Friday 30 March 2012

வேகமாக‌ ஓடும் இரயிலில் ஏற முயன்ற இளைஞன் மீது ரயில் ஏறி உடல் இரண்டு துண்டானதை காட்டும் புகைப்படம்

{{கீழுள்ள‍ புகைப்படத்தை பார்த்துவிட்டு பின் செய்தி யை படியுங்கள்}} இவர் வெ யாங்கொட என்ற பிரதேசத் தை சேர்ந்த இளைஞர். கடந் தவாரம் கோட்டை புகை  வண்டி நிலையத்தில் ஓடி வந்துகொண்டிருந்த புகை வண்டி ஒன்றில் பாய்ந் து ஏற முற்பட்டபோது கால் தவறி தண்டவாளத்தில் விழுந்தத னால் இந்த நிலை ஏற்பட்டது. இங்கு முக்கியமான விடயம் என் னவெனில், இந்த விபத்து நேர்ந்ததில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் வரை இவருக்கு உயிர் இருந்ததாம். அருகில் ஓடி வந்தவர் களிடமெல்லாம் “உண்மைய சொல்லுங்க என்ட கால்கள் வேறா கிட்டுதானே?” என அழுது கொண்டே கேட் டிருக்கின்றார். அருகில் நின்றவர்கள் எல்லோருமே கண் கலங்கி இருக்கின்றார்களே தவிர யாருக்கும் இவரை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு செல்லும் அளவுக்கு மனம் இறங்கவில்லை- புகையிரத நிலைய அதிகாரிகள் உட்பட. அம்புலன்ஸ் வண்டிக்கு அழைத்தும் அது உரிய இடத்துக்கு வந்து சேர இரண்டு மணிநேரம் ஆனதாம். அந்த நேரம் இந்த வாலிபரின் உடலைவிட்டு உயிர் பிரி ந்திருந்தமைதான் பரிதாபம்.
சகோதரர்களே, புகை வண்டி நின்ற பின்னர் அதனுள் நாம் ஏறினால் சிலவேளைகளில் நமக்கு அமர்ந்துசெல்ல ஆசனம்தான் இல்லாம ல் போகும். இப்படி பதறிக்கொண்டு ஏறினால் நமது விலைமதிப்ப ற்ற வாழ்க்கையே இல்லாமல் போய்விடும்.

No comments:

Post a Comment