Thursday 29 March 2012

பெண்கள் ஆபாசமாக உடை உடுத்துவதுதான் நாகரீகமா?

இப்போதெல்லாம் அடிக்கடி யோசிப்பது நாம் எந்த காலக் கட்டத்தி ல் இருக்கிறோம் எனபதை பற்றித்தான், மனிதன் தோன்றிய காலத்தில் நிர்வாண மாகத்தான் இருந்தான் பின்னர் அவனாக வே நாகரீகம் எனும் பாதையில் சுயமாக மாறத்தொடங்கினான் வெற்றுடம்புடன் திரிந்த மனிதன் தன் அந்தரங்களை மறை க்க இலை தழைகளை கொ ண்டு மறைக்க ஆரம்பித்தான்
 
அந்தரங்கங்கள் மறைக்கப்படாமல் வெ ளிவருவதை அன்றே விரும்பவில்லை என்றே தோன்றுகிறது. பொதுவாகவே ஆ ணுக்கும் பெண்ணுக்கும் உடலியல் அமை ப்பு வெவ்வேறாக இருந்தாலும் பெண் என் கிற விஷயத்தில் ஆண் விருப்பம் கொண் டுள்ளான் என்பது இயற்கையாகவே இருக்கிறது அது நமக்கும் தெரியும்.
 
முன்பெல்லாம் நம் முன்னோர்கள் எப்படி இருந்தார்கள் என பார்த் தோமேயானால் ஆண்கள் கோவணமும், வே ட்டியுமாக இருந்திரு க்கின்றனர், பெண்கள் பதினாறு முழம் சேலை கட்டியிருந்திருக் கிறார்கள் இந்த காலகட்டத்தில் இருவருமே மேலாடை அணிந்தி ருக்கவில்லை. பின்னர் மீண்டும் ஒரு நாகரீகத்தின் வளர்ச்சியில் மேலாடையும் போடத்தொடங்கினர். பின்ன ர் நாகரீக வளர்ச்சியில் வீடு வாகனம் இன்னு ம் பல இத்யாதிகள் எல்லாம் மாறின, இப்படி போய்க்கொண்டிருந்த நாகரீக மாற்றத்தில் மீண்டும் சைக்கி ளிங் போல பழைய விஷய ங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க தொட ங்கினோம்.
இயற்கைக்கு இசைவாய் வாழ்கிறோம் என் கிற பெயரில் வீடுகள் இயற்கையை ஒத்ததா க அமைத்தனர். மீண்டும் பழைய ஒரு நிலை க்கு செல்ல விரும்பினர். இது வரவேற்கபட வேண்டிய ஒன்றுதான். ஆனால் இதில் ஒரு வில்லங்கமான விஷயத்தையும் சேர்த்து கொ ள்ள வேண்டிய அவசியமில்லையே என்கிற ஆதங்கத்தை தவிர்க்க முடியவில்லை, உடை நாகரீகம் இதில் பழைய நிலைக்கு நேரடியாக செல்ல விட்டாலும் மறைமுகமாக அந்த நிலை க்கு சென்று விடுவோமோ என்கிற அச் சம் வருகிறது.
 
பொதுவாகவே ஆண்களுக்கு அதிக உ டை விஷயங்கள் இல்லை. வேஷ்டி, பே ண்ட், கைலி, சட்டை என ஒரு சிறிய வட் டத்துக்குள் அடக்கிவிடலாம். ஆனால் பெண்களை பொருத்தவரை எத்தனை உடைகள் எத்தனை நாகரீங்கள் இன்னு ம். ஏன் இப்போதெல்லாம் பெண் ளும் ஆண்கள் அணியும் பேண்ட் டீசர் ட் என அணிய தொடங்கிவிட்டார்கள். சரி அணிந்தால் என்ன இதில் என்ன தவறு இருக்கிறது? சரி ஆண்கள் வெறும் வேஷ்டியோடு இருந்தா லும் அது மற்றவர்களை அதிகம் பாதிப்பதில்லை இன்னும் நேரடி யாக சொல் லப்போனால் காமத்தை தோற்றுவிப்பதில்லை. ஆனால் பெண்கள் அப்படியில்லையே அவர்களின் சிறு கவனக்குறைவான உடையலங்காராம் கூட பார்ப்பவர்களை முகம் சுழிக்க செய்துவிடுமே. அதோடு ஒரு தவறான கண்ணோட்டத்தையும் உருவாக்கும் என்ப து தெரியாதா?
 
