Friday 16 March 2012

இல்லறத்தில் முக்கியமானது உடல்களின் உறவை விட உள்ளங்களின் நெருங்கிய உறவுதான்


Posted on  by muthukumar

காலையில் எழும்போது வெளியில் சூரியனின் வருகை, ஜன்னலைதிறக்கும் போது நம்மை வரு டும் இதமான காற்று, ஜன்னல் வழி யாக ஊடுறுவி வரும் மென்மையான வெளிச்சம், உங்கள் துணை படுக்கை அறையில் பரவசமூட்டும் நிலையில் கண்களை மூடி, இதழ்களை லேசாக திறந்து கலைந்து போயிருக்கும் உ டைகள் அந்த கோலம், அதற் குப் பின்னால் மறைந்திருக்கும் அழகு, யாராக இருந்தாலும் சத்த மின்றி ரசிக்க வைக்கும்.
இப்படிப்பட்ட அழகைப் பார்க்கும் பெரும்பாலானோருக்கு ஆழமாகஅவர்களை ரசிக்கத் தூண்டு ம். அதில் பலருக்கும் தோன் றும் உணர்வு -இப்போது உற வு வைத்துக் கொண்டால் என்ன என்பதுதான். ஆண்க ளில் பெரும்பாலானோருக் கும் காலை நேர செக்ஸ் உணர் வு  எழுவது சகஜம். ஆனால், பெரும்பாலான பெண்களுக்கு காலை உற வில்  நாட்டம் ஏற்படுவதில்லை.
செக்ஸ் விஷயத்தில், ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி உற வு கொள்வது என்பதில் தனி த் தனிகருத்துக்கள் இருக்கி ன்றன. பெரும்பாலான பெண் களைப் பொறுத்தவரை இர வு நேரம்தான் உறவுக்கு உகந்ததாக கருதுகிறார்கள் -. ஆண்களோ இரவையும் விரும்புகிறார்கள், காலை நேர உறவையும் விரும்புகி றார்கள்.
ஆண்களைப் பொறுத்தவரை செக்ஸ் என்பது உணர்வுப்பூர்வமான து என்பதை விட உடல் ரீதியான ஒரு தேவையாகவே பெரும் பாலும் உள்ளது. எப்போதெல் லாம் ஆண்களின் உடலும், மனமும் நிதானமாக, ரிலா க்ஸ்டாக இருக்கிறதோ அப் போதெல்லாம் செக்ஸ் உணர் வுகள் தூண்டப்படுகிறது. அதி லும் துணை வெகு அருகே இருக்கும்போது செக்ஸ் உண ர்வுகள் வேகமாகவே தூண்ட ப்படும். இதுதான் காலையில் எழுந்திருத்ததும் அவர்களுக்குப் செக்ஸ் உணர்வு தோன்ற முக்கியக் காரணம்.
ஆனால், பெண்களைப் பொறுத்தவரை, செக்ஸ் என்பது உணர்வுப்பூர்வமாகவே தூண்டப்படுகி றது. தனது துணையைப் பார் த்ததும் பெண்கள் செக்ஸ் ரீதியாக தூண்டப்படுவதில் லை. மாறாக (துணை வருடும் போதும், கூந்தலில் விளையா டும் போதும், கட்டி தழுவதன் மூலம்,) உணர்வுகள் தூண்டப் பட்டால் மட்டுமே அவர்கள் சாப்பிடத் தயாராவார்கள். இதுதான் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே உள்ள ஒரு வித்தி யாசம்.
சரி, இரவில் மட்டும் பெண்கள் உறவுக்கு விரும்புவதும், காலையி ல் விரும்பாததற்கும் என்ன காரணம்
இந்தியாவைப் பொறுத்தவரை, தற் போது ஆண்களுக்கு நிகராக பெண்க ளும் வேலை பார்க்கிறார்கள், பிசி யாக இருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால், ஆண்களை விட பெண்களுக்குத் தான் இன்று சுமைகள் அதிகரித்து கொண்டு இரு க்கிறது. குடும்பத் தைக் கவனிப்பது, வேலைகளைச் செய்வது, குழந்தைப் பராமரிப்பு என ஏகப்பட்ட பணிகளை அவர்களது மென் மையான தோள்களில் சுமத்தி விட்டது சமுதாயம்.
எனவே பெண்களுக்கு வழக்கத்தை விட வேலைப்பளு, மன ரீதியா ன டென்ஷன் அதிகமாகி விட்டது. எப் போதும் ஏதாவது ஒரு வேலை குறி த்த சிந்தனையில் பெண்களின் மனம் உழன்று கொண்டி ருக்கிறது. இதனால் பிரஷர் அதிகமாகவே உள்ளது. இப்ப டிப்பட்ட நிலையில் இரவு உறவுக்கே அவர்கள் பெரும் மெனக்கெட வேண் டியுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் காலையில் உறவு கொள்வது என்ப தை அவர்கள் கிட்டத்தட்ட வெறுக்க வே செய்கி றார்கள்.
இன்னொரு விஷயம், ஆண்களைப் பொறுத்தவரை காலையில் உறவு கொண்டு மனதையும், உடலை யும் புதுப்பித்துக் கொள்ள விரும்புகிறார்கள். இப்படிச் செய்வதன் மூலம் பகல் முழுவதும் தாங்கள் சந்திக்கப் போகும் வேலைகளையும், சவால்களையும் சிறப் பாக எதிர்கொள்ள முடியும் என்பது அவர்களின் நம்பிக் கை.
ஆண்களை பொருத்த வரை வேலை என்பது காலையில் எழுந்திருத்து, குளித்து, சாப் பிட்டு விட்டு அலுவலகம் செல்வது, பகல் நேரத்தை வேலையில் கழிப்பது, மாலையில் மீண்டும் திரும்பி விடுவது என்ற அளவில்தான் அவர்களது வட்டம் உள்ளது. பெரிய பொறுப்பு என்று எதையும் அவர்கள் சுமப்பதில்லை. எனவே நினைக்கும் போது உறவு வைத்துக் கொள்வ தில் என்ன தப்பு என்று அவர்கள் கேட்கக் கூடும்.
ஆனால் பெண்கள் அப்படி நினைப்பதில்லை. பகல் நேர சவால்க ளையும், வேலைகளையும் எப்போதும்போ லவே அவர்கள் எதிர் கொள்ள நினைக்கிறார்கள். இதை சரியாகச் செய்ய செக்ஸ் தேவை என்று அவ ர்கள் நினைப்பதில்லை. சவால்கள் எப்போதுமே ஒன்று தான் அதை எதிர்கொள்ள மனரீதியான, புத்தி ரீதியான பலம்தான் அவசியம், செக்ஸ் என்ற மருந்து தேவையி ல்லை என்பது அவர் களது சிந்தனை.

