Tuesday 10 July 2012

இடுப்பு வலியிலிருந்து தப்பிக்க

மனித உடலின் பின்புறத்தில், கழுத்துப் பகுதியில் ஆரம்பித்து, அடிப் பகுதியிலுள்ள `பிருஷ்டம்’ வரை உள்ள தண்டுவடத்தில், அடுக்கடுக்காக, ஒன்ற ன் கீழ் ஒன்றாக, வரிசையாக, கருத்தெலு ம்புகள் அமைந் துள்ளன. இதற்கு `வெர்டி ப்ரே’ என்று பெயர். மனிதன் முதற்கொண் டு, பாலூட்டி விலங்குகள் அனைத்திற்கு ம் இந்த குருத்தெலும்புகள் உண்டு.
 
ஒவ்வொரு குருத்தெலும்புக்கும் இடை யில், `இன்டர் வெர்டிப்ரல் டிஸ்க்’ என்று சொல்லக்கூடிய அதிக எடையைத் தாங் கக்கூடிய, அதி ர்ச்சியைத் தாங்கக்கூடிய, `ஷாக் அப்ஸார்பர்’ என்று சொல்வார்க ளே, அதைப் போன்ற ஒரு `அதிர்ச்சி தடுப் பான் டிஸ்க்’ இருக்கிறது. சைக்கிள், கார், ஸ்கூட்டர், பைக், மோட்டா ர் பம்ப் போன்றவற்றில் `வாஷர்’ என்ற ஒன்று இருக்குமே, அதைப் போலத்தான், இதுவும் ஒவ்வொரு குருத்தெலும்புக்கும் இடையில் இயற்கையாக அமையப் பெற்றிருக்கிறது.
புரோட்டியோ கிளைகான் (புரோ ட்டீன் + கார்போஹைட்ரேட்) கொல்லாஜன், தண்ணீர் மற்றும் குறைந்த அளவில் கொஞ்சம் எலாஸ்டிக் பைபர் சேர்ந்த கூட்டு ப்பொருளால் ஆனது தான், இந்த `அதிர்ச்சி தடுப்பான் டிஸ்க்’ ஆகு ம். ஒரு பட்டர் பிஸ்கெட் எப்படி இருக்குமோ, அநேகமாக, அதே வடிவில், அதே சைஸில் தான், இந்த `அதிர்ச்சி தடுப்பான் டிஸ்க்’ இருக்கும். தண்டுவடம், மொத்தமாக முன்னே, பின்னே, குனிய, நிமி ர, வளைய, இந்த அதிர்ச்சி தடுப்பான் டிஸ்க் பெரிதும் உபயோகப் படுகிறது.
மேலும் தண்டு வடத்திலுள்ள எல்லா குருத்தெலும்புகளும் தனித் தனியாக ஒன்றோடொன்று சேர்ந்திருக் கவும் இந்த டிஸ்க் பயன்படுகிறது. மனி தனின் தண்டுவடத்தில், மொத்தம் 23 டிஸ்க் இருக்கிறது. கழுத்துப்பகுதியில் ஆறும், முதுகின் நடுப்பகுதியில் பன்னி ரெண்டும், இடுப்பின் பின்பகுதியில் ஐந் தும் இருக்கின்றன. இந்த டிஸ்க்கின் வெளிப்பகுதி `ஆன்னுலஸ் பைபர்’ என்கி ற அடுக்கினாலும் உருவாக்கபட்டிருக்கி றது.
உடம்பில், குறிப்பாக முதுகுப்புறத்தில் ஏற்படும் அழுத்தத்தை, ஒரே சீராக பிரித் தனுப்பும் வேலையை, வெளிப்புற `ஆன் னுலஸ் பைபர்’ செய்கிறது. உள் புறமுள்ள `நியூக்ளியஸ் பைபர்’ ஒரு டூத் பேஸ்ட் போன்று, ஒரு ஜெல்லி போன்று வழவழவென்று இருக்கு ம். இதுதான் `ஷாக் அப்ஸார்பர்’ வேலையைச் செய்கிறது. அதாவது தண்டு வடத்துக்கு வரும் பிரஷர் முழுவ தையும் தாங்கிக் கொள்ளும் வேலை யை, இந்த நியூக்ளியஸ் பைபர் தான் செய்கிறது.
உயரத்திலிருந்து நாம் குதிக்கும்போது, ஓடு ம்போது, தாவும்போது, தாண்டும்போது, அதிக எடையுள்ள பொருளை தலைச் சுமை யாக தூக்கும்போது, குனியும்போது, நிமிரு ம்போது, வளையும்போது, நெளியும் போது ம் ஏற்படும் எல்லாவிதமான அழுத்தத்தை யும், இந்த `டிஸ்க்’ தான், தாங்கிக் கொண்டு குருத்தெலும்புகள் பாதிப்படையாமல், உடை ந்து விடாமல், பாதுகாத்து வருகிறது.
