Saturday 31 March 2012

மன உளைச்சளை உண்டு பண்ணும் செக்ஸ் கேள்விகள்???

Posted On March 31,2012,By Muthukumar


ஆண் இனப்பெருக்கத் தொகுதி.

வினா: விதைகளில் வீக்கம் எற்பட காரணம் என்ன?

விடை: இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்

Hydrocoel- விதையை சூழ திரவம் சேர்த்தல்.
Hernia
யானைக்கால் நோயின் ஒர் பக்க விளைவு.
இவற்றுக்கு வைத்திய ஆலோசனை நாடவும்.

வினா: இரவு நேர வெளியேற்றம் என்றால் என்ன ? இது உடலுக்கு தீங்கு விளைவிக்குமா?

விடை: சுயமாக சுக்கில பாய்பொருள் தூக்கத்தின் போது வெளியேறுவதே இரவுநேர வெளியேற்றம். இவ்வயதில் இது பொதுவானது என்பதால் பயப்படவேண்டியதில்லை. இது உடலுக்கு தீங்கு விளைவிக்காது.

வினா: முன் தோலை பிற்செலுத்த முடியாவிடின் என்ன செய்ய வேண்டும்?

விடை: இதற்கு வைத்திய ஆலோசனை நாடவேண்டும். ஒரு சத்திரசிகிச்சை தேவைப்படலாம் இதன்போது முன் தோல் அகற்றப்படும்.

வினா: முன் தோல் பிற்செலுத்த முடியாவிடின் தாம்பத்திய சுகம் குறையுமா?

விடை:முன் தோலை பிற்சொலுத்த முடியாவிடின், உடலுறவின் போது, அது வலியை ஏற்படுத்தலாம். இது தாம்பத்திய சுகத்தை குறைக்கலாம்.

வினா: ஆண்குறியில் புண்கள் ஏற்பட்டால் அது பயப்படவேண்டிய் விடயாமா?

விடை:இவ்வாறான புணகள் ஒரு நோயின் அறிகுறியாக இருக்கலாம். எனவே, வைத்திய ஆலோசனை நாடுதல் ஏற்றது.

வினா: குறுகிய ஆண்குறிகள் தாம்பத்திய சுகத்தை குறைக்குமா?

விடை: இது ஆண்காளாலும் பெண்களாலும் ஏற்றுகொள்ளப்பட்ட ஒரு மூடநம்பிக்கை. ஆண்குறியின் நீளம்
இன்பம் பெறுவதில் பிரச்சினை ஏற்படுவதில்லை




வினா: ஆண்குறி நீளாததற்கான காரணங்கள் என்ன?

விடை: இது பொதுவாக மனோதத்துவ ரீதியான ஒரு பிரச்சினையாகும். எனினும் நீரிழிவு நோய் அதிகளவிலான மது பாவனை, மற்றும் புகைத்தல் இப்பிரச்சினையை  தரலாம். நீணட கால மருந்து பாவனையும் இப்பிரச்சினையை  தரலாம்.

வினா: முஸ்லிம் ஆண்களால் பேணப்படும் சம்பிரதாயமான் 'முன்தோல் அகற்றல்' - தொடர்பான விஞ்ஞான விளக்கம் என்ன?

விடை: முந்தோல் அகற்றல், ஒரு சிறிய சத்திர சிகிச்சை. இது ஒரு ஆணுறுப்பு பகுதியில் சுத்தததை பேணும். இது பொதுவாக கடைபிடிக்கப்படும் ஒர் மத சம்பிரதாயமாகும்.

வினா: முன் வெளியேற்றம்(  premature ejaculation) என்றால் என்ன?

விடை: உடலுறவின் போது, சுக்கில பாய்பொருள், எதிர்பார்த்த நேரத்திற்கு முன் வெளியாகுமெனின் அது முன் வெளியேற்றம் என கருதப்படும். இது பொதுவாக மனோதத்துவ ரீதியான ஒரு பிரச்சினை ஆகும். ஆனாலும் சில வேலைகளில் . இது வேறு காரணங்களாலும் ஏற்படலாம். எனவே, இவ்வாறான பிரச்சினைக்கு, வைத்திய ஆலோசனை நாடுவது உகந்ததாகும்.

பெண் இனப்பெருக்க தொகுதி (Female Reproduction system)

   வினா: யோனி வெளியேற்றம் எப்போதும் ஒரு நோயின் அறிகுறியா?

