி அதனுடன் நல்லெண்ணெய், பசுவின் பால் வகைக்கு 750 மி.லி. எடுத்து ஒன்றாக்கி வைத்துக்கொண்டு அதிமதுரம், தான்றிக்காய் தோடு வகைக்கு 35 கிராம் எடுத்து பசுவின் பால் விட்டு அரைத்து சேர்த்து லேசாக கொதிக்க வைத்து வடித்து எடுத்துக் கொள்ளலாம்.
இந்த தைலத்தை தலைக்கு தேய்த்து வந்தால் உடல் சூடு தணியும். மூக்கடைப்பு, தலையில் நீரேற்றம், ஒற்றைத் தலைவலி போன்றவை நீங்கும்.
· அடிக்கடி சளி பிடிப்பதைத் தடுக்கும்.
· தலைமுடி நன்கு வளரும். பொடுகு, முடி உதிர்தல், புழுவெட்டு நீங்கும்.
· அகில் எண்ணெயை சருமம் முழுவதும் பூசிக் கொண்டால் சரும நோய்கள் உண்டாகாது.
· அடிபட்ட வீக்கம், இரத்தக்கட்டு போன்றவற்றிற்கு அகில் எண்ணெயை பூசினால் வீக்கம் குறையும். வலி நீங்கும்.
· சரும எரிச்சல், புண், அரிப்பு, சொறி, சிரங்கு போன்றவைற்றைப் போக்கும்.
· இதன் நறுமணத்தை நுகர்ந்தால் வாந்தி, மயக்கம் நீங்கும்.
· கை, கால் மூட்டுகளில் வலி, இடுப்பு வலி, கழுத்து வலி போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணம் அளிக்கும்.
· அகில் கட்டையை நீர்விட்டு மை போல் நன்கு அரைத்து உடல் எங்கும் பூசி வந்தால் தளர்ந்த தசைகள் இறுகி வலுப்பெறும். உடல் பொலிவுபெறும்.
· அகில் கட்டையை நெருப்பில் காட்டி வரும் புகையை நுகர்ந்தால் சுரக்காய்ச்சல் நீங்கும். வாந்தி சுவையின்மையைப் போக்கும்.
· இதன் நறுமணம் மனதிற்கு நல்ல அமைதியையும் சாந்தத்தையும் கொடுக்கும்.

கித்தார் கற்றுக்கொள்ள‍ விரும்புபவர்களுக்கு உதவும் தளம்

சிறுவனாய் இருந்து இளைஞனாய் உரு வெடுக்கையில், பலருக்கும் ஏதேனும் ஓர் இசைக்கருவியை இசைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என ஆர்வம் வரும். 
இன்றைய பள்ளிக் கல்வி பலத்த போட்டி யின் அடிப்படையில் அமை ந்துள்ளதால், அதற்கு பள்ளி மாணவர் களால் நேரம் ஒதுக்க இயல வில்லை. கல்லூரி மாணவர்களுக்கும் இதே பிரச்னைதான்.
இவர்களுக்கு உதவிடும் வகையில், கிட்டார் கற்றுக் கொடுக்கும் தளம் ஒன்றினை அண்மையில் இணையத்தில் பார்க்க முடிந்து. 
மிகச் சிறந்த கிட்டார் இசைக் கலைஞர் ஒருவரால் உருவாக்கப்பட் டு, பாடங்களும் மிக அழகாகவும் நேர் த்தியாகவும் தரப்பட்டுள்ளன. Video Vault என்ற தலைப்பின் கீழ் கிளிக் செய்தால், இந்த பாடங்க ளுக்கான பைல் கள் கிடைக் கின்றன. 
ஒவ்வொரு பாடமும் ஒரு வீடியோ பைலுடன் காட்டப் படுகிறது. நம் கையில் கிட்டாரினை வைத்துக் கொ ண்டு அதனை மீண்டும் மீண்டும் பார் த்துக் கற்றுக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஒன் றைப் பார்த்தவுடனேயே, இதனை மட் டுமே நீங்கள் அடிக்கடி பயன்படுத்தி, கிட்டார் இசைக்கக் கற்றுக் கொள்ளப் போகி றீர்கள் என முடிவு செய்துவிடுவீர்கள். அல்லது, இதில் தரப்பட்டுள்ள அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மற்றும் பதில்கள் (FAQ) பிரிவி னை முதலில் படிக்கலாம்.
இந்தப் பிரிவு, இணைய தளத்தின் மேல் வலது பக்கம் உள்ளது. பாடல்கள், இசைக்கும் வழிகள் எனப் பலவகை தலைப்புகளில் இந்த கேள்வி பதில்கள் அமைக் கப் பட்டுள்ளன. 
முதலில் உங்களுக்கான இலவ ச அக்கவுண்ட் ஒன்றை நீங்கள் ஏற்படுத்திக் கொண்டு, இந்த பாடங்களைக் கற்றுக் கொள் ளலாம். நீங்களே ஒரு கிட்டார் இசைக் கலைஞராக இருந்தால் , நீங்களும் சில பாடங்களுக்கான வீடியோ பைலை உருவாக்கி அப்லோட் செய்திட லாம். 
வீடியோ பாட பைல்கள் Instructional, Performance, Embedded, All Selections என்ற பிரிவுகளில் காட்டப்படுகின்றன. இது வும் நமக்கு உதவியாய் உள்ளது. Gear reviews, tips and tricks, and guitar news ஆகிய பிரிவுகளில் கூடுதல் தகவல்களும், கிட்டார் இசைப்பதில் டிப்ஸ்களும் கிடைக்கி ன்றன.
இசைக் கலைஞர்களுக்கு இது ஓர் சிறப்பான வழிகாட்டி. கிட்டார் இசைப்பதில் ஆர்வம் இல்லை என்றாலும், ஆன்லைனில் ஒரு கலையைச் சொல்லிக் கொடுக்கும் வழி முறையை இந்த தளத்தின் வடிவமைப்பி லிருந்துகற்றுக் கொள்ளலாம். எதற்கும் ஒரு முறை இந்த தளத்தைப் பாருங்கள்.

