Thursday 29 March 2012

அழகு குறிப்பு: நீங்கள் பருவ மங்கையா . . . . ?

Posted On March 29,2012,By Muthukumar

பருவ மங்கை மேற்கொள்ள‍க்கூடாத அழகு சிகிச்சைகள்

*பருவ வயது ஆரம்பத்தில் இருப்பவர்கள் புருவங்களை ஷேப் செய்ய வேண்டாம். வயது கூடிய பிறகு செய்து கொள் ளலாம்.
* பிளீச்சிங் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
* சருமத்தின் தேவையற்ற ரோமங்களை அக ற்ற ரேசர், கிரீம் உப யோகிக்க வேண் டாம்.
* கூந்தலுக்கான மிகவும் ஸ்ட்ராங்கான சிகிச் சைகளைத் தவிர்க்கலாம். ஸ்ட்ரெயிட்டனிங், கலரிங் போன்ற வற்றைக் கூடிய வரையில் தள்ளிப் போடுவது நல்லது.
* தினசரி கூந்தலுக்கு ஷாம்பூ உபயோகி ப்பதைத் தவிர்க்கலாம்.
*அழகு, நாகரிகம் என்ற பெயரில் புருவ ங்களைத் துளையிட்டு நகை அணிவது , தொப்புளைத் துளையிட்டு நகை அணி வது போன்ற வற்றைச்செய்ய வேண்டா ம். வரிசையாகக் காது மடல்களைக் குத்திக்கொண்டு நகை அணிவ து கூட ஆபத்தாக முடியலாம். நரம்புகளில் பட்டால் ஆபத்து.

* நீலம், பச்சை மாதிரி கன்னாபின்னா நிறங்களி ல் ஐ லைனர், ஐ பென்சில் உபயோகிப்பது இன் றைய டீன் ஏஜ் பெண்கள் மத்தியில் ஃபேஷன். இவற்றிலுள்ள கெமிக்கல்கள் கட்டாயம் கண் பார்வை பாதிக்கும். சருமத்துக்கும் ஆபத்து.
* டார்க் நிற, மேட் ஃபினிஷ் (ஈரப்பதமே இல்லாதது, நீண்ட நேரம் நீடி ப்பது) லிப்ஸ்டிக்குகளை உபயோகிப்பதை; தவிர்ப்பது நல்லது. உதடு களை அழகாக, பளபளப்பாகக் காட்ட லிப் பாம் உப யோகிக்கலாம்.
* நகங்களை நீளமாக வளர்க்காமல், குட்டையாக வெட்டி விடுவது ஆரோக்கியமானது.
* உடல் நாற்றத்தைத் தவிர்க்க மிதமான வாசனையில் பெர்ஃப்யூம் உபயோகிக்கலாம். இதை கைகளின் மணிக் கட்டுப் பகுதியில் தடவிக் கொள்ளலாம்.
* பெண்கள் தினமுமே பேன்ட்டி லைனர் அணியலாம். அந்தரங்க உறுப்பு சுத்தத்துக்கு இது உதவும்.
* தினம் இரவில் பல்தேய்த்து முடித்ததும், மவுத்வாஷ் உபயோகிக்கலாம்.

No comments:

Post a Comment