முன்பெல்லாம் பெண்கள் சுடிதார் அணி ந்தார்கள். அதோடு சால்வையும் போர்த் திகொண்டார்கள். அப்போது நிச்சியமாக அது நல் ல உடையாகத்தான் இருந்தது. ஆனால் அதே சுடிதார் இப்போது வேறொ ரு வடிவம் பெற்று இருக்கிறது. இப்போது உள்ள சுடிதார் எப்படியிருக்கும் என்பத ற்கு படம் இனைக்க விரும்பவில்லை. காரணம் உங்களுக்கே தெரியும் உடல் அவையங்களை அச்சு பிச காமல் அளவெடுத்து காண்பிக்கும் உடைதான் நாகரீகமா? முன்பெ ல்லாம் உடல் அவயங்களை மறைக்கதானே ஆடை அணிந்தோம். ஆனால் இப்போது எடுத்துக்காட்டும் வகை யில் ஆடை தேவைதானா? மேலும் இருக்க மான டீஷர்ட் மற்றும் பேண்ட் இதை பற்றி யும் அதிகம் சொல்லவோ அதற்காக போட் டோவோ இனைக்க வேண்டியதில்லை எல்லாமே உங்களுக்கு தெரியும் ஆனாலு ம் மாறுவதில்லை யாருக்காக இந்த ஆடை அலங்கரிப்பு?
 
சமீபத்திய ஆராய்ச்சியில் பெண்கள் தான் ஆண்களின் தவறான கண்ணோட்டத்துக்கு வித்திடுவதாக வெளியிட்டு இருந்தார்கள். உடனே கோபப்பட வேண்டாம் ஆராய்ச் சிக்காக பங்கெடுத்தவர்கள் எல்லோருமே பெண்கள்தான், மேலும் இப்போதெல்லம் நாம் நம் முடைய தனிமையை இழந்து கொண்டிருக்கிறோம் நாம் ரோட்டில் நடந்து சென்றாலும் நம்மை யும் அறியாமல் மொபைல் போனில் உள்ள கேமரா கொண்டு படம் எடுத்து விடுகிறார்கள் நாம் நினை ப்போம். நம்மை யார் போட்டோ எடுக்க போகிறார்கள் என நினைத்தால் நாம்தான் ஏமாந்து கொண் டிருக்கிறோம்
 
இப்போதெல்லாம் மார்பிங் வழியாக போட்டோவையே மாற்றி விடுகிறார் கள். இதனால் எவ்வளவு பாதிப்பு? இரு ந்தாலும் சர்வ சாதரணமாக பேஸ்புக் மற்றும் ஆர்குட்டில் எந்த தயக்கமும் இல்லாமல் போட்டோவை வெளியிடு வது ஆச்சரியமளிக்கிறது. சரி அவர்க ள் என்ன படிக்காதவர்களா என்றால் நன்கு படித்தவர்க்ள் இதன் விளைவுக ளை யோசிக்கமாட்டர்களா? கொஞ்சம் பொறுமையாய் கூகுளில் தேடிப்பார்த் தால் நம் போட்டோகூட கிடைக்க வா ய்ப்பிருக்கிறது.
 
