Friday 16 March 2012

தினமும் ஒரு டீஸ்பூன் “பீர்” அருந்தினால் எலும்புகள் உறுதியாகும்


Posted on  by muthukumar

வயதான காலத்தில் ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பில்இருந்து பெண்களுக்கு பீர் பாதுகாப்பு அளிப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ள து.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஊட்டச் சத்து மற்றும் ஆரோக்கியம் குறித்த ஆய்வு பிரிவினர் ஜொனாத்தன் போ வெல் தலைமையில் மேற்கொண்ட ஆய்வில் இந்த உண்மை கண்டறியப் பட்டுள்ளது.
எலும்பின் வலுவுக்கு பீரின் பங்களிப்பு குறித்து ஆராயப்பட்டது. பீரில் உள்ள எத் தனால் எலும்புக்கு ஆரோக்கியமளிப்ப தும், அதில் உள்ள சிலிகான் புதிய எலும் புகளின் ஆரோக்கிய மான வளர்ச்சிக்கு உதவுவதும் தெரியவந்து ள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல் வருமாறு: மதுபானத் தை மருந்தாக எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக் கும் என்பதை பல தொடர் ஆய்வுகள் வலியுறுத்தி வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வில், பீரில்உள்ள சத்துகள் எலும்புக்கு வலு சேர் ப்பது உறுதியாகி உள்ளது. குறிப்பாக வயதான காலத்தில் பெண்களை தாக்கும் ஆஸ்டி யோ போரோசிஸ் பாதிப்பில் இருந்து பீர் பாதுகாக்கி றதாம்.
பீரில் உள்ள எத்தனால் மற்றும் சிலி கான் பெரும்பாலான தாவர பயிர்க ளிலும் காணப்படுவதாகு ம். குறிப்பாக அவரை, மொச்சை உள்ளிட்ட தானியங்களில் அதிக அளவில் இந்த சத்து உள்ளது. இது எலும்பு தேய்மானத்தை தடுப்பதுடன் புதிய எலு ம்புகள் ஆரோ க்கியமாக வளரவும் உதவும். பெண்களின் ஈஸ்ட் ரோஜன் சுரப்பி யில் சிலிகான் கலப்பு இருக்கும்.
ஈஸ்ட்ரோஜன் அளவு மாதவிடாய் காலங்களில் பாதிப்படையும். அந்த நேரத்தில் மாத்திரை, மருந்துகள் வாயிலாக இந்த சுரப்பியி ன் குறைபாட்டை ஈடுசெய்வ து மிகமிக அவசியம். கவனி க்காமல் விடும் பட்ச த்தில் எலும்புகள் நலிவடைந்து ஆஸ்டி யோபோ ரோசிஸ் உள்ளிட்ட பல்வேறு பாதிப்பு களை ஏற்படுத்தும்.
இத்தகைய சமயங்களில் பீரை தினமும் சிறிதளவு மருந்தாக எடுத்துக் கொள்ள லாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. உணவுகளில் இருந்து கிடைக்கும் சிலி கான் அளவைவிட பன் மடங்கு அதிக மாக பீரில் இருந்து கிடைப்பதே இதற்கு முக்கிய காரண மாக கூறப்படு கிறது.
பெண்களுக்கு தினமும் 8 மில்லிகிராம் அளவு சிலிகான் அவசிய மாகிறது. இந்த தேவை குறைந்த அளவு பீரில் இருந்து எளிதாக கிடைக்கும். மாத விடாய் நிற்கும் பெண் களுக்கு இது ஒரு வரப் பிரசாதம் என்றே கூறலாம். அவர்கள் தின மும் ஒரு டீஸ்பூன் என்ற அளவில் பீர் அருந்துவது எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு வலு சேர்க்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment