Sunday 18 March 2012

தீ அணைக்கும் கருவிகள் தோன்றிய வரலாறு

முதன்முதலில்,1723ம் ஆண்டு தீயணைப்பான் என்ற கருவி கண்டு பிடிக்கப்பட்டது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஆம்புரோசு காட்ஃப்ரே என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட இது இன்றைய புதிய தீயணைப் பான்களுக்கு முன்னோடியான ஒரு கருவி. இதில் தீயை அணைக்க உதவும் நீர்மமும், வெடிமருந்தும் ஒரே பெட்டியின் இரு வேறு அறைகளில் இருக்கும். தீவிபத்து (தீப் பற்று நிகழ்வு) ஏற்படும் சமயங்களில் பெட்டி வெடித்து, நீர்மம் (திரவம்) வெளியேறுவதால் தீ அணைக்கப்பட்டது.
 
 
இதன்பிறகு, 1819ம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந் த சார்சு வில்லி யம் மாண்பை நவீன தீயணைப் பானை உருவாக்கினார். இதில் இவர் பொட்டாசி யம் கார்பனேட் கலவையையும் அழுத்தப்பட்ட காற்றையும் பயன்படுத்தினார்.
 
இதன் பிறகு 1881ம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த ரீட் & காம்பல் என்ற நிறுவனத்தால் அழுத்தம் உண்டாக்கவல்ல தீயணைப்பான் களும், 1905 ம் ஆண்டில் உருசியாவைச் சேர்ந்த அலெக்சாண்டர் லாரன்ட்என்பவரால் வேதிநுரை தீயணைப்பான்களும் , 1924ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த வால்டர் கிட்டி நிறுவனத்தால் கார்பன்-டை-ஆக்சைடை அடிப்ப டையாக கொண்ட தீயணைப் பான்களும் கண்டுபிடிக்கப்பட் டன.
 
பொதுவாக நாற்பதுகளின் இறு தியிலும், ஐம்பதுகளின் தொட க்கத்திலும் அமெரிக்கர்களால் அதிகமாக பயன்படுத்தப்பட்ட காலன் 1211 மற்றும் காலன் 1301 ஆகிய வளிமங்கள் (வாயுகள்) 1970 களில் ஐரோப்பாவுக்கும் பர வியது. எனினும் இந்த வளிமங் கள் சூழ்நிலை சீர்க் கேட்டை உரு வாக்கவல்லது என்ற காரணத் தால் ஐரோப்பா மற்றும் அவுத்திரே லிய நாடுகளில் தடைசெய்யப் பட்டது. இந்தியாவில் இந்த வளிமம் 1997ம் ஆண்டு முதல் தடைசெய்யப்பட்டுள்ளது. இருப்பி னும் அமெரிக்கா, ஆசியா, நடு கிழக்கு நாடுகளில் இந்த வளிமம் இன்னும் அதிக அளவு பயன் பாட்டில் உள்ளது.
தீயணைப்பான் வேலை செய்யும் முறை
நெருப்பு முக்கோணம்
 
பொதுவாக தீயணைப்பான்கள் நெருப்பு முக்கோண அடிப்படை யில் இயங்குகின்றன. அதாவது ஓர் இட த்தில் தீ உருவாக அல்லது பரவ வெப் பம், எரிபொருள் மற்றும் ஆக்சிசன் ஆகிய மூன்றும் முக்கிய காரணிகளாக உள்ளன. எனவே இவை மூன்றில் ஏதா வது ஒன்றை நீக்கும் பொழுது நெருப்பு அணைக்கப்படுகின்றது. இதன் அடிப் படையில் குளிர்வித்தல், போர்த்துதல் ஆகிய முறைகளில் தீ அணைக்கப்படு கின்றது.
 
குளிர்வித்தல்:
 
இந்த முறையில் தீப்பிடித்த பகுதிகளில் நீர் போன்ற குளிர்விப்பா ன்கள் அதிக அழுத்தத்தில் செலுத்தப்படுகின்றன. இதனால் வெப் பம் நீக்கப்படுவதால் தீ கட்டுப்படுத்தப்படுகின்றது.
 