பழைய காலத்து பெண்கள் போல முழுவதும் மூடி சுற்றாவிட்டாலு ம் குறைந்தபட்சம் சேலையாவது அணி யலாமே! சுடிதார் அணியும்போது கொஞ் சம் இறுக்கமில்லாமல் அணிந்தால் உங்க ள் உடலை அப்படியே எடுத்துக் காட்டா தே? உடலை மறைக்கதானே உடை? நீங் கள் அழகாக சேலை உடுத்தி சென்று பாரு ங்கள். உங்களை பார்ப்பவரின் கண்ணோ ட்டம் நல்லவிதமாகவே இருக்கும். அதே வேளையில் கொஞ்சம் நாகரீகம் என்கிற பெயரில் மேலே சொன்ன உடைகளை அணிந்து செல்லுங்கள் உங்களை பார்ப் பவர்களின் கண்களில் வித்யாசம் தெரிவ தை உங்களால் உணர முடியு ம்.
 
நிர்வாணம் என்பது கூட பெரிய தாக்கத் தை ஏற்படுத்துவதில்லை. ஆனால் அரைகுறை ஆடைகள் ஆபாசத் தை தோற்றிவிக்கிறது என்றால் நிச்சியம் மிகையில்லை. நாம் ஆடை அணிவது உடலை மறைக்கவும் கொஞ்சம் அழகுக்காவும் தானே! அதே ஆ டையே நமக்கு பாதுகாப் பில்லாத நம் மை சமுதாயத்தில் தவறாய் பிரதி பலிக் க கூடிய நாகரீகம் எனும் பெயரில் உடுத் தும் ஆடை நமக்கு தேவைதானா?
 
வெளிநாட்டினர் நம்மை வியந்து பார்த் ததில் நம் ஆடைக்கும் பங்கு உண்டுதா னே! இப்போதும் வெளிநாட்டு பெண்கள் நம் இந்தி யாவில் சேலை உடுத்துவதை பார்த்திருப்பீர்கள்தானே. வெளிநாட்டினர் எப்படியெல்லாம் உடை உடுத்துகிறார்கள் என கேள்வி வேண்டாம் அவர்களின் கலா ச்சாரமும் சூழ்நிலையும் வேறு ஆனால் நமக்கு ஒரு பாரம்பரியம் இருக்கிறதே! குறைந்தபட்சம் நம் கலாச் சார காவலர்களாக இல்லாவிட்டாலும் மனதில் தவறான சிந்தை யை விதைக்க நம் உடை ஒரு காரணமாய் இருக்க வேண்டாமே.
 
பெற்றோர்களின் கவணத்திற்கு இப் போது நமது உணவு முறை மாற்றத்தி னால் நமது குழந்தைகள் சீக்கிரமே பெரியவர்களாகி விடுகின்றனர். அதிலு ம் பெண் குழந்தைகள் பத்து முதல் பதி நான்கு வயதுக்குள் பெரிய பெண்களாகி விடுகின்றனர் வயதில் சிறியவர் களாக இருந்தாலும் உருவத்தில் பெரியவர்க ளாக இருக்கின்றனர். சில இடங்களில் பார்த்திருக்கிறேன் குழந்தைகள் தானே என்று சிலவிதமான உடைகளை அணி வித்து விடுகிறார்கள். பெற்றோர்களை முதலில் புரிந்துகொள்ளுங்கள், உங்கள் குழந்தையின் மீது உங்களுக்குள்ள கண்ணோட்டமும் மற்றவர்களி ன் கண்ணோட்டமும் ஒரே மாதிரியாய் இருக்காது. அன்றாடம் செய்திகளில் பார்க்கத்தானே செய்கிறோம், குழந்தைகளும் பாலி யல் தொல்லைக்கு உள்ளாவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக் கின்றன.
 
மேலும், நம் குழந்தைகளுக்கு நாம் ஒரு முன்மாதிரியாக இ ருக்க வேண்டும் உங்களுக்கு தெரியும்தானே உங்கள் குழந் தைகளை பொருத்தவரை நீங் கள் தான் முதலில் ஹீரோ உங்களிடமிருந்து தான் குழந் தைகள் நல்ல விஷயங்களை யும் கெட்ட விஷய்ங்களையும் கற்றுக்கொள்கின்றனர்.

No comments:

Post a Comment