விடை: இல்லை. இது பொதுவாக, ஓமோன் மாற்றங்கள் எற்படுவதனால் பூப்படையும் காலத்தின் பின் பெண்களில் ஏற்படலாம். அது நிறாமோ, மணமோ அற்ற  ஒரு திரவமாக, யோனிமடல்களில் அரிப்பும் காணப்படாது. இது ஒரு நோயல்ல. மற்றும் இது உடல் பருமனில் மாற்றத்தை ஏற்படுத்தாது.

யோனி வெளியேற்றம்- மணம் கொண்டதாகவோ, நிறாமாற்றாமடைந்தாகவோ, யோனிமடல் அரிப்புடனும் காணப்படின் வைத்திய ஆலோசனை நாடவேண்டும்.

வினா: கருப்பை கழுத்தில் புற்றுநோயை முற்கூட்டி அறியலாமா?

விடை:  ஆம், இதற்கு PAP பரிசோதனை ஒன்று செய்யப்படும. இதனால், புற்றுநோயாக மாறக்கூடிய கலங்கள் கண்டுபிடிக்கபடும். இதனால், வைத்தியர் முன் எச்சிரிக்கைகள் எடுத்து, புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கலாம்.

வினா: உடல் பருமன் அதிகாமாயிருந்தால் குழந்தை பாக்கியத்தை பாதிக்குமா?

விடை: ஆம், உடல் பருமன் அதிகமாயிருந்தால் குழந்தை பேற்றை பாதிக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.




வினா: இரண்டு மாதவிடாய் சக்கரங்களுக்கு இடையில் வயிற்று வலி வர காரணம் என்ன?

விடை: பொதுவாக சக்கரத்தின் 14 ம் நாள் முட்டை வெளியேற்றம் எற்படும். இது சில வேளைகளில் பலி எற்படுத்தும்.

வினா: பூப்படையும் வயதில் வேறுபாடு காணப்படுவது ஏன்?

விடை: இது பிறப்புரிமை ரீதியான ஒரு விடயமாகும். உடலிலுள்ள இலிங்க  ஒமோன்களின் அளவும் இதனை தீர்மானிக்கும். எனவே, இந்த ஓமோன்கள் சுரப்பதில் தாமதம் எற்பட்டால் பூப்படையும் வயதும் பின் தள்ளப்படும். பொதுவாக ஒரு பெண் பூப்படையும் வயது 11-13 . இது 17 வயதிலும் அதிகமாகும் எனின் ஒரு வைத்தியரை நாடவேண்டும்.

வினா: தாடி சரியாக வளராததற்கு காரணம் என்ன?

விடை:  இது ஆண்களில் ஒரு துணை இலிங்க இலட்ச்சணம் ஆகும். இது ஒருவருக்கு ஒருவர் வேறுபடும் எனவே, இதை பற்றி கவலைப்படவேண்டாம்.

வினா: மார்பகங்களின் பருமன்ன அதிகரிக்க சிகிச்சை முறைகள் உண்டா?

விடை: மார்பகங்களின் அளவு பிறப்பின் போது தீர்மனிக்கப்படுவது ஆகும்.  இதன் பருமனை அதிகரிக்க வில்லைகளோ பூச்சுக்ளோ இல்லை. மார்பகங்களின் அளவு தாம்பத்திய  வாழ்க்கையையோ, பாலுட்டலையோ பாதிக்காது.

வினா: பூப்படைந்த பின், அடுத்த மாதவிடாய் தாமதாமாக காரணம் என்ன?

விடை: பூப்படைந்த பின், முட்டை வெளியேற்ற சீரடைய ஒரு சிறிய காலம் தேவைப்படும்.

வினா: சீரற்ற மாதவிடாய்க்கான காரணங்கள் என்ன?

விடை: மாதவிடாய் இலிங்க ஒமோன்களில் எற்படும். இது சீரற்ற போவதற்கான காரணங்கள்..

மன உளைச்சல்
நீண்ட கால நோய்.
காலநிலை மாற்றம்
ஒமோன் மாற்றங்கள் ( இலிங்க ஓமோன்கள், தைரொயிட்டு ஒமோன்கள்)
உடல் பருமனில் ஏற்படும் மாற்றாங்கள்( அதிகரிப்பு அல்லது குறைவு)  

வினா: மாதாவிடாய் ஏற்படும் முதல் நாள் குளிக்கலாம்?

விடை: குளிப்பு பாதிப்பை எற்படுத்துவதற்கான  எந்த விஞ்ஞான ரீதியாலன் ஆதரமும் இல்லை. உடல் சுத்தம் பேணப்படுதல் முக்கியமாகும்,

வினா: மாதவிடாயின் போது, உடலுறவு கொள்ளுவது நல்லதா? 

விடை: இது உங்களுக்கு வெறுப்பை தராவிடின் எந்த பிரச்சினையும் இல்லை.

