Sunday 18 March 2012

காதலர்களுக்கான (பெண்களுக்கான) ஓர் எச்சரிக்கை !!

இது தமிழகக் காதலர்களுக் கான ஓர் எச்சரிக்கை ரிப் போர்ட்! சமீப காலங்களில் பெரிதாய் வெளிவராமல் தமிழகம் முழுவதும் பல காதலர்களுக்கு ஓர் அசிங்க மான அவமானங்கள் நிகழ்த் தப்பட்டுக் கொண்டிருக்கிறது . சம்பந்தப்பட்ட காதலர்கள் தங்கள் எதிர்காலம் கருதியு ம், வெளியுலக அவமானங்களுக்குப் பயந்தும் மௌனம் காப்பதா ல் ஊர் ஊருக்கு ஒரு வக்கிர கும்பல் புதிது புதிதாய் முளைத்துக் கொண்டேயிருக்கிறது. என்னதான் விஷயம்? தொடர்ந்து படியு ங்கள்.
காதலர்கள் என்றாலே பெரும்பாலும் அவர்கள் சந்திக்க விரும்பு வது தனிமையான இடங்களி லேயே. இதில் பீச், பார்க் என்று பொதுமக்கள் நடமாடு ம் பொது இடங்களில் பகல் நேரங்களில் சந்திக்கும் காத ல் ஜோடிகள் பெரிதாய் பாதி க்கப்படுவதில்லை. ஆனால் ஒரு சில காதல் ஜோடிகள் திருமணத்திற்கு முன்பே எல்லை மீறிய உடற்கவர்ச் சியால் லாட்ஜ்களிலும், காட்டேஜ்களிலும் இன்னும் சிலர் ஊருக்கு ஒதுக்குப்புறமான முட்புதர்களிலும் தனிமைக்காக ஒதுங்குகி ன்றனர். அப்படிப்பட்டவர்களை குறி வைத்துத்தான் விதவிதமான கொடூரக் கும்பல்கள் நடமாடத் தொடங்கியிருக்கின்றன. என்ன தான் நடக்கிறது அப்படி?
ஊருக்கு ஒதுக்குப்புறம் என்றால் ஒவ்வொரு ஊரிலும் ஊருக்கு வெளியில் அதிகம் ஆள்புழக்கமின்றி இருபுறமும் புதர்கள் மண் டிய சாலைகள் இருக்கும். இது பெரும்பாலும் தமிழகம் முழுவதும் எல்லா நகரங்க ளுக்கும் பொருந்தும். உதார ணமாகச் சென்னையை எடுத்துக் கொண்டால் புற நகர்ப் பகுதிகளின் நூறடிச் சாலையும், சென்னையிலி ருந்து பாண்டிச்சேரி செல் லும் மகாபலிபுரம் சாலையு மே இதில் பெரும்பங்கு வகிக்கின்றன. இதில் அந்தந்த பகுதிக ளைச் சேர்ந்த ஒருசில வாலிபர்களின் கூட்டமே இது போன்ற வக்கிரங்களை அரங்கேற்றுகிறது.
ஒரு சில காதல் ஜோடிகள் பீச்சும், பார்க்கும், சினிமாத் தியேட்ட ர்களும் ஒரு எல்லைக்கு மேல் உதவாதென்பதால் எல்லை மீறுவ தற்கு வசதியாக இது போன்ற புறநகர்ப் பகுதிகளைத் தேர்ந் தெடுக்கிறார்கள். பெரும்பாலு ம் முன்னமே காதலன் மட்டும் தனியாக வந்து இது போன்ற சாலைகளை நோட்டமிட்டு இடத்தை தேர்வு செய்து கொ ண்டு அதன் பின்னரே தனது காதலியோடு அங்கு வருகிறா ர்கள். சாலைகளின் ஓரத்தில் ஒதுக்குப்புறமாய் வண்டியை பார்க் செய்துவிட்டு தங்களை யாரும் பார்க்கவில்லை என்ற தை ரியத்தில் புதர்களுக்குள் ஒதுங்குகிறார்கள். ஆனால் ஏதாவது ஜோ டி ஒதுங்குகிறதா என்று கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு அலையும் அப்பகுதி வக்கிரக் கூட்டத்தைப் பற்றி இப்படி ஒதுங்கும் ஜோடிகளுக்கு தெரிவதில்லை. அந்த வக்கி ரக் கும்பல் ஷிப்ட் கணக்கில் பிரித்துக் கொண்டு இது போ ன்ற இடங்களை மறைவாய் நோட்டமிட்டுக் கொண்டிருப் பதே தலையாய வேலையா ய் செய்து கொண்டிருப்பதால் இப்படி ஒதுங்கும் ஜோடிக ளைப் பற்றியத் தகவல் உட னுக்குடன் அந்தக் கும்பலுக்கு எட்டிவிடும்.
