Thursday 29 March 2012

கருத்த பெண்கள் கலையாக மாற சில ஆலோசனைகள்

கருப்பான சருமம் என்பது நம் ஊ ரைப் பொருத்தவரை இரண்டாம் பட்சமாகவே பார்க்கப்படுறது. இதற்கு காரணம் சிவந்த மேனி கொண்டவர்களுக்கு அளிக்கப் படும் முன்னுரிமை தான். கருப்பு என்பது வெறுக் கத்தக்க நிறமி ல்லை. இந்தியர் களின் உண்மை நிறமே கருப் புதான். கருப்பான சருமம் கொண்ட பெண்கள் கோடை காலத்தில் தைரியமாய் வெளியே சுற்ற லாம். ஏனெனில் அவர்களுக்கு வெப்பத் தினால் ஏற்படக்கூடிய கொப்புளங்கள், கோடைகால சரும பாதிப்பு கள் எதுவும் ஏற்படாது. கருப்பான பெண்கள் கலையாக மாற சில ஆலோசனைகளை வழங்கியுள்ளனர் அழகியல் நிபுணர்கள்.
பப்பாளி, ஆரஞ்சு பழ பேஷியல்
முகத்திற்கு பேஷியல் போடும் முன்பு முகத்தில் உள்ள அழுக்குகளை துடை த்து எடுக்கவேண்டும். காய்ச்சாத பாலை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு சிறிதளவு பஞ்சில் நனைத்து முகத்தை துடை க்கவேண்டும். சருமத் தில் உள்ள அழுக்குகள் எல்லாம் வெளி யேறிவிடும். நன்கு கனிந்த பப்பாளியை மசித்து எடுத்துக் கொள்ளவும். அதை வைத்து முகத்துக்கு மென்மையாக மசாஜ் கொடுக்கவும். மசா ஜ் செய்கிறபோது கைகளை ஆரஞ்சு சாற்றில் நனைத்துக் கொள்ளவு ம். கொஞ்சம் பப்பாளிக் கூழ், இரண்டு துளிகள் தேன், கொஞ்சம் பால் எல்லாம் சேர்த்து கடைசியாக முகத்துக்குப் பேக் போடவும். 20 நிமி டம் ஊறவிட்டு குளிர்ந்த நீரில் கழுவ முகம் புத்துணர்ச்சியாகும்.
நன்கு கனிந்த பூவன் வாழைப் பழத்தை பிசைந்து அத்துடன் தேன், ஆரஞ்சு சாறு, பயத்தம் மாவு கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊறவிட்டுக் கழுவி வர, நிறம் பளிச் என்று மாறும்.
முட்டைகோஸ் பேஷியல்
காய்கறி பேஷியலுக்கும் முதலில் காய் ச்சாத பாலால் முகத்தைத் துடைக்கவும். பின்னர் முட்டைக் கோஸை பச்சையாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இது தவிர அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வடிகட்டி சாறு எடுத்து வைத்துக் கொள் ளவும். முட்டைக் கோஸ் மசி த்ததைக் கொண்டு முகத்துக்கு மசாஜ் செய்யவும். இடையிடையே முட்டைக்கோஸ் சாறை விரல்களில் தொட்டுக் கொள்ளவும். பதினைந்து நிமிடங்கள் கழித்து ஈரமான பஞ்சால் முகத்தைத் துடைத்து விட்டு, முட்டைக்கோஸ் விழுது, பால் மற்றும் தேன் கலந்த பேக் போடவும். 20 நிமிடம் கழித்து குளிர் ந்த நீரால் முகத்தை கழுவ முகம் பளிச் தோற்றத்துடன்
இந்த இரண்டு பேஷியல்க ளையும் பதினைந்து நாட்கள் இடைவெளியில் செய்து கொ ள்ளலாம். பருக்கள் இல்லாத வர்கள் என்றால் பத்து நாட்க ளுக்கொரு முறையும் செய்து கொள்ளலாம்.
குங்குமாதி தைலம்
சிறிதளவு தேன், சிறிதளவு பா லேடு, சிறிது வெள்ளரிச்சாறு, கொஞ்சம் கடலை மாவு எல்லாவற் றையும் நன்றாகக் குழைத்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடங் கள் அப்படியே விட்டு பிறகு கழுவலாம். இதனால் கருப்பான சருமம் களையாகும்.
ஆயுர்வேதக் கடைகளில் சுத்தமான குங்கு மாதிதைலம் கிடைக்கும். அதை வாங்கி கொஞ்சம்பாலுடன் கலந்து வாரம் ஒரு மு றை முகத்துக்கு மசாஜ் செய்யவும். மசாஜு க்குப் பிறகு அரைத்த சந்தனத்தில் பால் கல ந்துபேக்போடவேண்டும். இதனால் முகம் நிச்சயம் பொலி வாகும். வெயிலில் டூவீலரி ல் செல்கிறபோது சன்ஸ்கிரீன் உபயோகிக் கலாம். அதேபோல் கைகளுக்கு கிளவுஸ் அணிவது சருமத்தை பாதுகாக்கும்.
குங்குமப்பூ
சூடான பாலில் குங்குமப்பூவைப்போட்டு கால்மணி நேரம் அப்படியே ஊறவிட வேண்டும். அது வெதுவெதுப்பாக மாறி, மஞ்சள் நிறத்துக் கு வரும்போது குடிப்பதுதான் பல ன் தரும். இதனால் சரும நிறத்தில் பொலிவு கூடும். அதேபோல் பச் சைக் காய்கறிகள், பழங்கள், இள நீர், பால், தயிர் சாப்பிடுவது போ ன்றவையும் நிறத்தை மேம்ப டுத்த நினைப்பவர்கள் கவனத்தில் கொ ள்ள வேண்டிய விஷயங்கள் என் கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

No comments:

Post a Comment