Sunday 12 February 2012

காதலன் (கணவன்) – காதலி (மனைவி) – சின்னச்சின்ன சண்டைகள்

“என்னதான் இருந்தாலும் நீங்க அவ பக்கத்தில உட்கா ர்ந்து வந்தது தப்புதான்… அவ யாரு உங்கமேல அவ்வளவு அக்கறை காட்டிறதுக்கு… என்னைவிட அவ முக்கியமா னவளா போயிட்டாளா..?’
“உனக்காக நான் எவ்வளவு நேரம் பார்த்திருந்தன் தெரியு மா… ஒரு எஸ்.எம்.எஸ். ஆச்சும் பண்ணினியா? இல்லாட்டி ஒரு கோ லாச்சும் பண்ணியிருக்கலாம் தானேடா… என்மேல பாசமிருந்தா இப்படியெ ல்லாம் செஞ்சிருப்பியா…? என்மேல உனக்கு கொஞ்சங் கூட அக்க றையில்லை… என்னை காக்க வைக்கிறதில உனக்கு அவ் ளோ ஆனந்தமா…?’
இப்படியான சின்னச்சின்ன சண்டைகள் அடிக்கடி காதலன்+ காதலி, கணவன் + மனைவி ஆகி யோரிடையே இடம்பெறுவது சகஜமே. காதலன், காதலிக் கிடையில் ஏற்படும் இப்படி யான சண்டைகளால் பலரது காதல் வாழ்வு இடையிடை யே முறிவடைவதும் உண்டு. அதே போல் கணவன், மனை விக்கிடையில் ஏற்படுகின்ற சண்டைகள் விவாகரத்து வரை சென்றுவிடுவதும் உண்டு.
உண்மையிலேயே இப்படியான சண்டைகள் எதனால் ஏற்படுகின்ற ன என நினைத்துப் பார்த்திருக்கின்றீர்களா? அநேகமாக எல்லோரு ம் சொல்வது “புரிந்துணர்வின்மை’ என்ப தேயாகும். ஆனால், புரிந்துணர்வு என்ப தற்கு அப்பால் “அன்பு’ என்ற ஆதிக்கம் இருப்பதே மூல காரணமாகும். உண்மை அதுதான், சிந்தித்துப் பாருங்கள். நெருங் கிப் பழகியவர்கள் சண்டைபிடிப்பதுதான் சகஜமான விடயம்.

நீங்கள் வாங்கப்போகும் வீடு, கட்டிய வீடா…? கட்டப்படும் வீடா…?

குருவி போல சிறுகச்சிறுக சேர்த்து வைத்த பணத்தைக் கொண்டு, தலைமுறை தாண் டியும் வசிக்க வேண்டிய வீட் டை வாங்கும் போது, பல் வேறு விஷயங்களை அலசி ஆராய்ந்த பின்பு வாங்கி னால் பிற்காலத்தில் தொந்தரவு இல்லாமல் வசிக்க முடியும். வீடு வாங்குவதற்கு முன்பு என்னென்ன செய்ய வேண்டும் என்பதில் குழப்பமாக உள்ளதா? கவலையை விடுங்கள். உங்களுக்காக இதோ சில குறிப்புகள்.
முதலில் கட்டுமானத்தைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
முதலில், பல்வேறு இதழ்களில் வெளியாகும் கட்டுமான நிறுவன ங்களின் விளம்பரங்களை பாரு ங்கள். அதில், ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட அல்லது கட்டிக் கொண்டிருக்கும் புதிய அடுக்கு மாடி குடியிருப்புகள், பழைய குடியிருப்புகள் பற்றிய தகவல் கள் இடம் பெற்றிருக் கும். இதில் பட்ஜெட்டைப் பொறுத்து உங்க ளுடைய சாய்ஸ் என்ன என்ப தை முடிவு செய்யுங்கள்.
கட்டி முடிக்கப்பட்ட வீடு:
கட்டப்பட்ட புதிய அடுக்கு மாடிக் குடியிருப்பையே பெரும்பாலான வர்கள் தேர்வு செய்கிறார்கள். இது நல்லது. ஏனெனில், கட்டிக் கொண் டிருக்கும் குடியிருப்பாக இருந்தா ல், காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் கட்டுமானப் பொ ருட்கள் விலை உயர் வை காரணம் காட்டி கூடுதல் தொகை கேட்கவும் வாய்ப்பு உள்ளது. கட்டப்பட்ட வீட் டில் இத்தகைய தொல்லைகள் இல்லை. முதலில் உங்கள் பட்ஜெ ட்டுக்கு ஏற்ற பகுதியை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். உதாரண மாக நகரின் முக்கிய பகுதிகளில் என்றால் விலை அதிகமாகவும், புறநகர் பகுதிக ளாக இருந்தால் சற்று குறை வாக வும் இருக்கும்.
அடுத்தபடியாக, பல்வேறு கட்டுமான நிறுவனங்களின் குடியிருப்பு திட்டங்களி ன் சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை ஆகியவற்றை ஒப்பிட்டு நிறுவனத்தை தேர்வு செய்யுங்கள். பிறகு எத்தனை சதுர அடி குடியிருப்பு என் பதை முடிவு செய்து அளந்து பாருங்கள். கட்டிடத்துக்கு முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொ ள்ளுங் கள்.
ஏனெனில், 4 மாடிக்கு மட்டும் அனுமதி பெற்றுவிட்டு 6 மாடி கட்டி விற்று விடுவார் கள். இதனால் பிற்காலத்தில் பிரச்னை ஏற்படும். இது தொ டர்பாக வழக்கறிஞரின் உத வியை நாடுவது நல்லது. வங்கிக் கடன் பெற்று வீடு வாங்குவதாக இருந்தால், இந்த விஷயங் களை வங்கி பார்த்துக் கொள்ளும்.
கட்டிக் கொண்டிருக்கும் வீடு:
கட்டிக் கொண்டிருக்கும் வீடு வாங்குவதால் சில நன்மை உ ண்டு. அதாவது குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்பு திட்ட த்தை தொடங்கும்போது, கட்டு மான நிறுவனங்கள் சலுகை கள் வழங்கி வருகின்றன. உதா ரணமாக சதுர அடிக்கு ரூ500 வரை மிச்சப்படுத்த முடியும். அதாவது 500 சதுர அடி வீடாக இருந்தால் ரூ2.5 லட்சம் குறை யும். குடியிருப்பான தொகையையும் கொஞ்சம் கொஞ்சமாக படிப் படியாக கொடுக்கலாம்.
இதுகுறித்து, சோழிங்கநல்லூரைச் சேர்ந்த பிரபாகரன் கூறுகை யில், ‘‘நாவலூரில் உருவாகி வரும் ஒரு அடுக்குமாடிக் குடியிருப் பில் 6 மாதங்களுக்கு முன்பு ஒரு வீடு புக் செய்தேன். அப்போது, துவக்க கால சலுகையாக ஒரு சதுர அடி விலை ரூ.2,000 ஆக இருந்தது. படிப்படியாக உயர்ந்து இப்போது ரூ.2,500 ஆகி உள் ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் கட்டு மானப் பணி முடிவடையும். அப்போது விலை ரூ.2,700 ஆக உயரும் என கட்டு மான நிறுவனம் கூறி உள்ளது’’ என்றார்.
அதேநேரம், சில விஷயங்களில் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். வீட்டை கட்டிக் கொடுப்பதில் காலதாமதம் ஏற்படும். எனவே, கட்டுமான நிறுவனத்துடன் முன்தொகையை செலுத்தி ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதில், எவ்வ ளவு காலத்துக்குள் வீடு கட்டிக் கொடுக்கப்படும், நிலத்தின் அளவு (யுடிஎஸ்), கார் பார்க்கிங் வசதி உட்பட அனைத்து விஷயங்களையும் உறுதி செய்து கொள்ளுங்கள். அதுபோல், கட்டு மானப் பொருட்கள் விலை உயர்வை காரணம் காட்டி கூடுதல் தொகை கேட்கக் கூடாது என்பதை ஒப்பந்தத்தில் தெளி வாக குறிப்பிடச் சொல்ல வும்.
கட்டுமானப் பணி நடைபெறும்போது, அவ்வப்போது பணியை மேற்பார்வை செய்ய வேண்டும். குறிப்பாக, உங்களுக்கு ஒதுக்கப் பட்ட அளவு சரியாக உள்ளதா என்ப தை அடித்தளம் போடும் போதே அளந்து சரி பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஒதுக்கப் பட்ட அளவைவிட குறைவான அளவில் கட்டிக் கொடுத்துவிட வாய்ப்பு உள்ளது.
வீடு ஆவணங்கள் அனைத்து சரியாக உள் ள‍தா என்பதை ஆராய வேண்டும்.