இவ்வாறு ஒதுங்கும் காதல் ஜோடிகளை புதர்களில் ஒளிந்து கொ ண்டு அவர்களுக்கேத் தெரியாமல் கண்காணிப்பதே இந்தக் கும்ப லின் முதல் வேலை. காதல ர்கள் மெல்ல எல்லை மீறு வது இவர்களின் செல்போனி ல் படமாக்கப்பட்டுக் கொண் டிருக்கும். காதலர்கள் தங்க ளை மறந்த நிலையில் லயி த்திருக்கும் போது திடீரென அவர்கள் முன் தோன்றும் இந்தக் கும்பல் செய்யும் மு தல் வேலை காதல் ஜோடிக ளின் ஆடைகளை எடுத்து வைத்துக் கொள்வதுதான். நான்கு முத ல் எட்டு பேர்வரைக் கொண்ட இந்தக் கும்பலை எதிர்த்து அந்தக் காதலனால் எதுவுமே செய்யமுடியாது. அந்தக் கும்பலின் முன் அரை நிர்வாண மாய் நிற்கும் காதல் ஜோடியில் எடுத்த எடுப்பிலே யே காதலனுக்கு நாலைந்து அடிகள் பலமாய் விழும். ‘’ஏன்டா எங்கே யிருந்துடா தள்ளிக்கிட்டு வந்தே இதை? நீ என்ஜாய் பண்றதுக்கு எங்க ஏரியாதான் கிடைச்சுதா? முதல்ல ரெண்டு பேரும் இப்படியே போலீஸ் ஸ்டேசனுக்கு நட ங்கடா’’ என்று மிரட்ட ஆரம்பிப்பார்கள். இல்லையெனில் ‘’ஊர்ப்பஞ்சாயத்துக்கு இப்படியே நடங்கடா’’ என்று மிரட்டுவார் கள். மான அவமானத்துக்கு பயந்த காதல் ஜோடிகள் ‘’ப்ளீஸ் நீங்க என்ன சொன்னா லும் கேக்குறோம். எவ்வளவு பணம் வே ணும்னாலும் குடுத்துறோம். எங்களை விட்டுருங்க ப்ளீஸ்’’ என்று கெஞ்சத் தொடங்கினால் கொஞ்சம் மறுப்பு தெரிவித்து விட்டு பின்னர் மெல்ல வேலையை காமிப்பார்கள்.
அந்தக் காதல் ஜோடியில் பெண்ணிடம் ‘’இங்க பாரு… உங்க ரெண்டு பேரையும் நாங்க விட்டுர்றோம். ஆனா நீ எங்களை கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கனும். இல்லை… முரண்டு பிடி ச்சேன்னா இந்த வீடியோ எல்லா இடத்து லயும் பரவும். உங்க மானமும் இத்தோட போச்சு. இதுக்கு மேல நீங்க ஊருக்குள்ள தலை காட்டவே முடியாம போகும், ஒழுங்கா நாங்க சொல்ற மாதிரி நடந்து க்கோ’’ என்றெல்லாம் மிரட்டி அந்தக் காதலன் முன்பே அவளை கூட்டமாக நாசம் செய்வதோடு மட்டுமல்லாமல் அதையும் செல்போனில் படமெடுத்துக் கொண்டு கடைசியாய் அவர்களிடம் இரு க்கும் பணத்தையும் பிடுங்கிவிட்டு துரத் திவிடுவார்கள்.
