Thursday 22 March 2012

கொழுப்புச்சத்து அதிகமுள்ள‍ உணவை உண்டால் விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும்

அதிக கொழுப்புச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் ஆண்களின் விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுவதாக சமீபத்திய ஆ ய்வில் தெரியவந்துள்ளது. எனவே இளம் தலைமுறை ஆண்கள் கொழு ப்புச் சத்துள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறி வுறுத்தியுள்ளனர்.
இன்றைய இளம் தலைமுறையினரி ன் முன்பு உள்ள முக்கியமான பிரச் சினை குழந்தையின்மைதான். இதற் கு உணவுப் பழக்கமும் முக்கிய கார ணமாக இருக்கிறது.
கொழுப்பு சத்து உணவு
உடல் ஆரோக்கியம், உணவு பழக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்ட தில் துரித உணவகங்களில் கிடைக்கும் உணவுகளும், ருசிக்காக அதிக கொழுப்புச் சத்துள்ள உ ணவுகளை உண்பதன் மூலமு ம் இளைஞர்களின் விந்தணு உற்பத்தியில் குறைபாடு ஏற்ப டுவதாக ஆய்வாளர்கள் தெரி வித்துள்ளனர். 35 சதவிகித ஆண்கள் இது போன்ற குறை பாடினால் பாதிக்கப்பட்டுள்ள தாக ஆய்வாளர்கள் தெரிவித் தனர். அதேபோல் அதிக புகைப் பழக்கம் மதுப்பழக்கம், மன அழு த்தம், போன்றவையும் ஆண்களின் விந்தணு குறைபாட்டில் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதேசமயம் ஒமேகா 3 கொழுப்புச் சத்துள்ள உணவுகளை உட்கொ ள்ளும் ஆண்களுக்கு விந்தணு உற் பத்தியில் குறைபாடு எதுவும் ஏற்ப டவில்லை என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.ஆண்களின் குறைபாட்டி னை போக்க சித்த மருத்துவத்தின் மூலம் நம் முன்னோர்கள் ஆலோச னை கூறியுள்ளனர். அவற்றை பின் பற்றினால் விந்தணு குறைபாடு நீங் கி நல்ல பலன் கிடைக்கும் என்று தெரி ய வந்துள்ளது.
பாதம், கல்கண்டு
தேங்காய்ப்பால் எடுத்து அரை டம்ளர் அருந்தி வர தாது விருத்தி யாகும். இரவு படுக்கைக்கு செல்ல மூன்று மணி நேரத்திற்கு முன் பே முழு மாதுளம் பழம் சாப்பிட வேண்டும்.
வால் முளகு, பாதம்பருப்பு, கற்கண்டு, கச கசா இவற்றை சம அளவு எடுத்து அரைத் து நெய்யையும் சேர்த்து அடுப்பில் வைத் து பதமாக வேகவைத்து தினமும் இருவே ளை சாப்பிட்டு வர தாது வலிமை பெறும்.
அரசம்பழம்
அரசம்பழம், வேர்ப்பட்டை இவைகளை இடித்து தூள் செய்து பாலில் கலந்து குடிக்கவும். அரசம்பழத்தை இடித்து தூளாக்கி தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடவேண்டும். பின்னர் ஒரு டம்ளர் பசும்பால் சாப்பிட தாது பலம் பெறும்.
முக்கராங் கிழங்கு பொடியுடன் தேனும் நெய்யும் கலந்து சாப்பிட் டு வரவும். கருவேலமரத்தின் பிசி னை எடுத்து சுத்தம் செய்து காய வைத்து லேசாக வறுத்துதூளாக் கி சாப்பிட்டு வர பழைய நிலை மைக்கு வரலாம்.
முருங்கைப் பூ கசாயம்
முருங்கைப்பூவை நீர் விட்டுக் காய்ச்சி எடுத்து ஒரு அவுன்ஸ் பசும் பாலுடன் கலந்து குடித்து வரவும். மகிழம்பூவை சுத்தம் செய்து நீர் விட்டுக் காய்ச்சி அந்த நீரை ஒருடம்ளர் பால் சேர்த்து சாப்பிட ஆண்மை வீரிய உணர்வு உண்டாகும்.
நெய், மிளகு, உப்பு, பொன்னாங்கண் ணிக்கீரை, அரைக்கீரை, பசலை கீரை, நறுந்தாலி, நலமுருங்கை இவைக ளை சேர்த்து துவை யலாக்கி சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.

No comments:

Post a Comment