Posted By Muthukumar,On Aug 18,2015

கர்ப்ப காலத்தில் கண்டிப்பாக ஒவ்வொரு பெண்ணும் உடல் எடையை அதிகரிக்க வேண்டியது அவசியம். ஆனால், குழந்தை பிறந்த பிறகு, பலர் உடம்பைக் குறைக்கமுடியாமல் வேதனைப்படுகிறார்கள். உணவு சாப்பிடாமல் பட்டினி கிடத்தல், அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்தல் போன்றவை குழந்தைக்கும் தாய்க்கும் சிக்கலை உருவாக்கிவிடலம். 10 மாதங்களாக அதிகரித்த எடையை ஒரே மாதத்தில் குறைக்க முடியாது. என்ற உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள். நிறையத் தண்ணீர் குடித்தல், தினமும் 8 மணி நேரம் தூங்குதல், ஒரு மணி நேரம் நடைப் பயிற்சி, காய்-கனிகள் நிறைந்த சரிவிகித உணவு என்ற மரபை கடைப்பைடித்தால் ஆறே மாதங்களில் நிச்சயம் பழைய நிலையை அடைந்துவிடலாம்.
பாதாம் தரும் நன்மைகள்:
பாதாம் பருப்பு ஊட்டச் சத்து மிகுந்தது. நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தது. இதயத்துக்கு நல்லது ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்கும். உடம்பு எடையைக் கட்டுப்படுத்தும்.
No comments:
Post a Comment