ஏற்கனவே கட்டப்பட்டிருக்கும் வீடு வாங்கும்போது அதில் யாருக்கு எல் லாம் உரிமை இருக்கிறது என்பதைக் கவனியுங்கள்.
பழைய வீடு என்றால் பத்திரப் பதிவி போது முழுப் பணத்தையும் கொடு த்து விடாதீர்கள். கொஞ்சம் பணத் தையாவது பிடித்து வைத்துக் கொள் ளுங்கள்.மின்சாரம், தண்ணீர் இணை ப்பை உங்கள் பெயருக்கு மாற்றிய பிறகு அந்தப் பணத்தைக் கொடு ப்பதாகச் சொல்லுங்கள்.
சொத்து கடந்த மூன்றாண்டுக ளுக்கு முன் அடமானம் வைத்து கடன் வாங்கப்பட்டிருந்தால் அந் த விவரம் வில்லங்கச் சான்றி தழில் தெரிய வாய்ப்பில்லை. என்வே மூலப் பத்திரத்தின் அச லை பார்த்த பிறகே முன்பணம் கொடுங்கள். சொத்தை அடமா னம் வைத்துவிட்டு நகலை வை த்து வீட்டை விற்க முயற்சி செய்யக்கூடும்.
அடுக்குமாடி குடியிருப்புகளில்தான் விதிமுறை மீறல்கள் அதிகம் நடைபெறுகிறது. அதனால் அப்ரூவல் பிளா ன்படி விதிமுறைகள் மீறாமல் கட்டப்பட்டிருக் கிறதா என்பதைச் சரி பார்ப்பது அவசியம்.
குடியிருப்பின் சதுர அடி விகிதாசாரத்துக்கு ஏற்ப, பிரிக்கப்படாத மனைப்பரப்பு பத்திரத்தில் (யூ.டி.எஸ்) குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்பதக் கவனியுங்கள். குறைவான யூ.டி.எஸ் கொடுத் து விட்டு, உங்களின் அனுமதி இல்லாமலே பின்னால் கூடுதல் தளம் கட்ட வாய்ப்பு உள்ளது.

பொதுப் பயன்பாட்டு இடம் என்ற காமன் ஏரியா அனைவரும் பயன் படுத்தும்படி இரு க்கிறதா என்பதை உறுதிப் படுத்திக்கொள் ளுங்கள். சில புரமோட்டர்கள், காமன் ஏரி யா என்று ஒரு பகுதியைக் கட்டிவிட்டி, அதில் அறை அல்லது கடை கட்டி விற்று விடுகிறார் கள்.
திறந்தவெளியில் கார் நிறுத்தும் வசதிக்கு பணம் கொடுக்கத் தேவையில்லை.
மேலும் சில தகவல்கள்

வீ‌ட்டை வா‌ங்குவத‌ற்கு மு‌ன்பு அ‌ந் த ‌வீ‌ட்டை ‌மிகவு‌ம் கவன‌த்துட‌ன் கவ‌ னி‌க்க வே‌ண்டு‌ம். அதாவது, உ‌ங்க‌ ள் ‌குடு‌ம்ப உறு‌ப்‌பின‌‌ர்களு‌க்கு ஏ‌ற்ற வகை‌யி‌ல் ‌வீடு இரு‌க்குமா?

உ‌ங்களது போ‌க்குவர‌த்து வச‌தி‌க்கு ‌நீ‌ங்க‌ள் வா‌ங்கு‌ ம் ‌வீடு இரு‌க்கு‌ம் பகு‌தி பொரு‌ந்‌‌தி வருமா? எ‌ன்பதை‌ ப் பா‌ர்‌க்க வே‌ண்டு‌ம்.
‌வீ‌ட்டி‌ல் வயதானவ‌ர்களோ, மு‌தியவ‌ர்களோ இரு‌ப்‌பி‌ன், அரு‌கி‌ல் ந‌ல்ல மரு‌த்துவ மனை இரு‌ப்பதையு‌ம் உறு‌தி செ‌ய்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.
மேலு‌ம், குறிப்பிட்ட பகுதி, அமைதியாக, பிரச்சினைகள் இல்லாததாக இருப்பது ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம். ந‌ம் ‌வீடு அமை‌ந்த பகு‌தி‌யி‌ல் ‌பிர‌ச்‌சினைக‌ள், எ‌ப் போது‌ம் ச‌ண்டை ச‌ச்சரவு எ‌ன்று இரு‌ந்தா‌ ல் ‌ வீ‌ட்டி‌ற்கு‌ள் ‌ நி‌ம்ம‌தி யாக இரு‌க்க முடி‌யாது.
‌மிகவு‌ம் நெ‌ரிசலான‌ப் பகு‌தி‌யி லோ, போ‌க்குவர‌த்து நெ‌ரிச‌ல் ‌ மிகு‌ந்த பகு‌தி‌யிலோ ‌வீடு வா‌ங்கு வது ‌மிகவு‌ம் தவறான முடிவாகு‌ம். அமை‌‌தியா‌ன‌ப் பகு‌தி‌யி‌ல் ‌வீடு இரு‌ப்பதுதா‌ன் எ‌‌ன்று‌ம் ந‌ல்லது.