ஒரு சில ஜோடிகள் மிகவும் சிறுவயதினராய் இருக்கும் பட்சத்தில் பயத்திலேயே இந்தக் கும்பல் என்ன சொன்னாலும் கேட்டு நடப் பார்கள். சில ஜோடியில் எடுத்த எடுப்பிலேயே அடிவிழுந்தவுடனே காதலன் மட்டும் பயந்து போய் அந்தப் பெண்ணை விட்டுவிட்டு ஓடிவிடும் நிகழ்வுகளும் நடக்கும். சில ஜோடிகள் எதற்கும் அஞ் சாமல் முரண்டு பிடிக்கும் பட்சத்தில் காதலனை மூர்ச்சையாகும் அளவு க்குத் தாக்கிவிட்டு அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாய் கற்பழித்து அதை படமாக்கியும் கொள்வார்கள். எது எப்படியானா லும் இவர்களிடம் மாட் டும் வீடியோவுக்குப் பயந்தே எந்த வொரு காதல் ஜோடியும் இதை வெளியில் சொல்லுவதோ, இல்லை கம்ப்ளைண்ட் பண்ணுவதோ இல்லை என்பதுதான் இந்த வக்கிர கும்பலுக்கு வசதியான வாய்ப் பாகிப் போனது. இவர்களிடம் மாட்டும் ஜோடிகளில் கல்லூரிக் காதலர்கள், கள்ளக் காதலர்கள், அயிட்டத் தைத் தள்ளிக் கொண்டு வந்தவர்கள், திரு மணம் நிச்சயமான காதலர்கள், சின்சிய ரான ஒரிஜினல் காதலர்கள் என எல்லாவித ஜோடிகளுமே அடக்கம். இவ்வளவு வக்கிர ங்களை அரங்கேற்றும் இந்தக் கும்பல்கள் இறுதியாய் அந்த வீடியோக்களையும் நல் ல விலைக்கு விற்றுப் பரப்புவதுதான் கொடுமையிலும் கொடு மை. இது போன்ற வீடியோக்களில் இந்தக் கும்பலில் இருக்கும் ஒருவன் முகம் கூட இருக்காது. பாதிக்கப்படும் பெண் மட்டுமே முழுதாய் வீடியோவில் இருப்பாள்.
சமீபத்தில் ஒரு வீடியோப் பதிவில் நான்கு பேர் கொண் ட ஒரு வக்கிரக் கும்பல் பதினேழு வயது மதிக்கத் தக்க ஒரு இளம் பெண்ணை புதர்களுக்குள் வைத்து சீரழித்த காட்சிகள் பதியப்ப ட்டிருந்தது. இரண்டு பேர் அந் தப் பெண்ணை அழுத்திப் பிடித்துக் கொள்வதும் ஒரு வன் செல்போனில் படம் எடுப்பதும் ஒருவன் அந்தப் பெண்ணை சீரழிப்பதுமாய் மாறிமாறிச் சிதைக்கப்பட்டிருக்கிறாள் அந்தப் பெண். பார்ப்பவர்களை பதறச் செய்யும் அந்தக் காட்சிகளைப் பார்க்கும் போதே தெரிந்து கொள்ளலாம் இது மேற்கூறி ய எச்சரிக்கை சம்பந்தப்பட்ட காட்சிகளே என்பதை. அந்த வீடியோப் பதிவுகளைப் பார்த் ததும் அந்தக் கும்பலில் இருப் பவர்களை பிடித்து நிற்க வைத்து அரேபிய முறையில் அவர்களுடைய ஆணுறுப்பை அறுத்தெறிந்து தண்டனை வழங்கலாம் என்ற ஆத்திரமும் வெறியும் உண்டானாலும் நமது சமுதாயத்தில் சாத்தியமில்லையென்பதால் நம்மாலான எச்சரிக் கையையாவது செய்யலாமென்ற நோக்கத்திலேயே இந்தக் கட்டுரை.