போர்த்துதல்:
 
இந்த முறையில் தீப்பிடித்த பொருள்களில் சில வேதிப் பொருட் கள் அதிக அழுத்தத்தில் செலுத்தப் படுகின்றன. இதனால் ஏற்படும் நுரை தீப்பிடித்த பொருள்களின் மேல் படி கின்றன. இதனால் அந்தப் பொருள் களுக்கு ஆக்சிசன் தொடர்பு துண்டிக் கப்படுவதால், நெருப்பு அணைக்கப் படுகின் றது.
தீயணைப்பான்கள் வகைப்பாடு (Fire Extinguisher Classes): 
தீயணைப்பான்கள் பொதுவாக விபத்துக்கான எரிபொருள் அல்லது விபத்துக்கான காரணி ஆகியவற்றின் அடிப்படையில் பல வகைக ளில் வகைப்படுத்தப்படுகின்றன. இந்த வகைப்பாடு நாட்டுக்கு நாடு வேறுபடும்.
இந்திய அளவில் தீவிபத்தா னது பின்வரும் முறையில் ஐந்து வகையாக பகுக்கப்ப ட்டுள்ளது.
 
A பிரிவு தீவிபத்து: காகிதம், மரம், ரப்பர், நெகிழி போன்ற பொருட்களால் உண்டாகும் தீவிபத்துகள்.
 
B பிரிவு தீவிபத்து: எண்ணெய், கரைப்பான், பெட்ரோல் போன்ற நீர்ம பொருட்களால் உண்டாகும் தீவிபத்துகள்.
 
C பிரிவு தீவிபத்து: எளிதில் தீப்பற்றக்கூடிய வளிமங்களால் உண்டாகும் தீவிபத்துகள்.
 
D பிரிவு தீவிபத்து: மக்னீசியம், பொ ட்டாசியம், சோடியம், பாசு பரசு போ ன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய உலோ கங்களால் உண்டாகும் தீவிபத்துகள்.
 
E பிரிவு தீவிபத்து: மின்சாதன பொரு ட்களால் உண்டாகும் தீ விபத்துகள்.

மேற்கூறிய இந்திய தீவிபத்து வகை ப்பாட்டின் படி தீயணைப்பான் களின் பயன்பாடு பின்வரும்படி நிர்ணயக்க ப்பட்டுள்ளது.
நீர் தீயணைப்பான் WATER Fire extinguisher:
இவ்வகை தீயணைப்பான்களில் தீயணைப்பு கருவியாக நீர் பயன் படுகிறது. நீரை வேகமாக பீய்ச்சியடிக்க கார்பன்-டை-ஆக்சைடு பயன்படுகிறது. இவ்வகை தீயணைப்பான்க ள் A வகை விபத்துகளை தடு க்க பயன்படுகின்றன. இவை குளிர்வித்தல் முறையில் செயல்படுகின்றன.
 
வேதிநுரை தீயணைப்பான் Foam Fire Extinguisher:
 
இவ்வகை தீயணைப்பான்களில் குறிப்பிட்ட வேதிப்பொடிகள் தீயணைப்பு கருவியாக பயன்படுத்தப்படுகின்றது. வேதிப்பொடிக ளை வேகமாக பீய்ச்சியடிக்க நைட்ரசன் பயன்படுத்தப்படுகின்றது. இவ்வகை தீயணைப்பான்கள் A & b வகை விபத்துகளை தடுக்க பயன்படுகின்றன. இவை போர்த்துதல் முறையில் தீயை அணைக் கின்றன .
 
உலர் வேதிப் பொடி தீயணைப்பான் Dry Chemical Powder:
 
இவ்வகை தீயணைப்பான்களில் அம்மோ னியம் பாஸ்ப்பேட் போன்றவை தீயணை ப்பு கருவியாக பயன்படுகின்றது. இவ்வகை தீயணைப்பான்கள் A,B,C & E வகை விபத் துகளை தடுக்க பயன்படுகின்றன. இவை போர்த்துதல் முறையில் தீயை அணைக் கின்றன.
 
கார்பன்-டை-ஆக்சைடு தீயணைப்பான் CO2 Fire Extinguisher:
 
இவ்வகை தீயணைப்பான்களில் கார்பன்-டை-ஆக்சைடு தீயணைப் பு கருவியாக பயன்படுத்தப்படுகின்றது. இவ்வகை தீயணைப்பான் கள் B,C & E வகை விபத்துகளை தடுக்க பயன்படுகின்றன. இவை போர்த்துதல் முறையில் தீயை அணைக்கின்றன.
 
சிறப்பு உலர்வேதிப்பொடி தீய ணைப்பான் Special Dry Chemical Powder:
 
இவ்வகை தீயணைப்பான்களில் பல்வேறு வேதிப்பொடிகள் (உ லோகத்துக்கு உலோகம் மாறு படும்) தீயணைப்பு கருவியாக பயன்படுகின்றது. இவ்வகை தீய ணைப்பான்கள் D வகை விபத்து களைத் தடுக்க பயன்படுகின்றன. இவை போர்த்துதல் முறையில் தீயை அணைக்கின்றன.

No comments:

Post a Comment