Saturday 14 April 2012

பட்டுப்புடவை – பாதுகாப்பு

பண்டிகை காலங்களில். பட்டுப் புடவை கட்டுவதற்கு அதிக வாய்ப் புகள் இருக்கும். கட்டியபின்பின் அவற் றை பாதுகாப்பது அவசி யம். இதோ சில ஐடியாக்கள்…
* பட்டுத் துணிகளை சோப்புப் போட்டு நீண்ட நேரம் ஊற வைப்ப தையும், அல சும்போது முறுக்கிப் பிழிவதையும் தவிர் க்க வேண் டும் . அடித்துத் துவைப்பதும் கூடாது.
* துவைத்து உலர்த்தும் போது, வெயிலி ல் உலர்த்தாமல், நிழலில், காற்றில் படும் படி போடுவது நல்லது.
* பட்டுப் புடவையை இஸ்திரி செய்யும் போது, அதன் மீது சுத்த மான வெள்ளைத் துணியைப் போட்டோ அல்லது புடவையைத் திருப்பி வைத்தோ, மிதமான சூட்டில் இஸ் திரி செய்ய வேண்டும்.
* புதிதாக வாங்கும் பட்டுப் புடவைகளை, ஒரு ஆண்டுக்குள் துவை க்க வேண்டியது அவசியம். முதலில் து வைக்கும்போது, சோப்பு போடாமல், நல்ல தண்ணீரில், உடல் பகுதியைத் தனியாகவும், பார்டர் பகுதியைத் தனியா கவும் அலச வேண்டும்.
* பட்டுப் புடவைகளை வாஷிங் மிஷினில் போட்டுத் துவைப்பதை விட, கையால் துவைப்பதே மேல்.
* பட்டுப் புடவைகளை, காற்று புகாத பாலி தின் கவர்களில் வைப் பது நல்லதல்ல; துணிப் பையில் போட்டு வைப்பது தான் நல்லது.
* பூச்சிகளை விரட்டும் நாப்தலின் உருண் டைகளை, பட்டுப் புடவை களின் மேல் போட்டு வைக்கக் கூடாது. பட்டுப் புடவைகள் கெட்டுப் போக, அது ஒரு காரணமாக அமைகி றது.

* ஒவ்வொரு முறை உடுத்திய பின்பும், பட்டுப் புடவையைத் துவைக்க வேண்டு ம் என்பதில்லை. உடுத்திய பின் காற்று படும் இடத்தில் புடவையை வைத்து, பின் இஸ்திரி செய்தால் போதும்.
* ஒரு படி தண்ணீரில், ஒரு தேக்கரண்டி கிளிசரினை கலந்து, பட்டுத் துணிகளை அலசி உலர்த்தினால், சுருங்காமல், இழை கள் விலகா மல் இருக்கும்.
* பட்டுப் புடவையில் எண்ணெய் கறை இருந்தால், சந்தனத்தை கறையின்மீது தடவி, சிறிது நேரம் கழித்து, அந்த இடத் தை மட் டும் நீரில் கழுவவும்

No comments:

Post a Comment