க‌படி (சடுகுடு) விளையாட்டு


கபடி அல்லது சடுகுடுஅல்லது பலிஞ்சடுகுடு என்று அழைக்கப்படும் விளையாட்டு தமிழர்களால் பல காலமாக, பரவலாக விளையாடப் படும் தமிழர் விளையாட்டுகளுக் குள் ஒன்று. கபடி என்ற பெயரும் தமிழ்ப்பெயராக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது கை+ பிடி = கபடி. இது தெற்கு ஆசியா நாடுகளில் பரவலாக விளை யாடப்படுகிறது.
இவ்விளையாட்டு இரு அணிகளு க்கு இடையே நிகழும் ஆட்களைப் பிடிக்கும் ஒரு போட்டி. ஒவ் வொரு அணியிலும் ஏழுபேர் இரு ப்பர். மொத்த விளையாட்டு நேரம் 40மணித்துளிகள் (நிமிடங்கள்). இவ்வாட்டம் விளையாட வெறும் நீள் சதுரமான (ஆடுகளம்) இடம் இருந்தால் போதும். இந்த ஆடு களத்தை ஒரு நடுக்கோட்டா ல் இரண்டாக பிரித்து ஒரு பக்கத்துக்கு ஒரு அணியாக இரு அணி யினரும் இருப்பர். ஆட்டக்காரர்கள் எப்பொழு தும் புற எல்லைக் கோடுக ளைத் தாண்டி செல்லலா காது. இவ்விளையாட்டு க்கு ஒரு நடுவரும் தேவை.
ஒரு அணியில் இருந்து யாரேனும் ஒருவர் புறப்பட்டு நடுக்கோட் டைத் தொட்டுவிட்டு ஒரே மூச்சில் “கபடிக் கபடி” (அல்லது “சடு குடு”) என்று விடாமல் கூறிக் கொண்டே எதிர் அணியினர் இருக்கும் பகுதிக்கு சென்று எதிர் அணியினரைக் கையாலோ, காலாலோ தொட்டுவிட்டுப் எதிர் அணியினரிடம் பிடி படாமல் நடுக்கோட்டைத் தாண்டி தம் அணி யிடம் திரும்பிவரும் ஒரு வகை விளை யாட்டு. தொடுபட்டவர் ஆட்டம் இழப்பார். ஆனால் எதிரணியினர் சூழ்ந்து பிடிக்க வருவர். மூச்சு விடாமல் ‘கபடிக் கபடிக்” என்று சொல்லிக்கொண்டே எதிராளியைத் தொட்டு விட்டு அகப்படாமல் திரும்பி வரவேண்டும், அகப்பட்டால் சென்ற வர் ஆட்டமிழப்பார். மூச்சு விடாமல் ‘கபடிக் கபடிக்’ என்று சொல் வதற்குப் பாடுதல் என்று பெயர். தம் அணிக்குத் திரும்பும் முன் பாடுவர் பாட் டை நிறுத்தினாலும் ஆட்டம் இழப்பர்.
ஆண்களுக்கான சடுகுடுவும், பெண் களுக்கான சடுகுடுவும் சற்று வேறுபடும்.
கபடிப் பாடல்கள்
நாந்தான் வீரன்டா நல்ல முத்து பேரன்டா வெள்ளிச் சிலம்பெடுத்து விளையாட வாரன்டா தங்கச் சிலம்பெடுத் துத் தாலிகட்ட வாரன்டா சடு குடு சடுகுடு சடுகுடு சடு குடு.
கீத்து கீத்துடா கீரைத் தண்டு டா நட்டு வச்சன்டா பட்டுப் போச்சுடா போச்சுடா போச்சு டா….
ஆடுகளம்
ஆடுகளம், மேடு பள்ளம் இல்லாத ஒரு சமதளமாக இருக்க வே ண்டும். ஆட்கள் கீழே விழுவதும், இழுக்கப்படுவதும் நிகழ் வதால், தரை மண் அல்லது மரத்தூள், மணல்,பஞ்சு மெத்தை பரப்பியதாக இருக்கவேண்டும். கட்டாந்தரையாக (காங்க்கிரீட் டாக) இருப்பது நல்லதல்ல. ஆண்கள் ஆடும் களம் 12.5 மீ x 10 மீ பரப்பு கொண்டதாகும். பெண்கள் ஆடும் களம் 11 மீ x 8 மீ ஆகும். ஆடுகளத்தின் எல்லைகளக் குறிக்கும், கோடுகளும் மற்றும் களத் தைப் பிரிக்கும் கோடுகளும் 2 அங்குல (5 செ.மீ) அளவினதாக இருக்க வேண்டும்.