அதற்காக, இந்த அதிர்ச்சி தடுப்பான் டிஸ்க் இருக்கிறது என்பதற்காக, இஷ்டம் போல் இருநூறு கிலோ எடை யைத் தூக்கி தலையில் வைத்தால், இந்த `டிஸ்க்’ தாங்காது. ஒரு குறிப்பிட்ட அளவு எடை, ஒரு குறிப்பிட்ட உய ரத்திலிருந்து குதித்தல், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வளைதல், இப்படி எல்லா செயல்களிலுமே, ஒரு குறிப் பிட்ட அளவுக்குத்தான் இந்த `டிஸ்க்’ கால் கண்ட் ரோல் பண்ணி, உடம் பை பாதுகா க்க முடியும்.
அளவுக்கு மீறினால் இந்த `டிஸ்க்’ கால் ஒன்றும் செய்ய முடியாது. மனி த உடம்பு ரப்பரினால் செய்யப்பட்டத ல்ல. இந்த டிஸ்க்கிலுள்ள ஆன்னு லஸ் பைபரில், சுமார் 65 சத வீதம் நீரும், நிïக்ளியஸ் பைபரில், சுமார் 80 சதவீதம் நீரும் இருக்கும். ரத்த சப் ளை இந்த டிஸ்க்குகளுக்குக் கிடை யாது. வயது ஆக, ஆக நியூக்ளியஸ் பைபர் அடுக் கிலுள்ள நீர்ச்சத்து குறைந்து கொண்டே வரும்.
இதனால், அதனுடைய பலமும் குறைந்து கொண்டே வரும். அதனா ல்தான் வயதான காலத்தில், சின்னப்பிள்ளை மா திரி, ஓடியாடி வி ளையாடாதீர்கள் என்று பயமு றுத்துவதுண்டு. வயதான காலத்தில் முதுகெலு ம்பில் அடிபட்டாலோ, கீழே விழுந் தாலோ, அந்த ஷாக், அந்த அதிர்ச்சியைத் தாங்கக்கூடிய சக்தி குறைந்து விடும். எனவே வயதான கால த்தில் அதிக ஓட்டம் ஓடாதீர்கள்.
விபத்தின் போதோ அல்லது தாறுமாறாக மேலே யிலிருந்து கீழே குதிக்கும்போதோ, பைக், ஸ்கூ ட்டரில் போகும்போது, பள்ளத்தில் தூக்கிப்போ டும்போதோ, இந்த அதிர்ச்சி தடுப்பான் டிஸ்க்கு க்கு உள்ளேயிருக்கும் ஜெல்லி போன்ற பொருள், பிய்த்துக் கொண் டு, பிதுங் கிக் கொண்டு கொஞ்சம் வெளியே வர ஆரம்பிக்கும்.
இப்படி பிதுங்கிக்கொண்டு வெளியே வரும் `ஜெல்லி’தான், அருகிலு ள்ள நரம்பை அழுத்தும். சிலபேருக்கு இந்த நரம்பு அழுத்தப்படுவ தால் தான், தொடையில் ஆரம்பித்து, காலின் கீழ் பகுதி வரை, தாங்க முடியாத வலி ஏற்படுகிறது. இடுப்பின் பின்பகுதியில் இருக்கும் ஐந்து டிஸ்க்குகளுக்கு `லம் பார் டிஸ்க்’ என்று பெயர்.
உடலில் ஏறும் எடையையும், உடல் எடையையும், அதிகமாக தாங் கக்கூடியது, இந்த `லம்பார் டிஸ்க்’தான். அதே மாதிரி இடுப்பு வளை ய, குனிய, நிமிர, இடுப்பைச் சுற்ற இந்த `லம்பார் டிஸ்க்’ நிறைய வே பயன்படுகிறது. அதே மாதிரி இந்த `லம்பார் டிஸ்க்கில் ஏற்படு ம் பாதிப்பு தான், இடுப்பு வலியாக நமக்கு காட்டுகிறது.
கல்யாணம், கச்சேரி போன்ற விழாக்களுக்கோ, மற்ற காரிய ங்களுக்கோ, வெளிïருக்கு குடும் பத்துடன் செல்லும் போது, கூட்ட ம் அதிகமாக இருப்பதால், படுக்க இடம் கிடைக்காது. இம்மாதிரி நேரங்களில், படுக்க இடம் கிடைத்தால் போதும் என்பதை விட, தூ ங்க இடம் கிடைத்தால் போதும் என்று நினைக்கும் அளவிற்கு இடநெருக்கடி ஏற்பட்டு விடும்.
