Tuesday 10 July 2012

எந்த‌ மாதிரி நோய்களுக்கு எந்த மாதிரியான அறிகுறிகள்

Posted on by muthukumar

கண்கள் : 
கண்கள் உப்பியிருந்தால்…
என்ன வியாதி: சிறுநீரகங்கள் மோச மாக இருப்பதைக் குறிக்கிறது. சிறு நீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாம ல் போகு ம். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.
டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறை த்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்து வது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.
கண் இமைகளில் வலி
என்ன வியாதி : அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வர லாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடை ந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.
டிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். அ தோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அள வில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம்
என்ன வியாதி : அதிகமாக வேலை செய் து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ் ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக் கு சட்டென அதிகப்படியான வெளிச்சங் களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரி கிறது.
டிப்ஸ்: எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வே ண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்க த்தையும் தவிர்க்க வேண்டும்.
கண்கள் உலர்ந்து போவது.
என்ன வியாதி: நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதி க வேலையினால் களைப்படையு ம் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகி றது.
டிப்ஸ்: குறைந்தது எட்டுமணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவ சியம். தினமும் கண்களை மேலும்  கீழு மாகவும், பக்கவாட்டின் இருபுறமு ம் அசைத்தல் போன்ற எளிய உடற் பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.
சருமம்
தோலில் தடிப்புகள் ஏற்படுதல்
என்ன வியாதி : இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுக ளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரிய வில்லை என்கிறார்கள்.
டிப்ஸ்: அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற் கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வை த்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.
முகம் வீக்கமாக இருப்பது
என்ன வியாதி: உடலில் தண்ணீர் இழ ப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படு ம்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போது மான தண்ணீர் கிடைக்காமல் போனா ல், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.
டிப்ஸ்: ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண் டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்து வீர்கள்.
தோல் இளம் மஞ்சளாக மாறு வது
என்ன வியாதி: கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர் போன் ற மஞ்சள் நிற திரவங்களை வெ ளியேற்ற முடிவதில்லை. இதனா ல் தோல் மஞ்சள் நிறத்திற்கு மா றுகிறது.
டிப்ஸ்: அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.
பாதம்
கை கால்களில் சில நேரங்க ளில் சுறுசுறுவென உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல்
என்ன வியாதி: சீரான ரத்த ஓட் டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்த மானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.
டிப்ஸ்: வைட்டமின் ணி நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.
பாதம் மட்டும் மரத்துப் போதல்
என்ன வியாதி: நீரிழிவு நோயின் பாதி ப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல் களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய் யும் வேலைகளையும் தடுத்து விடுகிற து. இதன் விளைவாக சில நேரங்களில் கால் களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியை யோகூட உணர்ந்து கொள்ள முடியாது.
டிப்ஸ்: பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங் கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸி ன் அளவைக் குறைத்து நீரிழிவு நோ யைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள்
என்ன வியாதி : தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தை ராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவை யான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கி றது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக வே லை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல் உலர்ந்துபோகும். பாதங்களை சரி வர பாராமரிக்காமல் இருந்தால் அதிக அள வில் பாதிப்படைந்து விடும்.
டிப்ஸ்: தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும் உடல் எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள் இரு ந்தாலும் மருத்து வரைச் சந்திப்பது அவசியம்.
கைகள்
சிவந்த உள்ளங்கை
ன்ன வியாதி: கல்லீரல் பிரச்சி னையாக இருக்கலாம். நோய் வாய்ப் பட்ட கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன் களைக் கட்டு ப்படுத்த முடியா மல் போகும். அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பா கிவிடும். கல்லீரல் சரியாக வே லை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங் கை கள்தான் சட்டென காட்டிக் கொ டுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கை யின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.
டிப்ஸ்: கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடுவது கல்லீர லைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷ த்தன்மையை மாதம் ஒரு முறை யாவது போக்க, ஒரு நாள் பழம் மட் டும் சாப்பிடுங்கள்.
வெளுத்த நகங்கள்
என்ன வியாதி: இரத்த சோகை இரு க்கிறது. இரத்தத்திலுள்ள சிகப் பணு க்கள் அளவில் குறையும்போது சின் னச் சின்னவேலையைச் செய்வதற்கு ம் உடல் பலமின்றிப்போகும்! ரத்தத் தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளு த்து விடுகின்றன.
டிப்ஸ்: இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக் கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரைவகைகள், மற்றும் இறை ச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது டாக்டரி ன் ஆலோசனையின்படி குறிப்பிட்ட நாட் களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோ டு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.
விரல் முட்டிகளில் வலி
என்ன வியாதி: ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டு வலி இருக்கிறது. இத னால் விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில் தான் காணப்படும். அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உட னே வர வாய்ப்புண்டு. வயதானவர்களுக் கு மட்டுமே இந்த மூட்டுவலி வருவதில் லை. எந்த வயதுக்காரர்களுக்கும் வரலாம்.
டிப்ஸ்: உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் ஙி சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல் பரு மனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கு ம்.
நகங்களில் குழி விழுதல்
என்ன வியாதி: சோரியாஸி ஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்க ளும் மிகவும் மென் மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.
டிப்ஸ்: உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்தாலோசிக்கவு ம். ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவ தைத் தடுக்கலாம்.
வாய்
ஈறுகளில் இரத்தம் வடிதல்.
என்ன வியாதி: பல் ஈறு சம்பந் தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியி லிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்து விடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.
டிப்ஸ்: தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.
சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல்
என்ன வியாதி: வாய்ப்புண் இருக்கிறது. அதிக மாக ஸ்டி ரெஸ் செய்து கொள்வதாலும் வாய்ப்புண் வரலாம். உட லில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும், இரும்புச்சத்து அல்லது வைட் டமின் பி-12ன் குறைவினா லும் இப்படி ஏற்படுகிறது.
டிப்ஸ்: ‘மல்டி_விட்டமின்’ மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொ ள்ளவேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் ஸ்டி ரெஸ்ஸைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும்.
வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது.
என்ன வியாதி: உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக் கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த டீ ஹை டிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரண மாகும்.
டிப்ஸ்: நிறைய திரவ ஆகாரம் எடுத்துக்கொள்ளவேண்டும். தினமு ம் குறைந்தது ஒன்றரைலிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அத ன் கூடவே பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்ல பலன் தரும்.

No comments:

Post a Comment