இன்றைய சமுதாயத்தில் மனைவியருக்கு உதவும் கண வர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். கர்ச்சீப்பை எடுத்துக் கொடுக்கக் கூட மனைவியைத் தேடுவோர் நிறையப் பேர் உண் டு. இப்படிப்பட்ட பிசியான ஷெ ட்யூலில் காலையில் எங்கே போய் உறவு கொள்வது. இதுதான் பெண்கள் காலை நேர விளை யாட்டை விரும்பாததற்கு முக்கியக் காரணம்.
இருப்பினும் காலை நேர செக்ஸ் நல்ல ஐடியாதான் என்கிறார்கள்மன நல மருத்துவர்கள். நல்லதொரு இரவுத் தூக்கத்தை மேற் கொள்பவர்களு க்கு காலையில் உடலும், மனமும் பிரஷ் ஷாக இருக்கும். உடலில் வளர்ச்சி ஹார் மோன்கள் தூண்டப்படும். உட லும் நல்ல வலுவுடன் இருக்கும். இதனால் காலை நேரத்தில் செக்ஸ் வைத்துக் கொள்ளும் போது அது நிச்சயம் சிறப்பாகவே இருக் கும். அதேசமயம், பெண்களும் நல்ல மூடில் இருக்கும்போது மட்டுமே ஆண் கள் காலை நேர உறவுக்கு முயற்சிக்க லாம். மாறாக வற்புறுத்துவது தவிர்க்கப் பட வேண்டும் என்கிறார்கள்.
எந்த நேரமாக இருந்தால் என்ன, உறவுக் கு மிக மிக முக்கியம் மென்மையான அணுகுமுறைதான். காலை யாக இருந்தாலும் சரி, இரவாக இருந்தாலும் சரி அந்த உறவை, அன்புப் பரிமாற்றமாக, அணு சரணையான நிகழ்வாக, காத லுடன் கூடியதாக மாற்றிக் கொள்வதே சாலச் சிறந்தது, காலத்திற்கும் நிலைத்திருக் கக் கூடிய உறவுக்கு வழி வகுக்கக் கூடியது என்பதை இருவருமே மறக்கக் கூடாது.
காலையில் எழுந்ததும் கண் களில் ஒரு முத்தம், நெற்றிப் பொட்டி ல் ஒரு சின்ன இச், காது மடல் களில் உதடுகளால் ஒரு வருடல், உதடுகளில் தென்றல் பூவைத் தீண்டுவது போல வலிக்காமல் ஒரு முத்தமிட்டு, குட்மார்னிங் சொல்லி உங்களது மனைவி யை எழுப்பிப் பாருங்கள், செக் ஸ் உறவைவிட அது ஆழமாக அவரது மன தைத் தொடும்.
உடல்களின் உறவை விட உள் ளங்களின் நெருங்கிய உறவு தான் இல்லறத்தில் மிக மிக முக்கியமானது, இல்லையா… 

No comments:

Post a Comment