Tuesday 31 January 2012

நீங்கள், சந்தோஷமான குடும்ப வாழ்க்கை வாழ விரும்புவரா?


திருமணத்துக்குப் பிறகு, அதற்கு முன்பிருந்த உறவுகளை சொல்லி அதனால் பிரச்சினைகள் உருவாவதை தவிர்த்து விடவேண்டும். முன்பிருந்த காதல், பிரச்சினை, குழப்பங்களுக்கு வழிவகுத்து விடும். ஆகவே அந்த மாதிரியான எண்ணங்களுக்கு முழுக் கு போட்டுவிடுங்கள். திருமணத்துக்கு பிறகும் முந்தைய சில உறவுகளைத் தொடர்ந்தால் அதுவே உங்கள் வாழ்க் கைக்கு எதிராக அமைந்து விடும். இன்றைய கொலை, கற்பழிப்பு போன் ற குற்றங்களுக்கு அடிப்படை காரண மே இந்த மாதிரியான விஷயங் கள்தான்.
திருமணமாகி கணவர் வீட்டுக்கு செல்லும் பெண், அங்குள்ள கண வரின் உறவினர்கள் மற்றும் சுற்றத்தாரையும் ஏற்றுக்கொண்டு அன்பு, மரியாதை செலுத்த வேண்டும்.
வெவ்வேறு இடங்களில் இருந்த ஆணும், பெண்ணும் இணையும் போது பல்வேறு விஷயங்களில் முரண்பாடு கள் ஏற்படவே செய்யும். அதை சரிசெய்து ஒத்துப் போவது நல்லது.
வாழ்க்கை என்றால் நிறை ய நெருக்கடி இருக்கத்தான் செய்யும். ஆனால் அதையெல்லாம் சகஜமாக ஏற்றுக் கொள்ள வே ண்டும். உங்களுடைய துணைவரிடம் நல்ல குணங்கள் இருக்கும் போது அதை கண்டுகொள்ளாமல், குறைபாடுகளை மட்டும் பெரி தாக்கு வதை தவிர்க்க வேண்டும். இருவரது குறைபாடுகளையும் பரஸ்பரம் ஏற்றுக் கொண்டு அதற்கு நல்லதோர் தீர்வுகாணலாம்.
மது, போதை மருந்து, புகையி லை, பான்பராக் போன்ற லா கிரி வஸ்துக்கள் எல்லாமே குடும்ப வாழ்க்கையை சிதை க்கும் தன்மை கொண்டவை. சுகத்தை விட இதில் சோகமே அதிகம்.
அதேபோல், வரவுக்கேற்றபடி செலவுசெய்ய இருவரும் முன் வர வேண்டும். செலவுகளை கட்டுப்படுத்தவும் முயற்சிக்கவும். மாத ந் தோறும் பட்ஜெட் தயார் செய்து தேவையற்ற செலவுகளை கட்டுப் படுத்துவது நல்லது.
பெரும்பாலான குடும்பங்களில் பிரச் சினைகள் உருவாக பெரியவர்களும் முக்கிய காரணம்.
சுதந்திரமாக இருக்கும் இன்றைய தலைமுறையை… பெரியவர்கள் சிலர் தங்களுடைய கட்டுப்பாட்டுக் குள் கட்டுப்படுத்த நினைப்பதை தவி ர்க்க வேண்டும்.
பெற்றோர் மற்றும் உறவினர்கள் குதர்க்கமான பேச்சு மூலம் தம்பதிக ளுக்குள் பிரச்சினைகளை உருவாக் கக் கூடாது.
சந்தேகம், முன் கோபம், மது அருந்துதல் போன்றவை பிரச்சினை என்ற தீயில் மேலும் எண்ணையை ஊற்றுவது போல் ஆகிவிடும். இதற்கு கவுன்சிலிங் சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.
எந்த செயலாக இருந்தாலும் எல் லோரும் ஒன்றாக அமர்ந்து பேசி , அதை செயல்படுத்தினால் பிரச் சினை ஏற்படாது. அதேமாதிரி, எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் அனைவரும் அமர்ந்து பேசினால் பிரச்சினையை சமாளிக்க முடியு ம்.
உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும்போது காட்டும் விசேஷ அக்கறை, தம்பதிகளுக்குள் ஒரு நல்ல இணக்கமான சூழ்நிலையை எற்படுத் தும்.
திருமணம் செய்துவிட்டு வெளிநாட்டுக்கு வே லைக்கு செல்வோர், தங்களுடைய மன நிலையை மேம்படுத்துவது நல்லது. வெளி நாட்டில் இருக்கும் போது தன்னுடைய மனை வியை யாராவது தவறாக சொன்னால் அதை நம்பி, தன்னுடைய வாழ்க்கையை பலி கொடுக்கத் துணிவது நல்ல தல்ல.
இப்போது 65 சதவீதம் பேர் செக்ஸ் விஷயத்தில் முழு மையானவர்களாக இல்லை. இதனால் ஏற்படும் தவறான கருத்துகளும் குடும்ப வாழ்க் கைக்கு உலை வைத்துவிடு ம். எனவே குடும்ப வாழ்க்கை யை தொடங்கும்போது, செக் ஸ் குறித்த முழுமையான அறிவு அவசியம்.
முக்கியமாக… குடும்பத்தில் தம்பதிகளுக்குள் ஏதாவது பிரச்சினை என்றால் அதை இருவருமாகபேசி முடிக்கவேண்டும். அதை விடுத்து மூன்றாவது மனிதரை இந்த விஷயத்துக்குள் நுழைய அனுமதிக்க வேண்டாம். அதே போல், திருமணத்திற்கு பிறகு மனைவியை கவனிக் கும் பொறுப்பை பெற்றோரிட ம் ஒப்படைப்பதும் தவறு. இதனால் பிரச்சினைகள்தா ன் தோன்றும். தம்பதிகளில் யாராவது ஒருவருக்கு பிரச்சி னை என்றால் அதை கனிவான அணுகுமுறை மூலம் முடிவுக்கு கொண்டு வந்து விடலாம். இந்த நேரங்களில் பொறுமையான மன நிலையும் முக்கியம்.

No comments:

Post a Comment