இந்து திருமணங்களில் மணப்பெண் – மணமகனுக்கு உரிய நெறிமுறைகள்


தோழிப்பெண்(தோழிமாப்பிள்ளை) முன் செல்ல மணமகள் (மண மகன்) தொடர் ந்து வர மணவறையை ஒரு முறை வலம் வந்து மணவறையில் நின்று வருகையாளர்களுக்கு வணக்கம் செலுத் தி வலதுகாலை முன்வைத்து உள்ளே வரவும் பின்னர் மரமணையின் மேல் அமரவும்
  • மணமகன் வேஷ்டி (பேன்ட் தவிர் க்கவும்) அனிந்துமுன் நாள் பயன் படுத்திய மாலையை சாற்றி வரவும்
  • மணமக்கள் ஒவ்வொரு முறை மணவறையில் நுழையும் பொழு தும் வலதுகாலை முன்வைத்து உள்ளே வரவும் வருகை யாளர்க ளை பார்த்து தலைவணங்கி வண க்கம் செலுத்தவும்.
  • திருமண சடங்கு முடியும் வரை சிரித்த முகத்துடன் காட்சியளிக்க வும்
  • தோழி, நன்பர்கள் சிலரை தங்கள் அருகில் திருமண சடங்கு முடியு ம் வரை இருக்கசொல்லவும்
  • யார் அருகில் வந்தாலும் தலை வணங்கி வணக்கம் செலுத்தவும்
  • திருக்கோயில் போன்று மிகவும் புனிதமான இடம் மணவறை ஆகும் எனவே அதற்குரிய மரியாதையி னை தரவும்
  • கைபேசியை மண மேடையில் பூஜையின் பொழுது பயன்படுத்த வேண்டாம்
  • வேண்டுகோள்:மது அருந்துபவராக  இருந்தால், முன்நாள் இரவில் யார் வற்புறுத்தினாலும் மது அருந்த வேண்டாம்
  • மணமேடையில் ஆடை விலகாம ல்  பார்த்துக்கொள்ளவும்
  • தாலிகட்டும் பொழுது தங்களின் குலதெய்வத்தை பிரார்த்த னை செய்யவும்
  • திருமண சடங்குகள் முடியும் வரை மனதில் இறைவனது நாமங்க ளை உச்சரிக்கவும்
  • இறைஉணர்வான ஒரு இந்த நிகழ்ச்சி யின்பொழுது தங்களின் குல வழக்கப் படி நெற்றியில் நாமம் அல்லது விபூதி இடவும். இதில் கூச்சப் பட வேண்டிய அவசியம் இல்லை
  • தங்களின் பாரம்பரிய உடை (பஞ்ச கச்சம்) உடுத்தினால் தான் திரும ணத்திற்கு அழகு, வாழ் நாளில் ஒரு முறை மட்டுமே கிடைக்கும் புனி தமான வாய்ப்பு ஆகும்
  • மாதா, பிதா, குரு, தெய்வம் என வே திருமணத்திற்கு உங்களின் ஆரம்ப வகுப்பு ஆசிரியர்களை வரு கைதந்து வாழ்த்த அழையுங்கள், மண மேடைக்கு அவர்களை வர வழைத்து உரிய மரியாதை செலுத் துங்கள்
  • வாழ்க்கையில் 100 ஆண்டு சேர்ந்து வாழவேண்டும் என்று பிரார்த்தனை செய்து முதன்முறையாக மண மகளின் கைப் பற்றி அக்னியை வலம் வரும் பொழுது இடையில் யாரேனும் கை குலுக்க முனைந்தால் கட்டாயம் அன்பாக பேசி தவிர்க்கவும் (இணந்த கைகளை பிரிக் ககூடாது)
  • திருமண சடங்கை எடுக்கத்தான் புகைப்பட ம் (புகைப்படத்திற்க்காக நடக்கும் சடங்கு திரைப்படம்)
  • பாதஅணியுடன் வரும் நட்பு, உறவுகளுடன் மணமேடயில் புகைப்படம் எடுப்பதை தவிர்க்கவும், திருமண சடங்கு முடிந் த தும் மண மேடைக்கு முன்னர் தரை யில் புகைப்படம் எடுத்துக்கொள்ள வும்
  • தோழி மாப்பிள்ளை பட்டு அல்லது கதர் வேட்டி கட்டிக்கொள்ள சொல்ல வும் அதுதான் அழகு, மரபும்கூட
  • பெரியவர்கள் மேடையில் வந்து ஆசி ர்வாதம் செய்யும் பொழுது கூச்சப்ப டாமல் தலைவணங்கி, பாதம் தொட்டு மரியாதை செலுத் தவும்
  • திருமணத்தின் பின்னர் இருவீட்டாரி ன் நன்பர்களும், உறவினர்களும் பொதுவானவர்களை என வே மணமகள் உறவினர், மண மகன் உறவினர் என பாகுபாடு இன்றி வணக்கம் தெரிவிக்கவும்
  • மணமக்கள் தங்களின் உறவினர் கள் மேடைக்கு வரும் பொழுது பரஸ்பரம் உறவுமுறை சொல்லி அறிமுகம் செய்ய வும்
  • மெட்டி போடும் பொழுது மணமகளின் பாதங்களை இருகை களால் தாங்கி அம்மியின் மீது பதிக்கவும்.

அவசரமா ‘சாப்பிட’ இதென்ன ‘பாஸ்ட் புட்டா’? ரசிச்சு அனுபவிங்க!

