Sunday 29 July 2012

கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு நன்மைகள் பல தந்திடும் யோகா

Posted On July 29,2012,By Muthukumar
யோகாசனம் மனதிற்கும் உடலிற்கும் ஏற்றது. பல்வேறு நோய்க ளில் இருந்தும் நமது உடலை பாதுகா த்து, நோய் ஏற்படாமலும் தடுக்கிறது. கர்ப்பிணிகளுக்கு யோகாசனம் சிறந்த து என மருத்துவர்கள் பரிந்துரைக்கி ன்றனர். பிரசவ கால சிக்கல்களை தீர் க்க உதவுவ தோடு, கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தையும், உடல் வலிகளையும் நீக்குகிறது என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.
கர்ப்பிணிகளுக்கு ஆசனங்கள்:
கர்ப்பிணி பெண்கள் முதல் மூன் று மாதங்களில் சாதாரணமாக யோகாசனம் செய்யலாம். அதன் பிறகு யோகா குருவின் ஆலோ சனைப்படி கர்ப்பிணிகளுக்கு என் று பிரத்யேகமான உள்ள ஆசனங் களை செய்யலாம் என்கின்றனர் மருத்துவர்கள்
பிரசவம் எளிதாகும்

தடாசனம் பக்தகோணாசனம், வஜ்ராசனம், நமஸ்காராசனம், ஆனந்த சயனா சம், மகாமுத்திரா பாலாசனம், சவாசனம் போன்ற வை சிறந்த ஆசனங்கள். கர்ப்பமா ய் இருக்கும் பெண்களுக்கு மகா முத்திரா மிகவும் நல்லது. ஜீரண சக்தி அதிகரிக்கும். இடுப்பு தசை கள், நரம்புகள் வலிமை பெறும். இதனால் குழந்தை பிறப்பு சுலப மாகும்.
நின்ற நிலை ஆசனம்
எளிதான இந்த ஆசனம் கர்ப்பிணி களுக்கு ஏற்றது. முதலில் காலை விரித்து நிற்க வேண்டும். கையை மேலே தூக்கி கும்பிட்ட மாதிரி நான்கு தடவை, இயல்பாக மூச் சை விட்டபடி செய்யவேண்டும். பின்பு கையை நேராக வைத்து, மூச்சை உள்ளே இழுக்கும் போது கையை விரித்து, மூச்சை வெளி யே விடும்போது மடக்க வேண்டு ம். இந்த ஆசனம் செய்வதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு உச்சி முதல் பாதம் வரை உற்சாகம் தரும்.
பூனை ஆசனம்

முதலில் கவிழ்ந்து, முட்டி போட் டு நிற்க வேண்டும். தரையை பா ர்த்தவாறு மூச்சை உள்வாங்கி, முதுகை மட்டும் மேலே தூக்க வே ண்டும். பின்பு மூச்சை வெளியே விட்டு, தலையை தூக்கி முது கை உள்வாங்கவேண்டும். இதை 5 மு றை செய்தால் கர்ப்பிணிகளின் முதுகுதண்டு பலமாகும். முதுகு வலி ஏற்படாது.
கர்ப்பிணி பெண்கள் யோகாசனங் கள் செய்வது மிகவும் நல்லது. இத னால் கருவுக்கும் நன்மை ஏற்படு ம். ஆசனங்கள் கர்ப்பிணிப் பெண் களின் இரத்த ஒட்டத்தை அதிகரி த்து, முதுகெலும்புக்கு இரத்த ஒட் டத்தை அதிகரிக்கும். தவிர உடலி ன் கீழ் பாகங்களுக்கு ரத்த ஒட்டம் அதிகரிக்கும்.

No comments:

Post a Comment