Thursday 29 March 2012

ஆரோக்கியமான பற்களுக்கு என்ன‍ செய்யவேண்டும்.

ஆரோக்கியமான பற்களே ஆரோக்கியமான வாழ்க்கையை நிர்ண யிக்கின்றன என்கின்றது மருத்துவ உலகம். பண்டைய காலத்தில் பல் போனால் சொல் போச்சு என்ற பழமொழி உண்டு. இன்றைக்கு பற் கள் பாதிக்கப்பட்டால் இதயம், பக்க வாதம் போன்ற நோய்களும் எட்டிப் பார்க்கும் என்கின்றனர் மருத்துவர் கள். எனவே பற்களை ஆரோக்கிய மாக பாதுகாக்க வேண்டியது அவசி யம்.
பற்களை பாதுகாக்க வீட்டில் உள்ள பொருட்களே உதவுகின்றன என்கி ன்றனர் மருத்துவர்கள் அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.
சிறு வயதில் இருந்தே பல்லை ஆரோக்யமாக வைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். பிரச்னை வந்து, வலிக்க ஆரம்பித்த பின்னர் தான் மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமே பலருக் கும் உள்ளது. குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பித்ததில் இரு ந்தே தினமும் இருமுறை பல் துலக்க வேண்டும். பல்லின் இடுக்குகளில் உணவுப் பொரு ள்கள் படியாமல் பார்த்துக் கொ ள்ள வேண்டும். அவ்வாறு சிக் கிக் கொண்டால் வாய் கொப்ப ளித்து உடனடியாக பல்லை சுத் தம் செய்ய வேண்டும்.
கீரைகளை நன்றாக மென்று துப்பலாம். இதனால் பல் இடுக் குகளில் உள்ள உணவுப்பொருட்கள் வெளியேறிவிடும், பற்கள் ஆரோக்கிய மடையும். பச்சை வெங்காயத்தை மூன்று நிமிடம் நன் றாக மென்று துப்ப வாய், பற்களில் உள்ள தேவையற்ற கிருமிகள் இறந்துவிடும். உணவு உண்டவுடன் வெதுவெதுப்பான நீரில் ஹை ட்ரஜன் பெராக்ஸைடு சேர்த்து நன்றாக கொப்பளிக்க வேண்டும்.
சத்தான உணவுகள்
சத்துக் குறைபாடான உணவுகள் மற்றும் உடலில் ஏற்படும் சர்க்க ரை உள்ளிட்ட மற்ற நோய்களின் காரண மாகவும் பல் ஆரோக்யம் விரைவி ல் கெட்டுவிட வாய்ப்புள்ளது. எச்சி லில் உள்ள அமிலம் மற்றும் உணவி ல் உள்ள கார்போஹைட்ரேட்டும் சேர்ந்து பல்லில் சொத்தையை உரு வாக்குகிறது.
தினசரி உணவில் கால்சியம், வைட் டமின் சி போன்றவைகளை அதிகம் சேர்த்துக்கொள்வது பற்களின் ஆ ரோக்கியத்திற்கு வழி வகுக்கும். தினசரி அரை எலுமிச்சையை சாறு எடுத்து வெது வெதுப்பான நீரில் கொப்பளிக்கலாம்.
பல் சொத்தை பெரிதாக வளர்ந்து பல்லின் வேரை தாக்கும் போது தான் வலி ஏற்படுகிறது. இந்த வலியை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால் பல்லின் வேர்ப்பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டு பல்லை முழுமையாக இழக்கும் நிலை ஏற்படும்.
பல்வலியை போக்க
பல்வலி ஏற்பட்டால் அந்த இடத்தில் சிறி தளவு வெள்ளைப் பூண் டை எடுத்து பல் வலிக்கும் இடத்தில் வைக்க நிவாரணம் கிடைக்கும். அதேபோல் கிராம்பு பொடி செய்து பல்வலி உள்ள இடத்தில் வைக் கலாம். வெள்ளைப் பூண்டு, கல் உப்பு சேர் த்து நன்றாக பல் தேய்க்க பல்வலி குண மாகும்.
வாய் துர்நாற்றம் போக
தினசரி நன்றாக பல்துலக்க வேண் டும். வாய், நாக்கு உள்ளிட்ட இடங்க ளில் அழுக்குகளை நீக்க வேண்டும். கொத்தமல்லி இலைக ளை நன்றாக மென்று சாறுகளை விழுங்கலாம்.
வெதுப்பான நீரில் ஒரு டீ ஸ்பூன் இஞ்சி, ஒரு டீ ஸ்பூன் எலுமிச்சை ஜூஸ் சேர்த்து நன்றாக கொப்பளிக் க வேண்டும். தினசரி மூன்று முறை இவ்வாறு செய்யலாம். சுவாசப் புத்துணர்ச்சி கிடைக்கும்.
வெதுவெதுப்பான வெந்நீரில் சிறிதளவு பேகிங் சோடா, சிறிதளவு தூள் உப்பு சேர்த்து வாய் கொப்பளிக்கலாம்.
ஆரோக்கியம் அவசியம்
இதேபோல் பல்லில் ஏற்படும் பல் கூச் சம், ஈறு வீக்கம், பல் சொத்தை, வாய் நாற்றம் உள்ளிட்ட எந்தப் பிரச்னையாக இருந்தாலும் உடனடியாக பல் மருத்து வரை அணுகி சிகிச்சை செய்து கொள்வ தன் மூலம் பல்லின் ஆரோக்யத்தையும், உடல் ஆரோக்கியத்தையும், அழகையு ம் பாதுகாக்க முடியும்.

No comments:

Post a Comment