Posted On Feb 12,2012,By Muthukumar
இல்லற வாழ்க்கையில் தாம்பத்யம் என்பது புனிதமானது; அதனைத் தவிர்த்து மனித வாழ்க்கை அமைவதில்லை. பாலுறவு என்பதே இனவிருத்திக்கும், மனிதன் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்குமான ஒரு புனிதமான உறவு என்பது அனைவருக்கும் தெரியும். எனவே உறவின் போது இருவருமே ஒரே மனநிலையில் இருத்தல் அவசியம். உறவானது மன அழுத்தத்தை போக்கும் மருந்து எனவே உறவின் போது மன அழுத்தம் கொள்ளத் தேவையில்லை என்கின்றனர் உளவியலாளர்கள்.
அச்சம் தவிருங்கள்
பலருக்கு தாம்பத்ய வாழ்க்கையைப் பற்றிய பல எதிர்பார்ப்புகளும், அதே அளவுக்கு சந்தேகங்களும் இருக்கலாம். என்னதான் உடலளவில் பலசாலியாக இருப்பவர்களுக்கும் முதலிரவை நினைத்தே ஒருவித பயம் ஏற்படக்கூடும், இந்த பயம் இருபாலருக்கும் இருப்பது இயல்பே.
முன் கூட்டியே விந்தணு வெளியேறி விடுமோ? முழு அளவில் உறவில் ஈடுபட என்பன போன்ற பலவாறான சந்தேகங்கள் எழலாம். அந்த சந்தேகங்கள் உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால், உறவின் போது இருவரும் ஒரே நோக்கத்துடன் மாற்று சிந்தனைகளுக்கு இடம் அளிக்காமல் ஈடுபட வேண்டும் என்கின்றனர் உளவியலாளர்கள்.
மன அழுத்தம் கூடாது
உறவின் போது மன அழுத்தம் அறவே கூடாது என்கின்றனர் உளவியலாளர்கள். மனதை இலேசாக வைத்துக் கொண்டு, உறவை மேற்கொள்ளுங்கள். ஒருவித பயம் அல்லது மன அழுத்தத்துடன் உறவில் ஈடுபடும் போது இருவருக்குமே திருப்தி ஏற்படாது என்கின்றனர் அவர்கள்.
சந்தேகம் வேண்டாம்
திருமணம் ஆன புதுத் தம்பதிகளை ஹனிமூன் அனுப்பி வைப்பதே இருவரும், வேறு எந்த சூழ்நிலையையும் யோசிக்காமல், மனம் மகிழ ஒரே சிந்தனையில் உறவில் ஈடுபடவேண்டும் என்ற நோக்கத்தில்தான். வேறு எதைப்பற்றியும் கவலை கொள்ள வேண்டாம். அப்படியே ஏதேனும் குறை இருப்பதாக, இருபாலரில் யாராவது உணர்ந்தால், திருமணம் ஆகி ஓரிரு மாதங்களுக்குள் உரிய மருத்துவரை அணுகி உங்களின் சந்தேகங்களுக்கு விடை காணவும்.
அவசரம் ஆகாது
உறவிற்கு முந்தைய கிளர்ச்சி தூண்டல் எனப்படும் முன்விளையாட்டு மிகவும் முக்கியப் பங்காற்றுகிறது. இந்த தூண்டல் நபருக்கு, நபர் வேறுபடும் என்பதோடு, பாலுறவில் இருவரில் யாருக்காவது ஒருவருக்கு நாட்டம் இல்லாதபோது, என்னதான் கிளர்ச்சியைத் தூண்டினாலும் அது சுவாரஸ்யத்தை அளிக்காது. எனவே உறவின் போது, அவசரத்தை கடைபிடித்தல் தேவையற்றது என்பதே உளவியலாளர்களின் அறிவுரை.
ஒரே மனநிலை அவசியம்
பாலுறவு என்பதே இனவிருத்திக்கும், மனிதன் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்குமான ஒரு புனிதமான உறவு என்பது அனைவருக்கும் தெரியும். எனவே உறவின் போது இருவருமே ஒரே மனநிலையில் இருத்தல் அவசியம். மனைவிக்கு மூடு உள்ள போது கணவன் களைப்புடன் இருந்தாலோ, அல்லது மனைவிக்கு விருப்பமில்லாமல் கணவன் விடாப்பிடியாக உறவு கொண்டாலோ, அது சுவரஸ்யமானதாக அமைய வாய்ப்பில்லை என்பதே நிபுணர்களின் கருத்து.
உற்சாகம் ஊற்றெடுக்கும்
திருமணமாகி ஒரு சில ஆண்டுகளுக்குப் பின் பல்வேறு காரணங்களால் இருபாலருக்குமே பாலுறவில் நாட்டம் இன்றி இருப்பது சகஜம்தான்.
அதுபோன்ற சூழ்நிலையில், குறிப்பிட்ட இடைவெளியில், அவரவர் சூழ்நிலைக்கேற்ப, அவ்வப்போது உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே உளவியலாளர்களின் அறிவுரை. இதனால் இருவரின் உள்ளத்திலும் மன அழுத்தம் நீங்கி உற்சாகம் நீடிக்கும். என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.

தமிழகத்திலுள்ள‍ விவசாய நிலங்களின் பட்டா / சிட்டா விவரங்களை அறிய . . .


தமிழ் நாட்டிலுள்ள விவசாய நிலங்களின் நில உரிமை (பட்டா / சிட்டா) விவரங்கள் மற்றும் “அ”பதிவேட்டின் படி நில விவரங்க ளை கீழுள்ள‍ லிங்குகளை கிளிக் செய்து அறிந்திட வேண்டுகி றோம்.