சாலையோர நிகழ்வுகளைப் போலவே பீச்சிலும் இருளு க்குப் பிறகு சந்திக்கும் ஜோடிகளுக்கும் இதுபோல வே நடப்பதாக செய்திகள் தொடருகின்றன. இது போ லவே லாட்ஜ்களில், காட் டேஜ்களில் தங்கும் காதல் ஜோடிகளிடமும் இதே போ ன்ற வக்கிரங்களை அரங்கே ற்றும் கும்பல்களும் திரிகின்றது. முதல் ரகம் வேலை வெட்டியி ன்றித் திரியும் அந்தந்த ஏரியாவைச் சேர்ந்த இளைஞர் கும்பல் என்றால்… லாட்ஜ்களிலும், காட்டேஜ்களிலும் திரிவது இதையேத் தொழிலாகச் செய்யும் பெரிய லெவல் நெட்வொர்க் கும்பல்கள்.
இதில் கொடுமை என்னவென்றால் எல்லா நிகழ்வுகளிலும் பாதிக் கப்படுவது பெண்கள் மட்டுமே. கள்ளக்காதல் பெண்களும், அயிட் டங்காரப் பெண்களும் எப்படிப் போனால் என்ன என்று ஒதுக்கி னால் கூட இதில் பாதிக்கப்படும் நல்ல குடும்பத்துப் பெண் களின் நிலைதான் மிக மோசமாகிப் போகிறது. பெரும்பாலும் இத்தகைய நிகழ்வுகளுக்குப்பின் அதில் பாதிக்கப்படு ம் பெண் அந்தக் காதலனால் கைவிடப் படுகிறாள். இது போன்ற நிகழ்வுகளில் உடலளவில் பாதிக்கப்படுவதோடு மனத ளவிலும் வெகுவான பாதிப்புக்குள்ளா கிறாள்.
இது மட்டுமல்லாமல் காதல் என்ற பெய ரில் சில ஆண்கள் பெண்களை மயக்கி அவர்களை வெளியே அழைத்துச் செல் வது போல் அழைத்துச் சென்று தனிமையில் அவர்களை அனுபவி ப்பதோடல்லாமல் அதை வீடியோவிலும் பதிவு செய்து வியாபார மாகவும், ப்ளாக் மெயிலாகவும் சம்பாதிக்கும் நிகழ்வுகளும் அங்கங்கே நடக்கத்தான் செய்கின்றன.
கண்ணுக்குத் தெரியாத எதிரிகளை கண்டறிவது கஷ்டம் எனும் பட்சத்தில் நாமே முன்ஜாக்கிரதையாக இருப்பது மட்டுமே நம் மைக் காத்துக் கொள்ளும் ஒரே வழியென்பதை ஒவ்வொரு பெ ண்களும் புரிந்து கொள்ள வே ண்டும். காதலியுங்கள் தவறி ல்லை. ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் திருமணத்திற்கு மு ன் எல்லை தாண்டுவதை அனு மதிக்காதீர்கள். ஒரு சில சிறு சபலத்தில் நீங்கள் அனுமதிக்கும் அது போன்றதொரு நிகழ்வு உங் கள் வாழ்க்கையையே புரட்டிப் போடக்கூடும் என்பதை மறந்து விடாதீர்கள். அதுபோலவே உங் கள் காதலருடனான சந்திப்புகளை முடிந்த மட்டிலும் மக்கள் நட மாட்டமுள்ள பொது இடங்களிலேயே அமைத்துக் கொள்வதே எந்நாளும் சிறந்தது. எவ்வளவோ ஆக்கப்பூர்வமான வளர்ச்சிகளு க்குப் பயன்படும் செல்போனில் எப்போது கேமரா பொருத்தப்ப ட்டதோ அப்போதே பெண்களு க்கான பெரும் துன்பங்களும் ஆரம்பமாகிப் போயின என்ப தே நிஜம்.
பெண்களே…. உஷார்! தீதும் நன்றும் பிறர் தர வாரா; உங் கள் வாழ்க்கை உங்கள் கைகளி லேயே…!

No comments:

Post a Comment