வினா: அன்னாசி, பீற்றூட் போன்ற உணவுகளை மாதவிடாய் காலங்களில் தவிர்த்துக்கொள் வேண்டுமா

விடை: இல்லை, உணவுகளில் எந்த கட்டுபாடும் இல்லை.

வினா: மாதவிடாய் காலங்களில் வயிற்று வலி மற்று பிற்புறவலி சம்பந்தமாக என்ன  செய்யலாம்?

விடை: இது பயப்ட வேண்டிய விடயம் அல்ல,சுடுநீரால் தடவுதல் அல்லது பரசிடமோல் குடித்தல்- இவ்வலியை குறைக்கும்.

கன்னிதன்மை(Virginity)

வினா: முதல் உடலுறவின் போது கட்டாயமாக குருதிபெருக்கு ஏற்படவேண்டுமா?

விடை: இல்லை

வினா: முதல் உடலுறவின் போது ஒரு பெண்ணுக்கு குருதி பெருக்கு ஏற்படவில்லை எனில் அனள் கன்னி இல்லை எனப்து ஊர்ஜனமாகுமா?

விடை: இல்லை, சில பெண்கள் மென்சவ்வு இல்லாமல் பிறக்கும். சிலருக்கு அது தடிப்பமானதாக இருக்கும். எனவே, எனவே கன்னித்தன்மையை ஊர்ஜமாக்க குருதி பெருக்கு பார்ப்பது அவ்வளவு நம்பகரமான ஒரு விடயம் அல்ல.

தற்சுத்தமும் போசனையும் ( Personal hygiene and Nutrition)

வினா: இனப்பெருக்க உறுப்பு பகுதியில் புண்கள் வர காரணம் என்ன?

விடை: இவற்றை சூழ அதிகளவு மயிர்கள் காணப்படுவது ஒருகாரணமாகும். மற்றும்  இப்பகுதியில் வியர்வை அதிகம் என்பதால், நுண்ணுயிர்கள் வளர்ச்சிக்கும் அது உறுதுணையாக இருக்கும். எனவே தற்சுத்தம் முக்கியமாகும்

தற்சுகம்(Masturbation)

வினா: தற்சுகம் தீங்கானதா?

விடை: இல்ல, இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான ஒரு விடயமாகும்.

வினா: தற்சுகம் உடல் பருமனை குறைக்குமா? உடல் பலனை குறைக்குமா? தாம்பத்திய சுகத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா?

விடை:  இல்லை

HIV/எயிட்ஸ்

வினா: எயிட்ஸ் நோய் ஏற்படுத்துவதை தவிர்த்துகொள்ள  தடுப்பு முறை மருந்துகள் (தடுப்பூசி) உண்டா? 

விடை: இல்லை
Posted: 25 Feb 2012 09:02 PM PST

திருமணமான தம்பதியர் என்னதான் ஜாலியாக சில வருடங்கள் இருக்கலாம் என்று நினைத்தாலும் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் விடமாட்டார்கள். குழந்தை குட்டியை பெற்றுக்கொடுத்துவிட்டு நீங்கள் ஜாலியாக ஊர் சுற்றுங்கள் என்று அவசரப்படுத்துவார்கள். புதிதாக திருமணமான பெண்கள் எளிதில் கர்ப்பம் தரிக்க சில ஆலேசனைகளை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சத்தான உணவு


புதிதாக திருமணமானவர்கள் சத்தான உணவுகளை உண்ணவேண்டும். ஏனெனில் நிலம் வளமாக இருந்தால்தான் விளைச்சல் நன்றாக இருக்கும். எனவே புதுமண தம்பதியர் அதிக கொழுப்புச்சத்துள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். நாளொன்றுக்கு 8 டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பெண்கள் ஆரஞ்சு, காரட் உள்ளிட்டவைகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும் ஏனெனில் இது செக்ஸ் ஹார்மோனை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும். ஆண்கள் மீன் உணவுகள், வெள்ளைப்பூண்டு ஆகியவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும். இது விந்து வளர்ச்சிக்கு உதவும். புதுமணத் தம்பதியர் தினமும் தாம்பத்ய உறவு கொள்ளவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். இதன் மூலம் ஆணின் விந்தணு உற்சாகமடையும். இது டி.என்.ஏவை சிதைவடையாமல் பாதுகாக்கிறது.

