Thursday 8 March 2012

வசீகர கண்கள்



காலையில் எழுந்தது முதல் இரவு படுக் கைக்குச் செல்லும் வரை கண்களின் பய ன்பாடு அபரிமிதமானது. கணினியில் பணிபுரிவது, புத்தகம் வாசிப்பது, தொ லைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார் ப்பது என உறங்கும் நேரம் தவிர ஓய்வு கொடுக்காமல் கண்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றன. இதனால் கண்க ளுக்கு சோர்வு ஏற்படுகிறது. இந்த சோர் வினால் கண்களுக்கு கீழே கருவளைய மும், நாளடைவில் சுருக்கத்தையும் ஏற்ப டுத்துகின்றன. எனவே கண்களை புத்து ணர்ச்சியுடன் வைத்திருக்க தினந்தோறும் பத்து நிமிடம் ஒதுக்கவேண்டும் என்கின் றனர் அழகியல் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோச னைகள் உங்களுக்காக..
கண் எரிச்சலைப் போக்க
கோடைகாலத்தில் உடலில் சூடு அதிகரித்து கண்களுக்கு எரிச்சலைஏற்படுத்தும். இத னைத் தவிர்க்க தினமும் அதி காலையில் குளித்து விடு வது நல்லது. அதிகாலையில் குளிப்பது கண்களுக்கு புத் துணர்ச்சி தருவதோடு உடலு க்கு மேலும் அழகு சேர்க்கும்.
தலையில் தேங்காய் எண் ணெய் தேய்த்து விரல் நுனி யால் நன்றாக மசாஜ் செய்யவும். இதனால் உடலுக்கு அதிக குளி ர்ச்சி கிடைக்கும். உள்ளங்கையில் தேங்காய் எண்ணெயை ஊற்றி அத னை மோதிர விரலால் தொட்டு கண்களை சுற்றி வலதுபுறமாக சுற்றி மசாஜ் செய்யவும். இது ரத்த ஓட்ட த்தை அதிகரித்து சோர்வை போக்கும்.
புத்துணர்ச்சி பெற
வெயிலில் கண்கள் கலங்கி மிகவும் சோ ர்வாக உள்ளதா? சிறிதளவு பன்னீரில் பஞ் சை நனைத்துக் கண்களை மூடிக்கொ ண்டு மேல் பாதியில் அப்படியே பலமுறை ஒத்தி எடுக்க வேண்டும். பிறகு இப்ப டியே கண்களை மூடியபடி பத்து நிமிடங்கள் இருக்க வேண்டும். இதற்குப் பிறகு கண்க ள் புது ஒளி பெற்றுவிடும்.
வெள்ளரிக்காயை துருவி மெல்லிய துணி யில் கட்டிக்கொள்ளவும். அதனை கண்க ளை மூடிக்கொண்டுமேலே வைத்து ஒற்றி எடுக்கவும். கண்கள் புத் துணர்ச்சி பெறும்.
கருவளையம் போக்க
வெயிலில் வெளியே போய்விட்டு வரும்போது கண்களைச் சுற்றிக்கருவளையம் தோன்றுவது தவிர்க்க முடி யாதது. கறிவேப்பிலை யை இடித்து சாறு பிழிந்து கொஞ்சம் வெண்ணெயை எடுத் து அதோடு கலந்து கண்களைச் சுற்றி பூசி னா ல் கருவளையம் மறைந்து விடும்.
கண்கள் குளிர்ச்சி பெற
உள்ளங்கால்களிலும், காலின் கட்டை விரல்களிலும் தேங்காய் எண்ணெய் அல் லது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் கண்களுக்கு பொலிவு கிடைக்கும், உட லும் குளிர்ச்சிபெறும்.
சந்தனம், ஜாதிக்காய் இரண்டையும் ஒன் றாக சேர்த்து அரைத்து இரவில் படுக்கும் முன் கண்களைச் சுற்றி தடவிக்கொண்டு தூங்கி னால் கண்கள் குளிர்ச்சிபெறும்.
வசீகர கண்கள்
கண் வசிகரத்திற்கும், அழகிற்கும் ஆரஞ் சுப் பழம் பயன்படுகிறது. சிறிதளவு ஆரஞ் சு ஜூஸை ஃபரீஸரில் வைத்து அது ஐஸ் கட்டி ஆனவுடன், அதை மெல்லிய வெள் ளைத் துணியில் கட்டி, கண்ணுக்கு மேல் ஒத்தி எடுங்கள். ஒருநாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர, கண்கள் பளிச் ஆகி விடும். வாரத்திற்கு மூன்றுநாட்கள் என தொடர்ந்து கண்கள் வசிகரமாக மா றும். மேலும் தூக்கமின்மையால் கண்க ளில் ஏற்படும் சோர்வை நீக்கி கண்களை பிர காசமாக்கும் தன்மை ஆரஞ்சு பழத் திற்கு உண்டு.
ப்ளீச் வேண்டாமே
முகத்திற்கு ப்ளீச் செய்யும் போ து கண்களுக்கு அடியில் ப்ளீச் செய்யக் கூடாது. அப்படி செய் வதால் அப்பகுதியில் சுருக்கம் ஏற்பட அதிக வாய்ப்புண்டு. கண்களுக்கு பயன்படுத்தும் மேக்கப் சாதனங்கள் அனைத் தும் தரமானவையாக இருக்கு மாறு பார்த்துக் கொள்ளுங்க ள். அவற்றை கண்களில் பயன் படுத்தும்போது மிகவும் கவன மாக செய்ய வேண்டும்.
உங்கள் கண்கள் எடுப்பாக தெரியவேண்டுமெனில், டிரஸ்சிற்கு ஏற் ற நிறத்தில் ஐ ஷேடோவை பயன்படுத்துங்கள். இரண்டு மூன்று கலர்களை கலந்தும் பயன்படுத்தலாம். பெரிய கண்கள் உடையவர்கள் டார் க் கலரில் ஐ ஷேடோ போட் டால், கண்கள் சிறியதாக தெரியும். ஐ லைனர் பயன் படுத்தும்போது, சிறிய கண் கள் உள்ளவர்கள் மஸ்காரா போட்டால், கண்கள் பெரிதாகவும், அழகாகவும் இருக் கும். பெரிய கண்கள் உடையவர்கள் அடர்த்தியாகவும், சிறிய கண்கள் உடை யவர்கள் மெல்லியதாகவும் போட வேண்டும்.

No comments:

Post a Comment