Tuesday 29 October 2013

மூச்சுத்திணறலை விரட்டி அடிக்கும் அபூர்வ‌ மூலிகைகள்!


ம் மூக்கை சுற்றியுள்ள காற்று அறைகளை சைனஸ் என்கிறோம். இந்த அறைகள்தான் தலை க்குப் பாதுகாப்பையும், முகத்துக்கு வடிவத்தை யும், குரலுக்குத் தனித்தன்மையையும் கொடுக்கி ன்றன. இவற்றிலிருந்து சளி உற்பத்தியாகி, மூக்கின் வழியே வெளிப்படுகிறது. இந்த பாதையி ல் அடைப்பு ஏற்படும்போது, மூச்சுத் திணறல், காற்ற றைகளில் வலியும், கிருமித் தொற்றும் ஏற்படுகிறது.
அறிகுறிகள்:
காய்ச்சல், உடல்சோர்வு, இருமல், மூக்கடைப்பு, தலைபாரம், மூக்கி ல் நீர் வடிதல்.

சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:
15 மிலி. துளசி இலைச்சாறுடன் தேன் கல ந்து உண்ணலாம்.
ஒரு கிராம் பேரரத்தைப் பொடியை, பாலில் கலந்து பருகலாம்.
ஆடாதொடை இலை, வேர் இரண்டையும் கைப் பிடியளவு எடுத்து நான்கு பங்கு தண்ணீ ர் சேர்த்து, அதை ஒரு பங்காக வற்றவைத்து, தேன் கலந்து அருந்தலாம்.
கசகசாப் பொடியில் அரைஸ்பூன் தேன் கலந்து சாப்பிடலாம்.
கைப்பிடி அளவு கண்டங்கத்திரிச் செடியில் நான்கு பங்கு தண்ணீர் சேர்த்து, அதை ஒரு பங்காக வற்ற வைத்து அருந்தலாம்.
பெருஞ்சீரகப் பொடி, மிளகுத் தூள், பனங்கற்கண்டு சம அளவு எடுத் து அதில் ஒரு ஸ்பூன் அளவு உண்ணலாம்.
தவசு முருங்கையிலைச் சாறு 15 மிலி அருந்தலாம்.
ஒரு ஸ்பூன் தும்பைப் பூச் சாறுடன் கற்கண்டு சேர்த்து அருந்தலாம்.
அரை ஸ்பூன் தூதுவளைப் பொடியில் தேன் கலந்து உண்ணலாம்.
சதகுப்பை இலைப்பொடியில் சம அளவு சர்க்கரை சேர்த்துக் கலந்து, அதில் அரை ஸ்பூன் உண்ணலாம்.
15 மிலி. கற்பூர வள்ளிச் சாறைக் கற் கண்டு சேர்த்து அருந்தலாம்.
ஆதண்டைக் காயை வற்றலாகச் செய்து சாப்பிடலாம்.
ஊமத்தையும் சுக்கையும் சமஅளவு எடுத்துப் பொடித்து, அதை அரைஸ்பூன் தேனில் கலந்து உண்ணலாம்.
50 கிராம் மணத்தக்காளி வற்றலை, 200 மிலி வெந்நீரில் ஊற வை த்து வடித்து அருந்தலாம்.
திப்பிலிப் பொடியுடன் பனங்கற்கண்டு சம அளவு சேர்த்து, அரை ஸ்பூன் பாலில் கலந்து உண்ணலாம்.
வெற்றிலைச் சாறு 15 மிலி எடுத்து மிளகுத் தூள் கால் ஸ்பூன் அளவு சேர்த்து உண்ணலாம்.
வெளிப் பிரயோகம்:
சுக்கை களியாகச் செய்து நெற்றியில் பற்று போடலாம்.
லவங்கத்தை நீர்விட்டு மைபோல் அரைத் து நெற்றியிலும், மூக்கின் மேலும் பற்று இட லாம்.
செம்பைப் பூவை எண்ணெயில் இட்டுக் காய்ச்சித் தலையில் தேய்க் கலாம்.
அகிற்கட்டைத் தைலத்தைத் தலையில் தேய்க்கலாம்.
கண்டுபாரங்கியைக் கடுக்காய், நெல்லிக்காய் தான்றிக்காய் சேர்த் து அரைத்துப் பற்று போடலாம்.
சுக்கைத் தாய்ப்பாலில் அரைத்து, நெற்றியில் பற்றிட்டு அனல் படும் படி லேசாகக் காட்டலாம்.
சேர்க்க வேண்டியவை:
தேன், மிளகு, பூண்டு, முட்டை, கோழி.
தவிர்க்க வேண்டியவை:
குளிர்ச்சியான உணவுகள், குளிரூட்டப்பட்ட அறை, வாழைப்பழம், திராட்சைப் பழம், தர்பூசணி, ஐஸ்கிரீம்.

No comments:

Post a Comment