முறையான மாதவிடாய் காலம்

முறையற்ற மாதவிலக்கு கர்ப்பம் தரித்தலை தாமதப்படுத்தும் எனவே இக்குறைபாடு உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையை பெறவேண்டும். கட்டுப்பான எடையை கடைபிடிக்க வேண்டும். 28 முதல் 32 நாட்களுக்குள் சுழற்சியாக பெண்களுக்கு மாதவிடாய் வருவது ஒழுங்கான மாதவிடாய் பருவமாகும். மாதவிடாய் ஆரம்பிக்கும் முதல் நாளில் இருந்து 14-வது நாள் பெண்ணின் முட்டை வெளியேறும். இந்த முட்டை வெளியேறி 24 மணி நேரத்திற்குள் ஆணின் விந்தணுவை சந்தித்தால் கரு உருவாகும் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே மாதவிடாய் ஏற்பட்டு பதினோராவது நாளில் இருந்து உடலுறவில் இரண்டு மூன்று நாட்களுக்கு ஈடுபடும் போது கருக்கட்டல் நடைபெறுவதற்கான சந்தர்ப்பம்அதிகமாகும்.

மது, புகை கூடாது


மதுபழக்கத்தை தவிர்க்க வேண்டும். புகைப்பிடித்தலை அறவே ஒதுக்கவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். பெண்கள் காபி குடிப்பதை தவிர்ப்பது கர்ப்பம் தரித்தலை 50 சதவிகித வாய்ப்பை அதிகரிக்கிறது. தினமும் 40 நிமிட உடற்பயிற்சி அவசியம். இது தம்பதியரின் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைத்து மன அழுத்ததை நீக்குகிறது. உடலில் நோய் தாக்காமல் தங்களை தற்காத்துக்கொள்ளவேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.





தாயாக சிறந்த பருவம்


உலக அளவில் புள்ளி விவரக் கணக்கின்படி ஒரு பெண் தன்னுடைய இருபது வயதிலிருந்து முப்பது வயதிற்குள் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதே சிறந்த காலகட்டமாகக் கருதப்படுகிறது. 20க்கு குறைந்தோ அல்லது முப்பதுக்கு மேற்பட்டோ குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது தாயின் உடல் ரீதியாகவும், குழந்தையின் வளர்ச்சி ரீதியாகவும், பல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். முப்பது முப்பத்தைந்து வயதுக்கு மேல் கர்ப்பம் தரிக்கும் பெண்கள், இளம் வயது கர்ப்பிணிகளை விட பல இன்னல்களுக்கு ஆளாவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.
பெண்களுக்கு வயதாவது என்பது நோயல்ல என்றாலும் வயது ஆக ஆக இடுப்பு எலும்பு நெகிழ்ந்து குழந்தை வெளிவருவதற்கு சுலபமாக வழி ஏற்படுத்தி கொடுக்க இயலாமல் போய்விடும். முதிர்ந்த பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு உடல் ரீதியான பாதிப்புகளும், மூளை பாதிப்புகளும் இருக்க வாய்ப்பிருப்பதாக மருத்துவக் குறிப்புகள் சொல்கின்றன
டவுன் சிண்ட்ரோம் எனப்படும் மூளை வளர்ச்சி குன்றிய அல்லது உடல் குறைகளுடன் கூடிய குழந்தைகள் பிறப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் இதற்கான பரிசோதனைகள் முன் கர்ப்ப காலத்திலேயே செய்யப்பட்டு கண்டறிந்து சொல்வதற்கான மருத்துவ முன்னேற்றங்களும் இப்போது அதிகரித்துள்ளன.

நோயற்று இருங்கள்


கர்ப்பம் தரித்தபின்னர் இயற்கையான எந்த உணவுகளையும் விருப்பப்படி சாப்பிடலாம். செயற்கையான இரசாயனங்கள் சேர்க்கப்பட்ட உணவுகளைத் தவிர்த்தல் நல்லது. பழுத்த அன்னாசி சாப்பிடுவதால் கர்ப்பத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை. போலிக் அசிட் எனப்படும் மாத்திரையை நாளைக்கு ஒன்று என்ற வீதத்தில் விழுங்குவது நல்லது
இறுதியாக மாதவிடாய் ஏற்பட்ட நாளை மறக்காமல் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். வேறு எந்த மாத்திரை எடுக்கும் முன்னும் வைத்திய ஆலோசனை பெற வேண்டும். எந்தவொரு மருத்துவப் பரிசோதனைக்கு முன்னும் ஆலோசனை பெறவேண்டும். நீரழிவு, வலிப்பு ,ஆஸ்த்மா, ரத்தக்கொதிப்பு போன்ற நோய்கள் இருப்பின் கர்ப்பம் தரிப்பதற்கு முன் அவை சிறந்த கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் அப்பொழுதுதான் ஆரோக்கியமான சந்ததியை உருவாக்க முடியும்.

No comments:

Post a Comment