இப்படி இடைஞ்சலில் இட நெருக்கடியில் தூங்கும்போது, நம் இஷ்டத்துக்கு கையை, காலை நீட்டியெல்லாம் தூங்க முடியாது. இப்படித் தூங்கினா ல், மறுநாள் காலையில் இடுப் பு வலி கண்டிப்பாக வரத்தான் செய்யும். டிரெயினில் பயணம் செய்யும்போது கூட, பெர்த்தில் நன்றாக நீட்டி, மடக்கி, உருண்டு, புரண்டு எல்லாம் தூங்க முடியாது.
கார், பஸ்சில் பயணம் செய்பவர்களுக்கும் இதே நிலைதான். மறு நாள் காலையில் இடுப்பு வலி ஏற் படத்தான் செய்யும். சிலபேர் ஆட் டோவில் போகும்போது, அந்த ஆட் டோவையே சொந்தமாக விலைக் கு வாங்கி விட்டதாக நினைத்துக் கொண்டு இரண்டு கைகளையும் விரித்து, கால்களையும் விரித்து, ஒரு சோபாவில் ஜமீன்தார் சாய்ந்து உட்கார்ந்திருக்கிற மாதிரி, உட்கார் ந்து கொண்டு வருவார்கள்.
ஆட்டோ திடீரென்று ஒரு பள்ளத்தில் விழுந்து எழுந்திருக்கும் போது , `அய்யோ, இடுப்பு போயிடுச்சே’ என்று கத்துவார்கள். இது தேவை யா? ஆட்டோவில் மட்டுமல்ல, கார், பஸ் முதலிய எதில் பய ணம் செய்யும்போது, பின்பக்கம் அதிகம் உடல் சாய்ந்தபடி உட்கா ராமல், முன்பக்கம் அதிகம் உடல் சாய்ந்தபடி உட்கார்ந்து கொண்டு, முன் னாலிருக்கும் கம்பியைப் பிடித்துக்கொண்டு பயணம் செய்ய வேண் டும்.
இப்படி உட்கார்ந்திருந்தால் வ ண்டி தூக்கிப் போடும் போது, நமது தண்டு வடத்துக்கு அதிக பாதிப்பு ஏற்படாது. இடுப்பு வலியும் வராது. அமெரிக்காவுக்கு, விமானத்தில் சுமார் 15 மணி நேரம் ஒரே இடத் தில் உட்கார்ந்து பயணம் செய்தால் கூட, இடுப்பு வலி ஏற்படும். எனவே ஒரு மணி அல்லது இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து, விமானத்துக்குள்ளேயே, ஒரு ரவுண் ட் அடித்து விட்டு, மறுபடியும் வந்து உட்காருங்கள்.
சாதாரணமாக வீட்டில் உட்கார்ந்திரு க்கும்போது கூட, கூன் போடாமல், தோள்பட்டை யெல்லாம் நேராக இல்லாமல், ஒரு பக்கமாக உடலை சாய்த்து, மிகவும் சோர்வாக இருப்ப து போல், எப்பொழுதும் உட்காராம ல், முன்பக்கம் குனிந்து உட்காராமல், முதுகை நேராக நிமிர்த்தி வைத்து உட்கார கற்றுக் கொள்ளுங்கள். ஆபீஸில் வேலை பார்ப்ப வர்கள், நாற்காலியில் சுமார் பத்து மணி நேரமாவது உட்கார வேண் டி வரும்.
இவர்கள் எல்லோருமே, குனியாமல், கூன் போ டாமல் நிமிர்ந்து உட்கா ர பழகுங்கள். உட்கார்ந் து கொண்டே போன் பேசுவதைத் தவிர்த்து, நின்றுகொண்டு அல்ல து நடந்து கொண்டு பே சுங்கள். முடிந்த வரை நின்று கொண்டு செய்கிற வேலைகளை, உட்கார்ந்து கொண்டு செய் யாதீர்கள். இடுப்பு வலி வராமல் தடுக்கலாம்.
அதிக எடையுள்ள பொருளைத் தூக்காதீர்கள். தூக்க முயற்சி செய் யாதீர்கள். எவ்வளவு எடை நீங்கள் தூக்குகிறீர்கள் என்பது முக்கிய மல்ல. அதை எப்படித் தூக்குகிறீர்கள் என்பதுதான் முக்கியம். இடுப்பு வலி வராமல் இருக்க, மேற்கண்ட விஷயங்களை கையாண்டு பாரு ங்கள். இடுப்பு வலியிலிருந்து தப்பிக்கலாம்.


No comments:

Post a Comment