காதலர் தினம் குறித்து பல்வேறு சுவையான தகவல்கள்


உலக காதலர்கள் கொண்டாடும் காதலர் தினம் குறித்து பல்வேறு சுவையான தகவல்கள் கூற ப்படுகின்றன. காலம் காலமாய் கூறப்பட்டு வரும் காதலர் தினக்கதைகள் தியாகம் நிறைந் தவை. அந்த கதைகளை காதலர் தினத்திற்காக பகிர்ந்து கொள்கிறோம்.
வேலண்டைன்ஸ் டே
வேலண்டைன்ஸ் டே என்று உலகமெங்கும் கொண்டாடப்படும் காதலர் தினம் வேலண்டைன் பாதிரியாரின் நினைவாக கொ ண்டாடப்படுகிறது என்பது நம்பி க்கை. கி.பி 270 ம் ஆண்டு ரோம பேரரசரான இரண்டாம் கிளாடி யுஸ் காலத்தில் ஆண்கள் திரு மணம் செய்து கொள்ள தடை இருந்தது. திருமணம் செய்து கொண்டால் ஆண்களுடைய வீரம் குறைந்து விடும் என்பது அரசரின் நம்பிக்கை. இதனால் பெண் களை ஏறெடுத்தும் பார்க்கக் கூடாது என்ற தடை விதித்திருந்தார் ரோமப் பேரரசர்.
திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை என்ஜாய் செய்ய வேண்டும் என்று துடித்தவர்களு க்கு உதவி செய்து அவர்களுக்கு அரச கட்டளையைமீறி திருமண ம் நடத்திவைத்தார் வேலண்டை ன். இந்த உதவிக்கு மன்னன் மர ண தண்டனையை பரிசளித்தார். இரண்டு மனங்க ளை திருமண பந்தத்தில் இணைத்து வைத்த பாதிரியார் வேலண்டைன் கொ ல்லப்பட்ட நாள் பிப்ரவரி 14. வேலண்டைன்ஸ் டே குறி த்து உலவும் கதைகளில் பெரும் பாலானவர்கள் ஏற்றுக் கொண்டு ள்ள கதை இது.
சீனர்களின் காதலர் தினம்
சீனர்களின் காதலர் தின கதை சுவாரஸ்யமானது. சுவர்க்கத்தி ன் சக்கரவர்த்திக்கு ஏழு மகள் கள். ஏழாவது மகளான ஸிநூ அழகிகளுக்கெல்லாம் அழகி ! பேரழகி. ஒரு நாள் ஏழு சகோ தரிகளும் நதியில் குளித்துக் கொண்டிருந்தார்கள். நுவூ எனும் இளைஞன் அவர் களைப் பார்த்தான். குறும்புத் தனமாக எல்லாருடைய ஆடைகளை யும் எடுத்துப் போய்விட்டான். ஆடைகள் இல்லாமல் வெளியே வர முடியாமல் சகோதரிகள் தவித்தனர். கடைசியில் தங்கள் கடை சித் தங்கையான ஸி நூ வை அவனிடம் சென்று ஆடை வாங்கி வர அனுப்பினார்கள். ஈரம் சொட்ட ச்சொட்ட எழிலுடன் வந்து நின்ற அவ ளைப் பார்த்தவுடன், நுவூ காதல் கொண்டான். இந்த காதல் திருமணத்தில் முடிந் தது. விஷயம் தெரிந்த மன்னர் இருவரையும் பிரித்து வானத்தி ன் இரண்டு மூலைகளில் கொ ண்டு போய் விட்டார். அவர்கள் ஏழாவது மாதத்தின், ஏழாவது நாளில் மட்டும் தான் சந்தித்துக் கொள்ள முடியும். அந்த நாள் தான் சீனர்களின் காதலர் தினம்.
கிருஸ்துவ விழா
பண்டைய காலத்தில் ரோமில் கொண்டாடப்பட்ட ஒரு விழா லூப்பர் கேலியா. இது பிப்ரவரி 13 முதல் பிப்ரவரி 15 வரை கொண்டாடப் படும். வாழ்க்கை வளமாக அமைய கடவுளை வே ண்டும் விழா இது. ரோம் நகரில் ஆடல் பாடல் என அமர்க்களப் படும். இதனை கி.பி 490 களிலி போப் கெலேஷியஸ் தடை செய்தார். ஆனாலும் மக்கள் இதனை விடவில்லை. இந்த விழாவின் வீரியத்தைக் குறைக்கவும், ஒரு கிருஸ்தவ விழாவின் மூலம் செயலிழக்கச்செய்யவும் போப் தீர்மானித்தார். எனவேதான் பிப்ரவரி 14ம் தேதியை புனித வேலண் டைன்நாள் என அறிவித்தார் என்றும் பலரால் நம்பப்படுகிறது.
பிரியமானவர்களுக்கு பரிசு
கிழக்கு இங்கிலாந்தின் நார் போக் பகுதியில் வேலண்டைன் ஸ் தினத்தை சிறப்பாக கொண் டாடுகின்றனர். கிருஸ்துமஸ் காலத்தில் கிருஸ்துமஸ் தாத்தா வீடுகளில் பரிசு வழங்குவதைப் போல பிரியத்திற்குரியவர்களி ன் பின்வாசல் கதவைத் தட்டி இனிப்புகளை வைத்துச் செல் லும் வழக்கம் இருந்துள்ளது. இவ்வாறு இனிப்புகளை வைப்ப வர்கள் ஜேக் என்று அழைக்கப்பட்டனர்.
பாய் ஃப்ரண்ட், கேர்ள் ஃப்ரண்ட் டே
ஸ்வீடன் நாட்டில் இந்தநாளை “அனைத்து இதயங்களின் தினம்” என்று அழைக்கின்றனர். போர்ச் சுக்கல் நாட்டில் காதலர் தின த்தை “நமோரோடோஸ் டயா டாஸ்” என்று அழைக்கின்றனர். இதற்கு அர்த்தம் பாய்ஃபிரண்ட் மற்றும் கேர்ள்ஃப்ரண்ட் தினம் என்பதாகும். ஸ்பெயினில் இந்த நாளை செயின்ட் வேலண்டைன் என்று அழைக் கின்றனர்.
நட்புக்கு மரியாதை
பின்லாந்து நாட்டில் வேலண்டைன்ஸ் டே சற்று வித்தியாசமானது. இது காதலர்களுக்கான தினம் அல் ல. இந்த நாளை அவர்கள் ‘ஸ்டே வான்பாபியா’ என்று அழைக்கின் றனர். அதாவது இதற்கு நண்பர்கள் தினம் என்று பொருள். நண்பர்க ளாய் இருப்பவர்கள் இந்த நாளை விமரிசையாக கொண்டாடுகின்ற னர். நண்பர்களுக்கு வாழ்த்து அட் டைகள் அனுப்புவதும், பரிசுகள் கொடுப்பதும் என இந்த நாளை சிற ப்பாக கொண்டாடுகின்றனர். எங் கெங்கோ இருக்கும் நண்பர்கள் எல்லாம் ஒன்றாக கூடி இந்த நாளை உற்சாகத்துடன் கொண்டாடு வது சிறப்பம்சம்.
ஹாலிடே ஆஃப் செக்ஸ்
பிரேசில் நாட்டில் பிப்ரவரி 14 ம் தேதியை ஹாலிடே ஆஃப் செக்ஸ் என்று அழைக்கின்ற னர். அந்த நாளை அமர்க்களப் படுத்துவார் பிரேசில் நாட்டி னர். அபோல் அவர்களுக்கு காதலர் தினம் வேறு தனியா க ஒருநாள் உண்டு. அது ஜூன் 2ம் தேதி அந்தநாளில் காதலர் கள் மற்றும் தம்பதியர் வாழ்த் து அட்டை, சாக்லேட், பரிசு, முத்தம் என சகலத்தையும் பரிமாறிக் கொள்வது வாடிக்கை.
இணையத்தில் இரு
உலக காதலர்கள் கொண்டாடும் காதலர் தினம் குறித்து பல்வேறு சுவையான தகவல்கள் கூற ப்படுகின்றன. காலம் காலமாய் கூறப்பட்டு வரும் காதலர் தினக்கதைகள் தியாகம் நிறைந் தவை. அந்த கதைகளை காதலர் தினத்திற்காக பகிர்ந்து கொள்கிறோம்.
வேலண்டைன்ஸ் டே
வேலண்டைன்ஸ் டே என்று உலகமெங்கும் கொண்டாடப்படும் காதலர் தினம் வேலண்டைன் பாதிரியாரின் நினைவாக கொ ண்டாடப்படுகிறது என்பது நம்பி க்கை. கி.பி 270 ம் ஆண்டு ரோம பேரரசரான இரண்டாம் கிளாடி யுஸ் காலத்தில் ஆண்கள் திரு மணம் செய்து கொள்ள தடை இருந்தது. திருமணம் செய்து கொண்டால் ஆண்களுடைய வீரம் குறைந்து விடும் என்பது அரசரின் நம்பிக்கை. இதனால் பெண் களை ஏறெடுத்தும் பார்க்கக் கூடாது என்ற தடை விதித்திருந்தார் ரோமப் பேரரசர்.
திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை என்ஜாய் செய்ய வேண்டும் என்று துடித்தவர்களு க்கு உதவி செய்து அவர்களுக்கு அரச கட்டளையைமீறி திருமண ம் நடத்திவைத்தார் வேலண்டை ன். இந்த உதவிக்கு மன்னன் மர ண தண்டனையை பரிசளித்தார். இரண்டு மனங்க ளை திருமண பந்தத்தில் இணைத்து வைத்த பாதிரியார் வேலண்டைன் கொ ல்லப்பட்ட நாள் பிப்ரவரி 14. வேலண்டைன்ஸ் டே குறி த்து உலவும் கதைகளில் பெரும் பாலானவர்கள் ஏற்றுக் கொண்டு ள்ள கதை இது.
சீனர்களின் காதலர் தினம்
சீனர்களின் காதலர் தின கதை சுவாரஸ்யமானது. சுவர்க்கத்தி ன் சக்கரவர்த்திக்கு ஏழு மகள் கள். ஏழாவது மகளான ஸிநூ அழகிகளுக்கெல்லாம் அழகி ! பேரழகி. ஒரு நாள் ஏழு சகோ தரிகளும் நதியில் குளித்துக் கொண்டிருந்தார்கள். நுவூ எனும் இளைஞன் அவர் களைப் பார்த்தான். குறும்புத் தனமாக எல்லாருடைய ஆடைகளை யும் எடுத்துப் போய்விட்டான். ஆடைகள் இல்லாமல் வெளியே வர முடியாமல் சகோதரிகள் தவித்தனர். கடைசியில் தங்கள் கடை சித் தங்கையான ஸி நூ வை அவனிடம் சென்று ஆடை வாங்கி வர அனுப்பினார்கள். ஈரம் சொட்ட ச்சொட்ட எழிலுடன் வந்து நின்ற அவ ளைப் பார்த்தவுடன், நுவூ காதல் கொண்டான். இந்த காதல் திருமணத்தில் முடிந் தது. விஷயம் தெரிந்த மன்னர் இருவரையும் பிரித்து வானத்தி ன் இரண்டு மூலைகளில் கொ ண்டு போய் விட்டார். அவர்கள் ஏழாவது மாதத்தின், ஏழாவது நாளில் மட்டும் தான் சந்தித்துக் கொள்ள முடியும். அந்த நாள் தான் சீனர்களின் காதலர் தினம்.
கிருஸ்துவ விழா
பண்டைய காலத்தில் ரோமில் கொண்டாடப்பட்ட ஒரு விழா லூப்பர் கேலியா. இது பிப்ரவரி 13 முதல் பிப்ரவரி 15 வரை கொண்டாடப் படும். வாழ்க்கை வளமாக அமைய கடவுளை வே ண்டும் விழா இது. ரோம் நகரில் ஆடல் பாடல் என அமர்க்களப் படும். இதனை கி.பி 490 களிலி போப் கெலேஷியஸ் தடை செய்தார். ஆனாலும் மக்கள் இதனை விடவில்லை. இந்த விழாவின் வீரியத்தைக் குறைக்கவும், ஒரு கிருஸ்தவ விழாவின் மூலம் செயலிழக்கச்செய்யவும் போப் தீர்மானித்தார். எனவேதான் பிப்ரவரி 14ம் தேதியை புனித வேலண் டைன்நாள் என அறிவித்தார் என்றும் பலரால் நம்பப்படுகிறது.
பிரியமானவர்களுக்கு பரிசு
கிழக்கு இங்கிலாந்தின் நார் போக் பகுதியில் வேலண்டைன் ஸ் தினத்தை சிறப்பாக கொண் டாடுகின்றனர். கிருஸ்துமஸ் காலத்தில் கிருஸ்துமஸ் தாத்தா வீடுகளில் பரிசு வழங்குவதைப் போல பிரியத்திற்குரியவர்களி ன் பின்வாசல் கதவைத் தட்டி இனிப்புகளை வைத்துச் செல் லும் வழக்கம் இருந்துள்ளது. இவ்வாறு இனிப்புகளை வைப்ப வர்கள் ஜேக் என்று அழைக்கப்பட்டனர்.
பாய் ஃப்ரண்ட், கேர்ள் ஃப்ரண்ட் டே
ஸ்வீடன் நாட்டில் இந்தநாளை “அனைத்து இதயங்களின் தினம்” என்று அழைக்கின்றனர். போர்ச் சுக்கல் நாட்டில் காதலர் தின த்தை “நமோரோடோஸ் டயா டாஸ்” என்று அழைக்கின்றனர். இதற்கு அர்த்தம் பாய்ஃபிரண்ட் மற்றும் கேர்ள்ஃப்ரண்ட் தினம் என்பதாகும். ஸ்பெயினில் இந்த நாளை செயின்ட் வேலண்டைன் என்று அழைக் கின்றனர்.
நட்புக்கு மரியாதை
பின்லாந்து நாட்டில் வேலண்டைன்ஸ் டே சற்று வித்தியாசமானது. இது காதலர்களுக்கான தினம் அல் ல. இந்த நாளை அவர்கள் ‘ஸ்டே வான்பாபியா’ என்று அழைக்கின் றனர். அதாவது இதற்கு நண்பர்கள் தினம் என்று பொருள். நண்பர்க ளாய் இருப்பவர்கள் இந்த நாளை விமரிசையாக கொண்டாடுகின்ற னர். நண்பர்களுக்கு வாழ்த்து அட் டைகள் அனுப்புவதும், பரிசுகள் கொடுப்பதும் என இந்த நாளை சிற ப்பாக கொண்டாடுகின்றனர். எங் கெங்கோ இருக்கும் நண்பர்கள் எல்லாம் ஒன்றாக கூடி இந்த நாளை உற்சாகத்துடன் கொண்டாடு வது சிறப்பம்சம்.
ஹாலிடே ஆஃப் செக்ஸ்
பிரேசில் நாட்டில் பிப்ரவரி 14 ம் தேதியை ஹாலிடே ஆஃப் செக்ஸ் என்று அழைக்கின்ற னர். அந்த நாளை அமர்க்களப் படுத்துவார் பிரேசில் நாட்டி னர். அபோல் அவர்களுக்கு காதலர் தினம் வேறு தனியா க ஒருநாள் உண்டு. அது ஜூன் 2ம் தேதி அந்தநாளில் காதலர் கள் மற்றும் தம்பதியர் வாழ்த் து அட்டை, சாக்லேட், பரிசு, முத்தம் என சகலத்தையும் பரிமாறிக் கொள்வது வாடிக்கை.